Aug 17, 2010

கிருஷ்ணன் நம்பி கவிதைகள்


1.
ஆனை வேணுமென்று _ குழந்தை
அழுது கூச்சலிட்டான்
ஆனை கொண்டு வந்தார் _ ஆனால் knambi
அழுகை தீரவில்லை 

பானை வேணும் என்றான் _ குழந்தை
பானை கொண்டு வந்தார்
ஆனை பானை இரண்டும் _ வந்தும்
அழுகை ஓயவில்லை  

`இன்னும் அழுவதேனோ _ குழந்தாய்
இனியும் என்ன வேணும்?’
என்று கேட்டபோது _ குழந்தை
ஏங்கி அழுது கொண்டு

இந்தப் பானைக்குள்ளே _ அந்த
ஆணை போக வேணும்!
என்று சொல்லுகின்றான் _ ஐயோ
என்ன செய்ய முடியும்?

2.
அம்பிப் பாப்பா விஷயம் என்றால்
அம்மா சலுகை அதிகம்தான் _ எங்கள்
அம்மா சலுகை அதிகம்தான்.

பாலைக் கொட்டிக் கவிழ்த்தினாலும்
`பார் சமர்த்தை’ என்கிறாள்!
சீலத்தோடு சிரித்துக் கொண்டே
சிந்திய பாலைத் துடைக்கிறாள் _ அம்மா
சிந்திய பாலைத் துடைக்கிறாள்!

பள்ளிப் புத்தகத்தை எல்லாம்
பறித்துக் கிழிக்கும் வேளையில்
அள்ளி அணைத்து முத்தமிட்டு
அம்பிப் பயலைப் புகழ்கிறாள் _ அம்மா
அம்பிப் பயலைப் புகழ்கிறாள்

கண்ணில் கண்ட பொருளையெல்லாம்
காலால் உதைத்துத் தள்ளினால்
`கண்ணன் இவன்’ என்று அம்மா
கண்டது போல் சொல்கிறாள் _ ரொம்பக்
கண்டதுபோல் சொல்கிறாள்!

அம்மா என்று திக்கித் திக்கி
அம்பி உளறிக் கொட்டினால்
அம்பிப் பயலை வாரி எடுத்து
அறிஞன் என்று மெச்சுறாள் _ அம்மா
அறிஞன் என்று மெச்சுறாள்!

அம்பிப் பாப்பா விஷயம் என்றால்
அம்மா சலுகை அதிகம்தான் _ எங்கள்
அம்மா ரொம்ப மோசம்தான்!

3. மண்ணிலே பொன்னிருக்கு!

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

கையில் வலு இருக்கோ _உன்றன்
மெய்யில் வலு இருக்கோ?
கையில் வலு உளதேல் _ உன்றன்
மெய்யில் வலு உளதேல்,.

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

மண்வெட்டி ஒன்றுளதோ _ நல்ல
மண்வெட்டி ஒன்றுளதோ?
மண்வெட்டி ஒன்றுளதேல் _ நல்ல

மண்வெட்டி ஒன்றுளதேல்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

காணி நிலம் உளதோ _ ஒரு
காணி நிலம் உளதோ?
காணி நிலம் உளதேல் _ ஒரு
காணி நிலம் உளதேல்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

வெட்டத் தெரியாதோ _ வேர்வை
கொட்டத் தெரியாதோ?
வெட்டத் தெரியுமெனில் _ வேர்வை
கொட்டத் தெரியுமெனில்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

வித்து சிறிதிருக்கோ _ மழை
வெய்யில் சிறிதிருக்கோ?
வித்து சிறிதுளதேல் _ மழை
வெய்யில் சிறிதுளதேல்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

ஊக்கம் உனக்கிருக்கோ _ வேலை
பார்க்கத் திறமிருக்கோ?
ஊக்கம் உனக்கிருந்தால் _ வேலை
பார்க்கத் திறமிருந்தால்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

                                
                              
நன்றி: கிருஷ்ணன் நம்பி படைப்புலகம் தமிழாலயம் வெளியீடு. flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்