Sep 23, 2010

நடுகற்களும் நடைகற்களும்-நாஞ்சில் நாடன் கவிதைகள்

நாஞ்சில் நாடன் கவிதைகள் (தேர்வு ஜெயமோகன்)

இந்தியரும் எம்மக்களும்

உச்சரிக்கவியலாத ஊர்திகள்
இராத்தங்க இருபதினாயிரம் வாடகை
வான்வழிப்பயணம்2221093496_1600148651
கைக்கடிகாரம் காற்சட்டை மேற்சட்டை
காலணிகள் கண்ணாடி எண்பதினாயிரம்
அக்குள் நாற்றம் மறைக்க 'தெளிப்பான் '
கணிப்பொறி முன்வலை கம்பியில்லாபேசி
பிறந்தநாள் மணநாள் காதலர் தினம்
புத்தாண்டு ஆயிரத்தாண்டு விழக்கள்
காதல்காட்சிக்கும்கனவுக்காட்சிக்கும்
மூன்றேகால் கோடி
கிரிக்கெட் போரில் கார்கில் போட்டியில்
தேசப்பற்று அவிழ்த்துப்போட்டு ஆடும்
இந்தியர்
கட்டைவண்டியிலும் கால்நடையாகவும்
வரப்போ தலைக்காணி வாய்க்காலே பஞ்சுமெத்தை
குடிநீர் சுமந்து குடிசைசேர சூரியன் சாட்சி
எட்டு ரூபய் செருப்பை தைத்து தைத்து
திருப்பியும் தைப்பர்
பல்லுக்கு பொடிமணல் மேலுக்கு வைக்கோல்
கொரகொரக்கு ம்வானொலிக்கும் தட்டழிவு
தகரக்கொட்டகை மணல் விரிப்பு
எட்டணாசீட்டு
பிறந்தது தெரியும் இறக்கபொவதும் தெரியும்
தேசம் என்று ஒன்று
உள்ளதென்றும் தெரிவர்
எம்மக்கள்

நடுகற்களும் நடைகற்களும்

கொம்பன் பன்றி விரை வறித்த கடா
கொண்டை சிலிர்த்த சேவல்
சுட்ட அயிலை கருவாடு
எள்ளுப் பிண்ணாக்கு கருப்பட்டி
போதைக்கு வாற்றுச்சாராயம்
புகைக்க சுருட்டு
நடுகற்களுக்கு

கிருத்தைகை அமாவாசி பெளர்ணமி
ஆடிவெள்ளி ஆவணி ஞாயிறு
புரட்டாசி சனி
வரி வைத்து நோன்புகள்

முடுக்கில் பாரி
மூலையில் பிள்ளையார்
தெருவுக்கு இரண்டாய் தென்படும்

வெளுக்கும் முன் தொடங்கி
சாமம் வரைக்கும்
அரக்கக் கருவிகள் பெருக்கும் ஓசை
புலன்கள் பொசுங்க
நடக்கும் கற்கள்

மொழி

மாற்றுத்தெரு இல்லை
அந்தத்தெருவழிதான்
எப்படியும் போதல் வெண்டும்
முனை திரும்புகையில்
பீது பூத்த முகம் பொருத்தி வளர்ந்தது
எங்கிருந்து வெளிப்பட்டு எதைக்கவ்வும்
ஆடுசதையை அடித்தொடையை
ஓரம் பார்த்து ஒதுங்கிப்போகும் நான்
அதற்கு உணவல்ல
காதலில்போட்டியுமல்ல
வீரத்தில் சவாலுமல்ல
எனினும் எரிச்சலூட்டும் ஏதோ ஒன்று
அல்லது அதற்கு பிடிக்காத வேறெதையோ
நினைவூட்டும் ஒன்று
என்னிடம்.
எங்கு முறையிட ?
சென்று பேசிப்பார்க்கலாம்
நேருக்கு நேராய்
வேறு வட்டார வழக்கில்

 மானுடக்கனவு

குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள்
கிழிபட
நானோர்
விருந்திருக்க உண்ணாத
வேளாளன்
பாரம்பரியச் சுமையுள்ள இந்து
கல்லுக்கும் மூத்தகுடி
இடர்வரும் வேளையில் இந்தியன்
தகப்பன்
அலுவலகச் சகபாடி
அழித்தழித்து எழுதும் படைப்பாளி
ஒன்றுக்கொன்று உடன்படும் வேளையில்
பல்லும் நகமுமாய் முரண்படும்
ஒன்றாய் இருக்கையில் இன்னொன்று
ஒன்று பிறிதின் எல்லையை நெருக்கும்
சற்றே விரிக்கும்
இடையில் தவிக்கும் மானுடக்கனவு

 புத்தாண்டு

முடித்தலை நெரிய
தமிழ் சுமந்து
திரும்பும்
மூத்த குடியின்
பொங்கும் விந்து
வண்ணச் சுவரொட்டொயில் வடியும்

எச்சில் வழங்கி
புண்ணியம் பெருக்கும்
திசைகாவல் தெய்வம்
தூரதர்ஷனில் முகம் தேடும்

பொங்கலுக்கு வெளியாகும்
முப்பத்தெட்டு காவியங்கள்
பிரம்மாண்ட குசுப்போல

பனிபோல கொலையுதிரும்
மறுபடியும் தேர்தல்வரும்
ஊழல்போய் ஊழல்வரும்

சபரிமலை அக்னிகுண்டம்
தன்னையே உண்டு
எரியும் ஓங்கி

நன்றி: திண்ணை.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

தமிழ்ச் செல்வன்ஜீ on September 23, 2010 at 11:23 PM said...

ஊழல் போய் ஊழல் வரும்-நிஜமான இந்திய ஏக்கம்,என்று தணியும் எங்கள் நாஞ்சிலார் ஏக்கம்?-வல்லம் தமிழ்

சம்மந்தி on October 2, 2010 at 12:20 AM said...

அன்றைய நடைகற்கள்தானே இன்றைய நடுகற்கள்...
நீங்கள் சொல்வது பக்தியில் திளைத்த கற்களைத்தானே... சந்திசந்தியாய் நின்று காகத்தின் எச்சத்திலும்,கக்கூஸ் நாற்றத்திலும் ஊறிக்கொண்டிருக்கும் பகுத்தறிவில் திளைத்த கற்களை அல்லவே...

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்