tag:blogger.com,1999:blog-8291760685245823600.post5579515489010560977..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: பிரயாணம் - அசோகமித்திரன்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-35101471792933003302012-09-12T11:44:55.121+05:302012-09-12T11:44:55.121+05:30இந்த குருவைத் தேடிப்பிடிக்கவே மூன்று வருடங்கள் ஆயி...இந்த குருவைத் தேடிப்பிடிக்கவே மூன்று வருடங்கள் ஆயின, இனி அடுத்த குரு எங்கே, எப்போது எனக்குக் எனக்குக்கிடைப்பாரோ? ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-24577648491787095552011-07-08T09:10:44.475+05:302011-07-08T09:10:44.475+05:30இந்த கதையை கொஞ்ச நாட்கள் முன் படித்து அதிர்ந்து போ...இந்த கதையை கொஞ்ச நாட்கள் முன் படித்து அதிர்ந்து போனேன். இது பற்றி ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதினேன். ஆனால் இங்கு கருத்து சொல்லவில்லை என்பதை இப்போதுதான் பார்த்து நாக்கைக் கடித்துக் கொள்கிறேன். இந்தக் கதை பற்றி நான் எழுதிய பதிவு இங்கே,<br /><br />http://jekay2ab.blogspot.com/2010/07/blog-post_17.html<br /><br />பகிர்வுக்கு நன்றி.Jegadeesh Kumarhttps://www.blogger.com/profile/09101596438346971310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-41588843073673740992011-01-04T13:06:41.519+05:302011-01-04T13:06:41.519+05:30மானுடம் கண்டறியாத பல கேள்விகளுக்கான விடையைத் தேடத்...மானுடம் கண்டறியாத பல கேள்விகளுக்கான விடையைத் தேடத் தூண்டும் தருணங்கள் அமையப்பெற்ற கதை,அசோகமித்திரனின்<br />'பிரயாணம்'. தன்னை மிஞ்சிய குரு தானேவெனும் உணர்தலில் இருந்துவரும் எனக்கு இக்கதையும் மற்றுமொரு உதாரணமே.<br /><br />உதவத் திராணியற்ற சதைத் தொக்குப்பாகத் திகழ்ந்தாலும் பிறன் இருப்பு தரும் மனோதிடம், புதிரான ஒன்றே.இந்த குருவும் அவனுக்கு அப்படியே. மரணம் நெருங்கும் தருவாயில் உயிர்களுள் ஏற்ப்படும் அசாத்திய அசுர பலம் வியப்பிற்குறியதே.<br /><br />'நான் நிச்சயமாக இருந்தேன்.அந்த ஓநாய்களின் அடக்கமான உறுமல்கூட அப்போது அப்பிரதேசத்தின் அமைதியோடு பொருந்திவிடக் கூடியதாகவே தோன்றியது.'- மலைப்பாதைகளில் பிணத்துடன் பயனிப்பவனின் விழிப்புணர்வு,இயற்கையோடு அவனையுமறியாமல் இயந்து போனதின் வெளிப்பாடே இது.<br /><br />'..கடைசியில் மரணம்-உயிரின் வாழ்வாசை என்ற இரு அடிப்படை இயற்கைச்சக்திகள் மட்டுமே எஞ்சுகின்றன. மிச்சமெல்லாம் வெறும் கற்பனை, வெறும் பிரமை என்று எண்ணச்செய்கிறது இந்தக்கதை'- என்னும் திரு. ஜெயமோகன். அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்.<br /><br />'அதுவரை நிலவிய அமைதி, நியதிக்குட்பட்ட கட்டுப்பாடு எல்லாம் நொடிப் பொழுதில்<br />சிதறுண்டுபோயின'- என்னும் வரிகள் எண்ணத்தூண்டும் கேள்விகள் பல..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-74636290169636881352010-12-06T18:54:45.557+05:302010-12-06T18:54:45.557+05:30எதற்கு வேண்டுமாலும் ஆசைப்படலாம். ஆனால் நடப்பவற்றை ...எதற்கு வேண்டுமாலும் ஆசைப்படலாம். ஆனால் நடப்பவற்றை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்பதை அருமையாக உருவகப்படுத்தி இருக்கிறார். குரு நாதரை காப்பாற்ற நினைத்தது, நல் அடக்கமாவது செய்ய போராடுவது, ஒநாய்களாய் தொடரும் எதிர் சக்திகள்.....எல்லாவற்றிற்கும் மேலாக " ஒரு ஓநாயின் கால் அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, என் குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது." என்ற வரிகள்.... அப்பா...எழுந்த உணர்வுகளை எப்படி எழுதுவது...தெரியவில்லை.Kuttymaanuhttps://www.blogger.com/profile/12231422194153348366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-90149322921216757122010-11-09T17:55:06.384+05:302010-11-09T17:55:06.384+05:30தமிழ்ச் சிறுகதையுலகின் சிகரங்களில் மகத்தானவரான அசோ...தமிழ்ச் சிறுகதையுலகின் சிகரங்களில் மகத்தானவரான அசோகமித்திரன் தொட்ட உயர்ந்த சிகரங்களிலொன்று இச்சிறுகதை. இணைப்பு தந்த ஜெயமோகனுக்கு நன்றி.V.Srinivasan./வ.ஸ்ரீநிவாசன்https://www.blogger.com/profile/12603353190029178985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-38787441065983925542010-11-09T10:46:11.512+05:302010-11-09T10:46:11.512+05:30அற்புதமான கதை. ஜெயமோகனின் இணைப்பால் நெடுநாட்களுக்க...அற்புதமான கதை. ஜெயமோகனின் இணைப்பால் நெடுநாட்களுக்குப் பின் மீண்டும் வாசித்தேன். மனித வாழ்வுக்கு மனிதன் கொடுத்துக் கொள்ளும் அர்த்தத்தை இயற்கை மிக மிகச்சாதரணமாக நிராகரிக்கும் போது ஏற்படும் அபத்த உணர்வு மோசமானது. எந்த மனிதனும் சந்திக்கவே சந்திக்க விரும்பாதது..இளங்கோ கிருஷ்ணன்https://www.blogger.com/profile/06070685100912921738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-17601752984249799972010-11-08T18:47:20.908+05:302010-11-08T18:47:20.908+05:30அசோகமித்திரனின் முக்கியமான கதைகளில் ஒன்று இது. அவர...அசோகமித்திரனின் முக்கியமான கதைகளில் ஒன்று இது. அவரது புனைவுத்தன்மையின் மையம் என்பது அபத்த தரிசனம்தன். ‘மனிதன் அவனை உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்’ என்ற சார்த்ரின் வரிகளில் அசோகமித்திரனின் தரிசனத்தையும் வகுத்துவிடலாம். அசோகமித்திரன் இருத்தலியலின் கொடிபறந்த நவீனத்துவ காலகட்டத்தின் உச்சகட்ட அடையாளம்.<br /><br />மனிதனை உருவாக்கிய ஆதிமனஎழுச்சிகளே அவனுடைய அன்றாட யதார்த்தத்துக்கு முன்னால் அர்த்தமிழந்து கிடப்பதைக் காட்டும் கதைகளில் ஒன்று இது. நமது யோக மரபு பல்லாயிரம் வருடத்து பாரம்பரியம் உள்ளது. அதற்காக பல்லாயிரம்பேர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். தன் வாழ்நாளெல்லாம் அதற்காக ஒவ்வொரு கணத்தையும் செலவிட்டவர் இந்த குரு. ஆனால் கடைசியில் மரணம்-உயிரின் வாழ்வாசை என்ற இரு அடிப்படை இயற்கைச்சக்திகள் மட்டுமே எஞ்சுகின்றன. மிச்சமெல்லாம் வெறும் கற்பனை, வெறும் பிரமை-- என்று எண்ணச்செய்கிறது இந்தக்கதை<br /><br />சாதாரணத்துவமே என்றும் அசோகமித்திரனின் கலையின் இயல்பு. சர்வசாதாரணமான மானுடர்களின் சர்வசாதாரணமான வாழ்க்கைக் கணங்கள். ஆனால் மிக அசாதாரண மனிதர்களின் மிக அசாதாரண வாழ்க்கைக்கணங்களைச் சொல்லும் கதைகளையும் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்<br /><br />இது அத்தகைய கதைஜெயமோகன்https://www.blogger.com/profile/10081922964561469398noreply@blogger.com