<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600</id><updated>2012-01-28T22:17:09.927+05:30</updated><category term='கலாமோகன்'/><category term='சார்வாகன்'/><category term='ப.சிங்காரம்'/><category term='மகாகவி பாரதியார்'/><category term='கல்யாண்ஜி'/><category term='கு.ப.ரா'/><category term='விக்ரமாதித்யன் நம்பி'/><category term='சம்பத்'/><category term='கந்தர்வன்'/><category term='பிரமிள்'/><category term='பூமணி'/><category term='சுஜாதா'/><category term='கவிதைகள்'/><category term='கடித இலக்கியம்'/><category term='கி. அ. சச்சிதானந்தம்'/><category term='யூமா வாசுகி'/><category term='புதுமைப்பித்தன்'/><category term='ராஜ மார்த்தாண்டன்'/><category term='ஜெயமோகன்'/><category term='சுந்தர ராமசாமி'/><category term='அறிமுகம்'/><category term='வேதசகாய குமார்'/><category term='வ.கீதா'/><category term='நகுலன்'/><category term='கு. அழகிரிசாமி'/><category term='சி. மோகன்'/><category term='ஆதவன்'/><category term='ஜி. நாகராஜன்'/><category term='வைக்கம் முஹம்மது பஷீர்'/><category term='கலாப்ரியா'/><category term='கதைகள்'/><category term='சா.கந்தசாமி'/><category term='சுரேஷ்குமார இந்திரஜித்'/><category term='கிருஷ்ணன் நம்பி'/><category term='அ. மாதவையா'/><category term='பாதசாரி'/><category term='ச.தமிழ்ச்செல்வன்'/><category term='சமயவேல்'/><category term='லஷ்மி மணிவண்ணன்'/><category term='ஞானக்கூத்தன்'/><category term='கோணங்கி'/><category term='ராஜேந்திர சோழன்'/><category term='ந. முத்துசாமி'/><category term='விருதுகள்'/><category term='அ.முத்துலிங்கம்'/><category term='தேவதச்சன்'/><category term='ஜெயகாந்தன்'/><category term='ஹெப்சிபா ஜேசுதாசன்'/><category term='தஞ்சை பிரகாஷ்'/><category term='வண்ணதாசன்'/><category term='சிறுகதைகள்'/><category term='தமிழில் முதல் சிறுகதை'/><category term='சு.வெங்கடேசன்'/><category term='தி. ஜானகிராமன்'/><category term='ஆர்.சூடாமணி'/><category term='இமையம்'/><category term='இந்திரா பார்த்தசாரதி'/><category term='சோ.தர்மன்'/><category term='எம்.வி. வெங்கட்ராம்'/><category term='சுகுமாரன்'/><category term='வ.வே.சு ஐயர்'/><category term='நீல பத்மநாபன்'/><category term='யுவன் சந்திரசேகர்'/><category term='கரிச்சான் குஞ்சு'/><category term='திலீப் குமார்'/><category term='என். டி. ராஜ்குமார்'/><category term='நேர்காணல்'/><category term='பெருமாள்முருகன்'/><category term='எஸ்.ராமகிருஷ்ணன்'/><category term='மனுஷ்யபுத்திரன்'/><category term='ந.பிச்சமூர்த்தி'/><category term='தேவதேவன்'/><category term='விமலாதித்த மாமல்லன்'/><category term='சாரு நிவேதிதா'/><category term='உமா வரதராஜன்'/><category term='சி.மணி'/><category term='ஷங்கர்ராமசுப்ரமணியன்'/><category term='பாமா'/><category term='கட்டுரை'/><category term='சி.சு. செல்லப்பா'/><category term='ஆ. மாதவன்'/><category term='பசுவய்யா'/><category term='தோப்பில் முகமது மீரான்'/><category term='மு.சுயம்புலிங்கம்'/><category term='புகைப்படங்கள்'/><category term='ஆத்மாநாம்'/><category term='பவா செல்லதுரை'/><category term='க.நா.சு'/><category term='பாரதி மணி'/><category term='வல்லிக்கண்ணன்'/><category term='அம்பை'/><category term='ரமேஷ் : பிரேம்'/><category term='வண்ணநிலவன்'/><category term='மௌனி'/><category term='எம்.ஏ.நுஃமான்'/><category term='நாஞ்சில் நாடன்'/><category term='உமா மகேஸ்வரி'/><category term='வெங்கட் சாமினாதன்'/><category term='கி ராஜநாராயணன்'/><category term='அசோகமித்திரன்'/><category term='வித்யாஷ‌ங்கர்'/><category term='மாலன்'/><category term='பா. செயப்பிரகாசம்'/><category term='லா.ச. ராமாமிருதம்'/><category term='பி.எஸ்.ராமையா'/><category term='மா. அரங்கநாதன்'/><category term='சிட்டி'/><category term='பிரபஞ்சன்'/><category term='பாவண்ணன்'/><category term='கோபிகிருஷ்ணன்'/><category term='வேல.இராமமூர்த்தி'/><category term='சூத்ரதாரி'/><title type='text'>அழியாச் சுடர்கள்</title><subtitle type='html'>நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>549</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-315125685987010484</id><published>2012-01-28T14:24:00.001+05:30</published><updated>2012-01-28T14:24:14.204+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வண்ணதாசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுந்தர ராமசாமி'/><title type='text'>வண்ணதாசன் கதைகள் - சுந்தர ராமசாமி</title><content type='html'>&lt;p align="left"&gt;இந்தக் கட்டுரையில் வண்ணதாசன், வண்ண நிலவன், பூமணி ஆகியோரின் கதைகளைப் பார்க்க எண்ணி இருந்தேன். இவ்விதத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் என் எண்ணங்களைத் தெளிவுபடுத்த மற்ற இருவரும் உதவக்கூடுமென்ன்ற எண்ணத்தில். ஆனால் இப்போது வசதிப்படாமல் போய்விட்டது; வண்ணதாசன் போதிய அவகாசம் தந்திருந்தும் மற்றொரு சந்தர்பத்தில் நான் இதைச் செய்ய வேண்டும். இப்போது வண்ணதாசனைப் பற்றி மட்டும். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;வண்ணதாசனின் உலகம் புறப் பார்வையில் எப்போதும் நம் முன் சதா விழுந்து கொண்டிருக்கும் &lt;a href="http://lh5.ggpht.com/-NX9dnmJZBnA/TyO3qrT_fiI/AAAAAAAAIRo/UP6OlRa1jQs/s1600-h/sundara-ramaswamy%25255B5%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="sundara-ramaswamy" border="0" alt="sundara-ramaswamy" align="right" src="http://lh5.ggpht.com/-nOr7jIdv0Go/TyO3rWpMknI/AAAAAAAAIRw/kXOBoCa8lBw/sundara-ramaswamy_thumb%25255B6%25255D.jpg?imgmax=800" width="215" height="248" /&gt;&lt;/a&gt; சாதாரண உலகம். டவுன் பஸ், டாக்சி ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட், பார்பர் ஷாப்பு, பசுக்கள், மிட்டாய் வண்டி, குறுகிய தெருக்கள், தெரு வீடுகள், பள்ளிக்கூடம், குறுக்குப் பாதைகள். இதன்பின், வீட்டுப் பெண்கள், வீட்டு ஆண்கள், வெள்ளையடிப்பவன், கறவைக்காரன், பிச்சைக்காரி, நண்பர்கள். கணவன் மனைவியும் வருகிறார்கள் - எப்போதும் சின்ன வயதுக்காரர்களாக. கல்யாணத்திற்குக் காத்து புழுங்கிக் கொண்டிருக்கும் பெண்கள். அல்லது தாம்பத்தியம் சரிப்படாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் பெண்கள். இவர்கள் எல்லோரும் பிரந்தியம் சார்ந்து, பழக்க வழக்கங்கள் சார்ந்து, நம்பிக்கைகள் சார்ந்து வருகிறார்கள். இந்த நிஜ உலகத்தின் மீதும், இந்த நிஜ உலகத்தை சார்ந்த இவர்கள் மீதும் நாம் அக்கறை கொள்கிறோம். இவர்களின் பொதுத்தன்மை நளினமானது, பதவிசானது, இங்கிதமானது, நாசூக்கானது. கதையில் வரும் எல்லோரையும் அவர்களுக்குறிய பின்னணியையும் சேர்த்து, மன நிலையின் ஒரு சிறு வட்டத்திற்குள் தள்ளிவிடலாம். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;வாழ்க்கை இந்த ஆசிரியருக்கு எப்படிக் காட்சி தருகிறது? ஏன் இப்படி காட்சி தருகிறது? தன்னை வெளிப்படுத்துவதில் ஏன் இந்த மட்டோடு அது நிறுத்திக் கொண்டு விடுகிறது. இதை எளிமையாகக் காண, ஒரு குறுக்கு வழியாக இந்த ஆசிரியருக்கும், அவருடைய பெண் கதா பாத்திரங்களுக்குமுள்ள உறவு நிலையை யோசிக்கலாம். அந்தப் பெண்கள், அந்த சிறு வயதுக்க்காரர்கள், சின்ன மனைவிகள், டிபன் பாக்சைத் தேடிக்கொண்டு போகும் அந்தப் பெண், வெள்ளையடிப்பவனின் உச்சரிப்பை கேலி செய்யும் அந்தப் பெண், போட்டோ ஸ்டுடியோவில் பெரிதாக அழும் அந்தப் பெண், கல்யாணத்திற்கு காத்து வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் அந்த அக்கா, கணவனோடு அன்றி வெளியே செல்ல சுதந்திரமற்ற செல்லமக்கா, மெலிந்த பாப்பா, கணவனுடனும் குழந்தைகளுடனும் கைவீசி வெளியே நடமாட ஒரு சந்தர்ப்பம் வாய்த்துவிட்ட அந்தப் பெண், எழுத்தாளன் போன்றவனிடம் மயங்கி தன்னை அவனுக்குத் தவறுதலாகத் தந்துவிட்ட புஜ்ஜி, தனு எல்லோரும் எப்படிப்பட்டவர்கள்? இவர்கள் ஒரேமாதிரியானவர்கள் என்று தோன்றுகிறதல்லவா? இவர்கள் வித்தியாசமானவர்கள் தான். வெவ்வேறு பின்னணியும், வெவ்வேறு மனநிலையும், வெவ்வேறு பிரச்சனையும் கொண்டவர்கள் தான். ஆனால் எல்லோரும் வண்ணதாசனால் காதலிக்கப்படத் தகுதியானவர்கள். நளினமானவர்கள். முரட்டுத்தனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள். பிரியத்தை ஏகமாக வாங்கிக் கொள்ளவும் திருப்பித்தரவும் காத்திருப்பவர்கள். மனதில் ரகசியத் தந்திகளை மீட்டிக்கொண்டு உலகின் முன் சாதாரணமாக நடமாடுகிறவர்கள். தங்கள் பிறப்பு, சூழ்நிலை, பின்னணி இவற்றாஇ மீறி நளினத்தைத் திருப்திப்படுத்த உன்னுகிறவர்கள். புஜ்ஜி, அவளுடைய கணவனுடனான உறவை முறித்துக் கொள்ளும் போது கூட உயர்ந்த வசனம் பேசி முறித்துக் கொள்கிறாள். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பெண் கதா பாத்திரங்கள் மீது இவர் கொண்டுள்ள உறவே முழு வாழ்வின் மீது இவர் கொண்டுள்ள &lt;a href="http://lh6.ggpht.com/-rcvjL5NhBMc/TyO3sahBbTI/AAAAAAAAIR4/18gdo6-X6zA/s1600-h/vannskalyanji%252520%2525282%252529%25255B3%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="vannskalyanji (2)" border="0" alt="vannskalyanji (2)" align="left" src="http://lh5.ggpht.com/--3m0FbvVjsE/TyO3tB6B67I/AAAAAAAAIR8/_L_WHxyUPOk/vannskalyanji%252520%2525282%252529_thumb%25255B1%25255D.jpg?imgmax=800" width="231" height="392" /&gt;&lt;/a&gt;உறவாகச் சொல்லலாம். இவருக்குப் பிரியமாக இருக்கிறது இந்த வாழ்க்கை. இது வாழ்வின் பிரச்சனைகள் தெரியாத மொண்ணைத்தனத்தின் விளைவு என்பதற்கில்லை. பிரச்சனை என்ற வார்த்தை கூட வண்னதாசன் உலகில் ஒரு கடுமையான வார்த்தை. அவருக்குத் தென்படுபவை கிரீச்சிடல்கள், உராய்வுகள், இடறல்கள், நெரடல்கள். ஒரு சிறு வெடிப்பு எப்படியோ ஏற்பட்டு விட்டது. முக்கியமாக மனித உறவுகளின் புரிதல்களில். ஒரு சிறு முயற்சி; மேலும் சற்று உன்னிப் புரிந்து கொ ள்ளும் தன்மை; அதற்கு அவசியமான பிரியம்; வெடிப்பு அணைந்து கொள்ளும். நெரடல் மறைந்துவிடும். இப்போது கூட அவருக்கு பெரிய புகார் எதுவும் இல்லை. இந்த நெரடலற்ற வாழ்க்கை எவ்வளவு சோபையாக இருக்கும் என்று கேட்கக் கூட அவருக்கு அவசியம் இல்லை. இந்த நெரடலும் சேர்ந்து அவருக்குப் பிரியமாகவே இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? எப்படி அனைத்தின் மீதும் ஒரு பிரியம், ஒரு ஒட்டுதல், ஒரு கனவு வழிவது சாத்தியம்? ஜானகிராமனின் விசித்திரமான கதாநாயகி எல்லோரையும் - முக்கியமாக ஆண்களை - தொட்டுத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுவது போல், வண்ணதாசனும் இந்த வாழ்க்கையைத் தொட்டுப் பார்த்து அதன் சதோஷங்களை அடைய ஆசைப்படுகிறாரா? பெண் ஸ்பரிசத்திற்கு ஆண்கள் இளிக்கலாம். இளிக்கிறார்கள். ஆனால் எந்த மகோன்னத எழுத்தாளனின் ஸ்பரிசத்திற்கும் வாழ்க்கை இளிக்காது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;வாழ்க்கை நளினமானதா? அல்ல. நளினம் அற்றதா? அல்ல. இங்கிதமானதோ இங்கிதம் அற்றதோ அல்ல. கனவோ, கனவுகள் அற்றதோ அல்ல. எப்படி இருப்பினும் அது நிச்சயமாக எளிமையானது அல்ல. லகுவானது அல்ல. ஒரு இயந்திரமாக பாவிக்கும் போது கூட அது மிகப் பெரிய இயந்திரம். குனிந்து பார்க்க தலை சுற்றும் இணைப்புகளும், உறுப்புகளும், இடுக்குகளும் கொண்டது. காடு எனக் கொண்டால், அதன் விஸ்தீரணம், விட்ட இடம் தொட்ட இடம் தெரியாதது. இதை முந்தியில் முடிந்து காட்டுகிறவந்தான் கலைஞன் என்பது இல்லை. தன் முன் விரியும் அனுபவங்களில், இந்த வாழ்வின் உக்கிரத்தை உணர முற்பட்டவன் கலைஞந்தான். இந்த உக்கிரம் பிரதிபலிக்காத எழுத்து உன்னதப் பொருட்படுத்தலை எப்போதும் பெற்றதில்லை. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;வண்ணதாசன் வாழ்க்கையப் பார்க்கிறாரா? வாழ்க்கை சித்திரங்களைப் பார்க்கிறாரா? புற உலகத் தோற்றங்கள் இவரை வெகுவாக ஆகர்ஷிக்கின்றன. இவற்றை கிரகித்துக் கொள்ளும் பொறிகள் அவருடையவை. வெகு நுட்பமாக இந்த நுட்பங்களை வெகு நேர்த்தியாகச் சொல்லத் தெரிந்தவர் அவர். இவை திறமைகள். இது ஒரு சம்பத்து; இது ஒரு வில்லங்கம். வாழ்வு பற்றிய தன் அபிப்ராயத்தை ரேகைப் படுத்தும் பணியில் இத் திறமைகள் பின்னொதுங்கி உதவும் போது, இது சம்பத்து. பொறிகள் விரிக்கும் கோலங்களின் அளைதல் வாழ்வின் மையத்துக்கே நகர முட்டுக்கட்டையாகும் போது இது ஒரு வில்லங்கம். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;சித்திரங்களில் ஊடாடி கதையின் மையத்திற்குப் பிந்திப் போய் சேருகிறார் இவர். பகைப்புலங்களின் படைப்பில் மையம் அமுங்கிப் போகிறது. செய்திகள் வெளிறிப் போகின்றன. டிபன் பாக்சை மறந்து ஆபீசில் விட்டுவிட்ட சின்ன அம்மாள், மீண்டும் ஆபீசை அடைய ரொம்பக் கால தாமதம் ஆகிறது. ஆசிரியருக்குக் காட்சிப் புலங்களில் எவ்வளவு மயக்கமோ அவ்வளவு மயக்கம் இந்த அம்மாளுக்கும். அவளும் அப்படி என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். அவள் பராக்கு பார்க்கிறாள். அது அவளுடைய சுதந்திரம், ஆனால் அன்று அலுவலகத்தின் அழகு முதன்முதலாக அனுபவமாகி விட்டது. அதன் அழகை மறைத்துக் கொண்டிருந்த மனிதர்களின் களேபரம் அப்பொழுது அங்கு இல்லை. மனிதர்கள் முற்றாக அங்கு இல்லாமலும் இல்லை. எப்படி மனித களேபரத்தில் அலுவலகத்தின் அழகு மறந்து போய் விட்டதோ, அதே போல், அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கதையில், கதை செய்தி நம்மை வந்து ஸ்பரிசிக்க, பின்னணியின் களேபரமும் தடையாகி விட்டது. செய்தியே ஒரு ஆசிரியரை ஊக்குவிக்க வேண்டிய உந்து சக்தி. அச் செய்தியைத் துலங்க கிரணங்களைக் குவிப்பது உண்மையில் வாழ்வு பற்றி ஆசிரியர் தன் பார்வையைப் பரப்பிக் கொள்வதாகும். தன்னையே துலங்க வைத்துக் கொள்வதாகும். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;இக்கதைகளில் வாழ்வு பற்றி ஒரு மயக்க நிலை ஊடாடி நிற்கிறது. விழிப்புடன் வாழ்வை கவனித்து, அதன் முழு வீச்சை கிரகித்துக் கொள்ளும் உன்னிப்பைத் தூண்டுவதற்கு பதிலாக, மயக்கத்தின் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன. இந்த மயக்க நிலையை சப்பு கொட்டுகிறவர்களே இன்று இக்கதாசிரியரை அரவணைக்கும் இலக்கிய உலகின் புகழ்பெற்ற இரண்டுங் கெட்டான்கள். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;இந்த மயக்க நிலைக்குத் தமிழில் ஒரு முன் சரடு உண்டு. இடு கால்களற்ற மயக்க நிலை எனில், வெறும் மேகக் கூட்டம் எனில், இங்கு பொருட்படுத்த வேண்டியதில்லை. இம்மயக்கம் யதார்த்த தளத்தில் இணைக்கப்படுகிறது. யதார்த்த தளத்திற்குறிய விவரணைகள் சூட்சுமமாகவும், அப்பட்டமாகவும் பயன்படுத்தப்படும் நிலையில் கனவுகளின் கலப்பு செல்லுபடியாகின்றன. யதார்த்தத்தின் மேல் கனவின் பனிப்படலத்தை விரித்த மிக வெற்றிகரமான கலைஞன் என ஜானகிராமனைச் சொல்லலாம். அவருடைய ’மோகமுள்’ ஒரு சிறந்த உதாரணம். இத்தன்மையின் வாரிசுகள் ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் ஆகியோர். வண்ணதாசனின் மயக்கத்தைத் தெரிந்து கொள்ளக் கூட, ஜானகிராமனிலிருந்து பகுக்கும் ஒரு பொதுத் தன்மை அதிக பலனைத் தரக்கூடும். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களைச் சுற்றி இலக்கிய ஈடுபாடற்ற ‘ரசிக’ சிகாமணிகளும் கூடியிருப்பதன் காரனம் இதுதான். வாழ்வின் உக்கிரத்தைப் புரிந்து கொள்ள அல்ல, கனவுகளின் ஒரு மிடக்கைப் போட்டுக் கொள்ள வந்தவர்கள் அவர்கள். வாழ்க்கையை அதன் தளத்தில் பார்க்க நேர்ந்து, தனது அனுபவங்களின் மெய்ப்பொருளை வண்ணதாசன் தேட முற்படும் பொழுது, அவருடைய இயற்கை சம்பத்துகளான அழகியலும், பொறிகளின் சூட்சுமங்களும் அவரை வெகு தூரத்திற்கு இட்டுச் செல்லக் கூடும். அவ்வாறு ஒரு பயணத்தை மேற்கொள்ளும்போது, அவருடைய இன்றைய ரசிகர்கள் சுவாரஸ்யக் கனவுகளின் போதைக்கு அலைகிறவர்கள் - இவரைக் கைகழுவி விடுவார்கள். இந்த பாக்கியம் இந்த இளைஞருக்கு வாய்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;புஜ்ஜி, எவ்வளவு அருமையான பெண். அவள் ஏன் அந்த ‘எழுத்தாளனை’த் தேர்ந்தெடுத்தாள்? பருவத்தில் பிழப்புக்கு அச்சுகோர்க்கும் நிர்பந்தத்தில் தள்ளப்பட்டவளுக்குக் கூட அந்த ‘எழுத்தாளனை’ச் சுற்றி எப்படிக் கனவுகள் படர்ந்தன? யார் அந்தக் கனவைப் பரப்பினார்கள்? நம் கலை உலகில் கனவை விற்றுப் பிழைப்பவர்களுக்கு இதில் பங்கு இல்லையா? இப்படிப் பார்க்கும் போதுதான் இது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பது தெரிகிறது. &lt;/p&gt;  &lt;blockquote&gt;சுந்தர ராமசாமி    &lt;br /&gt;    &lt;p align="left"&gt;நாகர்கோவில்&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; 20.07.1978 &lt;/p&gt; &lt;/blockquote&gt;  &lt;p align="left"&gt;******&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் என்கிற புத்தகத்திற்கான முன்னுரை. &lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;நன்றி : எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் தளம் 20.10.2010.&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-315125685987010484?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/315125685987010484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_2895.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/315125685987010484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/315125685987010484'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_2895.html' title='வண்ணதாசன் கதைகள் - சுந்தர ராமசாமி'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/-nOr7jIdv0Go/TyO3rWpMknI/AAAAAAAAIRw/kXOBoCa8lBw/s72-c/sundara-ramaswamy_thumb%25255B6%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-1924412399752128845</id><published>2012-01-28T09:10:00.001+05:30</published><updated>2012-01-28T09:15:33.806+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ந. முத்துசாமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருதுகள்'/><title type='text'>ந.முத்துசாமிக்கு பத்மஶ்ரீ விருது</title><content type='html'>&lt;p&gt;&amp;#160; &lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;table border="0" cellspacing="0" cellpadding="2" width="600"&gt;&lt;tbody&gt;     &lt;tr&gt;       &lt;td valign="top" width="434"&gt;         &lt;p&gt;நாடக ஆசிரியரும், கூத்துப்பட்டறை இயக்குனரும், சிறுகதை எழுத்தாளருமான ந.முத்துசாமிக்கு இந்த வருடத்தின் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. &lt;/p&gt;          &lt;p&gt;அவருக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள்.&lt;/p&gt;          &lt;p&gt;&lt;a href="http://azhiyasudargal.blogspot.com/2010/11/blog-post_30.html"&gt;ந.முத்துசாமி:நரையேறும் காலம்: எஸ்.ரா&lt;/a&gt;&lt;/p&gt;          &lt;p&gt;&lt;a href="http://azhiyasudargal.blogspot.com/2010/11/blog-post_19.html"&gt;இழப்பு - ந. முத்துசாமி&lt;/a&gt;&lt;/p&gt;       &lt;/td&gt;        &lt;td valign="top" width="166"&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-AN65ZgEM9KE/TyNuOL2YMxI/AAAAAAAAIRI/Bs7jkPvvy3k/s1600-h/muthuswamy%25255B3%25255D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="muthuswamy" border="0" alt="muthuswamy" align="right" src="http://lh6.ggpht.com/-Wwhdyo55DIA/TyNuO7ODQfI/AAAAAAAAIRM/vufCbyDTvLY/muthuswamy_thumb%25255B1%25255D.jpg?imgmax=800" width="147" height="220" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;     &lt;/tr&gt;   &lt;/tbody&gt;&lt;/table&gt; &lt;a href="http://lh5.ggpht.com/-Sy0tZ39BySo/TyNvWDmhjnI/AAAAAAAAIRY/qKwY2Ts5730/s1600-h/417590_307441975969324_100001105711963_802756_378483240_n%25255B5%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; float: ; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="417590_307441975969324_100001105711963_802756_378483240_n" border="0" alt="417590_307441975969324_100001105711963_802756_378483240_n" align="left" src="http://lh4.ggpht.com/-k6S7E5ke6Ck/TyNvW-zN5cI/AAAAAAAAIRg/f3cWawD-X1A/417590_307441975969324_100001105711963_802756_378483240_n_thumb%25255B3%25255D.jpg?imgmax=800" width="595" height="325" /&gt;&lt;/a&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-1924412399752128845?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/1924412399752128845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_28.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/1924412399752128845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/1924412399752128845'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_28.html' title='ந.முத்துசாமிக்கு பத்மஶ்ரீ விருது'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-Wwhdyo55DIA/TyNuO7ODQfI/AAAAAAAAIRM/vufCbyDTvLY/s72-c/muthuswamy_thumb%25255B1%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-823773835913266721</id><published>2012-01-18T10:38:00.001+05:30</published><updated>2012-01-18T10:38:51.640+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகுலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><title type='text'>தில்லைவெளி - நகுலன்</title><content type='html'>&lt;p align="left"&gt;அவன் அதே தெருவில்தான் இருந்தான். அவரும். அவன் பென்ஷன் பெற்ற பிறகு தனது 60 ஆவது வயதில் தொடங்கி (இப்பொழுது அவன் 68 ஆவது வயதிலும்) தான் செய்து கொண்டிருந்த வேலையை ஒரு ட்யூட்டோரியல் காலேஜில் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். 9 .30&amp;#160; ல் இருந்து 12 .30&amp;#160; வரை வேலை. பிறகு காலம் அவன் கையில். அது ஒரு சௌகரியமான ஏற்பாடாகவே அவனுக்குத் தோன்றியது. நடுவில் செல்லப்பா எழுதிய &amp;quot;வெள்ளை&amp;quot; என்ற கதை அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வரும். போலவே &amp;quot;வாழ்க்கையில் காதல்&amp;quot; என்ற கதையில் அவர் படைப்புத் தொழில் குறித்து சிருஷ்டி பரமாக எழுதியது. அவன் பிரக்ஞையில் அடிக்கடி தோ&lt;a href="http://lh3.ggpht.com/-dEpRtlNsKTw/TxZT2UCr43I/AAAAAAAAIOk/-_cdvRHRDj4/s1600-h/NAGULAN-3%25255B5%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="NAGULAN-3" border="0" alt="NAGULAN-3" align="right" src="http://lh3.ggpht.com/-WxNdWbnoqI4/TxZT4L7c37I/AAAAAAAAIOs/UwNi3-WKkkQ/NAGULAN-3_thumb%25255B3%25255D.jpg?imgmax=800" width="226" height="175" /&gt;&lt;/a&gt;ன்றி மறைந்து தோன்றி மறைந்த வண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதெல்லாம் இருந்தும் நடுவில் நடுவில்&amp;#160; வாழ்க்கைக் கசப்பை மறக்கப் பிராந்திக் கசப்பும் வேண்டித்தான் இருந்தது. எல்லாமே அப்படித்தான். ஆனால் இதையெல்லாம் பின்தள்ளி அவர் உருவம் விசுவரூபமாக அவன் மனதில் என்றுமே உருக்கொண்டு உருக்கொண்டு அவனைக் கவனித்துக் கொண்டே இருந்தது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;இப்பொழுதெல்லாம் அவன் வேலை செய்யும் ஸ்தாபனத்தில் திரும்பி வரும்பொழுது அவர் வீட்டைப் பார்த்துகொண்டு வருவான். வீடு காலியாகப் பூட்டப்பட்டிருந்தது. உள்ளில் சுவர்கள் பச்சை வண்ணம். நடுஅறையில் ஒரு சாய்வு நாற்காலி. வருபவர்களுக்கு ஒரு&amp;#160; ஸெட்டி. எதிரில் ஒரு டி.வி. மனைவியை இழந்த பிறகு அவரும் தனிமையை உணர்ந்திருக்கவேண்டும். அவன் மனம் இதே தடத்தில் சென்று கொண்டிருந்தது. இன்று அவர் வீட்டில் சாய்வு நாற்காலி, ஸெட்டி, டி.வி. கார் இல்லை. ஏன், அவரே இல்லை. இல்லை? அவ்வீடு என்றுமே திகம்பரமாகத் தில்லை வெளியாக இருந்தது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவரைப் பற்றியே மனம் சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு நாள் அவனை வழக்கம் போல் கைதட்டிக் கூப்பிட்டார். போனான். கேட்டார். &amp;quot;உனக்கு எவ்வளல்வு பென்ஷன்?&amp;quot; சொன்னான். மறுபடியும் கேட்டார். &amp;quot;என்ன சொல்கிறாய்? இவ்வளவுதானா? D .A . உண்டென்பது தெரியாதா? &amp;quot;. அவன் ஒன்றும் சொல்லவில்லை. சொன்னார். &amp;quot;உன்னை எனக்குத் தெரியும். நீ ஒரு சண்டைக் கோழியாக மாறவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அரசாங்கத்திற்கு இதைப்பற்றி எழுதினால் கிடைக்கும். எழுது. சும்மா இருந்து விடாதே&amp;quot;. அவன் தலையை அசைத்து விட்டு திரும்பி விட்டான். அடுத்த நாள் தன் கைத்தடியை தாங்கிக்கொண்டு அவன் அறை ஜன்னல் முன்வந்து நின்றார். கேட்டார். &amp;quot;எழுதினாயா?&amp;quot;. அவன் பேசவில்லை. மறுபடியும் சொன்னார். &amp;quot;நீ இவ்வாறு இருந்தால் போதாது. என்னுடன் வா&amp;quot; என்றார். அவன் போனான். கடிதத்தை எழுதச் சொன்னார். எழுதினான். அவரே ஒரு போஸ்ட் கவரைக் கொடுத்துத் தபால் பெட்டியில் போடச் சொன்னார். போட்டான். இரண்டு வாரம் கழித்து மறுபடியும் கைத்தடியைத் தாங்கிக்கொண்டு அவன் அறை ஜன்னல் முன் நின்றார். அவன் அவரை உள்ளே வரச் சொல்லி நாற்காலியில் உட்காரச் சொன்னான். உட்கார்ந்தார். கேட்டார். &amp;quot;பதில் வந்ததா?&amp;quot;. &amp;quot;சாதகமாகவே வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட இலகாவிற்குப் பழைய பாக்கியுடன் D .A . கொடுக்க உத்தரவு சென்றுவிட்டது&amp;quot;. மறுபடியும் கேட்டார். &amp;quot;அங்கு சென்று விசாரித்தாயா?&amp;quot;. அவன் பேசவில்லை. அவர் பேசினார். &amp;quot;நீ இப்படி இருந்தால் போதாது. குறிப்பிட்ட இலகாவிற்குச் சென்று விசாரி&amp;quot; என்று சொல்லி விட்டுச் சென்றார். அதை அவன் செய்த பிறகுதான் அவனுக்கு அந்த அனுகூலம் கிடைத்தது. அவர் சொன்ன வேறு ஒரு விஷயமும் அவனுக்கு ஞாபகம் வந்தது. &amp;quot;இதோ பார். உனக்கு ஒன்றும் தெரியாது. இந்த உலகம் ஒரு மாதிரியானது. எந்த விஷயத்திலும் கடைசி வரை ஊர்ஜிதமாக இருந்து நாம்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும். உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்த உலகம் ஒரு மாதிரியானது&amp;quot;.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவரை அவன் முற்றிலும் புரிந்து கொண்டு விட்டான் என்று சொல்ல முடியாது. அவர் ஒரு உயர்ந்த உத்தியோகத்திலிருந்து பென்ஷன் பெற்றுத் தனியாகத்தான் வீட்டில் இருந்தார். அவருக்குச் சொந்த மக்கள் இருந்தார்கள் என்றாலும், அடிக்கடி அவனிடம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், நம்பிக்கையுடன் சமயோசிதமாகச் சிந்திக்க நீ என்னைப் பழக்கிக் கொள்ளவேண்டும் என்பார்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;இன்னும் அவன் வழக்கம்போல் வீடு திரும்புகையில் அந்த காலி வீட்டைப் பார்த்துக் கொண்டுதான் வந்தான். இது இப்பொழுதெல்லாம் ஒரு அர்த்தம் நிறைந்த பழக்கமாகி விட்டது. மறுபடியும், மறுபடியும் அவர் நினைவு அவனைச் சூழ்ந்தது. உடல் இடம் கொடுத்த வரையில் அவர் வீட்டிலிருந்து சற்றே தொலைவிலிருந்த கோவிலுக்கு அங்கு சேர்கிற வரை &amp;quot;ஹரே கிருஷ்ணா. கிருஷ்ண ஹரே &amp;quot;என்று ஓங்கிய குரலில் சப்தித்துக் கொண்டே போவார். அதே மாதிரி அவர் வீடு திரும்புகையில், வீடு எட்டும்வரை இதைச் செய்வார். ஒரு முறை அவன் அவரிடம் கேட்கவும் செய்தான். &amp;quot;ஏன் இவ்வாறு தெருவெல்லாம் கேட்க கிருஷ்ண கோஷம் செய்துகொண்டு போகிறீர்கள் ?&amp;quot;சொன்னார், &amp;quot;உனக்கு ஒன்றும் தெரியாது. பல முறைகளில் இந்தப் பழக்கத்தால் அனுபவபூர்வமாக எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. நீ சாது என்றாலும் நீயும் இந்த தலைமுறையைச் சார்ந்தவனாதலால் இதெல்லாம் உனக்குப் புரியாது&amp;quot; என்றார். அவனும் அவரை முழுவதும் புரிந்துகொண்டான் என்று சொல்லமுடியாது. ஒரு முறை அவன் வீட்டில் யாருமில்லை. அன்று வீட்டு வேலைக்காரி வரவில்லை. (அவருக்கு அவன் தனியானவன் என்றதால் ஒருவித அனுதாபம் இருந்தது) அவன் வீட்டின் முன் தளத்தில் இருந்தான். சாப்பிடும் இடத்திலிருந்து ஒரு ஓசை கேட்டது. சென்று பார்த்தான் தரையில் ஒரு நீண்ட சாரைப் பாம்பு அவனைக் கண்டதும் ஓடிவிட்டது. இருநாட்கள் அந்தப் பக்கம் அவன் போகாமலே இருந்தான். மூன்றாவது நாள் அவரிடம் சென்றான். சொன்னான். சொன்னார், &amp;quot;ஒரு ஐந்து ரூபாய் கொடு, நான் வழக்கம்போல் கோவிலில் ஒரு நாக பூஜை செய்கிறேன்&amp;quot; என்றார். அவன் அவரைப் பார்த்தான். அவர் அவனைப் பார்த்துச் சொன்னார். &amp;quot;நான் உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். கேட்கிறாயா?&amp;quot; என்றார். அவன் தலையை அசைத்தான். &amp;quot;எங்கள் பூர்வீகத்தில் ஒரு கிழவர் இருந்தார். ஒரு வகையில் சித்திகள் பெற்றவர். பாம்புக் கடியால் மரித்தவரை உயிர் பிழைப்பிக்க வல்லவர். இது அவர் குருவிடமிருந்து படித்தது. ஆனால் அந்தக் குரு அவர் அதைப் பிரயோகித்தால் அவர் மரணம் அடைவார் என்றும் சொல்லியிருந்தார். பிறகு அவர் நெருங்கிய உறவில் ஒரு இளைஞன் பாம்புக்கடியால் இறந்து விட்டான். அவன் பெற்றோர்கள் அவன் சடலத்தை அவர் முன்கிடத்தி அவனுக்கு உயிர்ப் பிச்சை அளிக்குமாறு கெஞ்சினார்கள். அவர் சிறிது&amp;#160; நேரம் பேசாமலிருந்து விட்டு ஒரு பிடி அரிசியைக் கொண்டுவரச் சொல்லி அதைத் தரையில் வாரி இறைத்தார். உடன் ஒரு பட்டாளம் எறும்புகள் அங்கிருந்து சென்று திரும்பி வர கடித்த பாம்பும் வந்தது . எறும்புகள் சுற்றி வளைத்த அப்பாம்பு தன் தலையை தரையில் அடித்துக் கொண்டு செத்தது. அந்த இளைஞனும் தூக்கத்தில்லிருந்து எழுந்தவன் மாதிரி உயிர் பெற்றான்.&amp;quot; இதைச் சொல்லிவிட்டு அவர் சிறிது நேரம் பேசாமல் இருந்து விட்டுப் பின், &amp;quot;ஒரு வாரம் கழித்து அந்தக் கிழவரும் இறந்தார்&amp;quot;. அவன் பேசாமல் இருந்தான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவர் மறுபடியும் சொன்னார். &amp;quot;இதிலெல்லாம் உனக்கு நம்பிக்கை வராது. ஆனால் எனக்கு அப்படியில்லை.&amp;quot; இதைப் போலவே அவரிடமிருந்து உலக வாழ்வைப்பற்றி, அதீத அனுபவங்களைப் பற்றி அவன் பலவற்றைத் தெரிந்துகொண்டான்.ஒரு நாள் மாலை அவரைப் பார்க்க வேண்டும்போல் தோன்றவே அங்கு சென்றான். ஒரு சிலர் இருந்தார்கள் மௌனபூர்வமாக.    &lt;br /&gt;கேட்டான் &amp;quot;அவர் இருக்கிறாரா?&amp;quot;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&amp;quot;நேற்று மாலை உங்கள் சிநேகிதர் அவர் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென்று காலமாகி விட்டார்.&amp;quot;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவன் திரும்பி விட்டான். இப்பொழுதும் அவன் அத் தெரு வழியில் போகும் பொழுதெல்லாம் அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டுதான் சென்றான். ஆனால் அதைக் காலி வீடு என்று அவனால் நம்பமுடியவில்லை.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;விருட்சம் கதைகள் 1992 . விருட்சம் வெளியீடு&lt;/strong&gt;.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;தட்டச்சு உதவி: ரமேஷ் கல்யாண்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-823773835913266721?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/823773835913266721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/823773835913266721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/823773835913266721'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_18.html' title='தில்லைவெளி - நகுலன்'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/-WxNdWbnoqI4/TxZT4L7c37I/AAAAAAAAIOs/UwNi3-WKkkQ/s72-c/NAGULAN-3_thumb%25255B3%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-7047134149763557124</id><published>2012-01-17T07:57:00.001+05:30</published><updated>2012-01-17T07:57:02.530+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ்.ராமகிருஷ்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருதுகள்'/><title type='text'>எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது(2011)</title><content type='html'>&lt;p align="left"&gt;2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக க&lt;a href="http://lh6.ggpht.com/-WIqUFkav2JI/TxTccUQIYrI/AAAAAAAAIOQ/6OHssrGBU1s/s1600-h/sra%25255B3%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="sra" border="0" alt="sra" align="right" src="http://lh5.ggpht.com/-M_-_jbkChC8/TxTcdCksxlI/AAAAAAAAIOU/JFtjDiJTV5s/sra_thumb%25255B1%25255D.jpg?imgmax=800" width="212" height="257" /&gt;&lt;/a&gt; டந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;இவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது.&amp;#160; &lt;/p&gt;  &lt;p align="left"&gt;எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;தகவல்: அ.முத்துலிங்கம் தளம்&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-7047134149763557124?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/7047134149763557124/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/2011.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/7047134149763557124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/7047134149763557124'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/2011.html' title='எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது(2011)'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/-M_-_jbkChC8/TxTcdCksxlI/AAAAAAAAIOU/JFtjDiJTV5s/s72-c/sra_thumb%25255B1%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-3394791331104712531</id><published>2012-01-15T07:17:00.001+05:30</published><updated>2012-01-15T07:17:53.453+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெருமாள்முருகன்'/><title type='text'>நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்</title><content type='html'>&lt;p align="left"&gt;அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால், அவன் நினைவுப் பாசிகள் துடைக்கப்பட்ட பளிச்சிடலின் அடியில் விருப்பமும் ஆர்வமும் புடைத்தெழும்பின. குழந்தைகள் அவனை மேலும் வற்புறுத்தலாயினர். அங்கே விருந்தாளியாக வந்திருந்தான் அவன். ஓரளவுக்கு நெருங்கிய உறவுதான். அடிக்கடி வரவில்லை என்பதே இயல்பாக இருக்க விடவி&lt;a href="http://lh6.ggpht.com/-J0M-mOAh4gA/TxIwQ7A0bTI/AAAAAAAAIOA/1bmt1VQIagM/s1600-h/perumal_murugan10.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="perumal_murugan" border="0" alt="perumal_murugan" align="right" src="http://lh5.ggpht.com/-FjBHJGkshv0/TxIwRpZoiNI/AAAAAAAAIOI/Kdkk8oD1TZw/perumal_murugan_thumb11.jpg?imgmax=800" width="182" height="258" /&gt;&lt;/a&gt;ல்லை. கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தைகள், எட்டிலிருந்து பன்னிரண்டு வயதிற்குள்ளான மூவர் - சிறுமி, இரண்டு சிறுவர்கள் - அவன் மடிமீது புரளவும் விளையாட்டின்&amp;#160;&amp;#160; நடுவராக அவனைப் பாவிக்கவுமான அளவிற்குத் தயாராகிவிட்டிருந்தனர். அதன் உச்சபட்சமாகத்தான் இந்த அழைப்பு. மனதில் மெலிந்த குறுகுறுப்பு உணர்வைத் தோற்றுவிப்பதாக, மூழ்கிவிட்ட நினைவுப் பொருள் ஒன்றைப் பெற்றுவிட்டதாக அவன் கிளர்ச்சி அடைந்தான். உடனே எழுந்து சென்றுவிடவும் முடியவில்லை. தயக்கத்தின் மெலிந்த நூல் முனைகள் அவன் கால்களை இறுகக் கட்டியிருந்தன. பாதம் வியர்த்து ஊன்றியிருந்த தரை பிசுபிசுத்தது. அங்கும் இங்குமாகக் கண்களை ஆசை நிரப்பி அலைபாய விட்டான். குரல் எழும்பாமல் உள்ளடைத்தது. குழந்தைகள் கைகளை இடுக்கிக் கொண்டு அவன் தாடையில் கைவைத்துக் கெஞ்சவும், கைகளை உரிமையுடன் பற்றி இழுக்கவும் தொடங்கினர். அவன் அசைவில் கட்டில் கிரீச்சிட்டுக் கத்தியது. ஏதாவது ஒரு குரல் ’அவரத் தொந்தரவு பண்ணாதீங்கடா’ என்று உயர்ந்து இந்தச் சூழலைச் சிதைத்துவிடுமோ என அஞ்சினான். அதற்குள்ளாக அவர்களோடு எழுந்துவிடுவது நல்லது என்று பட்டது. தன் ஆர்வத்தை மனதிற்குள் சுருட்டிக்கொண்டு தயவு செய்யும் பாவனையில் ‘துண்டு இல்லையே’ என்றான். அதுதான் இப்போது பெரிய பிரச்சினைப் போல. அவர்கள் வெகு உற்சாகமாகக் கூவிக் கொண்டு எங்கெங்கோ ஓடி ஆளுக்கொரு துண்டை இழுத்து வந்தனர். முகம் முழுக்கப் பரவிய வெட்கச் சிரிப்போடு அவனும் எழுந்து கொண்டான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;பசுமை மணம் பரவிய காடுகளுக்கிடையே நிலத்தின் பிளந்த வாய்போல சட்டென்று கிணறு தோன்றியது. சீரான சுவர்களையோ சமமான வடிவத்தையோ அது பெற்றிருக்கவில்லை. அங்கங்கே கதைகள் பிதுங்கி குழிப் பொந்துப் புண்கள் நிறைந்து ‘ஆ’வென இருந்தது. படிகளெனத் தோன்றும்படி சுவடுகள் பதிந்த தடமொன்றும் தெரிந்தது. மோட்டாரின் குழாய் பாதியளவுக்கு மூழ்கி அசைவற்றிருந்தது. தென்னங்கீற்றுகளில் நுழைந்த கதிரொளி கிணற்றைத் துளைத்து ஆழ்மண்ணைக் காட்டியது. குதிப்பதற்குக் கால்களைத் துறுதுறுக்க வைக்கும் தோற்றமுடைய கிணறுதான் இது. குழந்தைகள் யார் முதலில் குதிப்பது என்று தர்க்கித்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. குதித்தலில் தொடக்கம்தான் முக்கியம். ஒரு முறை நீர் சிதறிக் கிணறலையும் சத்தம் கேட்டுவிட்டால் போதும். கிணற்றின் உறைந்த மௌனத்தை முதலில் உடைக்க வேண்டும். அதன் பின் உற்சாக வெறி எல்லோரையும் தொற்றிக் கொள்ளும். அதைத் தொடங்குவதில்தான் அத்தனை சிரமம். முதலில் குதிப்பவரைக் காவு கொள்ளவெனக் கிணறு காத்திருப்பதான அச்சம். அவர்களின் கவனம் குவிந்திருந்த போது, குலையிலிருந்து கழன்று விழும் நெற்றுத் தேங்காயென அவன் குதித்திருந்தான். உடனே கிணற்றின் மூலைகள் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களும் குதித்தனர். உறைந்திருந்த கிணறு இப்போது பலவித ஓசைகளில் பேசத் தொடங்கிற்று. இடைவிடாமல் நீர் அலைந்து சுவர்களில் மோதும் ஒலிகள். குழந்தைகள் அங்கங்கே பற்றி ஏறிக் குதிப்பதற்கான வழிகளை வைத்திருந்தன. குதிப்பதன் மூலம் நீரைத் துன்புறுத்துவதே அவர்களின் லட்சியம் போல தொடர்ந்து குதிக்கும் சத்தம்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;கிணற்றை அவன் வேறுமாதிரி உணர்ந்தான். பூங்குழந்தையை அள்ளி அணைக்கும் மென்மையுடன் நீரைக் கைகளால் வருடிக்கொண்டு நீந்தினான். கிணற்றின் ஒழுங்கற்ற உருவம் பெரும் சந்தோசத்தைக் கொடுத்திருந்தது. வெயில் வேளையில் தண்ணீரின் ஜில்லிப்பு உடலுக்கு ஒத்தடம்.&amp;#160; அடிக்கடி தலையை முழுகுவதிலும் மல்லாந்து நீச்சலடிப்பதிலும் அவன் விருப்பமுற்றான். சிதறி விழுந்திருந்த வெயில் ஆழ்பள்ளத்துக்குள் கிடக்கும் அவனைத் தேடி வந்து முகத்திலடித்தது. அற்புதத்தைத் தேக்கி வைத்திருக்கிறது கிணறு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு வழங்குகிறது. கிணற்றின் மீது அன்பு வெறி முகிழ்த்தது. அதன் ஒவ்வொரு அணுவையும் தொட்டுத் தழுவ ஆசையுற்றான். அலைவில் தூசிக் கோல்கள் ஒதுங்கிக் கிடக்கும் அதன் மூலைகள் ஒவ்வொன்றையும் நோக்கி வெகுநேரம் பயணம் செய்தான். ஒவ்வொரு மூலையும் நின்று ஓய்வெடுப்பதற்கான சிறு இடத்தை ஏற்படுத்தி வைத்திருந்தது. குறைந்தபட்சம் பற்றி நிற்பதற்கான பிடிமானங்களையேனும் கொண்டிருந்தது. கருணை மிக்கது கிணறு. மூலைகளில் பனி நீரின் சுகம். பின் ஆழத்தை நோக்கிச் சென்று கிணற்றின் அடி மேனியை அறிய ஆவல் கொண்டான். நடுக்கிணற்றில் மூழ்கிய சில விநாடிகளில் வெகுதூரம் உள்நோக்கி அமிழ்ந்துவிட்டதாக உணர்ந்தான். கிணறு இன்னும் போய்க்கொண்டிருந்தது. எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம். ஒன்றும் புரிபடாது மூச்சுத் திணறியது. சட்டெனக் கைகளை அழுத்தி மேல்நோக்கி வந்தான். கிணற்றுள் எத்தனையோ ரகசியங்கள். எல்லாவற்றையும் எப்போதோ வரும் ஒருவனுக்குச் சில நிமிடங்களில் அவிழ்த்துப் பரப்பிவிடுமா? என்ன மாதிரியான முட்டாள்தனத்தில் ஈடுபட்டோம் என்று தன்னைக் கடிந்துகொண்டான். படியோரப் பலகைக்கல்லில் உட்கார்ந்து ஆசுவாசமானான். தண்ணீரின் அசைவில் சுவரைப் பற்றிக் கொள்ளும் தவளையையும், மேலிருந்து நீருக்குள் தாவும் தவளையையும் புதிதான வியப்போடு கண்டான். சற்றுநேரம் வெறும் பார்வையாளன் மட்டுமேதான் என்று தோன்றியது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;குழந்தைகளோ சற்றும் களைக்கவில்லை. சரியும் மண்ணைப் பொருட்படுத்தாமல், சுவர்களைப் பற்றியேறி மாறி மாறிக் குதித்துக் கொண்டேயிருந்தனர். தவளைகளுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை. கிழவனின் வாயிலிருந்து எழும் புன்சிரிப்பைப் போல, மெல்ல நகைத்துக்கொண்டு அவர்களைக் கிணறு பார்த்துக் கொண்டிருப்பதாகப் பட்டது. குஞ்சம் கலைந்த ரிப்பன் காற்றிலாட அந்தச் சிறுமி எட்டிக் குதிக்கையில், வெயில் பட்ட மினுக்கத்தில் இறங்கி வரும் குட்டி தேவதையைத் தணிவாகக் கிணறு ஏந்திக் கொள்வதாய் இருந்தது. மேலேறுவதும் குதிப்பதும் தெரியாமல் பையன்கள் அத்தனை வேகம். அவர்களின் பொருளற்ற கூச்சல்களைப் பெருமிதத்தோடு கிணறு வாங்கிக் கொண்டது. துணையற்ற தனிமையில் வெகுகாலமாக லயித்துச் சலிப்புற்றுப் போய்விட்ட மனோபாவத்தோடு இவற்றையெல்லாம் கிணறு ரசித்துக்கொண்டிருக்கிறது போலும். அவன் உடம்பைத் தழுவிய ரகசியக் காற்று குளிரைப் பரப்பியது. மேனியிலிருந்து உருண்டோடிய நீர்த்திவலைகள் அனைத்தும் கிணற்றில் கலந்துவிட்டன. உடல் காய்ந்து போனது. நடுக்கம் பற்றியது. நீருக்குள் இருக்கையில் தெரியாத குளிர், சற்று மேலேறியதும் சட்டெனப் பிடித்துக்கொள்கிறது. உண்மையில், இது கிணற்றின் தந்திரம். தன்னுள் இறங்கச் சொல்லும் அதன் அழைப்பு. ஒரு முறை வந்துவிட்டவனை மீண்டும் மீண்டும் தூண்டுவதற்கான மந்திரத்தைக் கிணறு தூவிவிடுகிறது. அலையினூடே பாய்ந்தான். இப்போது வெதுவெதுப்பான நீர் அவன் உடலைத் தடவி அரவணைத்தது. அவனையறியாமலே கிணற்றை வட்டமாகப் பாவித்து வலம் வந்தான். அவன் காலடிகள் உடனுக்குடன் மறைந்தாலும் சுளிவுகள் இருந்தன. மறுபடியும் வலம் வரத் தூண்டிற்று. அதற்குள் அந்தச் சிறுமி அவனைப் பார்த்துக் கேட்டாள்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;“சித்தப்பா... கெணத்தச் சுத்தி நிக்காம எத்தன ரவுண்டு வருவீங்க?”&lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவனால் எண்ணிக்கை சொல்ல முடியவில்லை. கிணற்றை அளவிட்டான். அதன் கோணமற்ற பரப்பு எந்தத் தீர்மானத்தையும் கொடுக்கவில்லை. பதிலின்றி மெலிதாக மழுப்பிச் சிரித்தான். அவள் விடவில்லை.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;“பத்து ரவுண்டு வர முடியுமா?”&lt;/p&gt;  &lt;p align="left"&gt;சிறுவன் அதற்குப் பதில் சொன்னான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;”சித்தப்பாவால ரண்டு ரவுண்டே வரமுடியாது.”&lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவனைக் கிளப்புவதற்காக அந்தச் சிறுவன் சொல்கிறான் என்பதை உணர முடிந்தாலும், இதையும்தான் பார்ப்போமே என்ற சவால் மனம் வந்திருந்தது. படியிலிருந்து தொடங்கி ஒவ்வொரு மூலையாக தொட்டு மீண்டும் படிக்கே வருவது ஒரு சுற்று. முதல் வட்டம் முடிந்து அடுத்த வட்டத்தின் பாதியில் அவன் மூச்சுறுப்புகள் பலகீனமடைந்தன. வாய் வழியாக மூச்சு வாங்கினான். கைகள் சோர்ந்து கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை. மறுபடியும் கிணறு அவனைத் தோல்வியுறச் செய்துவிட்டது. ஒரு மூலையில் நின்றுகொண்டு உடல்குறுகி மூச்சு வாங்கினான். கிணற்றின் எக்களிப்புத் தானோ என அஞ்சும்படி அவர்களின் ஆரவாரம் காதடைத்தது. அவமானத்தை மிகுவிக்கும் கூச்சல். மேலேறிப் போய்விடவேண்டும் போலிருந்தது. கிணறு யாராலும் ஜெயிக்க இயலாத பிரம்மாண்டம். இதன் முன் தோல்வியை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதனோடு போட்டியிட்டுத் தோற்பதே தைரியம்தான். கர்வத்தோடு பெருமூச்செறிந்தான். படியை நோக்கி நீந்தினான். தேர்வடத்தைப் பிடிக்கும் அடக்கத்தோடு கை துழாவியது. படியோரம் வந்து இறுதி முழுக்குப் போட்டுத் தலையைப் பின்னோக்கி நீர்ச்சீப்பினால் சீவிக்கொண்டான். பின் அறிவித்தான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;“நான் ஏர்றன். நீங்க குதிக்கறதுன்னா குதிச்சுட்டு வாங்க.” அவன் அறிவிப்பு குழந்தைகளிடம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும். சில நொடிகள் கிணற்று அலை டிமிக்கிடும் ஓசை. சிறுமியின் முகத்தில் துயரத்தின் சாயை முற்றிலுமாகப் படிந்துவிட்டது. பையன்கள் சோர்ந்து போயினர். கிணற்றுச் சுகம் இத்தனை சீக்கிரம் தீர்ந்து போய்விடுவதை அவர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவன் ஏறிவிட்டால் அவர்களும் ஏறிவிடவேண்டியதுதான். பெரிய ஆள் யாரும் இல்லாமல் கிணற்றுக்குள் இருக்க அவர்களுக்கு அனுமதியில்லை. கிணறு எத்தனையோ அச்சுறுத்தல்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. அதன் மேற்பொந்துகளில் விஷமேறிய கிழட்டுப் பாம்புகள் அடைகிடக்கலாம். துஷ்டக்கணம் ஒன்றில் அவை தலை நீட்டி வெளிவரலாம். நீருக்குள் மூழ்கிச் செல்பவர்களை மாட்டி இழுக்கும் கொடங்குகள் மறைந்திருக்கலாம். வழுக்கலின் பிடி எந்த நேரத்திலும் இறுகலாம். அந்தச் சூழல்களைப் பெரியவர்கள் சமாளித்து விட முடியும். சிறுவர்கள்? அத்தோடு, சுற்றிலும் உயர்ந்த தென்னைகள் நிற்க, நடுவில் ஆடிச்செல்லும் கிணரு, அமானுஷ்யமான தன்மை வாய்ந்தது.&amp;#160; குரல்களின் எதிரொலி எந்தத் திசையிலிருந்தும் வரும். பயமூட்டும் மௌனம் நீரின் கருமைக்குள் நிரந்தரமாகி இருக்கிறது. இவற்றிலிருந்தெல்லாம் பாதுகாக்கும் கவசமான அவன் மேலேறிவிட்டால் அவ்வளவுதான். சிறுமி, அவனை அழைப்பதற்குக் கெஞ்சியதைப் போன்றே மறுபடியும் தொடங்கினாள். இப்போது அவளுடைய கெஞ்சல் அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஏறிப் போய்விடும் முடிவில் தீர்மானமாயிருந்தான். அசட்டையான புன்னகையோடு அடி எடுத்தான். கிழக்கு மூலையில் நின்றிருந்த சிறுமி நீரில் லாவகமாகப் பாய்ந்து அவனருகில் வந்து எங்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். நனைந்து படிந்திருந்த சடை ஆட, ’போவ் வேண்டாஞ் சித்தப்பா’ என்று தயவானாள். அவன் இதை எதிர்பார்க்கவில்லை. அவள் கைகள் முறுக்கிச் சுற்றிய பாம்பெனப் பிடித்திருந்தன. ‘உடு கண்ணு... உடு கண்ணு’ என்றான். இந்தச் சாதாரணமான சொற்களே அவள் பிடிவாதத்தைப் போக்கிவிடுமென நினைத்தான். அவள் விடுவதாயில்லை. வரம் தரும்வரை விடமாட்டேன் என்று இறைஞ்சுவதுபோல அவள் குனிந்திருந்த தோற்றம் காட்டியது. அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. தடுமாற்றத்தோடு மெல்லக் குனிந்து அவள் விரல்களைப் பிரிக்க முயன்றான். மேலும் மேலும் இறுகியதே தவிர நெகிழவில்லை.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;“சித்தப்பாவ உட்ராத பிள்ள” என்னும் குரல் எங்கிருந்தோ கேட்டது. அப்போதும்கூட பிள்ளை விளையாட்டின் பிடிவாதம்தானே இது என சாவதானமாகச் சிரித்தான். எதிர்பார்க்காத நொடியில் சிறுமியின் கை அவனை வாரி உள்ளே தள்ளியது. சுவரில் துருத்திக்கொண்டிருக்கும் கல்லொன்று பெயர்ந்து விழுவதைப் போல நீரில் படாரென விழுந்தான். வயிற்றில் நீர்ச்சாட்டை பளீரென வெளுத்து வாங்கியது. உடலெங்கும் அச்சத்தின் மின் துகள்கள் பாய்ந்தன. சுதாரித்து நீந்தி படிக்கு வந்தான். இதுவும் கிணற்றுக்கு எதிரான தோல்விதானோ என்று தோன்றியது. அப்படியொன்றுமில்லை என்று காட்டிக்கொள்பவனாய் ‘ஏங்கண்ணு இப்பிடிப் பண்ணுன’ எனச் சமாதானம் பேசிக்கொண்டு ஏறலானான். இப்போது அவனுக்கு மேல்படியில் -&amp;#160; அது படியில்லை துருத்திக்கொண்டிருந்த பையன் அவனைப் பார்த்து கைகளை விரித்து ஆட்டிக் கொண்டு ‘உடமாட்டனே’ என்று கூச்சலிட்டான். ஏறிவிடும் வைராக்கியத்தோடு கால்தூக்க, பையன் குனிந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு புரண்டான். இரண்டு பேரும் ஒருசேரக் கிணற்றுக்குள் விழுந்தனர். பையனை நீருக்குள் இழுத்துக் கால் உந்தி ஓர் அழுத்து அழுத்திவிட்டுப் படியை நோக்கி வேகமாக நீந்தினான். பையன் அடிமண்ணைத் தொட்டுத்தான் திரும்ப முடியும். அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள குறி வைத்து வந்த சிறுமியைத் தள்ளிவிட்டுப் பாய்ந்து படியேறினான். ‘ஏய்’ என்று உற்சாகக் கத்தலோடு இன்னொரு பையன் அவன் மீது தாவினான். சற்றும் அவன் எதிர்பார்க்காத கணம். மீண்டும் நீருக்குள் விழுந்திருந்தான். நீரைத் துளைத்து வந்த ஒளி கண்களைக் கூசியது. திவலைகளினூடே அவன் பார்க்க முயன்றான். புரியாத காட்சிகளே எங்கும் நிறைந்தன. பரபரப்பானான். ஏறி ஓடி விடுதலை தவிரத் தப்பிக்க வழியேதுமில்லை. ஆனால், படிக்கு மேலே இன்னொரு பையன். அவர்களுக்குள் ஓர் ஒழுங்கு வந்திருந்தது. நீருக்குள் அவனோடு போராட ஒருவர், படியேற விடாமல் காலைக் கவ்வ ஒருவர். கொஞ்சம் உயரத்தில் நின்றுகொண்டு மேலே தாவிக் குதிக்க ஒருவர். மாற்றி மாற்றி அவர்கள் அந்தந்த இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர். அவனைச் சுற்றி உடைக்க இயலாத கனத்த விலங்கென அவர்கள் மாறியிருந்தனர்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;இந்த விளையாட்டு எத்தனை நேரம் தொடருவது? இது என்ன விளையாட்டு? விளையாட்டெனக் கிணற்றின் தந்திரம். விருந்தாளியாக அவன் யார் வீட்டுக்கும் வரவில்லை. கிணறு வரவழைத்திருக்கிறது. நீச்சலுக்கு அவனை யாரும் அழைக்கவில்லை. தன் தூதுவர்களை உருவம் கொடுத்துக் கிணறு அனுப்பியிருக்கிறது. அவர்கள் முகங்களை அவனுக்குத் தெரியாது. மாயத்தின் பிறப்பிடம் கிணறு, மரணக்குழி. காவு கேட்கத் தொடங்கிவிட்டது. கிணற்றின் பகாசுர வாய்க்குள் வசமாக வந்து சிக்கிக்கொண்டிருக்கிறான். குழந்தைகள் என அவன் நினைத்தது எவ்வளவு தவறு. கிணற்றின் ஏவலாளர்களான மூன்று பிசாசுகள். கழுத்தைக் குறிவைத்துப் பாய்கிறது ஒன்று. காலை வாரி விடுகிறது ஒன்று. நீருக்குள் கட்டிப்புரண்டு இழுக்கிறது ஒன்று. அவற்றின் சிரிப்புகள் உயிர் உறிஞ்சும் அழைப்பு. குட்டிப் பிசாசுகள் பசி வெறி கொண்டுவிட்டன. அவன் எவ்விதம் தப்பிப் போவான்?&lt;/p&gt;  &lt;p align="left"&gt;கிணற்றின் பொந்துகள் மரணம் ஒளிந்திருக்கும் இருட் குகைகளென மாறின. தோல் கருக்கும் அமிலக் கரைசல் தண்ணீர். இவற்றை வெற்றி கொள்ளும் நீச்சல் பலம் அவனிடம் இருக்கிறதா? சுவர்களின் மீது ஏறிக்கொண்டு கழன்ற கண்களோடு வாய் பிளந்து நிற்கின்றன தவளைக் குட்டிகள். அவை எந்த நேரத்திலும் அவனை வீழ்த்திவிடத் தயாராய் இருக்கின்றன. பிசாசுகள் துவண்டு போகையில் அவை பாயக்கூடும். அச்சம் அவன் உடல் முழுக்கப் பரவி நிலைகொண்டது. எதையும் யோச்கிக்கக் கூடவில்லை. ஏறி ஓடிவிடுகிற&amp;#160; முன்னமுன்ன, மீண்டும் மீண்டும் முயன்று சரிந்தான். தண்ணீரைக் குடித்துக் குடித்து வயிறு உப்பிப் போய்விட்டது. உடல் முழுவதும் நடுக்கம் வேறோடியிருந்தது. எசகுபிசகாக விழுந்ததில் எங்கெங்கோ கற்களின் சிராய்ப்புகளும் காயங்களும் எரியத் தொடங்கின. அவன் அதனைப் பொருட்படுத்தவில்லை. தப்பிப்பதில் குறியாக இருந்தான். அவற்றின் இலக்கு கொஞ்சம் கொஞ்சமாய்ச்&amp;#160; சிதைத்து ஆள்விழுங்கி விடுவதுதான் போலும். மிரண்ட விழிகளோடு சாவுடன் போராடும் மிருகமாய் மூர்க்கமானான். கைபற்ற வரும் பிசாசுகளை இழுத்து அடித்தான். கால் வைத்துக் கிணற்றின் ஆழம் நோக்கி உந்தினான். ஆனால் அவற்றின் மூர்க்கமும் அதற்கேற்ப அதிகரித்தன.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;மரணக்குழி வேறு ஏதேனும் வழிகளைக் கொண்டிருக்கலாம். மூலையை நோக்கித் தாவினான். நிற்க இயலவில்லை. கால்கள் வெடவெடத்தன. மேனியில் வழியும் நீரை முந்தி வியர்வை பெருகியது. அவையோ அவனின் மூலை நகர்வு தங்களுக்குக் கிடைத்த வெற்றியெனக் கும்மாளமிட்டன. துழாவிய விழிகளில் மோட்டார் பம்ப் பட்டது.&amp;#160; பற்றுக் கிடைத்த வேகத்தில் கைகள் தாவின. குழாயைப் பிடித்துக் கொண்டு சரசரவென மேலேறத் தொடங்கினான். அது ஒன்றுதான் அங்கிருந்து வெளியேற வைக்கப்பட்டிருக்கும் சூட்சும வழியென ஊகித்தான். வழவழத்த அதன் உடலோடு வெகுவாகப் போராடி ஏறிக் கொண்டிருந்தான். அப்படியும் இப்படியுமாய் அசைந்தாலும் தன் நிலைவிட்டு மாறாமல் கடினமாகவே இருந்தது.&amp;#160; விளையாட்டின் உச்சவெறி எங்கும் பற்றிக் கொண்டது. வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் கடைசி நொடிகள் இதுவாகவே இருக்கலாம். அவன் ஏற ஏற கூச்சலிட்டுக் கொண்டே பாகுக் குழம்பென உருவம் ஒன்று அதிவேகத்தில் பம்ப்பில் வழுக்கி வந்து அவன் மீது மோதிற்று. பிடிப்புத் தளர்ந்து நேராக நீருக்குள் போய் விழுந்தான். அவ்வளவுதான். எல்லாம் தீர்மானிக்கப்பட்டு விட்டதுபோல. குழறத் தொடங்கினான். கைகள் அனிச்சையாக நீந்திக் கொண்டிருந்தன. திசை எதுவெனத் தெரியவில்லை. எங்கே பிடிப்பென உணர இயலவில்லை. எதை எதையோ கை பற்றியது. கால்கள் நடுக்கத்தோடு எவற்றின் மீதோ ஏறின. அது கிணற்றின் ஏதோ பக்கச்&amp;#160; சுவராக இருக்கலாம். நீட்டிக் கொண்டிருக்கும் கல் விளிம்புகளில் கைகள் பதிகின்றன போலும். சிறிது தூரம் ஏறிவிட்டதான உணர்வு கொண்டான். அது நம்பிக்கை அளித்து ஈர்த்தது. மேலும் மேலும் தாவலானான். அப்போது கிணறு குரலெழுப்பி எதிரொலித்தது. ‘பாம்பு பாம்பு’. துவண்டு கைகளின் பிடி நெகிழ்ந்தது. வாய் பிளந்து கை கால்கள் விரிய மல்லாந்து விழுந்தான் நீருக்குள், தவளை ஒன்றாய்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;-***&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;பிரதி உதவி: அஜய் , தட்டச்சு உதவி:&amp;#160; சென்ஷி&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-3394791331104712531?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/3394791331104712531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_15.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/3394791331104712531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/3394791331104712531'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_15.html' title='நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/-FjBHJGkshv0/TxIwRpZoiNI/AAAAAAAAIOI/Kdkk8oD1TZw/s72-c/perumal_murugan_thumb11.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-463745716954532261</id><published>2012-01-13T07:42:00.001+05:30</published><updated>2012-01-13T07:42:05.491+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேவதேவன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருதுகள்'/><title type='text'>தேவதச்சனுக்கு விளக்கு விருது</title><content type='html'>&lt;p align="left"&gt;நவீனத் தமிழ்க் கவிதையின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான தேவதச்சனுக்கு 2010ஆம் ஆண்டுக்கான ‘விளக்கு’ விருது வழங்கப்படுகிறது. நாற்பதாயிரம் ரூபாய்&lt;a href="http://lh6.ggpht.com/-oxz7fWFUcRs/Tw-S74MnCPI/AAAAAAAAINw/xrqlqyhS7GA/s1600-h/devathatchan34%25255B6%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="devathatchan34" border="0" alt="devathatchan34" align="right" src="http://lh3.ggpht.com/-d9ZU2lhFs6s/Tw-S800o4vI/AAAAAAAAIN4/sSutFw4KwRQ/devathatchan34_thumb%25255B19%25255D.jpg?imgmax=800" width="257" height="197" /&gt;&lt;/a&gt; பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அடங்கிய விருது இது. அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான ‘விளக்கு’ புதுமைப்பித்தன் நினைவாக வழங்கும் இந்த விருதை இதுவரை தமிழின்&amp;#160; முக்கியமான இலக்கியவாதிகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா&amp;#160; ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார் ஆகியோர் பெற்றிருக்கின்றனர். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;எழுபதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய தேவதச்சன் நவீனக் கவிதையின் புதிய வடிவமைப்பைக் கட்டமைத்தவர்களில் ஒருவர். இவரது கவிதைகள் அன்றாட வாழ்வின் எளிய சொற்களில், நழுவும் கணங்களை நுட்பமாகச் சித்தரிக்கின்றன. ஆனந்துடன் இணைந்து அவரவர் கைமணல் என்னும் முதல் தொகுதியை தேவதச்சன் வெளியிட்டார். அத்துவான வேளை, கடைசி டைனோசார், யாருமற்ற நிழல், ஹேம்ஸ் என்னும் காற்று, இரண்டு சூரியன் ஆகியவை பிற கவிதைத் தொகுதிகள். கவிஞர் தேவதச்சனுக்குக் அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;நன்றி: காலச்சுவடு&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-463745716954532261?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/463745716954532261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/463745716954532261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/463745716954532261'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_13.html' title='தேவதச்சனுக்கு விளக்கு விருது'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/-d9ZU2lhFs6s/Tw-S800o4vI/AAAAAAAAIN4/sSutFw4KwRQ/s72-c/devathatchan34_thumb%25255B19%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-3894907621410659475</id><published>2012-01-10T07:59:00.001+05:30</published><updated>2012-01-10T08:01:43.105+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லஷ்மி மணிவண்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>அப்பாவைப் புனிதப்படுத்துதல்-லஷ்மி மணிவண்ணன்</title><content type='html'>&lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;அப்பாவைப் புனிதப்படுத்துதல்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;அப்பாவின் நண்பர்கள்   &lt;br /&gt;ஊடகங்களில் வருகிறார்கள்&lt;a href="http://lh5.ggpht.com/-EFTbs1euJcE/Twuiof1YK5I/AAAAAAAAINg/m-nIz7mXHrE/s1600-h/lakshmimanivannan%25255B5%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="lakshmimanivannan" border="0" alt="lakshmimanivannan" align="right" src="http://lh3.ggpht.com/-zawpjcdmgHA/TwuipYLK8cI/AAAAAAAAINk/ns3qeMfRds8/lakshmimanivannan_thumb%25255B6%25255D.jpg?imgmax=800" width="206" height="280" /&gt;&lt;/a&gt;    &lt;br /&gt;திரைப்படங்களில் நடிக்கிறார்கள்    &lt;br /&gt;அம்மாவின் திகைப்பான கண்கள் வழியே    &lt;br /&gt;சிறுவன் பார்க்கிறான்&lt;/p&gt;  &lt;p&gt;அப்பாவின் உறவினர்கள்   &lt;br /&gt;பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள்     &lt;br /&gt;பதவிகளிலிருக்கிறார்கள்    &lt;br /&gt;நிறுவனங்கள் இயக்குகிறார்கள்    &lt;br /&gt;சிறுமி கேள்விப்படுகிறாள்&lt;/p&gt;  &lt;p&gt;அப்பா அன்புள்ளவரா   &lt;br /&gt;சொல்லத் தெரியாது    &lt;br /&gt;பண்புள்ளவரா    &lt;br /&gt;இல்லை    &lt;br /&gt;வீதிகளில் சண்டையிட்டு    &lt;br /&gt;வீட்டுக்கு வருபவர்    &lt;br /&gt;வீட்டில் சண்டையிட்டு    &lt;br /&gt;வீதிகளில் நுழைபவர்&lt;/p&gt;  &lt;p&gt;அப்பா   &lt;br /&gt;எப்போது வீட்டுக்கு வருவார்    &lt;br /&gt;தெரியாது    &lt;br /&gt;எப்போது வெளியிலிருப்பார்    &lt;br /&gt;தெரியாது    &lt;br /&gt;கைகால் ஒடிந்தால் மருத்துவமனை    &lt;br /&gt;கலவரமென்றால் காவல்நிலையம்&lt;/p&gt;  &lt;p&gt;மதிப்பெண் பட்டியலைச் சரிபார்க்கமாட்டார்   &lt;br /&gt;பள்ளிக்கூடத்துக்குத் துணைவரமாட்டார்    &lt;br /&gt;சாப்பாட்டில் குறி இவற்றைத் தவிர    &lt;br /&gt;அப்பா என்ன முடிவெடுப்பார்    &lt;br /&gt;தீர்மானிக்க முடியாது&lt;/p&gt;  &lt;p&gt;அப்பா சண்டையா சச்சரவா   &lt;br /&gt;தெரியாது    &lt;br /&gt;வேண்டுமா வேண்டாமா    &lt;br /&gt;தெரியாது    &lt;br /&gt;அதிகமானால் அச்சம்    &lt;br /&gt;அப்பா அளவாய்ச் குடித்தால்    &lt;br /&gt;விளையாட வருவார்&lt;/p&gt;  &lt;p&gt;அப்பாவுக்கு என்னென்ன பிடிக்கும்   &lt;br /&gt;தெரியாது    &lt;br /&gt;எது பிடிக்காது    &lt;br /&gt;தெரியாது&lt;/p&gt;  &lt;p&gt;அப்பாவுக்கு என்னென்ன நோய்கள்   &lt;br /&gt;முற்றிய மனநோய்    &lt;br /&gt;ரகசியமான மருத்துவ அறிக்கை மட்டும்    &lt;br /&gt;தெருக்களில் கிடக்கிறது&lt;/p&gt;  &lt;p&gt;^^^^^&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;அப்பாவைப் புனிதப்படுத்துதல் தொகுப்பு பக்கம் 11-12&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;நன்றி: தமிழ் ஸ்டுடியோ&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-3894907621410659475?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/3894907621410659475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_10.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/3894907621410659475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/3894907621410659475'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_10.html' title='அப்பாவைப் புனிதப்படுத்துதல்-லஷ்மி மணிவண்ணன்'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/-zawpjcdmgHA/TwuipYLK8cI/AAAAAAAAINk/ns3qeMfRds8/s72-c/lakshmimanivannan_thumb%25255B6%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-4879030799866993614</id><published>2012-01-06T07:40:00.001+05:30</published><updated>2012-01-06T07:49:20.815+05:30</updated><title type='text'>சென்னை புத்தகக் கண்காட்சி 2012</title><content type='html'>&lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;புத்தகப்பிரியர்களுக்கான விழாக்காலம் வந்துவிட்டது. இத்தனை புத்தகங்களை ஒரே இடத்தில் பார்ப்பதே தனியின்பம்தான். போன வருடம் வாங்கிய புத்தகங்களை வாசித்தோமோ இல்லையோ, இன்னும் புத்தகங்களை வாங்கவே மனம் துடிக்கும். வாருங்கள் நண்பர்களே மீண்டும் ஒருமுறை புத்தக கூட்டத்திற்குள் தொலைந்து போவோம்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-r85ltHsBZPo/TwZYENw_4sI/AAAAAAAAINM/d8InD8EQ2PY/s1600-h/chennai-book-fair-2012%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="chennai-book-fair-2012" border="0" alt="chennai-book-fair-2012" src="http://lh3.ggpht.com/-7KoSqhISywE/TwZYFfTLSkI/AAAAAAAAINU/ECocRr3bfMI/chennai-book-fair-2012_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="604" height="559" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt; சில பரிந்துரைகள் : &lt;a href="http://azhiyasudargal.blogspot.com/2011/01/blog-post_08.html"&gt;முழுத்தொகுப்புகள்,நாவல்கள்&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-4879030799866993614?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/4879030799866993614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/2012.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/4879030799866993614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/4879030799866993614'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/2012.html' title='சென்னை புத்தகக் கண்காட்சி 2012'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/-7KoSqhISywE/TwZYFfTLSkI/AAAAAAAAINU/ECocRr3bfMI/s72-c/chennai-book-fair-2012_thumb%25255B2%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-4511764944236370815</id><published>2012-01-05T07:06:00.001+05:30</published><updated>2012-01-05T07:06:20.972+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹெப்சிபா ஜேசுதாசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><title type='text'>ஹெப்சிபா ஜேசுதாசன் : நேர்காணல்</title><content type='html'>&lt;blockquote&gt;   &lt;h3 align="left"&gt;ஒரு ஜாதிக்கு என்று தனி இலக்கியம் வரக்கூடாது – ஹெப்சிபா ஜேசுதாசன்&lt;/h3&gt; &lt;/blockquote&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா ஜேசுதாசன் அறுபதுகளில் இலக்கிய உலகில் வெகுவாக விவாதிக்கப்பட்ட எழுத்தாளர். அவரது முதல் நாவல் ”புத்தம் வீடு” இன்றும் வெகுவாக வாசகர்களிடையே பேசப்படும் ஒன்று. அறுபதுகளில் பிராமணர்களின் பேச்சுநடையிலேயே கதைகள் அதிகமாக வெளிவர, கன்னியாகுமரி மாவட்ட நாடார் இன மக்கள் பேசும் பேச்சுமொழியில் சிறப்பாக வந்த நாவல் என்ற சிறப்பை &lt;a href="http://lh4.ggpht.com/-Ud1PfxzjFpg/TwT-jNe3ZoI/AAAAAAAAIMk/TRHdfl1WP3I/s1600-h/Hepshi-Bai_Jesudasan-Su-Ra%25255B11%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="Hepshi-Bai_Jesudasan-Su-Ra" border="0" alt="Hepshi-Bai_Jesudasan-Su-Ra" align="right" src="http://lh4.ggpht.com/-YLX_XdTNMRM/TwT-j1lg51I/AAAAAAAAIMs/4QQxEoSCyAA/Hepshi-Bai_Jesudasan-Su-Ra_thumb%25255B17%25255D.jpg?imgmax=800" width="221" height="231" /&gt;&lt;/a&gt; புத்தம்வீடு பெற்றது. அதன்பிறகு மாஜனீ, டாக்டர் செல்லப்பா, அனாதை என பல்வேறு நாவல்களைப் படைத்தார் ஹெப்சிபா. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;தமிழின் சிறந்த இலக்கிய படைப்புகளை ”கவுண்ட் டவுன் ஃபிரம் சாலமோன்” (Count down from Solomon) என்ற பெயரில் ஆங்கிலத்தில் தந்துள்ளார் ஹெப்சிபா. நான்கு பெரிய தொகுதிகளாக ஆங்கிலத்தில் ஏசியன் பப்ளிகேசனால் வெளியிடப்பட்ட இந்தத் தொகுதியில் மூன்றாவது தொகுதி முழுக்க கம்பரசம் சொட்டுகிறது. லட்சுமணனின் சகோதரத்துவம், பரதனின் விட்டுக்-கொடுக்கும் தன்மை, ராமனின் தலைமைப் பண்பு, சொல்லின் செல்வன் ராமன், யுத்தகாண்டத்தில் கூட இலக்கியம் சொட்டும் தன்மை ஆகியவற்றை அழகாக ஆங்கிலத்தில் கூறியுள்ளார் ஹெப்சிபா. ”கம்பனில் இல்லாதது எதுவும் இல்லை. இலக்கியம் என்றால் கம்பன். கம்பன் என்றால் இலக்கியம்!” என்கிறார் ஹெப்சிபா.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;இவரது முதல் நாவலான புத்தம் வீடு ஆங்கிலத்தில் லிசிஸ் லெகசி (Lissy’s Legacy) என்ற பெயரில் சமீபத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. ஏற்கனவே மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது புத்தம்வீடு. இந்திய சுதந்திரத்தின் 50-வது பொன்விழாவின்போது மாஸ்டர் பீசஸ் ஆஃப் இன்டியன் லிட்டரேச்சர் (Master Pieces of Indian Literature) தொகுதியில் 1353-ம் பக்கத்தில் ஹெப்சிபா ஜேசுதாசன் குறித்து பதிவும் செய்யப்பட்டுள்ளது. என்சைக்ளோபீடியா பிரிட்டாணிகாவிலும் இவரைப்பற்றி குறிப்பு காணப்படுகிறது. An early Sheaf, Sky Lights ஆகியவை இவரது ஆங்கிலக் கவிதை நூல்களாகும். en- Exercises என்ற தலைப்பில் ஆங்கிலக் கட்டுரை நூல் ஒன்றும் Tit-bits for Tinytots, STORY TIMES DARLINGS ஆகிய குழந்தை இலக்கிய நூல்களும் Songs of The Cuckoo and Other Poems என்ற தலைப்பில் பாரதியாரின் குயில் பாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் Songs of The Cuckoo and Other Poems என்ற சுயசரிதை நூலையும் வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;2002-ல் கணவர் இறப்புக்குப்பின் மகனுடன் இருக்கிறார் ஹெப்சிபா. நிறைய தமிழிலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கத் திட்டங்கள் வைத்திருந்தார் ஹெப்சிபா. அவரது மனம் முழுக்க சந்தோஷத்தின் வெளிப்பாடுதான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவருடைய மகன் டாக்டர் தம்பி தங்ககுமார் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் தாயாரின் படைப்புகளைத் தொகுத்து வைத்திருக்கிறார். ஹெப்சிபாயிடம் நாம் இலக்கியம் பேசப்பேச பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்து பலவிஷயங்களைப் பேச வைத்தது டாக்டர் தம்பிதான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;திருவனந்தபுரம் – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் புலிப்புனத்தில் இறங்கி ஹெப்சிபா ஜேசுதாசன் வீடு எது என்று கேட்டால் எல்லோருக்கும் தெரிகிறது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;பார்க்க வந்திருக்கிறோம் என்று கூறியதும் மிகவும் சந்தோஷமாக வரவேற்றார். அதே பழைய புன்னகை மாறாமல் வணக்கத்துடன் நம்மை வரவேற்று உட்காரச்சொன்னார். ”இப்பவும் என்னை ஞாபகம் வச்சுட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்!” என்றார். அருகிலிருந்த அவரது மகன், ”அம்மா நல்லாதான் இருந்தாங்க.. எப்ப பார்த்தாலும் படிச்சுகிட்டே இருப்பாங்க.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆட்டோவிலேர்ந்து கீழே விழுந்ததிலே அவங்களுக்கு தலையில அடி பட்டுடுச்சி.. அதுல கொஞ்சம் பிரச்சனை.. ஞாபக மறதி நிறைய!” என்றார் ஆனால் அவர் எழுதிய பழைய கட்டுரைகள் பற்றிப் பேசினால் கோர்வையாக பல விஷயங்களைக் கூறினார்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;நம்மைப் பார்த்ததும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் நிறைய விஷயங்களைப் பேசினார். ”வாழ்க்கையைச் சந்தோஷமா அனுபவிச்சுகிட்டிருக்கேன்” என்றவர் ”இதுக்கு முன்னாடியும் நாலஞ்சுபேரு என்னைப்பத்தி தெரிஞ்சுகிடுறதுக்கு வந்தாங்க. நான் சாகுறதுக்கு முன்னாடி கூட என்னைப்பார்த்துப் பேச உங்களை மாதிரி ஆளுங்க வருவாங்க..” என்று சிரித்தபடியே சொன்ன ஹெப்சிபாவுக்கு இப்போது வயது 84. தற்கால பத்திரிகை, இலக்கிய உலகம் பற்றி எதுவுமே ஹெப்சிபாவுக்குத் தெரியவில்லை. தன்னுடைய நுட்பமான அறிவாலும் கணவரின் ஒத்துழைப்பாலும் பலவற்றை காலங்களுக்கு முன் சாதிக்க முடிந்தது என்று சிலாகித்து சிலாகித்துச்சொல்கிறார். முகத்தில் எப்போதும் ததும்பி வழியும் மாறாத அன்பும் புன்னகையும் அவரிடம் நமக்கு திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஆடிமாத சாரல்மழை வெளியே விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. ரப்பர் மரங்கள் அடர்ந்த புலிப்புனத்தில் உள்ள ஹெப்சிபாவின் வீட்டில் பழங்கால சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி நமக்கு அவர் அளித்த நேர்காணலின் சுருக்கம்தான் இது. நாம் அவரைச் சந்திக்க வந்திருக்கும் செய்தி அறிந்து அவரது வீட்டருகே வசிக்கும் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஏனோஸ் நமக்கு உதவுவதற்காக அங்கே வந்தார். இங்கே நாம் அவரிடம் சில கேள்விகள் எழுப்பும்போது அதற்கான பதிலை பேராசிரியர் ஏனோஸ் ஞாபகப்படுத்திதான் அவரிடமிருந்து பதிலைப் பெற முடிந்தது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;பேராசிரியர் ஏனோஸ், அவரது மகன் தம்பிதங்ககுமார் ஆகியோரின் உதவியுடன்தான் இந்த நேர்காணல் தயாரிக்கப்பட்டது. இலக்கியம் பற்றிப்பேசினால் ஹெப்சிபாவின் மனம் முழுக்க சந்தோஷம் வெளிப்படுவதைக் காண முடிகிறது. இப்போது அவர் இலக்கியம் படைப்பதும் இல்லை, படிப்பதும் இல்லை. விழித்திருக்கும் பொழுதுகளில் பார்வை மங்காத கண்களின் வழியே பைபிளைத்தான் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: உங்க இளமைப்பருவத்தைப்பத்தி சொல்லுங்களேன்..?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: நீங்க கேட்குறதுனால சொல்லுறேன். எங்க பழங்காலச்சுவடுகள் எங்க குடும்பப் பிள்ளைங்க தெரியணும்கிறதுனாலதான் சொல்லுறேன். எனக்கு சாரோட பூர்வீகம் மிகவும் ஏழைமக்களிடையே இருந்தது. சேனம் விளையில் ஆறேழு தலைமுறைக்கு முன்னாடி அவர்கள் வந்து குடியேறின போது அவர்கள் பனையேற்றுத்தொழிலாளிகள். அவங்க வீட்டுல நிறைய படிச்சது அவருதான். எனக்கு ஊரு புலிப்புனம். கோவிலோட சேர்ந்து தமிழ்ப்பாடசாலை இருந்ததால் அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி கெடைச்சுது. எங்க குடும்பத்துல உள்ளவங்க அங்கே படிச்சுதான் முன்னேறினாங்க. என் மதினி ருக்மிணிக்கு இப்பவும் பென்சன் கிடைக்குதுனா காரணம் அன்னிக்கு அவங்களோட படிப்புதான். படிச்ச ஸ்கூல்லயே வேலை பார்த்தாங்க.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;என் பூர்வீகத்தை எடுத்துகிட்டீங்கன்னா அம்மா வழியில கல்வி, அப்பா வழியில சொத்து எனக்கு கிடைச்சதுனு சொல்லலாம். என்னோட தாத்தா அந்தக்காலத்துல பி.ஏ. பாஸாகி மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் பள்ளியில் முதல் தலைமை ஆசிரியரா வேலையில சேர்ந்தாங்க. அவங்களுக்கு மதபோதனை செய்யுறதுல மிகுந்த ஈடுபாடு. அதனால வேலையை ரிசைன் பண்ணிட்டு பாஸ்டரானாங்க. என் அம்மாவின் பாட்டி கூட எல்.எம்.எஸ். பெண்கள் பிரைமரி பள்ளிக்கூடத்துல ஆசிரியையா வேலை பார்த்தாங்க. அவங்களும் ஒரு பைபிள் உமனா இருந்தாங்க. தமிழாகட்டும். இங்கிலீஷ் ஆகட்டும், கணக்காகட்டும் எனக்கு சின்ன வயசுல அவங்கதான் சொல்லித்தந்தாங்க. பப்பா (அப்பாவை பப்பா என்றுதான் சொல்கிறார்) வடபர்மாவில ஒரு அரசு பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்தாரு.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;அன்னிக்கு பொம்பிளைங்களைப்படிக்க வைக்கிறதுன்னா சாதாரண விசயமா? என்கூட நாலு சகோதரருங்க. வீட்டுல ஒரே பொண்ணு நான். அதனால் நான் வீட்டுல செல்லப்பிள்ளையா இருந்தேன். என்னோட பப்பா பர்மாவுல இருந்ததுனால அம்மா ஊருல உள்ள பள்ளிக்கூடத்துல என்னைச் சேர்த்தாங்க. ஒரு நாள் ஒரு டீச்சரு எங்கம்மாவக் கூப்பிட்டு இந்தச் சின்னப்பிள்ளைக்கு மூளையே கிடையாது. உதவாக்கரையான இவளைப்போய் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி கஷ்டப்படுத்தியேளே..!”ன்னு சொன்னார். எங்கம்மாவுக்கு ரொம்ப வேதனையாப்போச்சு. அப்பா பர்மாவிலேர்ந்து வந்ததும் இதைப்பத்தி அவங்ககிட்டே சொன்னாங்க. உடனே அப்பா என்னை பர்மாவுக்குக் கூட்டிட்டு போனாரு. பப்பா ஸ்கூல் விட்டு வரும்போது நிறைய புக்ஸ் கொண்டு வருவாங்க.. அதுல அழகான படம் போட்டிருப்பாங்க. அதை ரசிக்கிறதுதான் என்னோட வேலை. அப்படியே பர்மாவில இங்கிலீஷ் சரளமா பேசக் கத்துகிட்டேன். அந்த வயசுல ஒருநாள் ராத்திரி ஒரு சொப்பனம் கண்டேன். கனவுல ஒரு தேவதை என் கையில் ஒரு பேனாவைத் தந்தது போல். எனக்கு அந்த சொப்பனம் பிடிச்சிருந்தது. என்னோட வாசிப்புக்கு காரணம், சிறுவயது பர்மா வாழ்க்கைதான். என்னோட ஒன்பதாவது வயசுல பப்பா வேலை பார்த்த ஸ்கூல்ல 5-வது வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வகுப்பில நான் தான் முதலாவது. பப்பாவுக்கு பெருமைன்னா பெருமை. அப்புறம் 6-வது வகுப்பிலயும் முதல் இல்லைன்னா இரண்டாவது இடம் எனக்குத்தான் கிடைக்கும். இங்கிலீசுல இலக்கணத்தை நல்ல ஆர்வமா கத்துகிட்டேன். பத்தாவது வயசுல என் முதல் இங்கிலீஷ் போயம் (ஆங்கில கவிதை) எழுதினேன். பப்பாவுக்கு ஆச்சரியம். எனக்கு வாசிக்க நிறைய புத்தகங்கள் தந்தார். அங்கேயே ஏழாம் வகுப்பு வரை படிச்சேன். அப்போது தமிழாசிரியர் சொல்லி உருகிய, ”இன்றைக்கோ கம்பன் இறந்த நாள்” என்ற பாடலை இன்னிக்கும் நினைக்கிறது உண்டு. வெண்பாவின் இலக்கணமென்று நாற்சீர், முச்சீர் நடுவே தனிச்சீர் என அடிக்கடி நினைத்துப் பார்க்கிறதுண்டு.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;பதினாலாவது வயசுல காட்டாத்துறையில் உள்ள பள்ளிக்கூடத்துல என்னைக்கொண்டு வந்து சேர்த்தாங்க. அங்கே என்னன்னா என்னோட ஆங்கில அறிவு என்னை மதிப்புக்குரியவளாக்கிச்சு. ”பர்மாக்காரி பவுறப்பாரு”ன்னு என் காது படவே பேசுவாங்க. டீச்சர்மாருங்க ஆங்கிலத்தைத் தப்பா பேசுறப்ப அவங்க சொல்லுறதைத் திருத்தியிருக்கேன். பொறவு நாகர்கோவில் டதி பள்ளிக்கூடத்துல படிச்சேன். ஆங்கிலத்தில் இருந்த ஈடுபாடு காரணமா எனக்கு தமிழில் கவனம் செல்லவில்லை. டதியில் தமிழ் சொல்லிக் கொடுத்தவர், ”பர்மாக்காரி பர்மாவுக்குப்போயிடு”னு சொல்லி என்னை கிண்டல் பண்ணுவாரு.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: அன்னிக்கு எந்தக் கல்லூரியில படிச்சீங்க..?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜ்ல இன்டர்மீடியேட் படிக்கிறப்ப நான்தான் மாநிலத்திலேயே முதலாவதா வந்தேன். திருவனந்தபுரம் யூனிவர்சிட்டி கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் மேற்படிப்பு படிச்சேன். அப்பத்தான் எனக்கு ஆங்கிலக் கட்டுரைகளும் கவிதைகளும் ஊற்றெடுத்து பெருகத்துவங்கின.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் எனக்கு சீனியர். இந்த நிலையில எனக்கு ஆங்கிலக் கவிதைகள் படைக்கணும்னு வெறி. முட்டத்துல வைச்சு எஸ்.சி.எம். காம்பில் வைத்து ஒரு கல்லூரி மாணவன் இறந்ததைப்பற்றி கவிதை எழுதினேன். அந்தக் கவிதை பிரேம் செய்யப்பட்டு ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி பிரின்சிபால் அறையில் தொங்கவிடப்பட்டிருந்தது. இன்டர்மீடியேட் படிக்கும்போது நான் இங்கிலீசில் திருவாங்கூர் ஸ்டேட் பர்ஸ்ட். ஆனால் அப்போது இரண்டாம் உலகப்போர் துவங்கிச்சு. உடனே பப்பாவுக்கு பயம் வந்துடுச்சு. அவரு இமயமலையேறி இந்தியாவுக்குத் தப்பி வீடு வந்து சேர்ந்தாரு. சாகிற வரைக்கும் பப்பாவை எக்சைட் செய்யும் அந்த மலைப்பயணம். வழியில் எத்தனையோ பேர் செத்து விழுந்தார்களாம். பப்பா சொன்னது இப்பவும் ஞாபகமா இருக்கு. ஆறாம் வகுப்பில் என்கூடப்படித்த சைனா மாணவன் ஜப்பான் வீசிய குண்டுக்குப் பலியானான். ஊருக்கு வந்ததுக்கப்புறம் பப்பா என்னை நிறைய படிக்கச் சொல்லுவாரு. நான் நிறைய படிச்சு காலேஜ் லெக்சர் ஆகக்காரணமே பப்பாதான். அவரோட தூண்டுதல்தான் எனக்கு ஆங்கில இலக்கியத்துல ஈடுபாட்டை உருவாக்கிச்சு.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: ஆங்கிலப் பேராசியரான நீங்க தமிழ்ப்பேராசியரான ஜேசுதாசனை கல்யாணம் செய்துகிட்டது எப்படி?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில படிச்ச பிறகு வேலை தேடிட்டு இருந்தேன். இந்த நிலையில என்னைப்பத்தி ஜேசுதாசன் கேள்விப்பட்டிருக்காரு. அப்பவே நான் ஆங்கிலத்துல கட்டுரைகள் எழுதியதால், என்னைப்பத்தி நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கு. அவரு தமிழ்ப் பேராசிரியர். அவருக்கு தமிழில் உள்ள நல்ல இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கணும்னு ஆசை. எங்க வீட்டாருங்க பேசினாங்க. பொதுவா ஒரு ஆங்கிலக் கல்வி பெற்றவ ஒருத்தி தமிழ்க் கல்வி பெற்றவரை கல்யாணம் செஞ்சுக்கிறதை குறைவா நினைப்பாங்க. ஆனால் அவரோட ஆழ்ந்த மனசை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். கல்யாண ஏற்பாடு நடந்துகிட்டிருக்கிறப்பவே எனக்கும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் வேலை கிடைத்தது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: உங்கள் கணவர் பேராசிரியர் ஜேசுதாசன் பற்றிச் சொல்லுங்களேன்..?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: அவங்க சொந்த ஊரு சேனம்விளை. அன்றைய திருவாங்கூர் அரசரின் ஊக்கத்தொகையைப் பெற்று பி.ஏ. ஹானர்ஸ் படிச்சாரு. இவர் மாணவராகவும் ஆசிரியராகவும் இருந்தபோது கம்பனிடம் ஈடுபாடு வரக்காரணமாயிருந்தது பேராசிரியர் பன்னிருகை பெருமாள் முதலியார். ஹானர்ஸ் முடிச்சதும் அண்ணாமலையிலயும் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலயும் ஆசிரியரா இருந்தார். பிறகு திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் விரிவுரையாளரா, பேராசிரியரா, துறைத்தலைவரா இருந்தார். அப்புறம் கோழிக்கோடு பல்கலைக்கழகம், பாலக்காடு சித்தூர் அரசினர் கல்லூரியில் முதுகலைத்துறையில் தலைவரா வேலை பார்த்தார். அவரு ”முதற்கனி” என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இது முழுக்க முழுக்க மரபுக்கவிதைத்தொகுதி. அதுல ஷெல்லி, கீட்ஸ் உட்பட சில ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழிகாட்டுதல்ல அவரு (ஜேசுதாசன்) தமிழ் இலக்கிய வரலாறு பற்றி ஆய்வு செய்தார். ஆனால் ஆராய்ச்சிப் படிப்பு முடியாததுனால் அவர் தொகுத்த செய்திகளை கல்கத்தா ஒய்.எம்.சி.ஏ. மூலமா ”ஹ’ஸ்டரி ஆஃப் டமில் லிட்டரேச்சர்”ங்ற பேர்ல புத்தகமா வெளியிட்டாங்க. நிறைய கட்டுரைகள் அவங்க எழுதியிருக்காங்க. அவர் மாணவர்களுக்கு பண்டை இலக்கியங்களைப்போல கம்பனும் புதுமைப்பித்தனும் சுந்தரராமசாமியும் முக்கியம் என்பதை எடுத்துச் சொல்லியிருக்காரு. கேரள பல்கலைக்கழக கல்லூரியில வேலை பார்த்தபோது கேரளத் தமிழ் மாணவர்களுக்கு தற்காலத் தமிழ்ப் படைப்பாளிகளை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை இவர் ஏற்படுத்திக் கொடுத்தார். கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இசையை முறையா கத்துகிட்டவரு. என்கிட்டயும் சரி பிள்ளைங்க கிட்டயும் சரி, இவரு கோபப்படவே மாட்டாரு. ரொம்ப அன்பா இருப்பாரு. கவுன்ட் டவுன் ஃபிரம் சாலமோன் தொகுதிகளை இவரோட உதவி இல்லாம இவ்வளவு சிறப்பா கொண்டு வந்திருக்க முடியாது. கம்பனைக் குறித்துத்தான் மூன்றாவது தொகுதியில் சொல்லியிருந்தேன். மூன்றாவது தொகுதி வெளியான பதினைஞ்சாவது நாள் அவரு இறந்துபோனாரு (கண்கலங்குகிறார்).&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: அப்புறம் தமிழ்நாவல் பக்கம் உங்க கவனம் திரும்பினது எப்படி?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: அப்புறம் எங்க வாழ்க்கை நல்லாதான்போயிட்டிருந்துச்சு. எங்க வாழ்க்கை இல்லறத்தோட மட்டுமே நிற்கவில்லை. இரண்டுபேரும் சேர்ந்து இலக்கியத் தேடல்களிலும் ஈடுபட்டோம்.. முதற்கனி, பாரதியாரின் குயில்பாட்டு ஆகியவற்றை அவங்ககிட்டே கேட்டுக் கேட்டு நான் ஆங்கிலத்தில மொழிபெயர்த்தேன். இந்த நேரத்தில தான் அவங்க என்னை தமிழ்ல நாவல் எழுதணும்னு கேட்டுகிட்டே இருந்தாரு. அப்படி இருக்கிறப்ப பழைய நோட்புக்கிலேர்ந்து கொஞ்சம் பேப்பரைக் கிழிச்சு நான் கதை எழுதத்தொடங்கினேன். அதுல ஒரு இடத்திலயும் அவரு தலையிடவில்லை. பதினைஞ்சு நாளு கழிச்சா ஒரு நாவல் ரெடி. கையெழுத்துப்பிரதியை அவரு படிச்சு பார்த்துட்டு ”கொள்ளாம்.. நல்லாருக்கு”னு சொன்னாரு. கடைசில என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சப்ப ”புத்தம் வீடு”னு அவங்க சொன்னாங்க.. பொறவு கையெழுத்துப்பிரதியை எழுத்தாளர் நகுலன்கிட்டே கொண்டு போனாங்க. அங்கேயிருந்து நண்பர் சுந்தரராமசாமியிடம் கையெழுத்துப்பிரதி போச்சு. எங்க சாரும் சுந்தரராமசாமியும் நல்ல நண்பருங்க. சுந்தரராமசாமி நிறையதடவை எங்க வீட்டுக்கு வந்திருக்காரு. அவரு எழுதின கதையில சிலது படிச்சிருக்கேன். எதுன்னு ஞாபகமில்லை. என்னோட புத்தம் வீடு நாவலை சுந்தரராமசாமி படிச்சுட்டு ”நாவல் நல்லாருக்கு”னு என் சார்கிட்டே சொல்லியிருக்காரு. கடைசியில் தமிழ்ப்புத்தகாலயம் கண.முத்தையா வாங்கி அதை புத்தகமா போட்டாங்க.!&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: புத்தம்வீடு நாவலை உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வைச்சா எழுதினீங்க..? இன்னிக்கு வட்டார வழக்கில நிறைய நாவல்கள் வருது… ஆனா அந்த காலகட்டத்துல நாடார் சமுதாய மக்களின் வாழ்க்கையை படைப்பிலக்கியத்தில் நீங்கதான் முதல்முதலா பதிவு செய்ததா சொல்லுறாங்க…&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: உண்மைச் சம்பவமான்னு கேட்டா.. என்ன பதில் சொல்லுறது. ஆனால் அந்த நாவல்ல கையாண்டிருக்கிற நிறைய கதாபாத்திரங்கள், கதைக்களன்கள் எல்லாமே உண்மைதான். அன்னிக்கு எங்க வீட்டை புத்தம்வீடுன்னுதான் சொல்லுவாங்க. அதுமாதிரி அந்தக் கதையில வர்ற கண்ணப்பச்சி தாத்தா பேரும் என்னோட தாத்தா பேருதான். புத்தம் வீடுக்கு முன்னாடி நாடார் சமுதாய வாழ்க்கைமுறை தமிழ்ல நாவல்வடிவமா வரலைன்னு நினைக்கேன். அதை அவுங்க (பேராசிரியர் ஜேசுதாசன்) ஒரு பெரிய குறையா சொன்னாங்க. அப்பெல்லாம் பிராமண வாழ்க்கைமுறைதான் அதிகமா தமிழ்ல வந்திருக்கு. நாட்டுல பிராமணன் மட்டும்தான் இருக்காங்களா? அவங்க வாழ்க்கைமட்டும்தான் வாழ்க்கையா? நம்ம வாழ்க்கை வாழ்க்கை இல்லையா?ன்னு ஒருதடவை சொன்னாங்க. அவங்க சொன்னதை யோசிச்சுப்பார்த்தப்பதான் நான் வாழுற சமுதாயத்தைப்பத்தி அதேபேச்சுநடையில ”புத்தம் வீட்டை” எழுத முடிஞ்சது. அந்த நாவல்ல நாடார் சமுதாய வாழ்க்கை முறையை ஓரளவுக்கு நல்ல படியா பதிவு செய்திருக்கேன்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. அதுல வர்ற பனையேறி அன்பையன் குடும்பம் மாதிரி நிறையப் பேரை நான் எங்க ஊருல சந்திச்சிருக்கேன்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: அன்னிக்கு ”புத்தம் வீடு” நாவல் இலக்கிய உலகில் பெரும் விவாதப்பொருளா இருந்ததுதானே..&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: ஆமாம். இந்த நாவல்பத்தி நிறைய விவாதங்கள் அன்னிக்கு வந்துச்சு. சில மலையாள நாவல்கள்தான் புத்தம்வீடு எழுதத் தூண்டுதலா இருந்துச்சுன்னெல்லாம் சொன்னாங்க. ஆனால் எனக்கு மலையாளம் வாசிக்கவே தெரியாது. மலையாளம் நல்லா பேசுவேன். மலையாளிங்க கிட்டே சரிசமமா பேசுவேன். தமிழில் வந்த 10 நாவல்களில் ஒன்னுன்னுகூட புத்தம் வீடைச்சொன்னாங்க. என்னோட நாவல் சம்பந்தமா வந்த விவாதங்களை நான் பெருசா எடுத்துக்கலை. பொதுவா நான் ஆங்கிலத்துலதான் நிறைய எழுதினேன். அவுங்க என்னை கல்யாணம் செய்ததனாலதான் நான் தமிழ்ல எழுதினேன். இல்லைன்னா நான் தமிழ்ல எழுதமாட்டேன். நான் தமிழ்ல நாவல் எழுதியிருக்கேன்னு மார்த்தாண்டத்துல உள்ள என் சொந்தக்காரங்ககிட்டே பெருமையா சொன்னப்ப ”தமிழிலையா?”ன்னு இழிவா கேட்டாங்க என் சொந்தக்காரங்க. புத்தம் வீடுக்கப்புறம் டாக்டர் செல்லப்பா, மாஜனீ, அநாதை ஆகிய நாவல்கள் எழுதினேன்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: நீங்க நாலு நாவல்கள் எழுதினாலும் இன்னிக்கும் பேசப்படுற நாவலா புத்தம் வீடு இருக்கு. புத்தம்வீடு பேசப்பட்ட அளவுக்கு மத்த நாவல்கள் பேசப்படலையே..?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: புத்தம்வீடு என்னோட முதல் நாவல். அதை எழுதறப்ப என்ன மனநிலையில இருந்தேனோ அதே மனநிலைதான் மத்த நாவல்களை எழுதறப்பவும். புத்தம் வீடு நாவல்ல இருந்த புதுமை எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. அதுல இதுவரை யாருமே சொல்லாத வட்டார சொல் வழக்கைப் பயன்படுத்தி எழுதியிருந்தேன். புத்தம்வீடுல கல்வி அறிவில்லாத சமுதாயத்தைப்பத்தி சொல்லியிருந்தேன். அதுல சொல்லியிருந்த சமுதாய அமைப்பு ”இப்படியும் ஒரு சமுதாயம் உண்டா?”னு வாசகர்களிடையே கேள்வி எழுப்பியது. அறிமுகமில்லாத ஒரு சமுதாயத்தைக் காட்டினதுனாலதான் புத்தம் வீடு பேசப்பட்டதுன்னு நெனைக்கேன். மத்த நாவல்களைப் பொறுத்தவரையில் அதுல வர்ற சமுதாய அமைப்புகள் எங்கேயும் காணப்படக்கூடிய பொதுவான சமுதாயத்தைப்பத்தி எழுதியிருந்ததுனால அது வாசகர்களை ஈர்க்காமப்போச்சோ என்னவோ..?&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: நீங்க நாவல்களில் மதப்பிரச்சாரம் செய்ததாக அன்றைக்கு பேசப்பட்டதே…?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: கண்டிப்பா இல்லை. நான் நாவலை நாவலா பார்த்தேனேதவிர எந்த இடத்திலயும் மதப்பிரச்சாரம் செய்யலை. நான் வாழ்ந்த எனக்குத்தெரிந்த நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைப்பற்றிச் சொல்லும்போது அவர்களின் மத இயல்புகளைத்தான் நாவலில் சொன்னேனேதவிர எந்த வகையிலும் நான் நாவலில் மதப்பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால் நான் பைபிள் பத்தி பிரச்சாரம் நிறைய செய்திருக்கேன். ஆனால் நாவலை அதுக்குப் பயன்படுத்தவில்லை.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: உங்கள் நாவல்களில் பெண்கதாபாத்திரங்களைச்சுற்றியே கதை நகர்த்தப்படுகிறதே? உங்களின் புத்தம்வீடு நாவலாகட்டும், மாஜனீ ஆகட்டும் பெண்களின் வேதனைகளை பரிவுடன் சொல்லியிருந்தீர்கள். உங்களை நீங்கள் எப்போதாவது பெண்ணியவாதி என்று எண்ணியிருக்கிறீர்களா?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: வீட்டிலயும் சரி, பள்ளிக்கூடத்திலயும் சரி, கல்லூரியிலயும் சரி பெண்களிடம்தான் எனக்கு நெருங்கிய தொடர்பு. கஷ்ப்படுறவங்க மேல இரக்கம் வருவது இயல்பு தானே. என்னைச்சுத்தி நடக்கிற பலவிஷயங்கள் என்னை பாதிச்சிருக்கு. பெண்களுக்கு சமுதாயத்தில் பெரிய தாக்கம் உண்டு. எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டு, உண்மையான உழைப்புக்கு மதிப்புக்கொடுப்பவர்கள் என்பதையும் உணர்த்துவதற்காகவே என் நாவல்களில் வரும் பெண்களை உயர்வாகச் சித்தரித்திரிந்தேன்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: உங்கள் நாவல்களில் வரும் பெண்கள் அனைவரும் கிறிஸ்தவப்பின்னணியில் வளர்ந்தவர்களாக காண்பித்திருந்தீர்கள். இதற்குக் காரணம் ஏதேனும் உண்டா?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்திலயும், கிறிஸ்தவக்கல்லூரியில் படித்ததினாலும், அக்கம்பக்கத்தவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததினாலும் கிறிஸ்தவர்களோடு மாத்திரமே நெருக்கமான பழக்கம் இருந்ததினாலும் என் நாவல்களில் வரக்கூடிய பெண்பாத்திரங்களும் கிறிஸ்துவப் பின்னணியில் வளர்ந்தவர்களாக அமைந்துவிட்டனர்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: நீங்கள் படைத்துள்ள பெண்பாத்திரங்கள் உங்கள் குடும்பத்தோடு இணைந்த பாத்திரங்கள் என்று சிலர் கருதுகிறார்களே. நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: அது என் குடும்பத்தோடு இணைந்த பாத்திரங்கள் அல்ல. அப்படி சிலர் கருதினால் அது தவறு. ஆனால் நான் எழுதிய நாவல்களில் படைக்கப்பட்ட பெண்கள் அன்றைய காலகட்டத்தில் நான் சந்தித்த சில பெண்கள்தான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: நீங்கள் படைத்துள்ள பெண் பாத்திரங்களில் உங்கள் சுயநிலைகளை அதிகமாக வெளிப்படுத்தும் பாத்திரமாக நீங்கள் கருதுவது எது?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: மாஜனீ. பர்மாவில் ஏழு வயதிலிருந்து 14 வயது வரையிலும் நான் படிக்க நேர்ந்தது. என் தந்தை அங்கே ஆசிரியரா பணியாற்றினார். அதற்குப்பிறகு அங்கே போர் ஏற்பட, இந்தியா திரும்ப நேர்ந்தது. இந்தக் காலகட்டத்துல நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் மனசுல இன்னிக்கும் ஓடிகிட்டிருக்கு. இதை மையமா வைச்சே மாஜனீ நாவலைப்படைச்சேன். மாஜனீ நாவலில் வரும் மாஜனீ கேரக்டரின் இயற்பெயர் ”கிரேஸ் அழகுமணி” அவளது பெயரில் உள்ள இறுதிப்பகுதியை பர்மீய ஒலிக்கிசைய மாஜனீ என மாற்றி அழைப்பதைத்தான் நாவலுக்குத் தலைப்பாக வைத்தேன்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: இந்த நாவல்களைப் படைச்சதுக்கப்புறம் நீங்க எழுதுறதை விட்டிட்டீங்க போல…?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: ஆமாம். தமிழ்நாவல் எழுதறதை விட்டேன். ஆனால் நான் தமிழ், ஆங்கிலத்துல கட்டுரைகள் எழுதிகிட்டிருந்தேன். எனக்கு எழுதணும்னு உந்துதல் வராம நான் எழுதமாட்டேன். எழுத்து மனசிலேர்ந்து வரணும். அதுக்காக என்னதான் உந்தித்தள்ளினாலும் எழுதமுடியாது. நாவல் எழுதலைன்னு எனக்கு வருத்தம் ஒண்ணும் கிடையாது. ஆனால் குழந்தைகளுக்காக நிறைய எழுதத் துவங்கினேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி எழுத ஆயத்தமானபோது ஒரு குரலைக் கேட்டேன். stop that you have other work to do அதே வேளை மின்னல் போல, பழைய இலக்கியம் தொட்டு freedom movement வரை ஒரு ரோட்டைக்கண்டேன். 1998-ல் துவங்கி 2002-ல் நான்கு வால்யூம்களாக Count down from Solomon வெளியிட்டிருக்கேன். இதுக்கு அவுங்க(ஜேசுதாசன்) ரொம்ப உதவி செய்தாங்க. எகிப்தில் உள்ள மன்னன் சாலமனின் அரண்மனையில் தேக்குமரத்துண்டுகளாலான பலகைகள் இருந்தது. அன்றைக்கு எகிப்தும் இந்தியாவும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. தென்னிந்தியாவிலிருந்துதான் தேக்குமரம் அங்கே கொண்டுசெல்லப்பட்டிருக்க வேண்டும். எனவே தமிழ்நாட்டுடன் அன்றைக்கு எகிப்திற்கு தொடர்பு ஏற்பட்டிருக்கவேண்டும். அதனால்தான் கவுண்ட் டவுன் ஃபிரம் சாலமோன்னு தொகுப்புக்கு பேர் வைச்சேன்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: தலித் இலக்கியம் பற்றி உங்கள் கருத்தென்ன..?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: இலக்கியத்தை மேல்வர்க்க இலக்கியம் தலித் இலக்கியம்னு பிரிச்சுப்பேசுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி ஜாதியை நான் எதிர்க்கிற ஆளாக்கும். ஒரு விசயம் சொல்லுதன் கேட்டுகிடுங்க.. என்னோட மகன் டாக்டர் தம்பி தங்ககுமார் கேரளா பல்கலைக்கழக கல்லூரியில பிசிக்ஸ் படிச்சதுக்கப்புறம் சென்னை ஐ.ஐ.டி.யில மேற்படிப்பு படிக்க செலக்ட் ஆனான். படிச்சு முடிச்சு வந்ததுக்கப்புறம் மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்துவக்கல்லூரியில புரபசரா வேலை கிடைச்சது. வேலை கிடைச்சதும் என்கிட்டே சொன்னான், ”அம்மா எனக்கு நம்ம ஜாதியில பொண்ணு வேண்டாம். வேற ஜாதியில எனக்கு அம்மா பொண்ணு பாத்துதரணும்.. டவுரி ஒண்ணும் வாங்கக்கூடாது.. குறைஞ்சது பி.ஏ. வரையாவது படிச்சிருந்தாபோதும்.. நாம் கிறிஸ்துவத்தை கடைப்பிடிக்கிறதுனால கிறிஸ்துவரா இருந்தா நல்லதுனு சொன்னான். நானும் அவரும்(ஜேசுதாசும்) என் மகன்கிட்டே உட்கார்ந்து பேசுனோம். ”வேற ஜாதியில பொண்ணு பார்க்கிறதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஆனா நாளைக்கு குழந்தைங்க பிறந்து அதுகளுக்கு கல்யாணம் பண்ணுறப்ப ஏதாவது பிரச்சனை வந்தா என்ன பண்ணுறதுன்னு அவன்கிட்டே கேட்டோம். அதுக்கு அவன் சொன்னான், அதைப்பத்தி அப்ப பாத்துக்கலாம்னு. நாங்க சரின்னுட்டோம். அன்னைக்கு எங்க வசதிக்கு பலரும் பல லட்சரூபாய் டவுரி தந்து பொண்ணைத்தர தயாரா இருந்தாங்க. ஆனா எங்களுக்கு எங்க மகனோட விருப்பம்தான் பெருசா தோணிச்சு. எங்க முடிவை சர்ச் பாஸ்டர்கிட்டே எங்க மகனோட எதிர்பார்ப்பைச் சொன்னோம். உடனே பாஸ்டர் சிரிச்சுகிட்டே சொன்னாரு, ”ஒரு குடும்பத்துக்கு பல லட்சரூபா லாபமாச்சு”ன்னு.. மகன் ஆசையைச் சொல்லிட்டான். அவனுக்கு விரும்பினமாதிரி எங்க போய் பொண்ணு தேடுயதுன்னு பலருகிட்டேயும் பேசினோம். அப்போதான் டதியில பாடம் சொல்லித்தந்த டீச்சர் பத்தி ஞாபகம் வந்துது. அவங்க ஷெட்யூல்ட் காஸ்ட். அவங்களோட ஹஸ்பண்ட் பிராமின். திருவனந்தபுரத்தில அவரு வேலை பார்த்தாரு. நான் வேலைக்கு வந்ததுக்கப்புறம் அவங்களோட எந்தத் தொடர்பும் இல்லாம இருந்துச்சி.. ஒரு வழியா அவங்களைக் கண்டுபிடிச்சு என் மகனின் விருப்பத்தைச் சொன்னேன். அவரு ஆந்திராவில் இருக்கிற அவரோட உறவினர் பாஸ்டர் தேவபிரகாசம் பத்தி சொன்னாரு. தேவபிரகாசமும் பிராமின் குடும்பத்தைச்சேர்ந்தவர். அவரும் கிறிஸ்டினா கன்வெர்ட் ஆனவரு. இவரு தனியா போதம் செய்திட்டிருந்தாரு. அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகளும் இரண்டு பையன்களும். இந்த நிலையில அவருக்கு மனைவி இறந்துபோனாங்க. இவரு போதனை செய்ய ஊரூரா அலைஞ்சிட்டிருப்பாரு. அதனால் அவருக்கு பிள்ளைங்க எதிர்காலம் பத்தி பயம் வந்துது. இந்தச் சமயத்துல எனக்கு டதி ஸ்கூல் டீச்சர் பாஸ்டர் தேவபிரகாசத்தோட மூத்த மகள் விஜய கீர்த்தியை என் மகனுக்கு பேசி முடிச்சாங்க. திருவனந்தபுரத்தில சர்ச்சுல வைச்சு கல்யாணம் நடந்தது. அதனால் எனக்கு ஜாதியில எல்லாம் நம்பிக்கை இல்லை. அதுபோலவே என் பேத்திக்கும் (தம்பி தங்ககுமாரின்மகள்) கலப்புத்திருமணத் தம்பதியரின் மகனைத்தான் பார்த்து திருமணம் செய்து வைத்தோம். எனக்கு தலித்துன்னும் கிடையாது.. பிராமணன்னும் கிடையாது.. நாடார்ன்னும் கிடையாது. அதனால இலக்கியத்தை தலித்துன்னு பிரிச்சுப்பாக்கிறது சரியில்லைங்கிறதுதான் என்னோட கருத்து.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: இப்போது தமிழிலக்கியத்தை எடுத்துகிட்டா தலித் இலக்கியம் முன்னேற்றப்பாதையில் செல்வதாக தெரிகிறது. தலித் எழுத்தாளர்கள் பற்றி உங்கள் கருத்து.&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: அதுதான் மொதல்லேயே சொல்லிட்டேனே, நான் இலக்கியத்தைப் பிரிச்சுப்பாக்கவே இல்லைன்னு. யாரு தலித் எழுத்தாளர்னெல்லாம் எனக்குத்தெரியாது..&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: இலக்கியத்தைப்பத்தி உங்கள் மதிப்பீடு என்ன..?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: இலக்கிய உலகம் கடல் போல. மனிதர்களில் எத்தனை விதமோ, இலக்கியமும் அத்தனைவிதமாகத்தானிருக்கும். கலங்கல் நீர்போன்ற வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இலக்கியம்தான் இன்று பெருவாரியான மக்களைக் கவர்கிறது. அதில் அதிசயம் ஒன்றும் இல்லை. இது இயல்புதான். ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கைத் தத்துவ நிலையிலிருந்துதானே தங்கள் படைப்புகளுக்கு உருக்கொடுக்க முடியும். தரக்குறைவான படைப்பாளர்கள் விற்பனையை முன்னிட்டு அல்லது புகழை முன்னிட்டு ராகத்துக்குத் தகுந்த தாளமாக, எந்தத் தத்துவம் மக்களிடையே எடுபடுகிறதோ, அந்தத் தத்துவத்தையே கையாளுகிறார்கள். இதில் புதுமை ஒன்றும் இல்லை. பொதுவுடமை இலக்கியமாவது, புராண இலக்கியமாவது நமது நம்பிக்கையைக் கலைக்கப்போவது இல்லை. சத்தியத்தில் நிலை நிற்பவர்களுக்கு சத்தியம் வழியாகத்தான் இலக்கியத்தை உணர முடியும். தூய்மையையும் சத்தியத்தையும் கம்பர் மனசார வாயாரப் பாடுவதற்காகவே நாம் கம்பரைப் பாராட்டுகிறோம். பொது உடைமை இலக்கியத்தின் ஒரு பெரிய குறை என்னவென்றால், பொய்தான். பணக்காரன் மகாபாவியாக இருக்கலாம், ஒப்புக்கொள்கிறோம். வஞ்சனைக்காரனாக இருக்கலாம். ஏழைமீது காட்டுவது அக்கிரமமாக இருக்கலாம். அதையும் ஒப்புக்கொள்வோம். ஆனால் ஏழையானவன் நல்லவன் என்று எடுத்துக்காட்டுகிறார்களே, அதைத்தான் ஒப்புக்கொள்ளமுடியாது. ஏழையின் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப்பார்த்தாலல்லவா தெரியும். அவன் கொண்டு பிறந்த குணம் எப்படிப்பட்டது என்பது..? அதற்காக அக்கிரமத்தை அக்கிரமமல்ல என்று சொல்லவேண்டாம். ஆனால் ஏழை மீது இரக்கம் பாராட்டும்போது, அந்த இரக்கம் உண்மையானதுதானா? அல்லது சொந்தக்காரியம் சிந்தாபாத் என்ற முறையில் அமைந்திருக்கிறதா என்பதுதான் விஷயம். பொய்யின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு, காட்டுற இரக்கத்திற்கு என்ன பெயர் கொடுப்பது.? குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கிறதா? எதுவாக இருந்தாலும் அது கலை என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது. மெய்யான கலை, உண்மையின் அடிப்படையிலேயே உருப்பெறுவது. உண்மை என்பது எல்லா மனுஷருக்குமே உரிமையுள்ள ஒன்று. ஆனால் அதற்கு வேண்டுமென்றே கண்ணடைத்துக்கொண்டால் என்ன செய்ய முடியும்? அத்தகையை நிலையைக் கலை என்று எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்..? மனித இருதயம் கலையால் மாற்றம் அடையுமோ என்பது சந்தேகத்துக்குரியது. மண்ணை உடைத்து மரமடித்து விதைபோடுகிறமாதிரி, கலையால் மனித சிந்தனைக்கு ஓரளவு பக்குவம் கொடுக்கமுடியும். மனமாற்றம் என்று நாம் சொல்லும்போது அது சிந்தனையளவில் நின்று விட முடியாதல்லவா? ஓல்ட் மேன் அன்ட் தி சீ என்ற நூல் நம்மை வெகுவாக சிந்திக்க வைக்கிறது. கடலோடு போராடின மீனவனை ஒரு வீரனாகவே காட்டுகிறது. ஆனால் அதே மீனவன் ஆசிரியரிடம் பொருளுதவிக்காகப் போனபோது ஆசிரியர் மறந்துவிட்டதாக அறிகிறோம். கலை என்பதே இந்த அளவுதான். கற்பனையோடு பெரும்பாலும் நின்று விடுகிறது. கற்பனை என்பது மனிதனுக்கு இறைவன் கொடுத்த ஒரு அருமையான வரம்தான். செவியில்லாமல் வீணையைக் கேட்டு இன்புற முடியுமா? கண்ணில்லாமல் நிலவைப் பார்த்து ரசிக்க முடியுமா? செவியையும் கண்ணையும் கொடுத்த இறைவனே கற்பனையையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த வரங்களை நாம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம். கண்ணையும் செவியையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார் என்பதற்காக இருட்டு விடிய டி.வி.(டெலிவிஷன்)க்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு கண்களைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். கலை கலை என்று பலரும் ஜ“வனைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல எழுத்தாளர்களுக்கும் வாழ்க்கையை விட கலைதான் பெரிதாகத் தெரிகிறது. அதனால் வாழ்க்கையே தொலைந்து விடுகிறது. கலையும் நெறிதவறிப் போய்விடுகிறது. கலை என்ற நிலையில் இலக்கியத்திற்கு ஒரு கணிசமான வரையறை உண்டு. நல்ல இலக்கியங்களை வாசித்துப் பழகினவர்களுக்கு அது இந்த வாழ்க்கையில் ஒரு இன்பம் தருகிறது என்பது உண்மை. அத்தகைய இன்பத்தில் தவறில்லை என்பதும் உண்மை. இனிய பதார்த்தங்களை நாம் சாப்பிடுவதில் தவறில்லை எனில் நல்ல நூல்களை வாசிக்கிறதிலும் தவறிருக்க முடியாது. ஜேன் ஆஸ்டினின் கதைகளைப் படிக்கும்போது ஒரு அடிப்படை நிம்மதியை நாம் அனுபவிக்கவே அனுபவிக்கிறோம். நேர்மாறாக வர்ஜ“னியா ஊல்ஃபின் கதைகளை வாசிக்கும்போது, ”ஐயோ என்ன பரிதாபம்! இப்படியா வாழ்க்கையைக் கண்டிருக்கிறாள்?” என்ற மனக்கஷ்டம் மேலோங்கி நிற்கிறது. கற்பனை இலக்கியத்தில் செயல் என்றாலோ பெரும்பாலும் கற்பனை உலகத்தோடு நின்று விடுகிறது. அப்படி நிற்கவும்தான் வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் பைத்திய நிலையில் அல்லவா ஆகிவிடுகிறான். கற்பனையில் டார்சான் (டார்ஜான்) என்னவெல்லாமோ செய்கிறான். அதை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்திவிட்டால் மரத்திலிருந்து விழுந்து முதுகை ஒடித்துக் கொள்ளலாம். அல்லாவிட்டால் புலியின் வாயில் சென்று விழலாம். சத்தியம் என்பது, கற்பனையில் கிரியை செய்யும்போது அந்தக் கற்பனைக்கு, சிருஷ்டியின் நிழல் என்ற அளவுக்கு அழகு வருகிறது. என்னதான் இலக்கியம் என்றாலும் இறைவனின் ஆசியின்றி ஒன்றுமே இல்லை. இன்றைய இலக்கிய ஆசிரியர்களின் விஷயம் பயத்தைத் தருகிறது. பிறவிச்செவிடன் பாட்டுப்பாடப்போனால் பாட்டின் கதி என்னவாகுமோ அந்தக் கதிதான் அவன் எழுதுகிற இலக்கியத்துக்கும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எதற்கும் குறைபட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். சத்தியம் சத்தியம் என்பதையும் இலக்கியம் வெறும் இலக்கியம் என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: அதென்ன உங்களுக்கு கம்பனிடம் அத்தனை ஈடுபாடு..? கவுன்ட் டவுன் ஃபிரம் சாலமோனில் மூன்றாவது தொகுதி முழுக்க கம்பரசத்தை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்முகச் சிந்தனைகளை உருவாக்கியிருந்தீர்கள். இதற்குக் காரணம்..?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: தமிழ்ல கம்பனில் இல்லாதது எதுவும் இல்லை. தமிழ் இலக்கியம்னா அது கம்பன் தான். என்னைப்பொறுத்தவரை சமுதாயம் ஆகட்டும், நட்பாகட்டும், போர் ஆகட்டும், கம்பராமாயணத்துல ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைதான். நாடு கடத்தப்பட்ட ராமன் பின்னால தருமம் இரங்கிப்போகிறது. ராமனின் பட்டாபிஷேகத்துக்கு என்று அமைத்த முல்லைப்பந்தல் கலைவது, ராமனிடம் அபயம் தேடுமாறு புத்தி சொல்லும் சகோதரனிடம் அழும் கும்பகர்ணன், தன்னுடைய நாயகியிடமிருந்து தன்னைப்பிரிக்கும் கடலை உற்றுநோக்குவது மருதத்தின் வர்ணனை, ராஜகுமாரி திருமணத்தன்று ராஜசபையில் வருகிற அழகு என ஆயிரம் இடங்களில் கம்பன் வாழ்க்கையின் ஆழங்களைத்துழாவி, அதன் சிகரங்களை எட்டிப்பிடித்து அதன் அழகுகளை கையிலடக்கி விடுகிறான். இதனால் தான் கம்பனை சாகாவரம் பெற்ற கவியாக உலகிலுள்ள மகா கவிகளில் ஒருவனாக ஏன் ஷேக்ஸ்பியரோடேயே தோளோடு தோளாக நிற்கக்கூடியவனாக நாம் கருதுகிறோம். ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் எப்படி நம்மை திகைக்க வைக்கிறானோ அதுபோலவே கம்பனும். கம்பராமாயணத்தில் ஒரு சொல் கூட வீணான சொல் கிடையாது. அதிகப்பிரசங்கம் என்பார்களே, அது கம்பராமாயணத்தில் கிடையாது. கம்பன் பல்வேறு கவனங்களில் நம்மை ஈர்க்கும்போது காவியத்தை வேண்டுமென்றே நீள வைக்கிறான். அது சபையின்தேவை. கம்பராமாயணத்தின் சில அழகுகள் சிலருக்கென்றே அமைக்கப்பட்டன. கேட்போரை ஈர்க்கவேண்டும். அழகு மந்திரத்தால் கட்டுப்படுத்தவேண்டும். இதெல்லாம் இல்லாமல் அன்று கம்பன் கவியாக இருந்திருக்க முடியாது. கம்பனின் மகா காவியப்பரப்பில் நாம் உற்று நோக்குகிற அனுபவம், ஷேக்ஸ்பியரின் நாடக சாகரத்தில் பார்க்கிற அனுபவத்தைப் போலிருக்கும்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஷேக்ஸ்பியராகட்டும் கம்பனாகட்டும் இயல்பிலேயே மகா கவிகளாக அமைந்தவர்கள். இருவருக்கும் திடீர் திடீர் என்று வாழ்க்கையின் மிகப்பெரிய இரகசியங்களைப்-பற்றிய தரிசனங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. உள்ளுணர்வு அவர்களை உந்தித்தள்ளிய வேகத்தில் தங்களை அறியாமலேயே கலை எண்ணத்தைக் கடந்த மகாகவிகளாகிவிட்டார்கள்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;”புவியினுக்கணியாய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்றாகி&lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவி அகத்துறாஇகள் தாங்கி, ஐந்திணி நெறி அளாவி,&lt;/p&gt;  &lt;p align="left"&gt;சவிஉறத்தெளிந்து, தண்ணென்(று) ஒழுக்கமும் தழுவி, சான்றோர்&lt;/p&gt;  &lt;p align="left"&gt;கவியெனக்கிடந்த கோதாவரியினை வீரர்கண்டார்!” என்ற கோதாவரியினைப்பற்றிய இந்த அற்புத வரியிலிருந்து கம்பன் கவிதையை எப்படிப்பார்க்கிறான் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;மகா காவியத்தை விட விரிந்து பரந்து கிடக்கக்கூடியது எது? பெரு வெள்ளத்தின் பிரவாகத்துக்கு வேறு எந்த ரீதியாக எழுதிய கவிதையை ஒப்பிட முடியும்? மட்டுமல்லாமல் கம்பனுக்கு மூல நூலான இராமாயணம் இருக்கவே இருக்கிறது. கம்பனைப்பற்றிய கவிக்கு எதைப்பின்பற்றத்தேவை என்பது நன்கு தெரிந்திருக்கும். தன் காவிய முன் மாதிரி தன் முன்னால் இருக்க, ரசிகர் சபைக்கு தினம் தினம், படலம் படலமாகப்பாட வேண்டிய தேவையும் இருந்திருக்கிறது. கம்பனைப்போல் செவிக்கு இனிமையாகப்பாட வல்லவர் யார்? இந்த இனிமை சில வேளைகளில் வார்த்தைப்பந்தலாக அமைந்து விடுகிறது. பொருளை உணராமலேயே இசையை ரசிக்கிற நிலைமை வந்து விடுகிறது. விரிந்து, பரந்து கிடக்கிற காவியம் வேண்டுமல்லவா? இழுக்கிற இழுப்புக்கெல்லாம் காவியம் வளைந்து கொடுக்கிறது. சபையில் சுகம் காண வந்தவனை, கனவு காணவந்தவனை திருப்தி செய்வதற்கென்றும் காவியத்தை அமைக்க வேண்டிய நிலை பலவிதப்பட்ட ரசிகர்களை திருப்தி செய்கிற வேலைக்கு கம்பன் இறங்கியிருக்க வேண்டும். ஷேக்ஸ்பியர் செய்ததும் இதைத்தான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;கம்பன் வால்மீகியிடமிருந்து கடன் வாங்கினானா? ஷேக்ஸ்பியர் எத்தனையோ பேரிடமிருந்து காப்பி அடித்திருக்கிறான். ஷேக்ஸ்பியர் வெற்றி பெற்ற மாதிரியே கம்பனும் வெற்றி பெற்றான். மக்கள் அவன் யாரிடமிருந்து காப்பியடித்தான் என்பதை மறந்துவிட்டு கம்பனிலேயே பெருமிதம் கொண்டார்கள். ஆங்கிலேயர் ஹாலின்ஷெட் க்ரானிக்கிள் போன்ற மூல நூல்களை மறந்துவிட்டு ஷேக்ஸ்பியர் எடுத்துக்காட்டிய வாழ்க்கை நாடகத்தில் பெருமிதம் கொண்டார்கள் அல்லவா, அதுபோல் இங்கே நான் அழுத்திக்கூற விரும்புகிற விஷயம், ஷேக்ஸ்பியரின் குற்றங்குறைகளைப்போலவே கம்பனின் குற்றங்குறைகளையும் பெரும்பாலும் சபையின் விருப்பு வெறுப்புகளோடும், காலத்தின் தேவைகளோடும் பண்பாட்டின் அமைப்போடும் பொருந்தக்காணலாம்,&lt;/p&gt;  &lt;p align="left"&gt;கம்பன் பாலுறவை வெறியோடு, மிருக இச்சையோடு ஒரு கூச்சமும் இல்லாமல் விவரிக்கத்துணிவது என்னவோ உண்மைதான். ஆனால் சீதாராமர் காதலில் அந்த விஷயத்தில் மவுனம் சாதிக்கிறான் என்றே சொல்ல வேண்டும். அனுமனை இராமன் சீதையிடம் அனுப்பும்போது ஏதெதோ உளறுகிறானே அதை மட்டும் நாம் நீக்கிவிட்டுப் பார்த்தால் அவற்றில் கம்பனின் இயல்பான பண்புகள் காணப்படவில்லை என்பது ஞாபகமிருக்கவேண்டும். கம்பனிடம் தான் சபைக்கு முன் கலைஞனாக வேண்டும் என்ற உத்தரவாத உணர்வு தெரிகிறது. இந்த உணர்வால் கலைக்கு அல்லது உத்திக்கு அதிகப்படியான முக்கியத்துவம் வந்து அதனால் கம்பனை வேண்டாத வழிகள் பலவற்றுக்கு இழுத்துச் செல்கிறது. அன்றைய நிலையில் இந்த வழிகள் தவிர்க்கக்கூடாதவையாக இருந்திருக்கலாம். கம்பனிடமிருந்து சபை எதிர்பார்த்த கலையும் பக்தியும். சபையில் அவன் துணிந்தெழுதின காமரசம் கொண்ட பல கட்டங்களை ரசிக்கக்கூடிய பல கவியுள்ளம் படைத்தவர்கள் இருந்திருக்க வேண்டும். தன் தேவன் தேவியரை அவன் எடுத்துக்காட்டிய விதத்தில் பக்தியுணர்வில் கரைந்து போகத்தயாராக பக்தர்களும் இருந்திருக்கவேண்டும். எழுத்துப்பிரவாகம் அவனுள் இருந்தது. அவன் நல்லகாலம் அதில்லாமல் ராமாயணம் அரங்கேற்றப்பட்ட வட்டத்தின் தேவைகளை அவன் திருப்தி செய்வதில் வெற்றி கண்டிருக்கமுடியாது. அந்த வட்டம் ஏற்கெனவே அறிந்திருந்த ராமாயணத்தை ஒட்டித்தன் காவியத்தை அமைப்பது கூட கம்பனின் வெற்றிக்கு அவசியமாக இருந்தது. அது போல காமப்பித்தர்களுக்கும் பக்தர்களுக்கும் கலைப்பித்தர்களுக்கும் கூடத்திருப்தி தேடிக்கொடுப்பது கம்பனின் இலக்கிய வெற்றிக்கு மிகமிக அவசியமானதாக இருந்தது. சபை விரும்பியதை கம்பன் செய்தான். கம்பனில் சொல்லாததும் எதுவும் இல்லை. அதனால்தான் Count down from Solomon. ஒரு தொகுதி முழுவதுமே கம்பராமாயண இலக்கிய ரசத்தை சொட்டச்சொட்ட சொல்லியிருக்கேன்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: உங்களுக்கு விருது ஏதாவது கிடைத்திருக்கிறதா?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: தமிழ்லேர்ந்து ஆங்கிலத்துல எழுதினதுனால எனக்கு 1965-ல் ஒரு விருது கொடுத்தாங்க. நான் விருதை எதிர்பார்த்து ஒண்ணும் எழுதவில்லை.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: நீங்க எழுதினது பணத்துக்காகவா? உங்கள் ஆத்ம திருப்திக்காகவா?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: பணத்துக்காக எழுதவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. வீட்டுலயும் எனக்கு நல்ல வசதி. அதுக்குமேல பேராசிரியர் வேலை இருந்ததுனால் எனக்கு பணத்துக்கு பிரச்சனை ஒண்ணும் இல்லை. மொதல் நாவல் எழுதினேன். ஒரு கட்டத்துல நாவல் எழுதவேண்டாம்னு சொல்லி இலக்கியம் பக்கம் போனேன். கடைசியா தமிழ் இலக்கியம் பத்தி நான் எழுதிய கவுண்ட் டவுன் ஃபிரம் சாலமோன் நான்கு தொகுதிகளை நினைக்கிறப்ப எனக்கு பயம்தான் வருது. எழுதுறது எனக்கு கடவுள் தந்த வரம்னு நினைக்கேன். 9 வயசுல எனக்கு தேவதை பேனா தந்ததுமாதிரி வந்த கனவை அடிக்கடி நினைச்சுப்பார்ப்பேன். அதனால என்னோட பேனாவால கிடைக்கிற ஒரு காசுகூட என்னோட குடும்பத்துக்கு செலவிடக்கூடாதுங்கிறதுல நான் வைராக்கியமா இருக்கேன். என் எழுத்திலேர்ந்து கிடைக்கிற வருமானத்தை சர்ச்சுகளுக்கும், உதவி மையங்களுக்கும் செலவிடுறேன். புலிப்புனம் பகுதியில நானும் அவங்களும் (ஜேசுதாசன்) சேர்ந்து ஒரு ஆங்கிலப்பள்ளியைத் துவங்கினோம். அதுக்கு பேருகூட ஆங்கிலப்பேராசிரியரின் ஆங்கிலப்பள்ளின்னு வைச்சோம். அவர் காலத்துக்கப்புறம் தங்கக்கண் நினைவு ஆங்கிலப்பள்ளின்னு பேர் மாத்திட்டோம். இங்கே நாங்க குறைஞ்ச செலவில இந்தப் பகுதியில உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வி வழங்கிட்டு இருக்கோம். என்னோட மருமகள்தான் இப்ப இந்தப் பள்ளியை நடத்திகிட்டு வர்றாங்க. இந்தப் பள்ளிக்கூடத்தை நடத்த போதிய வருமானம் இல்லாததனால் என்னோட எழுத்திலேர்ந்து கிடைக்கிற வருமானம்தான் பள்ளிக்கூடத்தை நடத்துறதுக்கு உதவியா இருக்கு.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: நீங்கள் எழுதிய கிராண்ட்மா டைரிக்கு திருவாங்கூர் இளவரசி முன்னுரை அளித்திருந்தார்களே..&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: நான் கேரள பல்கலைக்கழக கல்லூரியில் வேலை பார்த்தபோது திருவாங்கூர் இளவரசி கவுரி லெஷ்மிபாய் எனது மாணவி. நான் ஆங்கிலத்தில் கவிதை வெளியிடுகிறேன் என்றதும் மனப்பூர்வமாக முன்வந்து முன்னுரை வழங்கினார்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: நாவல் எப்படி இருக்கணும்னு சொல்ல வர்றீங்க..?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: எழுதுறது பெரிய விஷயம் இல்லை. ஆனால் எழுதறவங்களுக்கு ஒரு மேதைத்தன்மை இருக்கணும்கிறதுதான் என்னோட அபிப்பிராயம். இப்ப முட்டையை எடுத்துகிட்டோம்னா வெள்ளைக்கருதான் அதிகமா இருக்கு. ஆனால் மஞ்சள் கருதான் முக்கியம். முட்டையில இருக்கிற மஞ்சள்கரு போலத்தான் மேதைத்தன்மை. நாவலில் உண்மைத்தன்மை இருக்கணும். சமுதாயத்தைப்பத்திச் சொல்லியிருக்கணும். நாவலில் யதார்த்தம் வெளிப்படணும்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: இப்ப உள்ள எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்..?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: அப்பவும் சரி, இப்பவும் சரி, எனக்கு அதிகமாக நாவல்கள் படிக்கிற வாய்ப்பு குறைவு. இந்தக் காலத்துல யாரு எழுதுறாங்கன்னு ஒண்ணுமே எனக்குத் தெரியாது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: மேல்நாடு இலக்கியத்திலும் தமிழிலும் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆங்கில எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்..?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: ஜேன் ஆஸ்டின். அவரோட எம்மா நாவல் ரொம்பப் பிடிக்கும். அது போல டால்ஸ்டாயின் எழுத்துக்களை ரொம்பப் பிடிக்கும்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: தமிழில் வெளியான சிறந்த நாவல் என்று எதைச் சொல்வீர்கள்?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: முன்னாடி கல்கி நிறைய எழுதியிருந்தார். ஆனால் அதில் யதார்த்தமில்லை. தமிழ்ல நிறைய நாவல்கள் இருக்குது. நான் போதுமான அளவுக்கு தமிழ்நாவல் வாசிக்கவில்லை. அதனால் எது நல்ல நாவல்னு என்னால் சொல்ல முடியலை. கல்லூரியில் படிச்சிட்டிருந்த, வேலை பார்த்த காலத்துல உள்ள நாவல்களைத்தான் சிலவருசத்துக்கு முன்னாடி வரை படிச்சது. இப்ப ஒண்ணுமே படிக்க முடியவில்லை. அதனால் நாவல்களைப் படிக்காம சிறந்த நாவல் எதுன்னு என்னால சொல்ல முடியாது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தீராநதி: உங்களுக்குனு ஆசைகள் ஏதாவது?&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஹெப்சிபா: இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள எங்கள் வீட்டில் எங்கள் பிள்ளைகளுக்கு இலக்கிய ஈடுபாடு இல்லாமல் போனது வருத்தம்தான். ”கம்பனைக் குறித்து ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது எனக்குள்ள உடல் நிலையில் என்னால் இது முடியாது. யாராவது மொழிபெயர்க்க வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்!&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;&lt;em&gt;(நிறைய கேள்விகள் கேட்டும் ஹெப்சிபாவிடமிருந்து உரிய பதில்களைப்பெற சிரமப்படவேண்டி வந்தது. நிறைய கேள்விகளுக்கு மவுனமே பதில். பேராசிரியர் ஏனோஸ் உதவியால் ஓரளவுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடிந்தது.)&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;நன்றி: தீராநதி 2008&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-4511764944236370815?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/4511764944236370815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_05.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/4511764944236370815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/4511764944236370815'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_05.html' title='ஹெப்சிபா ஜேசுதாசன் : நேர்காணல்'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/-YLX_XdTNMRM/TwT-j1lg51I/AAAAAAAAIMs/4QQxEoSCyAA/s72-c/Hepshi-Bai_Jesudasan-Su-Ra_thumb%25255B17%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-7551026270057731357</id><published>2012-01-03T08:30:00.001+05:30</published><updated>2012-01-03T08:30:48.022+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபிகிருஷ்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><title type='text'>உரிமை - கோபி கிருஷ்ணன்</title><content type='html'>&lt;p align="left"&gt;   &lt;br /&gt;மாநிலக் கல்லூரியில் இளங்கலை உளவியல் பிரிவில் என் முதலாம் ஆண்டு ஆரம்பித்தது. நாங்கள் பத்து மாணவர்கள் ஒன்பது மாணவிகள். மதுரையில் என் பாட்டியின் கண்டிப்பான வளர்ப்பும், வீட்டிலுள்ள கோவிலில் தினப் பூஜையும், அவர் நடத்திய பஜனை மண்டபத்திற்கு வரும் பெண்களை அக்கா, தங்கை, அத்தை, மாமி, பாட்டி என்று அழைக்க வேண்டி வந்த திணிக்கப்பட்ட நிர்ப்பந்தமும், பாலுணர்வு புரிந்தும் புரியாத நிலையில் ஒரு அழகிய இளம் பெண்ணைப்பார்த்து ஒரு ஆணுக்கு ஏற்படும் இயற்கையான அழகுணர்வே பஞ்சமகா பாதகங்களுள் ஒன்று என்ற குற்ற உணர்வை ஏற்படுத்திய மனநிலையும், என்னுள் சற்று தாராளமாகவே சங்கோஜ பாவத்தை &lt;a href="http://lh5.ggpht.com/-fXrpnlxH_kE/TwJvW_erRuI/AAAAAAAAIMU/AVCcmjatztM/s1600-h/gopi%25255B7%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="gopi" border="0" alt="gopi" align="right" src="http://lh3.ggpht.com/-oi8tRBdEb_c/TwJvXlO2_kI/AAAAAAAAIMY/aBovmQcynO4/gopi_thumb%25255B10%25255D.jpg?imgmax=800" width="205" height="288" /&gt;&lt;/a&gt; வளர்த்திருந்தன. கல்லூரிக்கு வந்த பிறகும் சகமாணவிகளுடன் சாதாரண விஷயங்களைப் பற்றி ஓரிரு வாக்கியங்கள் பேசுவதற்குள் உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. முகம் வியர்த்துக் கொட்டியது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;முதலில் என்னுடன் சகஜமாகப் பேசியது ரோஸி ஜான் தான். என்னமோ என்னுடன் நெடுங்காலம் பழகியதுபோல் எடுத்த எடுப்பிலேயே அவள் என்னுடன் பேசிய முதல் வாக்கியங்கள் : 'என்ன ராஜ், இண்ணெக்கி அட்டகாசமா சட்டை போட்டிருக்கே? யாரையாச்சும் காதலிக்கிறாயா? யார் அந்த அதிர்ஷ்டசாலிப் பெண் ?'&amp;#160; எனக்கு உண்மையிலேயே தூக்கி வாரிப் போட்டது. முகத்தில் வழக்கமாக வழியும் வியர்வையுடன் சற்று அசடும் சேர்ந்து வழிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட, புன்சிரிப்பு என்று நான் நம்பிய ஒன்றை வெளிப்படுத்தினேன். அவளும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள். எனக்கு அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. புது மாதிரியான சட்டை நான் போட்டால் ரோஸிக்கு ஏன் அது அட்டகாசமாகப் படவேண்டும்? அட்டகாசமான சட்டை போடவேண்டுமென்றால் ஒரு காதலி ஒருவனுக்கு இருக்கவேண்டுமா? எனக்கு வாழ்க்கைப்படப் போகிறவள் அதிர்ஷ்டசாலியாகத்தான் இருக்கவேண்டும் என்று ரோஸி ஏன் நினைத்தாள்? அன்று இரவு தூங்க ஒரு diazepem&amp;#160; தேவைப்பட்டது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ரோஸி பார்ப்பதற்கு அழகாகவே இருந்தாள். அவளிடம் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று அவள் மூக்கின் நுனி சற்று தூக்கலாக இருந்தது. ஒரு ரோமானிய அம்சம்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஓராண்டு கழித்து மறு ஆண்டு வந்து அதுவும் கழித்து மூன்றாம் ஆண்டு இறுதியில் இருந்தோம். ரோஸியும் நானும் இந்நேரம் மிகவும் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தோம். இப்பொழுதெல்லாம் எனக்கு வியர்த்துக் கொட்டுவதில்லை. மூன்று கலை நிகழ்ச்சிகளுக்கும், அடிக்கடி கல்லூரிச் சிற்றுண்டிச் சாலைக்கும் தோராயமாக ஒரு இருபது ஆங்கிலப் படங்களுக்கும் சேர்ந்தே சென்றாகி விட்டிருந்தோம். என்னை அவளுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டிருந்தது. என்னைப்போல் ஒரு இனிய நண்பன் கிடைக்க அவள் கொடுத்துவைத்தவள். அவள் வாழ்க்கையில் நான் கலந்து விட்டால் வேறு ஏதும் தேவையில்லை. நான் புளகாங்கித்துக் கொண்டிருந்தேன். இரவில் அவள் பளிச்சென்ற புன்னகை பூக்கும் முகமும், முகத்தில் குறிப்பாக அவளது அழகிய மூக்கும் ஏன் கண் முன் தோன்றிக் கொண்டிருந்தன. எனக்கு ஏதேதோ கற்பனைகள். சாதாரணமாக உளவியல் படிப்பவர்கள் ஒரு உறவை.உறவின் அடிப்படையை, உணர்வுகளை சித்திரவதை செய்து காரண அலசலில் மூழ்கி மூர்க்கத்தனமான அர்த்தங்களை அவற்றிற்கு ஏற்படுத்தி, உறவிலுள்ள இனிமையை காரண ரீதியில் காயப்படுத்துவார்கள். நல்லவேளை, எனக்கு எங்கள் உறவை அப்படியெல்லாம் செய்யத் தோன்றவில்லை. எங்கள் உறவில் ஒரு இனிய கவிதை இழைந்தோடிக் கொண்டிருப்பதாகவே பட்டது. எனக்குள் ஒரு குறை. அவளை இதுவரை தொட்டதில்லை. என்னுள்ளிருந்த பாட்டி என்னை விட்டு ஒழியவில்லை. நான் என்ன செய்யட்டும்?&lt;/p&gt;  &lt;p align="left"&gt;என சகமாணவர்கள் ரோஸியையும்&amp;#160; என்னையும் சேர்த்து கன்னாபின்னா என்று கழிப்பறை சுவர்களில் எழுதியோ, ஆட்டீன் படத்தையும் அம்புக் குறியையும் வரைந்தோ, எங்கள் உறவில் அவர்களுக்குள்ள அக்கறையைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் உளவியல் மாணவர்கள் கண்ணியமானவர்களே. மூன்று ஆண்டுகள் ஒரு உறவு சுமுகமாக இருந்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லத் தோன்றியதோ இல்லையோ, என வகுப்புத் தோழர்களுக்கு நிச்சயமாக மானசீகமாக நன்றி தெரிவித்துக் கொண்டேன்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;இறுதி ஆண்டு பல்கலைக் கழகத் தேர்வுக்கு இன்னும் இரு தினங்களே இருந்தன. மாலை, என் அறையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலைப் பற்றி நான் ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தேன். விடுதியின் பையன், என்னைத் தேடி ஒரு இளம் பெண் வந்திருப்பதாக அறிவித்துவிட்டுப் போனான். எனக்கு குழப்பமாக இருந்தது. மனநலம் குன்றியவர்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், எந்தப் பெண்ணும் என விடுதி தேடி வந்ததுமில்லை. உடனே சட்டை பாண்டை மாட்டிக்கொண்டு தலையை ஒருவாறு சரிசெய்து கொண்டு அவசரமாக வாசலின் அருகே உள்ள பார்வையாளர்கள் அறைக்கு விரைந்தேன்.   &lt;br /&gt;எனக்கு ஒரே ஆச்சரியம். அங்கு ரோஸி எனக்காகக் காத்துக் கொண்டிருந்தால். அவளுக்கு படித்துப் படித்து அலுத்து விட்டதாம். ஒரு மாறுதலுக்காக கடற்கரைக்குச் செல்லவேண்டும் என்று தோன்றியதாம். நான் கூட இருந்தால் சந்தோஷமாக இருக்குமாம். அறைக்கு சென்று கதவைப் பூட்டிவிட்டு அவளுடன் கிளம்பினேன். வழி நெடுக இனிமையான அன்னியோன்னியங்களை பேச்சால் பகிர்ந்துகொண்டு மணற்பரப்பில் வெகு தூரத்தைக் கடந்து அலைகள் மணலைத் தொடும் இடத்திற்கு வந்துவிட்டோம். எனக்கு மிகவும் இன்பமான மாலைப் பொழுது. இன்னும் ஓரிரு மாதங்களுள் நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம். நாங்கள் ஏற்க்கனவே செய்து கொண்ட முடிவுதான். அந்த எண்ணத்தில் 'நான்' என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு. ஏதேதோ இனிய எண்ணங்கள்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ரோஸிக்கு என்ன தோன்றியது என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. நாங்கள் அப்பொழுது உட்கார்ந்திருந்தோம். 'ராஜ். கொஞ்சம் என செருப்பைப் பார்த்துக்கோயேன்.நான் அலையிலே நின்னுட்டு வர்ரேன்' என்று இனிமையாகச் சொல்லி, செருப்பை சிரத்தையுடன் அவசரப்படாமல் கழற்றி என முன்னாள் விட்டுவிட்டு அலைகளை&amp;#160; நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள். அவள் பின்னழகையோ நடை எழிலையோ ரசிக்க எனக்கு அப்பொழுது நிச்சயம் தோன்றவில்லை. எனக்கு ஒன்று உடனே நினைவுக்கு வந்தது. நான் மதுரையில் அடிக்கடி சென்று கொண்டிருந்த கோவில் வாசலில் அழுக்குச் சைட்டையும் கிழிந்த அரைக்கால் சட்டையும் போட்டுக்கொண்டிருந்த ஒரு பத்து வயதுச் சிறுவன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பத்து பைசா வாங்கிக்கொண்டு அவர்களது காலணிகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்தான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;மாநிலக் கல்லூரியை விட்டு நான் வெளியேறி 20 ஆண்டுகள் ஆகின்றன. என மனைவியின் பெயர் ரோஸி இல்லை.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;ஒவ்வாத உணர்வுகள் கதைத் தொகுப்பு,&amp;#160; சிட்டாடல் வெளியீடு&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தட்டச்சு உதவி: ரமேஷ் கல்யாண்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-7551026270057731357?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/7551026270057731357/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/7551026270057731357'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/7551026270057731357'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post.html' title='உரிமை - கோபி கிருஷ்ணன்'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/-oi8tRBdEb_c/TwJvXlO2_kI/AAAAAAAAIMY/aBovmQcynO4/s72-c/gopi_thumb%25255B10%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-2184297147295654261</id><published>2011-12-21T20:20:00.001+05:30</published><updated>2011-12-21T20:20:21.054+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சு.வெங்கடேசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருதுகள்'/><title type='text'>சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது</title><content type='html'>&lt;p&gt;எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;தமிழ் நாவல் எழுத்தாளரான சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராவார். மதுரையில் இவர் வசித்து வருகிறார். இவர் எழுதிய ஒரே நாவல் காவல்கோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. &lt;/p&gt;  &lt;p align="center"&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;div align="center"&gt;   &lt;table border="4" cellspacing="0" cellpadding="2" width="531" align="center"&gt;&lt;tbody&gt;       &lt;tr&gt;         &lt;td valign="top" width="300"&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-ET4SeaymspM/TvHyHf-vQyI/AAAAAAAAIL0/FawVJLUyvaA/s1600-h/venkatesan1_300%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="venkatesan1_300" border="0" alt="venkatesan1_300" align="right" src="http://lh3.ggpht.com/-cDOUNzRKweE/TvHyILt5GaI/AAAAAAAAIL4/s3W_UJLAlvU/venkatesan1_300_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="290" height="351" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;          &lt;td valign="top" width="223"&gt;&lt;a href="http://lh5.ggpht.com/-ZyCyBwAoarE/TvHyI0fs7sI/AAAAAAAAIME/4UukZanG4-0/s1600-h/Kaval_Kottam-su.venkadesan_buy_tamil_book__66978_zoom%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="Kaval_Kottam-su.venkadesan_buy_tamil_book__66978_zoom" border="0" alt="Kaval_Kottam-su.venkadesan_buy_tamil_book__66978_zoom" align="right" src="http://lh4.ggpht.com/-DQN4K-bW_9M/TvHyK9qn4xI/AAAAAAAAIMM/YV8hDq2i9Z4/Kaval_Kottam-su.venkadesan_buy_tamil_book__66978_zoom_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="248" height="354" /&gt;&lt;/a&gt; &lt;/td&gt;       &lt;/tr&gt;     &lt;/tbody&gt;&lt;/table&gt; &lt;/div&gt;  &lt;p&gt;&amp;#160; &lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;font size="2"&gt;அழியாச்சுடர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகள்.&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-2184297147295654261?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/2184297147295654261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post_21.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/2184297147295654261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/2184297147295654261'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post_21.html' title='சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/-cDOUNzRKweE/TvHyILt5GaI/AAAAAAAAIL4/s3W_UJLAlvU/s72-c/venkatesan1_300_thumb%25255B2%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-4663433225916694577</id><published>2011-12-20T08:10:00.001+05:30</published><updated>2011-12-20T08:10:38.759+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லா.ச. ராமாமிருதம்'/><title type='text'>பிம்பம் – லா.ச.ராமாமிருதம்</title><content type='html'>&lt;p align="left"&gt;மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் –&amp;#160; பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடீரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில், தான் திடீரென்ற நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;‘ஸாரி மாடம்! மன்னிச்சுடுங்க மாடம்!’ அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன. கன்னங்கள் கருங்குழம்பு. “நான் எதிரே பார்த்துண்டு வரல்லே’’.&amp;#160; அப்போதுதான் விஷயம் புரிந்து கடுங்கோபம் பற்றிக்கொண்டது.&amp;#160; &lt;a href="http://lh3.ggpht.com/-QTAJXJ_vGsc/Tu_1oG_To8I/AAAAAAAAILE/49cqQZlHvoA/s1600-h/LAASARAA174.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="LAA-SA-RAA-17" border="0" alt="LAA-SA-RAA-17" align="right" src="http://lh4.ggpht.com/-Rc76zapTAB8/Tu_1pBoEXFI/AAAAAAAAILI/Njynz1ZRcH4/LAASARAA17_thumb5.jpg?imgmax=800" width="196" height="255" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;“எதிரே குத்துக்கல் மாதிரி நிக்கறேன். அப்படி என்ன கண் தெரியாமல் பராக்குப் பார்த்துண்டு வரது’ இதென்ன நிஜம்மா பராக்குத்தானா இல்லே Jayvalking, eveteesing-லே புது டெக்னிக்கா?’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“இல்லேம்மா,&amp;#160; நான் இந்தப் பக்கம் வந்து இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு மேலே ஆறது. இங்கே ஒரு கட்டடத்தைத் தேடி வரேன். அதிலே எதிலே வரவா நினைப்பேயில்லே.’’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“உன்னுடைய இருவத்தி அஞ்சு வருஷத்தில் கட்டடம் பறந்துடுமா என்ன? இடிச்சுப் போட்டுப் புதுசு எழுப்பியிருப்பாங்க. ஆனால் காணாமல் போற புதுமையை உன்னிடமிருந்துதான் தெரிஞ்சுக்கணும்.’’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“அது ஸ்கூல். நான் படிச்சி ஸ்கூல்.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“இந்தச் சிரத்தை இந்த நாளில் சத்தே ஆச்சரியந்தான். ஸ்கூல் இங்கேதான் இருக்கு. ஆனால் பெரிசாகி கட்டடம் விரிவடைஞ்சு, முதலதைப் பின்னுக்குத் தள்ளிடுத்து.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“ஓ quite possible.. என்னை இங்கே விட்டுத் துரத்திட்டாங்க, L.K.G.யிலிருந்து.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“ஓ அப்பவே உன் நடத்தை இப்படி இருந்திருந்தால் அதில் ஆச்சரியமில்லே. விளையும் பயிர் முளையிலே.’’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“எனக்குக் கோபம வராதம்மா. நான் இடிச்சது தப்புத்தானே! அங்கே நான் தேடற டீச்சர் இப்போ இருக்காங்களோ ரிடையர் ஆயிருப்பாங்களோ!’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவளுக்குக் கோபம் மறந்து curiosity தூக்கிற்று. “நான் இங்கேதான் வேலை செய்யறேன். யார் அந்த டீச்சர்?’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“டீச்சர் சுமதி.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“நான் தான் டீச்சர் சுமதி.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவன் திக்கெனப் பின்னடைந்தான். “நான் விளையாடல்லேம்மா.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“ஏன் நீ இருவத்தி அஞ்சு வருஷத்துக்கப்புறம் தேடிட்டு வரப்போ, நான் இங்கேயே முப்பது வருஷம் சர்வீஸ் பார்க்கக்கூடாதா? அடுத்த வரஷம் ரிடையர்மெண்ட்” அதன் Problems அதுக்கு மேலே இருக்கு. அதையெல்லாம் உன்கிட்ட சொல்லியாகணுமா?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவன் ஒன்றும் பேசவில்லை. சற்று திடப்பட்டு நின்று அவளை மேலுங்கீழுமாய்ப் பார்த்தான். ஆமாம். இருக்கக்கூடும். உடம்பு சற்று அகன்று தடித்துவிட்டது. கூந்தல் சாம்பல் பூத்து (வேறு எப்படி இருக்க முடியும்?) விட்டதே தவிர அடர்த்தி குறைந்த மாதிரி தெரியவில்லை. முகவார்ப்படம் எல்லாம் அவளாய் இருக்கக்கூடும். அவளேதான். அந்த அடையாளம் நிச்சயமானதும் அவனுள் ஒரு எழுச்சி பொங்குவதை உணர்ந்தான். தான் ஆடிப்போகாமல், பூமியில் பாதங்களை அழுத்தமாய்ப் பதித்துக் கொண்டான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“என்னைத் தெரியல்லே? நான் கண்ணன் அம்மா!’’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“இந்த சர்வீஸ்ஸிலே எத்தனை கண்ணன்கள், கசுமாலங்கள் வந்து போயிருக்கும்! எதைத் தனியா நினைவு வெச்சுக்க முடியறது?’’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“ நான் ஸ்பெஷல் துஷ்டை.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“சர்க்கரை போட்டிருக்குமா. இல்லே ஸ்பெஷல் மசாலா சேர்த்திருக்குமா?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“அப்படித்தான் வெச்சுக்கோங்களேன்” பையன் படு உற்சாகமாகிவிட்டான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“பக்கத்ததுப் பெஞ்சு பசங்களைச் சீண்டிக் கிட்டேயிருப்பேன். பின் பெஞ்சைக்கூட விடமாட்டேன். பின்னலைப் பிடிச்சு இழுக்கறது. அவங்க கொண்டுவந்த ஸ்னாக்ஸைப் பிடுங்கியோ திருடியோ தின்கறது, அவங்க பென்சிலைப் பிடுங்கிக்கிறது. ஜன்னல் வழியா வீசி எறியறது. அவங்க மூஞ்சியை நாய்க்ககுட்டியாட்டம் நக்கறது. கையிலே எச்சில் துப்பறது, சொல்லிண்டே போகலாம்.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“எந்தப் பையன் செய்யாத Mischief புதுசா நீ செஞ்சுட்டே?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“இதே வார்த்தையை அப்படியே பிட்டு வெச்சுதுப் போலத்தான் என் தாத்தா, பிரின்சிபாலிடம் சொன்னார். அவர் சீட்டெழுதி எங்களுக்கு அனுப்பிச்சபோது! அப்போ உங்களுக்குச் சொல்லி அனுப்பிச்சு,&amp;#160; நீங்க வந்து அவர் பக்கத்திலே உக்கார்ந்தீங்க.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“எல்லாம் வானரங்கள்னா, வாலில்லாத வானரங்கள்! இன்னமும் க்ளாஸ் கூட மாத்தல்லே. இன்னமும் L.K.G.லேதான் மாரடிச்சுண்டிருக்கேன். இதுவே போறும்னு&amp;#160; Management தீர்மானிச்சுடுத்து. என் பிழைப்பும் இப்படியே போயிடுத்து. அடுத்த வருஷத்திலிருந்து வேறு பிழைப்பைத் தேடியாகணும். சே! என்ன பிழைப்போ?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவள் அவனை மறந்தாள். பாரதியை மறந்தாள். தன் பொருமலில் எதிரே போவோர் வருவோர் அவளைச் சற்று ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டே போகுமளவுக்கு அவள் சத்தமாகிவிட்டதை உணர முடியவில்லை. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவன் அதைக் கண்டுகொள்ளாதது மாதிரி “என் தாத்தா இது வேறே சொன்னார்: “இவன் ஜாதக ராசிப்படி இவன் அசாதாரணமானவன். ஒண்ணு பெரிய பதவிக்குப் போயிடுவான், இல்லே உலகம் மெச்சும் துறவி ஆயிடுவான், ஸ்வாமி விவேகானந்தர் மாதிரி அதீதம்தான்.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;மொத்தத்தில் உங்கள் பள்ளிக்கூடத்துக்குப் பெருமையைத் தரப்போறான். இவனை நீங்கள் வெளியில் அனுப்பினால் பள்ளிக்கூடத்துக்குத்தான் நஷ்டம். நான் தம்பட்டமடிச்சுக்கலே. எனக்கு Astrology கொஞ்சம் தெரியும். சயன்ஸாகவே ஆராய்ஞ்சிருக்கேன். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பிரின்சிபால் உங்கள் பக்கம் திரும்பி, “சிஸ்டர் என்ன சொல்றீங்க?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;நீங்கள்: “இல்லேங்க இவனைச் சமாளிக்கிறது கஷ்டம். பேரண்ட்ஸ் கம்ப்ளெயின்ட் பண்றது சமாளிக்கமுடியல்லே. I wish him all luck in his next school&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; அங்கே போய் சரியாக மாறலாம். இஙகே நமக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதுதான் இப்போ தெரியுது. We have given him all chances” பிரின்சிபால் உதட்டைப் பிதுக்கி கையை விரித்தார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“நீங்களே கேக்கிறீங்க. நாங்க இப்போ நடக்கறதைக் கவனிக்க வேண்டியிருக்கு. எங்கள் பள்ளிக்கூடம் நடக்கணும். And we have to live you know. I am sorry, next year வாங்க. பார்க்கலாம்.’’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;தாத்தா சிரித்தார். “Next Year நான் இருக்கேனோ இல்லேயோ?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பிரின்சிபால் நாற்காலியை விட்டு எழுந்தார். “நாம டாப்பிக் மார்றோம். இந்த விஷயம் முடிஞ்சுப் போச்சு. டயம் வீணாவுது.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;நீங்களும் எழுந்தீங்க. “வரேன். பாதி கிளாஸ்லே வந்திருக்கேன். அழைச்சீங்களேன்னு வந்தேன்.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“ஆகவே நீங்க ‘Out’ முத்திரை குத்தித்தான் நான் இந்த ஸ்கூலை விட்டு வெளியே வரும்படி ஆயிடுச்சு.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“ஆமாம் லேசாக கண்ணுல பூச்சி பறக்கற மாதிரி நினைப்பு. ஒரு பையன். அவன் மண்டை குடுமி பிய்ச்ச தேங்காய் மாதிரி உருண்டையாய் இருக்கும். Special feature” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“Correct”&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; பையன் சந்தோஷத்தில் கைகொட்டிச் சிரித்தான். “பிரசவக் கோளாறு ஒண்ணும் கிடையாது. இன்ஸ்ட்ரூமென்ட் ஒண்ணும் அப்ளையாவல. வயிற்றைக் கிழிச்சு அப்படியே அலக்கா எடுத்துட்டாங்க. ஸிஸரியன் – குறைமாஸம். அதனால் Hyporactive. இப்பவும் அப்படியே தான் இருக்கு. ஆக்ஸிடென்ட். அது இதுன்னு மண்டையை உடைச்சுக்கலே நசுங்கலே.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“இன்னொரு நல்ல பாயின்ட் ஞாபகம் வருது. உனக்கு இஷ்டப்பட்டால் “நல்லா recite பண்ணுவே. மாரிலே கை கட்டிக்கொண்டு ஸ்லோகம் சொன்னால் கடைசிவரை க்ளியரா, நல்லா சொல்லுவே. அந்தச் சமயத்துலே அழகாயிடுவே.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“ம்ம்………” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவன் முகத்தில் சந்தோசம் குழுமிற்று. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“ஆமாம் கண்ணன். உங்க தாத்தா ஜோஸ்யம் என்னவாச்சு?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“தாத்தா போயிட்டாரு. ஆனா ஜோஸ்யம் பலிச்சிடுச்சி. நான் படிச்சு படிப்படியா உசந்து சிங்கப்பூர், சைனான்னு தேசம் தேசமா சுத்தி இப்போ அமெரிக்காவுல மூணு வருசமா இருக்கேன். ஒரு மாசம் லீவுலே வந்திருக்கேன். என் employers அனுப்பிச்சிருக்காங்க. அங்கே அவங்க ஆபீஸ மானேஜ் பண்றேன். அதை விருத்தி பண்ணும் பொறுப்பு. அவங்க நல்ல பேரிலே இருக்கேன்.’’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவள் முகம் லேசாக வெளிறிற்று. “அப்போ தாத்தா ஜோஸ்யம் பலிச்சுப்போச்சு!” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“எல்லாம் பெரியவா ஆசீர்வாதம். உங்கள் ஆசீர்வாதம். ஆனால் எனக்கு சர்ட்டிபிகேட்டு கொடுத்து அனுப்பிட்டிங்க.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“என்னை என்னப்பா பண்ணச் சொல்றே. அன்னிய நிலைமை அப்படியிருந்தது. இப்பொ சொல்லிக்காட்டி வஞ்சம் தீர்த்தாச்சு இல்ல?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“வஞ்சம் தீர்ப்பதா? அவன் வெளியில் சொல்லவில்லை. அன்றைய சுமதி டீச்சர் – அவள் வழக்கை மன்றாட, அவன் தாத்தா பள்ளிக்கு வந்திருந்தபோது, பிரின்சிபாலுடன் உட்கார்ந்திருந்த அன்றையவளை நினைத்துக் கொண்டிருந்தான். அவளுடைய பழுப்புநிற அழகுடன் மனம் எங்கோ நூலோடி விட்டது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;உ&lt;/strong&gt;டம்பை உருவினாற்போல உடுத்தியிருந்தாள். ஒரு சுருக்கமில்லை. வாட்டசாட்டமான ஆகிருதியில் ரவிக்கை சதைப்பிடிப்பாய் – அவள் வயதை நிர்ணயிக்கும்படி அவள் தோற்றமில்லை. மதிப்பிட அவனுக்கும் தகுதியேது? ஆனால் ஏதோ காந்தம் அவளிடமிருந்தது. முதல்நாள் அவன் கொண்டு வந்திருந்த சாக்லேட், குழந்தைகளுக்குப் பங்கீடானபோது வெட்கத்துடன் அவளிடம் இரண்டு சாக்லேட் நீட்ட, அவள் அவன் வாயைத் திறந்து ஒன்றைப் போட்டு மற்றதைத் தான் போட்டுக் கொண்டான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;‘Ok?” அவன் மறக்கவே மாட்டான். முடியல்லியே”? &lt;/p&gt;  &lt;p align="left"&gt;மேஜையை அடிக்கடிக் கையால் தட்டுவான். பையன்கள் சத்தம் போடாதிருக்க அது நடக்கிற காரியமா? “தங்களுக்குத் தொந்தரவு கூடாதுன்னு பெத்தவங்க இங்க அனுப்பிச்சுடறாங்க. நம்ம மேய்க்க வேண்டியிருக்கு.”&amp;#160; ஸீட் அவுட் ஆனால் அலுத்துக் கொள்வாள். மற்ற நேரங்களில் சிரித்தபடிதான். எல்லாரும் என் குழந்தைகள்தான். இல்லாட்டி என்னால் இத்தனை பெத்துக்கொள்ள முடியுமா? இப்படிச் சொன்னதும் அதன் தமாஷ் உறைத்ததும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டாள். விஷயம் புரியாமலே அவனும் சிரித்தான். என் சுமதி டீச்சர்…. ஏதோ பெருமையாயிருக்கும். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவள் சொல்லும் பாடங்களைக் கேட்டானோ? ஏதோ சத்தம் இந்தக் காதில் புகுந்தது அந்தக் காது வழி… &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அழுந்த வாரிய அவள் கூந்தலில் நெற்றியின் பக்கவாட்டில் இரண்டு பிரிகள் எதிரும் புதிருமாய் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அவைகளைக் கவனித்துக் கொண்டிருப்பான். இப்போது அவை இருக்குதோ. அன்றைய சகவாச ஞாபகத்தில் கண்கள் தேடின. இருப்பதாய்த் தெரியவில்லை. உதிர்ந்து போயிருக்கும் அல்லது இப்போது அழுந்தியிருக்கலாம். என்ன அசட்டுத்தனம்! இன்னுமா குழந்தைத் தனம்?&amp;#160;&amp;#160;&amp;#160; Why not இப்போது நார்மலாகவா இருக்கேன். ஏதோ துக்கம் தொண்டையை அடைத்தது. என் அம்மாவைவிட ஏன் எனக்கு இவளைப் பிடிச்சுப்போச்சு? &lt;/p&gt;  &lt;p align="left"&gt;குழந்தைகள் பாடு நிம்மதி என்கிறோம். பார்க்கப்போனால் அவர்கள் வாழ்க்கை தான் சலனமும் சஞ்சலமும். ஒவ்வொரு உணர்வும் அப்போதுதான் விழித்தெழுந்து அழுத்துகின்றன. அவைகளின் அந்நியம் தாங்க முடியனவாக இல்லை. இவ்வளவு ஸ்பஷ்டமாய் இப்போது விளங்கி என்ன பயன்? அதுவே புரியாத கோபம், பக்கத்துப் பையன்கள்மேல் ஆத்திரம். தன்மேலேயே ஆத்திரம். பசிப்பதில்லை. சாப்பிடத் தோன்றுவதில்லை. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஒரு நாள் கொண்டுவந்திருந்த இட்லியை, வகுப்பின் குப்பைத் தொட்டியில் ஒவ்வொன்றாய் அவன் எறிந்துகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு முதுகில் அறைந்தாள். ‘திக்’கென ஆகிவிட்டது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“அத்தனை குட்டி குட்டியா அவ்வளவு சிரத்தையா அன்போட வார்த்து அனுப்பிச்சிருக்கா. அவ்வளவு திமிரா உனக்கு ராஸ்கல்” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பிறகு அவளுடைய மதிய சாப்பாட்டு வேளையில் தன்னுடைய டிபன் பாக்ஸிலிருந்து ஒரு வாய் அவனுக்கு ஊட்டி, கையிலும் ஒரு கவளம் வைத்தாள். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“அப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா கண்ணு, பசிக்குமில்லே? அம்மா இல்லே.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அந்த ரசஞ்சாதம், தான் கொண்டு வந்திருந்த இட்லிக்கீடாகுமா? அவனுக்குத் தெரியாதா? இருந்தாலும் இன்னொரு பிடி கொடுக்கமாட்டாளா? நான் ஏன் இப்படி ஆயிட்டேன். அப்படித் தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ளக்கூடத் தெரியாத வயசு. ஆனால் துக்கம் தொண்டையை அடைத்தது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவளுடைய மேலுதட்டில் லேசாய் செவ்வரும்பு கட்டியிருந்தது. இப்போது அது இருக்குமோ?&amp;#160;&amp;#160; Damn it, எனக்குப் பைத்யம் பிடிச்சுடுத்தா? இல்லை இன்னும் விடல்லியா? &lt;/p&gt;  &lt;p align="left"&gt;மாலைவேளையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவள் புருஷன் வருவார் (வருவான்). நல்லாத்தான் இருந்தார்(ன்). டைட்பான்ட், டீசர்ட். ஆனால் இல்லை. அதனாலேயே அவனுக்கு அவரைப் பிடிக்கவில்லை. லேசாகிக் கொண்டிருக்கும் மண்டையுச்சியைச் சாமர்த்தியமாய் மறைத்து விரலிடுக்கில் சிகரெட்டை இடுக்கிக்கொண்டு… &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவன் தன் உதடுகளை விரலால் பொத்தி எச்சரித்தும் கேட்பதாயில்லை. ஒருநாள் கண்ணன் எதிரிலேயே அவளுடைய வார்த்தை தடித்தது. “இங்கே உங்களுடைய சிகரெட் துண்டுகளைப் போட்டுவிட்டுப் போனால் என் பேர் கெட்டுவிடும். குழந்தைகள் புழங்குகிற இடத்தில் நல்ல அடையாளம். நியாயமாய் நீங்கள் ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளேயே வரக்கூடாது. நீங்க வந்தாலே என் ஸஹாக்களின் நெத்தியும் முதுகுத்தண்டும் சுருங்குது. என் பிழைப்பைக் கெடுத்தீடாதீங்க.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அப்பவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் சிரிப்பு நல்லாயிருந்தது. கன்னங்கள் இறுகிக் குழியும். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவளுக்கு ஒரு தெற்றுப்பல். ஆனால் அழகு. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;இப்போது அவர் இருக்கிறாரோ? &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பாரதியைக் காட்டி “இவள் யார்?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;‘இவள் என் பெண்?’ சுமதி டீச்சர் மாதிரி இவள் இல்லை: சதைப் பிடிப்பாய் அப்பா ஜாடை. தூக்கல் இருந்தாலும் என் சுமதி டீச்சர் மகள்.’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“அது சரி. உன் சுபிஷத்தைப் பத்தி மொத்தமா சொல்லிட்டே. சந்தோசம். இத்தனை நாள் கழிச்சு என்ன இந்தப் பக்கம்? இருவத்தி மூணு வருசங்கழிச்சு உன் பள்ளிக்கூடத்தைத் தேடிண்டு வரது பெரிசுதான். எங்களுக்குப் பெருமைதான். யார் இவ்வளவு சிரமமெடுத்துக்கறா?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“டீச்சர். நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். உங்களை மறக்கமுடியல்லே. I was in love with you.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“So, you have come to declare your love?” கைகொட்டிச் சிரித்தாள். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“நீங்கள் சிரிக்கிற மாதிரி இல்லை. இருவத்தி மூன்று வருஷங்கள் டீச்சர்.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;சட்டெனத் தெளிந்தாள். “That happens sometimes; that is called puppylove” – ஒரு&amp;#160; disease,&amp;#160; வந்து இருந்துவிட்டுப் போயிரும். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“அது மாதிரி டீச்சருக்கு&amp;#160; Student மேல் நேர்வதில்லையா?” அவன் பரிதாபமாயிருந்தான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“Oh. Yes எங்களுக்குக் குழந்தைகள் மேல் நேர்வது சகஜம். இயற்கையிலேயே எங்களுக்குத் தாய்மை உண்டே! உள்ளத்திலும் உடல் அமைப்பிலும் அப்படித்தானே இருக்கிறோம்!” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“நான் மனதில் அதை வைத்துக் கேட்கவில்லை.’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“புரிகிறது. அப்போ அவள் கிருஷ்ணப்பிரேமி ஆகிவிடுகிறாள். ஹே ராதா கிருஷ்ணா, பரவசமானாள். ஆனால் புத்தகத்தில் படிக்கிறோமே ஒழிய அப்படி நிகழ்வது ரொம்ப அபூர்வம். பையன்கள் வகுப்பு மாறும்போது அல்லது பள்ளியையே விட்டுப் போகும்போது எல்லா முகங்களும் ஒருமுகமாத்தான் தெரியும். முகங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனவே. நாங்கள் கோபியர். எங்களுக்குப் பிருந்தாவனம் ஒன்றுதான் உண்டு. மாறுவதில்லை. நாங்களும் மாறுவதில்லை.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“கலியாணம் ஆகி பள்ளியைவிட்டு, ஊர்விட்டு, நாட்டையே விட்டுப் போனால் எங்கள் கிருஷ்ணனை ஏந்திக்கொண்டு விடுகிறோமே!” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவரவர் சிந்தனையில் ஆழ்ந்தனர். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. தழும்பேறிவிட்டாலும் இப்போது புதிதாய்ச் சூட்டைக் காய்ச்சியிழுத்தாற்போல் நெஞ்சு ‘சுறீல்.’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;அ&lt;/strong&gt;ன்றொரு நாள் வகுப்பில் அவள் அவன் பக்கமாய் வருவதற்கும், அவளைப் பார்க்காமல் அவன் தன்னிடத்திலிருந்து எழுவதற்கும் சரியாக – பென்சிலைத் தேடினானோ ரப்பரைத் தேடினானோ இருவரும் மோதிக் கொண்டனர். அவள் மார்பின் விம்மலில் அவன் முகம் பதிந்தது. மார்த்துணி ரவிக்கை முடிச்சுக்கும் கீழே சரிந்தது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவளுக்குக் கோபம் வரவில்லை. வீறிட்ட சிரிப்பை அடக்கிக்கொண்டு, மேலாக்கையும் இடுப்புச் செருகலையும் சரிப்படுத்திக்கொண்டு, &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“என்ன அப்படித் தட்டுக்கெட்டுப்போற அவசரம்?’ குரல் உயரக்கூட இல்லை. Soft and melodies. அவனுக்குக் கேட்டதோ இல்லையோ? மூர்ச்சையாகிவிட்டான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஜன்மம், ஜீவராசி &lt;/p&gt;  &lt;p align="left"&gt;யாவதுக்கும் பொதுவாய் &lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஆண், பெண் எனும் அடித்தளம் &lt;/p&gt;  &lt;p align="left"&gt;தான் உண்மைநிலை. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;தன் முகம், இனம் &lt;/p&gt;  &lt;p align="left"&gt;இழந்த ஆதிவேட்கை &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவன் பச்சைப் பாலகன் &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவள் முதிர்ந்த மாது &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பகலிலிருந்து இரவா? &lt;/p&gt;  &lt;p align="left"&gt;இரவிலிருந்து.. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;எது முன்? எது பின்? &lt;/p&gt;  &lt;p align="left"&gt;விடியிருட்டின் விழிம்பில் வெள்ளி &lt;/p&gt;  &lt;p align="left"&gt;எதைத்தான் யார் அறிவார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஆனால் &lt;/p&gt;  &lt;p align="left"&gt;Ecstasy &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவனுடையது அது என்று ஒன்று உண்டு என்று &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பாவம் அதையும் அறியான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;திகைப்பூண்டு மிதித்தமாதிரி அவன் வளையவந்தான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவள் எதையும் கண்டுகொள்ளாமலே வளைய வந்தாள். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;Yes, that is as it should be. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;We Forgot because we must. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;Such is the cavalcade of life. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;மு&lt;/strong&gt;தலில் அவன்தான் மீண்டான். குரல் சற்று அடக்கமாய் “சரி. உங்களைத்தான் கட்டிக்க முடியாது. உங்கள் பெண்ணைக் கட்டிக்கலாமில்லையோ?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“என்ன உளறல்?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“இல்லை. சரியாய்த்தான் பேசுகிறேன். கலியாணம் பண்ணிக்கத்தான் அமெரிக்காவிலிருந்து ஒரு மாத லீவில் வந்திருக்கிறேன். அதற்குள் எனக்குப் பெண்பார்த்து என் பெற்றோர்கள் எனக்குக் கலியாணம் பண்ணி எங்கோ அமெரிக்காவுக்குக் குடித்தனம் பண்ண அனுப்பிவிடுவார்கள். எனக்கு இந்தப் பெண் பிடிச்சுப் போச்சுன்னு நான் சொன்னால் அப்பா அம்மா குறுக்கே நிக்கமாட்டா.&amp;#160; அப்படி ஒண்ணும் மீனமேஷம் பாக்கறவாயில்லே. போன இடத்தில் தனியா உழன்று மாட்டின்டு அவா பாஷையிலே கழுநீர் பானையில் கைவிடாமல் இருந்தால் சரி. சம்பந்தம் பேச உடனே வாருங்கள். கன்னாபின்னான்னு கேக்கமாட்டா. மஞ்சள் கயிறிலே மாட்ட ஏன், அதையும் நான் பாத்துக்கறேன். பையன் பெரியவனாயிட்டான். என்னை என்ன பண்ணமுடியும்?’ &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பேச்சும் இந்த முத்தல்லே போறதுனாலே, “அவள் தடுத்தாள்” “நீ ஒண்ணு தெரிஞ்சுக்கணும். இவளுக்கு அப்பா இல்லை’” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“அப்படின்னா அன்னிக்கு அவரைப் பார்த்தேனே” குழம்பினான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“இவளுக்கு அப்பா இல்லை. நான் ஏமாந்து போனேன் கண்ணா. இவள்தான் அவர் தந்த பரிசு.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவன் ஆச்சர்யம்கூடக் காட்டவில்லை. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“ So what! அதை நாமா தெரிவிச்சுக்கணுமா? தண்டோரா போட்டு ஊரை அழைக்கப்போறோமா?&amp;#160; A simple Affire” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“கோவிலில் தெரியாமல் இருக்கப்போறதா?” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;“அட. தெரிந்தால்தான் தெரியட்டுமே.” &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவள் சற்று நேரம் மௌனமாய் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முகம் பிட்டாய் பிசைந்தது. உதடுகள் நடுங்கின. அவன் மேல் சாய்ந்து கட்டிக் கொண்டு பொட்டென உடைந்துபோனாள். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவன், அவளை அணைத்துக்கொண்டான். எத்தனை நாள் பாரமோ? வேடிக்கை பார்ப்பவர் பார்த்துக்கொண்டு போகட்டும். சுமதியைத் தாண்டி அவன் பார்வை பாரதிமேல் தங்கிற்று. பாரதி சுமதியாக மாட்டாள். பரிகாரமாகக் கூட மாட்டாள். சுமதியே அவன் கண்ட சுமதியாகமாட்டாள். அந்த சுமதி அவன் நெஞ்சில் உண்டானவள். அங்கிருந்து நெஞ்சக் கடலில் ஆழ்ந்து அதன் ஆழத்தில் புதைந்து போய்விட்டாள். இனிமேல் வரமாட்டாள். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அழியவும் மாட்டாள்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;*******&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;நன்றி: &lt;/strong&gt;&lt;a href="http://www.natpu.in"&gt;&lt;strong&gt;http://www.natpu.in&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-4663433225916694577?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/4663433225916694577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post_20.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/4663433225916694577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/4663433225916694577'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post_20.html' title='பிம்பம் – லா.ச.ராமாமிருதம்'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/-Rc76zapTAB8/Tu_1pBoEXFI/AAAAAAAAILI/Njynz1ZRcH4/s72-c/LAASARAA17_thumb5.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-9202528870754119937</id><published>2011-12-17T06:58:00.001+05:30</published><updated>2011-12-17T07:08:38.142+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வண்ணநிலவன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வண்ணதாசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருதுகள்'/><title type='text'>சாரல் விருது 2012</title><content type='html'>&lt;div align="center"&gt;&amp;#160;&lt;/div&gt;  &lt;div align="left"&gt;ராபர்ட்-ஆரோக்கியம் நினைவாக இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அளித்துவரும் 2012 ஆம் வருடத்திற்கான &lt;font size="3"&gt;&lt;strong&gt;சாரல்&lt;/strong&gt; &lt;/font&gt;&lt;font size="2"&gt;விருதுகள்&lt;/font&gt; அறிவிக்கப்பட்டுள்ளன. &lt;font size="3"&gt;&lt;strong&gt;வண்ணதாசன், வண்ணநிலவன்&lt;/strong&gt;&lt;/font&gt; இருவருக்கும் விருது அளிக்கப்படுகிறது விழா &lt;strong&gt;2012 ஜனவரி மாதம் 7&lt;/strong&gt; ஆம் தேதி சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சிற்பி வித்யாசங்கர் வடிவமைத்த சிற்பமும் ரூ 50000 மும் அடங்கியது விருது. &lt;/div&gt;  &lt;div align="left"&gt;&amp;#160; &lt;/div&gt;  &lt;div align="center"&gt;&amp;#160;&lt;/div&gt;  &lt;div align="center"&gt;   &lt;table border="4" cellspacing="0" cellpadding="2" width="454" align="center"&gt;&lt;tbody&gt;       &lt;tr&gt;         &lt;td valign="top" width="305"&gt;           &lt;p align="center"&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-eGJu8JZBfH4/TuvwErMSGYI/AAAAAAAAIK0/lYSKutHiqeY/s1600-h/VANNANILAVAN77.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="VANNANILAVAN-7" border="0" alt="VANNANILAVAN-7" src="http://lh5.ggpht.com/-95JU7benlGs/TuvwFdZEb-I/AAAAAAAAIJw/KjaTc1HuBo0/VANNANILAVAN7_thumb9.jpg?imgmax=800" width="216" height="272" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;         &lt;/td&gt;          &lt;td valign="top" width="141"&gt;           &lt;p align="center"&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-V-kSuJ4A9jM/TuvwGoDqZaI/AAAAAAAAIJ0/bF1spA2KOFQ/s1600-h/vannadhasa6.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="vannadhasa" border="0" alt="vannadhasa" src="http://lh6.ggpht.com/-l9fzM8yGmpU/TuvwHnbodeI/AAAAAAAAIKA/Fw98XPfTAz4/vannadhasa_thumb9.jpg?imgmax=800" width="192" height="272" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;         &lt;/td&gt;       &lt;/tr&gt;        &lt;tr&gt;         &lt;td valign="top" width="305"&gt;           &lt;p align="center"&gt;வண்ணநிலவன்&lt;/p&gt;         &lt;/td&gt;          &lt;td valign="top" width="141"&gt;           &lt;p align="center"&gt;வண்ணதாசன்&lt;/p&gt;         &lt;/td&gt;       &lt;/tr&gt;     &lt;/tbody&gt;&lt;/table&gt; &lt;/div&gt;  &lt;p align="center"&gt;&amp;#160;&lt;a href="http://lh4.ggpht.com/-eGJu8JZBfH4/TuvwErMSGYI/AAAAAAAAIK4/NWljK2_C4dw/s1600-h/VANNANILAVAN76.jpg"&gt;&amp;#160;&lt;/a&gt;&lt;a href="http://lh5.ggpht.com/-4HOsxsaN6Qc/TuvwKq57hjI/AAAAAAAAIKM/H1w1-qsWW1U/s1600-h/saral-award-invi-1a%25255B5%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="saral-award-invi-1a" border="0" alt="saral-award-invi-1a" src="http://lh4.ggpht.com/-HgpRAXbGmNI/TuvwL8vl4oI/AAAAAAAAIKU/XRXfqboFZho/saral-award-invi-1a_thumb%25255B3%25255D.jpg?imgmax=800" width="539" height="349" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-PRcM5m_dvC0/TuvwOuccWpI/AAAAAAAAIKc/PWdziBKKeL0/s1600-h/saral-award-invi-4b%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="saral-award-invi-4b" border="0" alt="saral-award-invi-4b" src="http://lh3.ggpht.com/-Vt5Bao-h9ro/TuvwPoCFMgI/AAAAAAAAIKk/LhEXYxtSO_A/saral-award-invi-4b_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="557" height="572" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;ul&gt;   &lt;li&gt;&lt;a href="http://azhiyasudargal.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D"&gt;வண்ணதாசன்&lt;/a&gt;&amp;#160; படைப்புகள் சில&lt;/li&gt;    &lt;li&gt;&lt;a href="http://azhiyasudargal.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D"&gt;வண்ணநிலவன்&lt;/a&gt;&amp;#160; படைப்புகள் சில&lt;/li&gt; &lt;/ul&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-9202528870754119937?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/9202528870754119937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/2011.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/9202528870754119937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/9202528870754119937'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/2011.html' title='சாரல் விருது 2012'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/-95JU7benlGs/TuvwFdZEb-I/AAAAAAAAIJw/KjaTc1HuBo0/s72-c/VANNANILAVAN7_thumb9.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-1123272585596774434</id><published>2011-12-11T00:00:00.000+05:30</published><updated>2011-12-11T00:00:01.825+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாகவி பாரதியார்'/><title type='text'>"என் கணவர்" - செல்லம்மாள் பாரதி</title><content type='html'>&lt;p align="left"&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;font size="3"&gt;&lt;strong&gt;மகாகவி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-3qM1RYZU6eA/TuFueGzqYlI/AAAAAAAAIJI/icCVd8BI5fM/s1600-h/bharathi1a4.gif"&gt;&lt;img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="bharathi1a" border="0" alt="bharathi1a" src="http://lh5.ggpht.com/-BhLOueoa_Zo/TuFufdlWVHI/AAAAAAAAIJQ/zk8r31z5YXY/bharathi1a_thumb2.gif?imgmax=800" width="388" height="433" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;   &lt;p align="left"&gt;திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.&lt;/p&gt; &lt;/blockquote&gt;  &lt;p align="left"&gt;எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எபோதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. &amp;quot;இனி மிஞ்ச விடலாமோ?&amp;quot; என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். &amp;quot;கரும்புத் தோட்டத்திலே&amp;quot; என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-KKmp8oWRl7o/TuFugcv_sdI/AAAAAAAAIJU/DK_CGMlPf_g/s1600-h/images%252520%2525281%252529%25255B3%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="images (1)" border="0" alt="images (1)" src="http://lh3.ggpht.com/-0ihGu-ayszo/TuFuhbp4NYI/AAAAAAAAIJg/v_WMb0eIkbo/images%252520%2525281%252529_thumb%25255B1%25255D.jpg?imgmax=800" width="461" height="362" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;blockquote&gt;   &lt;p align="left"&gt;&lt;em&gt;1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் &amp;quot;என் கணவர்&amp;quot;என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.&lt;/em&gt;&lt;/p&gt; &lt;/blockquote&gt;  &lt;p align="left"&gt;&amp;quot;..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?..&amp;quot;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... &lt;/p&gt;  &lt;p align="left"&gt;விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?&lt;/p&gt;  &lt;p align="left"&gt;வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?&lt;/p&gt;  &lt;p align="left"&gt;கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?&lt;/p&gt;  &lt;p align="left"&gt;கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவர் கவிதை.காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸøரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸøரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;புதுவை&amp;#160; எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறு களுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. &amp;quot;விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!&amp;quot;&amp;quot; என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&amp;#160; &lt;/p&gt;  &lt;blockquote&gt;   &lt;p align="left"&gt;வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்வாழிய&lt;/p&gt;    &lt;p align="left"&gt;பாரத மணித்திரு நாடு&lt;/p&gt; &lt;/blockquote&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;நன்றி: பாரதியார் சரித்திரம்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-1123272585596774434?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/1123272585596774434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post_11.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/1123272585596774434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/1123272585596774434'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post_11.html' title='&amp;quot;என் கணவர்&amp;quot; - செல்லம்மாள் பாரதி'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/-BhLOueoa_Zo/TuFufdlWVHI/AAAAAAAAIJQ/zk8r31z5YXY/s72-c/bharathi1a_thumb2.gif?imgmax=800' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-819417192265072458</id><published>2011-12-08T07:59:00.001+05:30</published><updated>2011-12-08T07:59:16.938+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூமணி'/><title type='text'>பூமணியின் படைப்புலகம்-ஜெயமோகன்</title><content type='html'>&lt;h3 align="left"&gt;&lt;b&gt;பூக்கும் கருவேலம்--பூமணியின் படைப்புலகம்&lt;/b&gt;&lt;/h3&gt;  &lt;h4 align="left"&gt;&lt;b&gt;ஜெயமோகன்&lt;/b&gt;&lt;/h4&gt;  &lt;p align="left"&gt;விளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை எழுத்தாளர் பூமணி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.பூமணி தமிழின் இயல்புவாத[naturalist] இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது 'பிறகு ' ' வெக்கை ' ஆகிய இரு நாவல்களும் ' ரீதி ' &lt;a href="http://lh3.ggpht.com/-4QDJaDJlxSg/TuAg9gNwRyI/AAAAAAAAII4/4Ss19H7HNXQ/s1600-h/pooman%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="pooman" border="0" alt="pooman" align="right" src="http://lh3.ggpht.com/-wYe0UoclpOY/TuAg-QkJsQI/AAAAAAAAII8/7AVfVDapw54/pooman_thumb%25255B5%25255D.jpg?imgmax=800" width="214" height="261" /&gt;&lt;/a&gt; என்ற சிறுகதைதொகுப்பும் முக்கியமானவை என்று கூறலாம். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ , பிரச்சினைகளை எளிமைப்படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப்படைப்புகள் அவை.அவரது நாவல்கள் ஒரு வகையில் இயல்புவாதத்தின் உச்சங்களை தொட்டமையினால் தான் தமிழில் தொடர்ந்து அடுத்தகட்ட எழுத்துக்கள்,----யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் என்று இவற்றை தொகுத்துக் கூறலாம் ---பிறக்க முடிந்தது.&lt;/p&gt;  &lt;h5 align="left"&gt;தமிழ் இயல்புவாதமும் பூமணியும்&lt;/h5&gt;  &lt;p align="left"&gt;தமிழின் முதல் இயல்புவாதப் படைப்பு எது ? இதற்கு பதில் பலவகைப்படலாம் என்றாலும் முக்கியமான ,இலக்கண சுத்தமான ,முன்னோடியான, இயல்புவாதப் படைப்பு ஆர் ஷண்முக சுந்தரத்தின் &lt;strong&gt;நாகம்மாள்&lt;/strong&gt; தான் என்பது வெளிப்படை. இயல்புவாதத்தின் இலக்கணம் என்ன ? துல்லியமான தகவல்கள் ,விமரிசனப்பாங்கற்ற சித்தரிப்பு நடை , முற்றிலும் நம்பகமான [அதாவது செய்திச் சித்தரிப்பு தன்மை கொண்ட ] கதையாடல் என்று சிலவற்றைகூறலாம்.மேற்கே இயல்புவாதம் இந்த அம்சங்களுடன் அப்பட்டமான அழுக்கு மற்றும் கொடுமைச் சித்தரிப்புகள் முதலியவற்றையும் சேர்த்துக் கொண்டது.அதாவது சித்தரிப்பாளனின் குரல் ஒழுக்க நெறிகளையோ அழகியல் நெறிகளையோ கூட கணக்கில் கொள்ளாத அளவுக்கு நேரடியானதாக மாறியது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;எனினும் தமிழில் அப்படி நடக்கவில்லை .அதே சமயம் நாகம்மாள் கதையில் வரும் பேச்சுகள் அந்த காலத்தை வைத்துப் பார்க்கும்போது அப்பட்டமானவையேயாகும்.கொங்கு வட்டார வாழ்க்கையின் அறிக்கையாகவும் ,அப்பட்டமான சித்தரிப்பாகவும் தன்னை பாவனை செய்து கொண்டது நாகம்மாள் [இலக்கியப் படைப்பு எந்நிலையிலும் முன்வைப்பது ஒரு புனைவுப் பாவனையையே ,உண்மையை அல்ல. உண்மை அதை வாசிக்கும் வசகனால் அவன் அந்தரங்கத்தில் உருவாக்கப்படுவது மட்டுமே] ஆகவே அக்கால கட்ட வாசகனுக்கு அது சுவாரசியம் தரவில்லை ,அத்துடன் சற்று அதிர்ச்சியையும் தந்தது .அதை ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக முன்வைத்ததும் ,விமரிசன பூர்வமாக நிறுவியதும் க நா சுப்ரமண்யமே. பிறகு வெங்கட் சாமிநாதன்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;நாகம்மாளுக்கு பிறகு நீல பத்மனாபனின் 'தலைமுறைகள் ' , 'உறவுகள் ' இந்த வகை இலக்கியத்தின் முக்கியமான உதாரணங்கள் ஆகின. பிறகு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ' புத்தம் வீடு ' அதன் பிறகு பூமணியின் வருகை நிகழ்ந்தது. க நா சு வைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து முன்வைத்த உதாரண இலக்கிய வடிவம் இதுவே.பிறகு வெங்கட் சாமிநாதனும் இப்பார்வையையே கொண்டிருந்தார். இரண்டு அம்சங்கள் இதில் கவனத்துக்கு உரியவை.ஒன்று அக்காலத்தில் சோஷலிச யதார்த்தவாதம் அசாதாரண முக்கியத்துவம் பெற்றிருந்தது. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும் ' இதற்கு முன்னோடியாக இருந்தது.[கடைசியில் ரகுநாதனே இந்த அழகியல் வடிவம் பொருத்தமற்றதும் ,செயற்கையாக உண்டு பண்ணப்பட்டதுமான ஒன்று என்று கூற நேர்ந்தது, 1992 ல் .] செ.கணேச லிங்கனை மாபெரும் நாவலாசிரியராக முன்னிறுத்தி கைலாசபதி ,சிவத்தம்பியும் இவ்வடிவத்தை பிரச்சாரம் செய்தனர் .இதன் வெற்றி உச்சமாக ஜெயகாந்தனின் இலக்கிய திக்விஜயம் அமைந்தது.இவ்வடிவம் அடிப்படையில் எழுத்தாளனின் [சமூக சீர்திருத்த ] நோக்கத்தையே தன் மையமாகக் கொண்டிருந்தது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;சோஷலிச யதார்த்தவாதம் என்பது [ ரகுநாதனைப்போலவே எனக்கும் ] இன்று பொருத்தமில்லாத சொல்லாட்சி . ஆகவே இதை விமரிசன யதார்த்தவாதம் என்று சொல்லலாம். இந்த அழகியல் வடிவம் மீது க நா சு மரபுக்கு கடுமையான அவநம்பிக்கை இீருந்தது. ஆசிரியன் குரலை அவர்கள் வடிவத்தில் உட்புகும் புற அம்சமாகவே கண்டனர். படைப்பு என்பது வாசகக் கற்பனையில் உருவாவது என்று நம்பிய அவர்களுக்கு ஆசிரியனின் குரலை மையமாகக் கொண்ட விமரிசன யதார்த்தவாதம் ஒரு வகை திரிபுநிலையாக , கலையில் அரசியலின் அத்துமீறலாகப் பட்டது. அந்நிலையில் இயல்பு வாதத்தின் துல்லியமான மெளனம் அவர்கள் விரும்பி ஏற்கும் அழகியல் வடிவமாக இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;நாகம்மாள் ,தலைமுறைகள் ,பிறகு ஆகிய நூல்கள் தமிழ் அழகியல் [ வடிவவாத ] விமரிசகர்களால் போற்றப்பட்டமைக்கு முக்கியமான காரணம் அவை அவர்களின் தரப்பை விளக்கும் மூன்னுதாரணங்களாக அமைந்தன என்பதே. அழகியல் குறித்த பேச்சு இலக்கியத்தில் ஜனநாயகத்தன்மை உருவாவதற்கோ , எளிய மக்களின் வாழ்க்கை இலக்கியத்தின் கருப்பொருள் ஆவதற்கோ எதிரான ஒன்றல்ல என்று காட்ட இவர்கள் விரும்பினார்கள் .முற்போக்கு என்பது பிரச்சாரம் மட்டுமல்ல என்று சொல்லவும் இவை பயன்பட்டன. மேலும் அன்று பிரபல இதழ்கள் மூலம் பரவலாக ரசிக்கப்பட்ட ஆர்வி ,எல்லார்வி ,சாண்டிலயன்,பி வி ஆர் ரக ' அதி சுவாரசியக் ' கதைகளுக்கு மாற்றாக இக்கதைகளை முன்வைக்க இவ்விமரிசகர்கள் முயன்றனர்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;க நா சு வுக்கும் ,வெங்கட் சாமிநாதனுக்கும் அடிமனதில் இவ்வகை படைப்புகள் மீது தான் உண்மையான ரசனை இருந்ததோ என்று இன்று படுகிறது.குறிப்பாக வெங்கட் சாமிநாதனின் இன்றைய விமரிசனங்களை பார்க்கும்போது. ' பிறகு ' விற்கு பிறகு நம் இயல்புவாத மரபில் பல முகியமான எழுத்துக்கள் உருவாகியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் விமரிசன யதார்த்தம் எழுபதுகளில் முக்கியத்துவம் இழந்த பின்பு வந்த பெரும்பாலான படைப்பாளிகள் இயல்புவாத எழுத்தையே தங்கள் பாணியாகக் கொண்டனர். மேலாண்மை பொன்னுசாமி .கந்தர்வன் போன்றுசில விதிவிலக்குகளே உள்ளன. முதல் தலைமுறையில் பாவண்ணன்[ சிதைவுகள் , பாய்மரக்கப்பல் ] சுப்ர பாரதி மணியன் [மற்றும் சிலர்,சுடுமணல் ,சாயத்திரை ] சி ஆர் ரவீந்திரன்[ ஈரம் கசிந்த நிலம் ] சூரிய காந்தன் [மானாவாரி மனிதர்கள் ] ஆகியவர்களையும் ; அடுத்த தலைமுறையில் பெருமாள் முருகன் [ ஏறு வெயில் ,நிழல் முற்றம், கூளமாதாரி ] இமையம் [ கோவேறு கழுதைகள் ,ஆறுமுகம்] சோ .தருமன் [தூர்வை ]ஸ்ரீதர கணேசன்[ உப்புவயல் , வாங்கல் ,சந்தி] தங்கர் பச்சான் [ஒன்பது ரூபாய் நோட்டு] போன்றவர்களையும் முக்கியமாக சொல்லலாம் .இவை அனைத்துமே வெங்கட் சாமிநாதனின் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளனரென்பது விமரிசன ரெரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது..அவ்வகையில் பார்த்தால் ஆர் . சண்முக சுந்தரம் முதல் பூமணி ஈறாக உள்ள படைப்பாளிகளின் மூலம் இயல்பு வாதத்தை இவ்விமரிசகர்கள் தமிழில் ஆழமாக நட்டுவிட்டார்கள் என்பதைக் காணாலாம்.இன்று வெ சாமிநாதன் கொண்டாடுவது இவ்வெற்றியைத்தான்.&lt;/p&gt;  &lt;h5 align="left"&gt;பூமணியின் கலைப்பார்வை&lt;/h5&gt;  &lt;p align="left"&gt;இவர்களில் பூமணி மேலும் அழுத்தம் பெற்ற /பெற்றாகவேண்டிய படைப்பாளி .நீல பத்மநாபன் உயர் சாதியை சேர்ந்த வாழ்க்கையை அதன் மதிப்பீடுகளை முன்வைத்த நாவலாசிரியர். அவரது படைப்புலகம் படிப்படியான சரிவையே எப்போதும் சித்தரிக்கிறது .பூமணி தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருந்து வந்த, அச்சாதியைப்பற்றி எழுதிய படைப்பாளி [அருந்ததியர் அல்லது சக்கிலியர் ] ஆனால் படைப்புக்கு வெளியே இருந்து பெறப்பட்ட எந்த புரட்சிகர யதார்த்தங்களையும் அவர் முன்வைக்கவில்லை .கூட்டு அரசியல் குரல்களின் எதிரொலியாகவுமில்லை . இது தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் கூட ஒரு ஆச்சரியம்தான் .கன்னட மொழியிலும் மராட்டி மொழியிலும் தலித் இலக்கிய இயக்கம் பிறந்து ஒரு தலைமுறை தாண்டிய பிறகுதான் அப்படைப்பாளிகள் கூட்டு அரசியல்க் குரலுக்கு இலக்கியத்தில் பெரிய இடமில்லை என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். [சமீபத்தில் தான் தயா பவார் ,தேவனூரு மகாதேவ ஆகியோர் அப்படி சொல்லியிருக்கின்றனர் ] மாறாக எழுதத் தொடங்கிய காலத்திலேயே தான் எழுதுவது தன்னால் உருவாக்கப் படும் ஒரு புனைவு யதார்த்தமே என்றும் , அதற்கு படைப்பின் அந்தரங்க தளத்திலேயே மதிப்பு என்றும் உணர்ந்து கொண்ட படைப்பாளி பூமணி. இலக்கியம் ஒருபோதும் அரசியல் செயல்பாடுகளின் நிழலாகமிருக்காது என்று உணர்ந்தவர்.தலமைப் பொறுப்பை எந்நிலையிலும் அரசியல்வா தியிடம் ,அது எத்தனை புரட்சிகர அரசியலாக இருந்தாலும்கூட , தந்துவிட முன்வராதவர்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவரது படைப்புகள் எந்த புறக்குரலையும் பிரதிபலிக்கும் வேலையை செய்யவில்லை. ஆகவே தான் தமிழில் தலித் இலக்கிய மரபு ஒன்றை உருவாக்க முயன்றவர்கள் பூமணி போன்ற ஒரு பெரும்படைப்பாளி முன்னரே இருந்த போது கூட அவரை பொருட்படுத்தவில்லை .அவர்கள் ஒருவேளை அளித்திருக்கக் கூடிய கெளரவங்களை ஏற்க பூமணி முன்வரவுமில்லை.முதலும் முடிவுமாக அவர் தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே முன்வைத்தார் .அதற்கு மேல் விழும் எந்த டையாளமும் தன் படைப்பை குறுக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார். ' 'அழ கிய லுக்குப் பதிலாக அரசியலை ' ' முன்வைக்கும் குரல்கள் எழுந்த காலகட்டத்தில் இலக்கிய அழகியலின் அடிப்படையான வலிமையைக் காட்டும் முன்னுதாரணமாக பூமணி இருந்தார். தமிழில் அந்த ' அரசியல் ' இலக்கியவெற்றி பெறவில்லை ,பூமணியின் முன்னுதாரணம்தான் வென்றது என்பது சமீபகால வரலாறு&lt;/p&gt;  &lt;h5 align="left"&gt;பூமணியின் படைப்புகள்&lt;/h5&gt;  &lt;p align="left"&gt;பூமணியின் படைப்புகளை முன்வைத்து விரிவான விவாதத்துக்கு இங்கு முற்படவில்லை.இக்கட்டுரை அனேகமாக வெளிநாட்டு வாசகர்களை முன்கண்டு எழுதப்படுவது.பூமணியின் படைப்புகளை தமிழின் இயல்புவாத படைப்பின் முன்னுதாரணங்களாகக் கொள்வது முதல்கட்டமென்றால் அவரது தனித்தன்மைகள் மூலம் அவர் அவ்வழகியலின் இலக்கணத்திலிருந்து அவர் விலகும் இடங்களை ஒவ்வொன்றாக அடையாளம்கண்டு அவரை அதிலிருந்து வேறுபடுத்திக் காண்பது அடுத்தகட்டமாகும்.எந்த முதன்மைப்படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட அழகியலடையாளத்துடன் முழுமையாக பொருந்திப் போகமாட்டான் .காரணம் அழகியல் இயக்கங்கள் காலகட்டம் சார்ந்தவை ,படைப்பு நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் காலம் சார்ந்தது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;' பிறகு ' பூமணியின் படைப்புகளில் முதன்மையானது என்பதில் விமர்சகர்களிடையே மாற்றுக் கருத்து இல்லை.அதேபோல படைப்பூக்கம் சற்றும் திரளாமல் போன படைப்பு ' நைவேத்யம் ' என்பதிலும் . அதே சமயம் நைவேத்யம் ஒரு முக்கியமான விஷயத்தை பறைசாற்றுகிறது . படைப்பாளிக்கு சூழல் சித்தரிப்பும் சரி ,சமூகச் சித்தரிப்பும் சரி படைப்பின் புற அம்சங்களே. படைப்பை ' நம்பவைத்தலுக்கும் ' படைப்புக்கு தேவையான படிமங்களை உருவாக்கவும் தான் அது பயன்படுகிறது .கரிசல் காட்டுக் கிராமத்துக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை அக்கரிசல் காட்டுக் கிராமத்தில் படைப்பாளியின் மனம் பெரிதும் கலந்திருப்பதனால் அது அகப்படிமங்களாகும்போது உயிர்ப்பு அதிகம் அவ்வளவுதான் . தனக்கு பழகிப்போன அருந்ததிய சாதி சார்ந்த வாழ்வில் இருந்தும் , கரிசல் நிலத்திலிருந்தும் பூமணி விலகி பிராமண வாழ்வைப்பின்புலமாகக் கொண்டு இந்நாவலை எழுதியது அவரது தன்னம்பிக்கையையும் ,புதிய தடங்களை நோக்கி செல்வதற்கான அடிப்படையான துடிப்பையும் தான் காட்டுகிறது .அத்துடன் அச்சாதி மற்றும் நிலப்பின்னணியை தன் இலக்கிய ஆக்கத்தின் ஆதாரமாக அவர் எண்ணவில்லை என்பதற்கும் அது சான்று.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஆனால் தனக்கு ஆழ்மன அறிமுகம் இல்லாத பிராந்தியத்தில் படைப்பாளியின் மனம் எதையுமே கண்டடையாது என்பதற்குச் சான்றாக அமைந்தது நைவேத்யம் . பூமணிக்கு பின்னால் வந்த படைப்பாளிகள் தங்கள் சாதி ,நிலச் சூழலுடன் தங்களுக்கு இருந்த அடிப்படை உறவை வலியுறுத்தினார்கள் . தாங்கள் எழுதுவது அந்த சமூக , நிலப் பகுதியின் ' அப்பட்டமான ' வாழ்க்கையை என்று நம்பி சொல்லவும் செய்தார்கள்.அந்த நம்பிக்கை இயல்புவாத எழுத்தில் எப்போதும் காணப்படுவது .பூமணிக்கும் இயல்புவாதத்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான்.அவர் மன அளவில் இயல்புவாதத்தை ஏற்றுக் கொண்டவரல்ல .தன் சித்தரிப்புகளை அப்பட்டமாக செய்யும்போதேகூட அவர் அதை ஒரு புனைவு உத்தி என அறிந்துமிருந்தார் .&lt;/p&gt;  &lt;p align="left"&gt;'பிறகு ' நாவலின் அழகிரி தமிழின் மிக முக்கியமான முன்னோடிக் கதாபாத்திரம் .தமிழ் நாவல்களில் ஆண் பெண் வடிவில் அழகிரிப்பகடை இப்போது பலமுறை மறுபிறவி எடுத்துவிட்டார். [இமையத்தின் ஆரோக்கியம் ,தருமனின் மாடத்தி ஈறாக] ' பிறகு ' நாவலின் ஒரு நீட்சியே பெருமாள் முருகனின் கூளமாதாரி [ இவ்விரு நாவல்களை புரிந்துகொள்ள முக்கியமாக உதவக் கூடியது மாற்கு எழுதிய ' அருந்ததியர் வாழும் வரலாறு ' என்ற ஆய்வு நூல் ] சமூகத்தால் இழிந்த நிலையில் கடைப்படியாக கருதப்படும் ஒரு குலத்தில் , சகல அழுக்குகளுக்கும் இருட்டுகளுக்கும் இழிவுகளுக்கும் நடுவே பிறந்து முழு வாழ்க்கையையும் கழிக்கும் அழகிரிப்பகடையில் குடிகொள்ளும் ஆழமான மானுட நேயமும் ,வாழ்க்கை குறித்த புரிதலும் , சமநிலையும் நிதானமும் வாசகனை மிக ஆழமான மறு பரிசீலனைகளுக்கு இட்டுச் செல்கிறது.ஒரு சராசரித்தமிழ் மனம் அழகிரியை 'சான்றோர் ' என்று ஏற்றுக் கொள்ளாது. [சில நற்குணங்களை அது அவரிடம் அடையாளம் கண்டுகொள்ளலாம் ,அது வேறுவிஷயம் ] ஆனால் அழகிரிப்பகடை அச்சமூகமனம் எவற்றை உயர்ந்த விழுமிங்களாகக் காண்கிறதோ அந்த அம்சங்களெல்லாம் நிரம்பிய கதாபாத்திரம். அதே சமயம் அது நா பார்த்தசாரதியின் பாணியில் செதுக்கப்பட்ட ஓர் ' அச்சு இலட்சியவாத ' கதாபாத்திரமல்ல .இங்குதான் பூமணியின் அப்பட்டமான இயல்புவாதம் அவருக்கு கைகொடுக்கிறது. அழகிரிபகடை ' எது மேலான வாழ்க்கையின் இலக்கணம் ' என்ற வினாவை மிக ஆழமாக எழுப்பிவிடுகிறார் .&lt;/p&gt;  &lt;p align="left"&gt;' பிறகு ' ஒரு வரலாற்று நாவலும் கூட. நூறு வருட காலகட்டத்தில் இந்த அருந்ததிய வாழ்க்கையில் மெல்ல மெல்ல ஏற்பட்ட மாறுதல்கள் [அல்லது வேறு ஒரு கோணத்தில் மாறுதலின்மைகள் ] இந்நாவலில் கூறப்படுகின்றன.அழகிரிப் பகடையின் சாதாரண வாழ்க்கையை மிகச் சாதாரணமான நிகழ்ச்சிகள் வழியாக பூமணி சித்தரிக்கிறார் .பலவகையிலும் இதனுடன் ஒப்பிடக்கூடிய நாவலான சினுவா ஆச்சிபி யின் ' சிதைவுகள் ' [Things fall apart ] இதனுடன் ஒப்பிடுகையில் மிகச் சாதாரணாமான ஒரு படைப்பே .காரணம் ஆச்சிபி என்ற [மேற்கத்தியக் கண் கொண்ட] சித்தரிப்பாளர் அக்கதையைச் சொல்வது அந்நாவலில் அடிக்கடி வெளித்தெரிகிறது .குறிப்பாக அந்நாவலில் கதையில் வரும் முக்கியமான கால இடைவெளி ஒரு புனைவுத் தோல்வியே ஆகும். வரலாறு ஒரு கதையாக மாற்றப்படும் விதம் பொம்மலாட்டக் காரனின் விரல்கள் போல அங்கு வெளியே தெரிகிறது.மாறாக 'பிறகு ' காலம் போலவே நகர்வு தெரியாமல் நகர்கிறது.மிகவும் சகஜமாக ,மிகவும் நுட்பமாக ,அதே சமயம் மிகவும் சலிப்பூட்டுவதாகவும் கூட!இந்த முதிர்ச்சியான வரலாற்றுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் முகமாகவே பூமணியின் நடையும் சித்தரிப்பும் மிக மிக நிதானம் மிக்கவையாக , சமநிலை கொண்டவையாக காணப்படுகின்றன.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;'பிறகு 'வை முன்வைத்து இயல்புவாதத்துக்கும் பூமணிக்கும் உள்ள உறவை மேலும் ஆராயலாம். இயல்புவாதத்தின் அப்பட்டமான மானுட யதார்த்தத்தை ' பிறகு ' தவிர்த்துவிடும் இடம் எது ? அழகிரிப் பகடையின் கதை கிட்டத்தட்ட ஒருமூதாதை வரலாறு போலவே உள்ளது.மூதாதை வரலாறுகளில் உள்ள மிகை நவிற்சியும் ,சாராம்சப் படுத்தும் குரலும் தவிர்க்கப் பட்டுள்ளன .அதாவது இயல்புவாத அழகியல் மூலம் முற்றிலும் நம்பகமான சூழலில் நிறுவப்பட்ட மூதாதைக் கதை தான் ' பிறகு ' இந்திய மூதாதைக் கதை ஒன்றில் எதையெல்லாம் நம் மரபு அனுமதிக்காதோ அதையெல்லாம் இக்கதையும் அனுமதிக்கவில்லை --இயல்புவாதமேயானாலும் !ஆக இயல்புவாதத்தின் அடிப்படையான தத்துவத்தை பூமணிீ ஏற்றுக் கொள்ளவில்லை என்று கருதலாம் .மனித வாழ்க்கையும் ,வரலாறும் , மனமும் ஆழத்தில் இருள் நிரம்பியவை என்ற நம்பிக்கை இயல்புவாதத்தின் ஆதாரம்.[ஃப்ராய்டிய உளப்பகுப்புடன் இதற்குள்ள உறவு அடையாளப்படுத்தப் பட்டுள்ளது] அந்த இருளை எந்த பாவனைகளுமில்லாமல் அப்பட்டமாகக் காட்டவே அது முயன்றது. பூமணிீயி ன் இீயல்புவாதம் அப்பக்கமே போகவில்லை. அது இயல்புவாதத்திடமிருந்து பெற்றுக் கொண்டது விமரிசன நோக்கமற்ற சித்தரிப்பும் , சமநிலை கொண்ட வடிவத்தையும் மட்டுமே என்று சொல்லலாம்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;'வெக்கை ' தமிழில் நவீனத்துவப் படைப்புகள் பரபரப்பாக பேசப்பட்ட காலத்தில் வெளிவந்தது . புகழ் பெற்ற நவீனத்துவ நாவல்களுடன் இதற்கு வடிவம் மொழி ஆகிய இரு தளங்களிலும் நெருக்கமான தொடர்பு உண்டு.எதிரியின் கையை வெட்டிவிட்டு ஓடும் சிறுவனாகிய கதாநாயகனின் சித்திரத்துடன் தொடங்குகிறது நாவல் . அவனது ஓட்டத்தை ஒரு குறியீட்டுத்தளத்திற்கு நகர்த்துவதிலும் நவீனத்துவ நாவல்களின் பாதிப்பு அதிகம். ஆனால் இந்நாவலும் அழகிய இயல்புவாத நாவலேயாகும்.சித்தரிப்பில் எந்த இடத்திலும் சமூகவியல் நிலவியல் நம்பகத் தன்மையை இது இழக்கவில்லை.இதன் பாதிப்பு அதன் செய்தியறிக்கைப் பாணிமூலமே நடைபெறுகிறது . இதை ஒரு நவீனத்துவ நாவலாகாது தடுக்கும் அம்சம் இதிலுள்ள இனவரைவியல் கூறுதான்.இது அடையாளம் இல்லாத 'ஒரு மனிதனின் ' கதை அல்ல .மானுடத்தின் உருவகக் கதையுமல்ல. இன இட அடயாளம் காரணமாக இது மெதுவாக வீரகதைகளின் எல்லைக்குள் சென்றுவிடுகிறது. அதே சமயம் இது அத்தகைய கதைகளுக்குரிய மிகை நோக்கிச் செல்லாமல் தன் இயல்புவாத அம்சத்தை நிலை நிறுத்திக் கொண்டுமுள்ளது.இயல்புவாதத்திலிருந்து நவீனத்துவம் நோக்கிய ஒரு மெல்லிய நகர்வே இந்நாவலாகும்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;பூமணியின் சிறுகதைகளும் நவீனத்துவ அழகியல் வடிவ நேர்த்தியை இயல்புவாத தன்மையுடன் அடைய முயல்பவை என்று சொல்லலாம்.ரீதி தொகுப்பில் உள்ள கதைகளை ஒருவர் எளிய நேரடியான வாழ்க்கைத்துளிகளாக எடுத்துக் கொள்ளலாம் அவற்றை பின்னணியான சமூகச் சித்திரத்துடன் பொருத்திப் பார்க்கையில் அவை விரிவடைந்த படியே போவதைக் காணலாம்.ரீதியும் ராஜேந்திர சோழனின் ' எட்டுகதைகள் ' என்ற தொகுப்பும் முறையே இயல்புவாதத்துக்கும் ,விமரிசன யதார்த்தவாதத்துக்கும் உச்ச உதாரணங்களாக அவை வெளிவந்த காலத்தில் கருதப்பட்டன.&lt;/p&gt;  &lt;h5 align="left"&gt;பூமணியின் எல்லைகள்&lt;/h5&gt;  &lt;p align="left"&gt;தமிழில் நவீனத்துவம் புதுமைப்பித்தனுடன் பிறந்துவிட்டது. கச்சிதமான வடிவம் குறித்த நவீனத்துவத்தின் பிரக்ஞை அங்கிருந்து பரவி எல்லா வகை அழகியல் தளங்களிலும் வளர்ந்தது. பொதுவாக இந்திய மொழிகளைப் பார்த்தால் விமரிசன யதார்த்தவாதம் என்ற அழகியல் வடிவம் மிதமிஞ்சிய வடிவப் பிழைகளிடன் ,அ த்துமீறியுருப்பதைக் காணமுடியும். உதாரணமாக மகா ஸ்வேதா தேவி யின் கதைகளையோ தகழி சிவசங்கரப் பிள்ளையின் [செம்மீன் தவிர்த்த] படைப்புகளையோ பார்க்கலாம் .தமிழ் நவீனத்துவத்துடன் உள்ள நெருக்கமான உறவு காரணமாக தமிழ் விமரிசன யதார்த்தவாதப் படைப்புகள் கூட கச்சிதமான வடிவத்தை அடைந்துள்ளன.[விதிவிலக்கு பொன்னீலனின் புதிய தரிசனங்கள். ஆனால் அதுவே அவ்வகை நாவலகளில் முதன்மையானது.காரணம் விமரிசன வாதம் என்பது அக்கண்ணோட்டம் முழுமையாக முன்வைக்கப் படும்போதே மதிப்புக்குரியதாகிறது] .&lt;/p&gt;  &lt;p align="left"&gt;தமிழின் இயல்புவாதப் படைப்புகள் எல்லாமே மிகக் கச்சிதமான வடிவ நேர்த்தியுடன் இருப்பதைக் காணலாம். முதல் உதாரணமான 'நாகம்மாள் ' கூட அப்படிப்பட்ட கச்சிதமான ஒரு படைப்புதான். கலைப் பிறழ்வுகளை இங்கு சுட்டவில்லை.பூமணியின் நாவல்கள் இயல்பாகவே கச்சிதமானவை--நைவேத்யம் கூட.அவற்றின் முக்கியமான பிரச்சினையே அவற்றின் அப்பட்டமான இயல்புவாதத் தன்மைதான்.கனவுகளுக்கோ நெகிழ்வுகளுக்கோ இடமற்ற 'வரண்ட ' இப்பரப்பில் வாழ்க்கையின் ஒரு தளம் மட்டுமே இடம் பெற முடிகிறது.ஆழ்நிலைகளை இது ஐயப்படுகிறது .புறவய யதார்த்தத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறது.உதாரணமாக பூமணி பேசும் மக்கள் கூட்டத்தின் கடவுள்கள் சடங்குகள் ஆகியவை அவர்களின் அகம் வெளிப்படும் முக்கியமான ஊடகங்களாகும்.[பார்க்க அருந்ததியர் வழும் வரலாறு] ஆனால் பூமணி இந்த தளத்தை முற்றிலுமே தவிர்த்து விட்டிருக்கிறார்.அவை வெறும் நிகழ்ச்சிகளாக ,தகவல்களாக மட்டுமே அவருடைய படைப்புலகில் தெரிகின்றன.இதன் மூலம் வெளியே தள்ளப்படும் ஆழத்தில் தான் இம்மக்களின் சமூக ,அந்தரங்க பழக்கவழக்கங்களின், நம்பிக்கைகளின் ஊற்றுக் கண் இருக்க முடியும்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;பலவகையிலும் உளவியல்பூர்வமாக அடக்கப்பட்ட இம்மக்கள் தங்கள் தரப்பை நுட்பமான இடக்கரக்கல்கள் மூலமும் , குறியீடுகள் மூலமும் மறை முகமாக இந்த ஐதீக, புராணிகங்களில் பதிவு செய்துள்னர் .அவ்வம்சங்கள் தவிர்க்கப் பட்டதும் ஓர் முக்கியமான அகத்தளம் விடுபடுகிறது .இவ்வம்சத்தை முழுமைப்படுத்தவே பிற்பாடு வந்த மிகுபுனைவுசார்ந்த , மீமெய்வாத [fantacy &amp;amp;surrealism ] படைப்பாளிகள் முயன்றனர்.ஒரு உதாரணம் கூறலாம் .பூமணியின் 'வெக்கை ' கதையின் அகவய நீட்சியே கோணங்கியின் ' கருப்பன் போன பாதை ' என்ற முக்கியமான கதை. பூமணியின் கதையில் ஆண்டையை வெட்டியபிறகு ஓடும் பகடையின் ரத்தம் பரவிய ஆடைகளும் ,அரிவளும் யதார்த்தமாக சித்தரிக்கப் படுகையில் கோணங்கியின் கதையில் அவை குறியீடுகளாக மாறி , தலைமுறை தலைமுறையாக உலராத ரத்தத்துடன் அக்குடிகளிடம் எஞ்சுகிறது. இக்கதையை தான் பூமணியின் கதையின் தொடர்ச்சியாகவே உருவகிப்பதாக அதை எழுதுவதற்கு முன்பே கோணங்கி என்னிடம் சொல்லியது நினைவுக்கு வருகிறது. அந்த ரத்தம் எளிதில் உலராதது ,அதை கழுவ முடியாது என்று அவர் சொன்னார் .இக்கதை நாட்டார் /வாய்மொழிக் கதைகளின் புராணிக /ஐதீக அம்சத்தை சேர்த்துக் கொண்டு பூமணி தொடாத அடுத்த இடத்தைத் தொடுவது முக்கியமானது.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;பூமணியின் படைப்புலகில் உள்ள அடுத்த இடைவெளி அதன் இயல்புவாதப் பண்பு காரணமாக அது அங்கத அம்சத்தை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டிருக்கிறது என்பதே. அருந்ததியர் போன்ற அடித்தள மக்களின் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையில் அங்கதம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தங்கள் கசப்பை ,கோபத்தை,ஏமாற்றத்தை ,ஆங்காரத்தை எல்லாம் இம்மக்கள் அங்கதமாக மாற்றிக் கொள்கின்றனர். அத்துடன் அவர்களிடம் ஒரு களியாட்ட அம்சம் எப்போதும் உள்ளது,அது ஒரு பழங்குடித்தன்மையும்கூட! மற்ற 'உயர் ' சாதியினரின் எதிர்காலம் பற்றிய பதற்றத்தை ,ஒழுங்குகளை, பாவனைகளை இந்த களியாட்டம் மூலம் அவர்கள் நக்கல் செய்கின்றனர். அவர்கள் வாழ்க்கை ' முற்போக்கு ' இலக்கியத்தால் காட்டப்பட்டது போல ' அழுவாச்சி ' யால் நிரம்பியது அல்ல .அது ஒரு களியாட்டவெளியும் கூட.நோயும் வறுமையும் அதை தகர்ப்பதில்லை. இந்த அம்சம் பூமணியின் படைப்புக்ளில் சுத்தமாக காணப்படுவது இல்லை.இந்த அம்சத்துக்கு மிகச் சிறந்த உதாரணம் சோ. தருமனின் காடுவெட்டி முத்தையா [தூர்வை].அவனது 'இங்கிலீசும் ' அவன் போடும் அவசர அடிமுறை பிரகடனங்களும் எல்லாமே ஒரு வகை சாதிய எதிர்ப்புகளும் கூடத்தான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;பூமணி திரைப்படம் பக்கமாக சென்றது அவரை இலக்கியத்திலிருந்து ஓரம் கட்டியது என்று சொல்லப்படுவது உண்டு. அவரது இலக்கிய பங்களிப்பு முழுமையடைந்து விட்டது ,அவரது இடைவெளிகளை நிரப்பும் அடுத்த கட்ட படைப்பாளிகள் வந்து விட்டார்கள் என்பவர்களும் உண்டு. வெங்கட் சாமிநாதன் மகன் திருமணத்தில் நான் அவரை ஒரு வருடம் முன்பு சந்தித்தபோது தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதாகவும் சீக்கிரமே மீண்டும் தன் இலக்கிய பிரவேசம் அமையுமென்றும் சொன்னார்.புதிய தளங்களுக்கு நகர்ந்துவிட்ட பூமணியை எதிர்பார்க்கிறேன்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;***&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;நன்றி: திண்ணை&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-819417192265072458?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/819417192265072458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/819417192265072458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/819417192265072458'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post_08.html' title='பூமணியின் படைப்புலகம்-ஜெயமோகன்'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/-wYe0UoclpOY/TuAg-QkJsQI/AAAAAAAAII8/7AVfVDapw54/s72-c/pooman_thumb%25255B5%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-6151550141787532408</id><published>2011-12-06T07:45:00.001+05:30</published><updated>2011-12-06T07:47:08.829+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூமணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருதுகள்'/><title type='text'>பூமணி-க்கு விஷ்ணுபுரம் விருது</title><content type='html'>&lt;p align="left"&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;விஷ்ணுபுரம் விருது 2011&lt;/strong&gt;    &lt;br /&gt;தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது&lt;a href="http://lh3.ggpht.com/-m4R8dg9l2HI/Tt16oa-kSwI/AAAAAAAAIIY/sWDMFGuFkWk/s1600-h/poomani_jpg_742621a%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="FR: Poomani" border="0" alt="FR: Poomani" align="right" src="http://lh3.ggpht.com/-0LhPKPxhbNw/Tt16papk4ZI/AAAAAAAAIIc/2_U0flvwE08/poomani_jpg_742621a_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="222" height="278" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;கலந்துகொள்ளும் ஆளுமைகள்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;strong&gt;&lt;/strong&gt;  &lt;p align="left"&gt;   &lt;br /&gt;எழுத்தாளார் ஜெயமோகன்,    &lt;br /&gt;வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்    &lt;br /&gt;எழுத்தாளார் யுவன் சந்திரசேகர்,    &lt;br /&gt;எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன்,    &lt;br /&gt;எழுத்தாளார் நாஞ்சில்நாடன்    &lt;br /&gt;கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,    &lt;br /&gt;இயக்குனர் பாரதிராஜா    &lt;br /&gt;எழுத்தாளர் பூமணி&lt;/p&gt;  &lt;p align="left"&gt;உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்   &lt;br /&gt;அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123    &lt;br /&gt;(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)&lt;a href="http://lh3.ggpht.com/-TlQZui6JxLc/Tt17HgsHIhI/AAAAAAAAIIo/Nh8wSq-_Lyc/s1600-h/vishnupuram-11-Invitaion-design-copy-1024x767%25255B7%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="vishnupuram-11-Invitaion-design-copy-1024x767" border="0" alt="vishnupuram-11-Invitaion-design-copy-1024x767" src="http://lh5.ggpht.com/-ZgJ-UV7EJLA/Tt17IsY5mDI/AAAAAAAAIIw/iozGS61rQBg/vishnupuram-11-Invitaion-design-copy-1024x767_thumb%25255B5%25255D.jpg?imgmax=800" width="644" height="502" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;a href="http://azhiyasudargal.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF" target="_blank"&gt;&lt;strong&gt;பூமணியின் சில சிறுகதைகள்&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-6151550141787532408?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/6151550141787532408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post_06.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/6151550141787532408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/6151550141787532408'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post_06.html' title='பூமணி-க்கு விஷ்ணுபுரம் விருது'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/-0LhPKPxhbNw/Tt16papk4ZI/AAAAAAAAIIc/2_U0flvwE08/s72-c/poomani_jpg_742621a_thumb%25255B2%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-4229206031523473384</id><published>2011-12-05T01:01:00.000+05:30</published><updated>2011-12-05T01:01:00.456+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி. ஜானகிராமன்'/><title type='text'>சிறுகதை எழுதுவது எப்படி?-தி.ஜானகிராமன்</title><content type='html'>&lt;p align="left"&gt;எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு &lt;a href="http://lh4.ggpht.com/-3f-TuN6KEQY/TtuumqRi_6I/AAAAAAAAIII/3cWtn8iEux4/s1600-h/thija4%25255B38%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="thija4" border="0" alt="thija4" align="right" src="http://lh4.ggpht.com/-2JhxLxFwUTM/TtuunaMXloI/AAAAAAAAIIQ/eUGFc3lGsPY/thija4_thumb%25255B40%25255D.jpg?imgmax=800" width="195" height="253" /&gt;&lt;/a&gt; இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது, நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர,வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. ஆனால் நாவலோ, நாடகமோ எழுதும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்குகூட அசல் சிறுகதை ஆசிரியர்கள் இந்த உலகத்தில் இல்லை. இதுதான் வேடிகக்கை. உத்திகளைத் தெரிந்து கொண்டு மட்டும் சிறுகதைகள் எழுதி, பத்திரிகைகளை நிரப்பலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. செக்காவின் உத்திக்கு ஓர் அச்சு தயார் செய்துகொண்டு அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும்தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஓர் உருவம் கிடைக்கும். இதை எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?&lt;/p&gt;  &lt;p align="left"&gt;தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்திபெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும். இன்று உலகப் பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான கதைகள் தனித்தன்மை இல்லாத, அல்லது போலி உணர்ச்சிகள் நிறைந்த ஜடங்கள்தான். ஆனால் பொதுவாகப் பத்திரிகைகள்தான் சிறுகதைக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்குகொண்ட கருவியாக இருந்திருக்கின்றன. செக்காவ், மாப்பஸான், ஹென்ரி ஜேம்ஸ், மாம், மெல்வில், ஸ்டீபன், க்ரேன், ப்ரெட் ஹார்ட்டி முதல் ஜெர்மனி, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் எழுதிய எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் வரை முக்காலே மூனறு வீசம்பேர் பத்திரிகைகளில்தான் எழுதியிருக்கிறார்கள்எழுதுகிறார்கள். எனவே, பொறுப்புள்ள பத்திரிகைகள் நல்ல சிறுகதைகளையும், பொறுப்பில்லாதவை ஜடங்களையும் வளர்க்கின்றன என்று சொல்லிவிட்டு மேலே போவோம்,&lt;/p&gt;  &lt;p align="left"&gt;சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ,நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் “ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;சிறுகதையில் சொல்லக்கூடாத விஷயங்களே இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும். வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனத்தத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது. மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள், நினைவோட்டங்கள், அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன. ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும். பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும். சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;என்னை ஒரு நண்பர் கேட்டார். சிறுகதை, நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று. அவசியமில்லை என்று நான் சொன்னேன். அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை. இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை, புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது. என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது. செக்காவ், மாப்பஸான், போ, மாம், தாகூர், கு.ப.ரா. புதுமைப்பித்தன், லா.ச.ரா, ஸீன் ஓகாஸி, ஜாய்ஸ், ஸ்டீஃபன் க்ரேன், ஹென்றி ஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால், சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம். பூசினாற் போலும் விழலாம். அது விளக்கின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில், உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது, உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை. அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும்தன்மை, எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு. யோசித்துப் பார்த்தால், அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும். தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று, மண்ணுள் பல காலம் உறங்கி, திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது. உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எழுத்து தொழிலாகி, பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மாபஸான் “நெக்லேஸை”யோ, “இரு நண்பர்களை”யோ, செக்காவ் “டார்லிங்”கையோ, “கோரஸ் பாடகி”யையோ, கு.ப.ரா. “நூருன்னிஸா”வையோ, பிச்சமூர்த்தி “பதினெட்டாம் பெருக்கை”யோ, டாகூர் “ஊர் திரும்புதலை”யோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன். ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே, அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் “இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த ஆறு மணி நேரப்பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்றுகேட்காமல், ஆசைப்படாமல், கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது. எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம். அந்தப் பெண் தன் பொறுமையினாலும், பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ! உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)&lt;/p&gt;  &lt;p align="left"&gt;நான் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிடப் போனபோது ஒரு புதுக் கண்டாமணி கல்லாவிற்கருகில் வைத்திருந்தது. ஹோட்டல் முதலாளி அதைக் கோவிலுக்கு விடப்போவதாகச் சொன்னார். ஏதோ செல்லக் குழந்தையைப் பார்ப்பது போல அதை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். எதற்காக மணி வாங்கிவிடுகிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இன்னொரு நாள் லஸ் மூலை ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகையில் ரவாதோசையின் மடிப்பைத் திறந்தபோது பாதி குடித்த பீடி ஒன்று கிடந்தது. ஹோட்டல் முதலாளியிடம் காண்பித்தேன். அவருக்கு வருத்தம், பத்துப் பேருக்கு நடுவில் சொன்னார். அதே லஸ் மூலையில் இன்னொரு ஹோட்டலில் சாம்பாரில் ஒரு சின்ன கருவண்டு கிடைத்தது. நல்ல வேளையாகச் சுண்டை வற்றல் குழம்பு இல்லை. வண்டு அடையாளம் தெரிந்தது. (ஒரு தடவை ரசத்தில் பல்லிகூடக் கிடைத்திருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் எனக்குத் தனி அதிர்ஷ்டம் உண்டு.) சர்வரிடம் சொன்னதும், பீடி தோசை முதலாளி போலல்லாமல், அவர் பயந்து பரபரவென்று காதோடு காதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ராஜோபசாரம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். பல ஆண்டுகள் கழித்து இவையெல்லாம் சேர்ந்து “கண்டாமணி’ என்ற கதையாக உருவாயின. இந்தக் கதைக்கு மையக்கரு, சந்தேகம் அல்லது பயம். ஒரு உணவு விடுதிக்காரர் சாதம் குழம்புகள் பரிமாறிவிட்டு உள்ளே வந்தபோது, குழம்பிற்குள் கரண்டியை விட்டுக் கிளறித் தூக்கிய போது நீளமாகப் பாம்பு குட்டி போன்ற ஒரு ஜந்து கிடப்பதைப் பார்த்தார். கணவனும் மனைவியும் பதறிப்போய் தெய்வத்திடன் அபவாதம் ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார்கள். செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக்கவலை. கண்டாமணி வார்த்துக் கட்டுவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மறுநாள் காலை அநத் ஆள் செத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. அது இங்கே சாப்பிட்டதனால்தானா என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் விடுதிக்காரருக்குத்தன் குழம்புதான் யமன் என்று பயம். சந்தேகமும் பயமும் அவரை ஆட்டுகின்றன. சொன்னபடி கண்டாமணி வார்த்துக் கோயிலில் கட்டிவிடுகிறார். ஆனால் அந்த மணியோசையைக் கேட்கும்போதெல்லாம், தான் செய்து விட்டதாக நினைத்த குற்றம் அவரை அலைக்கழிக்கிறது. கடைசியில் தாங்க முடியாமல் கோயில் நிர்வாகியிடம் சென்று வேறு என்னவோ சாக்குகள் சொல்லி மணியைத் திருப்பிப் பெறப்பார்க்கிறார். சின்னச் சின்னதாக வெள்ளிமணிகள் செய்து வைக்கிறேன் என்று வேண்டுகிறார். கண்டாமணியோ நன்றாக அமைந்துவிட்டது. அதிகாரி அதை எண்ணி, “போய்யா பைத்தியம்” என்கிற மாதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறார். விடுதிக்காரருக்கு அழுத்தி வற்புறத்தவும் பயம். பேசாமல் திரும்பிவிடுகிறார். இந்தக் கதையைச் “சிலிர்ப்பு” மாதிரி பரபரவென்று நான் எழுதவில்லை. அந்தச் சந்தேகமும் பயமும் கதாநாயகர்களாக இருப்பதாலோ என்னவோ மெள்ள மெள்ளத்தான் எழுத முடிந்தது. வேறு தொல்லைகள் குறுக்கிட்டதனாலும் மூன்று நான்கு தடவை உட்கார்ந்து எழுதி முடித்ததாக ஞாபகம்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;இந்த மாதிரி பல கதைகளுக்குச் சொல்லிக்கொண்டு போகலாம். அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோசனமும் இராது. அவரவர்கள் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் “ Choice-less Awareness” என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட, வட்டமிட, அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி. அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது தெரியும்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;font size="3"&gt;******&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;தொகுத்தவர் - மகரம். (1969)&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;நன்றி: சொல்வனம்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-4229206031523473384?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/4229206031523473384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/4229206031523473384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/4229206031523473384'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post.html' title='சிறுகதை எழுதுவது எப்படி?-தி.ஜானகிராமன்'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/-2JhxLxFwUTM/TtuunaMXloI/AAAAAAAAIIQ/eUGFc3lGsPY/s72-c/thija4_thumb%25255B40%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-1537499365613103683</id><published>2011-11-27T00:00:00.000+05:30</published><updated>2011-11-27T07:09:26.292+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமலாதித்த மாமல்லன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><title type='text'>சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்</title><content type='html'>&lt;p align="left"&gt;இரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறித்த பார்வையுடன் படுக்கையிலேயே உட்கார்ந்திருந்தார். காலி டபராசெட் எதிரிலிருந்தது. ஆனால் வேறு யாரோ காபி குடித்ததுபோன்ற பிரமையே அவருக்கு ஏற்பட்டது. உண்மையிலேயே ஒன்றும் புரிபடவில்லை. தலைக்கு நாள் மதியத்திலிருந்து இப்போது படுக்கையில் இப்படி உட்காந்திருப்பது வரை, அனைத்தும் நாட்டுப்புறக்&amp;#160; கட்டுக்கதைகளில் சொல்லப்படுவது போலவே நடந்தேறியிருப்பதாகத் தோன்றியது அவருக்கு. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;XXX&lt;a href="http://lh3.ggpht.com/-HF2nqpAS7C8/TtCvdJq656I/AAAAAAAAIHw/sypn1I2hRqY/s1600-h/vimala2.jpg%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="vimala2.jpg" border="0" alt="vimala2.jpg" align="right" src="http://lh6.ggpht.com/-wNds8yHkVD0/TtCvd6AObEI/AAAAAAAAIH0/EMWznrkcGUA/vimala2.jpg_thumb%25255B6%25255D.jpg?imgmax=800" width="227" height="220" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;முன்தினம் பகல் உணவை முடித்துக்கொண்டு கடைக்கு வந்தார். பையனை சாப்பிட அனுப்பிவைத்து திண்டில் சாய்ந்து கொண்டார். வெளியில் ஊமைவெயில் அடித்துக் கொண்டிருந்தது. வாடிக்கையொன்றும் வரவில்லை. காலையிலிருந்து நடந்த வியாபாரத்தைக் கணக்கு பார்த்தார். இரண்டு பொருட்கள் மீட்கப்பட்டுப் போயிருந்தன. மற்றபடி பெரிய வியாபாரமொன்றும் நடந்திருக்கவில்லை. மாதக் கடைசியை நெருங்க நெருங்கத்தான் சூடுபிடிக்கும். முதல் பத்து தேதிகளில் எல்லார் கையிலும் பணம் புரளும்தானே. செய்ய ஒன்றுமில்லாமல் அசட்டுப் பார்வையுடன் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். வானம் மூடுவதும் திறப்பதுமாக இருந்தது. இதில் பார்க்க என்ன இருக்கிறது? &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அப்போதுதான் அவளைப் பார்த்தார். இருந்த படிக்கே சற்று முகத்தை மட்டும் தூக்கிப் பார்த்தார். எதிர்சாரியில் நின்றபடி அவள் தம் கடையைப் பார்ப்பதைக் கவனித்தார். அவள் தெருவைக் கடந்து படிகளில் ஏறினாள். அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. குட்டைப் பாவாடையும் அதற்குள் செருகப்பட்ட சட்டையும் அணிந்திருந்தாள். இரட்டைப் பின்னல் மடித்து மேற்புறம் ரிப்பனால் கட்டப்பட்டிருந்தது. பள்ளிச் சிறுமிக்கு அடகுக்கடையில்போய் என்ன ஜோலி இருக்கப்போகிறது? மிட்டாய் விற்கிற லாலாகடை எனத் தவறிவந்திருக்கும் என்று நினைத்தார். முகம் மட்டும் உடம்புடன் ஒட்டாமல், பெரிய மனுஷி போல் கம்பீரமாகக் களையுடன் இருந்தது. இப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே அவள் பேசத் தொடங்கினாள். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;இதை எடுத்துக்கிட்டுப் பணம் குடு - மூடியிருந்த வலது கையை நீட்டிப் பேசினாள். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;வயசுப்பையன்கள் மோதிரம் செயின் என்று அடகு வைக்க வருவார்கள். அவர்களிடம் இல்லாத உருட்டெல்லாம் உருட்டுவார். இது உன்னுடையதுதானா? படிக்கிறாயா? வேலை செய்கிறாயா? பெரியவர்களை ஏன் அழைத்து வரவில்லை? என்று ஊர்ப்பட்ட கேள்விகள் கேட்பார். அதே சமயம் வந்தவனையும் போகவிடமாட்டார். அவனைக் கலவரப்படுத்தியே குறைவான பணமாற்றலில் காரியத்தை முடித்துவிடுவார். இவ்வளவு சிறிய பெண்ணிடம் ஏனோ அவரால் ஒன்றுமே பேச முடியவில்லை. சிறுமியின் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அடிக்கடி பார்க்கிற முகம் போல அவ்வளவு சௌஜன்யமாக இருந்தது. எங்கே எப்போது என்கிற கண்ணிகள் இணையவில்லை. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;நான் சீக்கிரம் போகணும். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவருடைய பேரன் நச்சரிப்பதை நினைவுறுத்தியது. ஆனால் சிணுங்கல் குழைவு இவையொன்றுமில்லை. எஜமானியின் அவரசம் போல இருந்தது அது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;நிம்பள் என்னா கொண்டாந்திருக்கான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பூ. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;என்னாது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பூ. புஷ்பம். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவருக்கு தலைகால் புரியவில்லை. வேகமாக குறுக்கு மறுக்காய் தலையசைத்து மறுத்தார். ’- அதெல்லாம் நம்பள் வாங்கறானில்லே’ - நியாயமாய் அவள் சொன்னதைக் கேட்டு சிரித்திருக்க வேண்டும். ஆனால் அதொன்றும் செய்யமுடியவில்லை அவரால். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;தேர்ந்த ஜாலவித்தை நிபுணனைப் போல மூடியிருந்த வலது கையை விரல்கள் மெல்லப் பிரிய விரித்தாள். அவர் முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே இதைச் செய்தாள். இதழ்களை நமுட்டிச் சிரிப்பது போலிருந்தது. அசட்டுத் தனமாய் ஆச்சரியப்படப் போகிறாய் என்று சொல்லாமல் சொன்னது அவள் செய்கை. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;நிஜமாகவே அசந்துபோனார். வேறு வழி. நட்ட நடுப்பகலில் பேத்தி போல ஒரு சிறுமி விலைக்கு வாங்கிக்கொள் என்று வந்து நிற்கிறாள். அதற்கு மேல் கையை விரித்தால் தங்க ரோஜா. ரோஜாப்பூ சொக்கத் தங்கத்தில். சந்தேகத்திற்கு இடமேயில்லை. அறுபத்து மூன்று வயதிலும் கண்ணாடியில்லாமல் பார்க்கிற கண் தவறாது. பிரமிப்பெல்லாம் சொற்ப நேரம்தான். தரைக்கு நடை போட்டது மனம். கபாலத்தில் உமிழ் நீர் சுரப்பது கண்ணின் மணியில் பளபளத்தது. கையைப் படக்கென்று மூடிக் கொண்டாள். கண்ணாடிப் பெட்டியின் மீதிருந்தும் கையை எடுத்துக் கொண்டவளாய் பின்னால் நகர்ந்தாள். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;நிம்பள் எவ்ளோ கேக்றான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஆயிரம். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;என்னாது! &lt;/p&gt;  &lt;p align="left"&gt;ஆ யி ர ம். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவ்ளோ அல்லாம் நம்பள்கு கட்டாது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;கட்டாதுனாப் போ, வேற கடைக்குப் போறேன். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;நம்பள் அதைத் தேச்சி பாக்றான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பூவை நான்தான் பிடிச்சிப்பேன். கல்லை எடுத்து நீ ஒரசிக்கணும். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;இரண்டு மூன்று முறை உரசினார். முந்திய அபிப்ராயத்தை அது கொஞ்சமும் மாற்றிவிடவில்லை. எனினும் இன்னொருமுறை சோதித்துவிடலாம் என்றது உள்மனம். ஒழுங்காய்க் கழுவிக் கொள்ளக்கூடத் தெரியாத குழந்தையிடம் போய் பதினெட்டு யோசனையா? வலிய வரும் அதிர்ஷ்டத்தை நழுவ விடாதேயென அதட்டியது மூளை. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;கை மாறியது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;குள்ளமேசையின் கீழ்டிராயரைத் திறந்து உள்ளே வைத்தார். பணத்தை இரண்டாம் முறையாக அவள் எண்ணிக் கொண்டு இருந்தாள். திரும்ப ஒரு தடவை திறந்து பார்த்து மூடினார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;யார் முகத்தில் விழித்தோம், இப்படியொரு அதிர்ஷ்டம் தேடிவந்து பிடிபிடியெனக் கொட்டிவிட்டுப் போக என்று நினைத்தார். சந்தோஷம் நெஞ்சையடைத்து நெட்டியது. சந்தோஷப்படுவதில் என்ன பிழை? துளியும் வஞ்சகமில்லை. சரியாகச் சொன்னால் யாரும் யாரையும் ஏமாற்றக் கூட இல்லை. தெரு வழியே போய்க் கொண்டிருக்கிறோம். காலில் ஏதோ தட்டுகிறது. குனிந்து பார்த்தால் ரூபாய்க் கட்டு. எடுத்துக் கொள்கிறோம். நாமா தேடிப் போனோம். தானே வழியில் வந்தது. வேறு என்ன செய்ய? ஆள் யாரெனத் தெரிந்தால் கொடுத்துவிடப் போகிறோம். ஆனால் அதென்ன அவ்வளவு சுலபமா? பணத்தைப் பார்த்ததும் தரையெல்லாம் சொந்தக்காரர்கள் முளைக்கிற காலமிது. எல்லோரும் தனதென்றுதான் சொல்லுவான். தொலைத்தவன் நிச்சயம் இவர்களில் ஒருத்தனில்லை. தெய்வம் தேடிவந்து கொடுத்த பணத்தை மறுக்க நமக்கென்ன உரிமை? &lt;/p&gt;  &lt;p align="left"&gt;நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருந்ததில் கால்கள் மரத்துப் போயிருந்தன. அந்தச் சிறுமியிடம் முகவரி வாங்கவில்லை என்பது நினைவிற்கு வந்தது. சுதாரித்து கடைவாசலுக்குப் போய் கதவைப் பிடித்தபடி தெருவின் இருபுறமும் பார்வையை ஓட்டினார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;வழக்கம்போல் இருந்தது தெரு. மாவுமெஷின் இரைச்சல். தெருக்கோயில் மரத்தடியில் நிழல்வாங்கும் ரிக்ஷாக்கள். சாராயத் தள்ளாட்டம். கிழங்கு விற்கும் கிழவிகள். சாக்கடையில் கால்வைத்து கோலியடிக்கும் சிறுவர்கள். குந்தியிருந்து நடக்கின்ற சூதாட்டம். கைஸ்டாண்டில் சலவைத்துணி சுமக்கும் கடைப்பையன். காலகட்டி மலம் கழித்து நகரும் எருமைகள். போஸ்டர் தின்னும் பசுமாட்டின் மூத்திரத்தை பஞ்சபாத்திரத்தில் பிடிக்கும் திவசப் புரோகிதர். ரோகம் பீடித்த நகரோரத் தெரு வழக்கம் போல் இருந்தது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;சிறுமியைக் காணவில்லை. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;முகவரி இல்லாவிட்டால் என்ன. அதுவும் நல்லதற்குத்தான். யாரையேனும் அழைத்து வந்தாலும் ஒரு ஆதாரமுமில்லை. கனத்தை வைத்துப் பார்த்தால் எட்டுப பத்துப் பவுன் தேறும். ஏழெட்டு கிராமம் செம்பைக் கழித்தாலும் இன்றைய தினத்திற்கு கிராம் 180 ரூபாய். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;உள்ளே வாங்கோம்மா. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;கிழவியும் பெண்ணுமாக உள்ளே வந்தனர். அவர் தம்மிடத்தில் வந்து உட்கார்ந்தார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;உக்காருங்கோம்மா. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;உட்கார்ந்தபடி, இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையை விரித்து காகிதப் பொட்டலத்தை எடுத்தாள். இரண்டு கம்மல், மூக்குத்தி முதலியவற்றைக் கண்ணாடிப் பெட்டியின் மேல் வைத்தாள். அவற்றைப் பரிசோதிக்கத் தொடங்கினார். விசும்பும் சப்தம் கேட்டது. தலையை நிமிர்த்தாமலே பார்த்தார். கும்குமப்பொட்டு தவிர ஆபரணமற்றிருந்த அந்தப் பெண் மூக்கும் கன்னமும் துடிக்க அழுது கொண்டிருந்தாள். கிழவி தேற்றிக்கொண்டு இருந்தாள். தராசில் நிறுத்துப் பார்த்தார். உரசிப் பார்த்து உறுதி செய்துகொண்ட பின் கிழவியை நோக்கிக் கேட்டார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;நிம்பள் எவ்ளோ கேக்றான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அறநூறு ரூபா வோணும் சேட்டு. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அல்லாம் டோட்டல் பாஞ்ச் பவுன் ஏளு கிராம். கல்லு செம்பெல்லாம் போனாச்சா பாஞ்ச் பவுன்க்கும் கொறையறான். நம்பள் நானூறு தரான் - என்றபடி நான்கு விரல்களைக் காட்டினார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;சேட்டு சேட்டு அப்பிடி சொன்னீனா எப்பிடி சேட்டு. மருமவப்புள்ளய ஆஸ்பத்திரில சேத்துக்குது. டாக்டரு செலவு மருந்து செலவெல்லாம் இருக்குது சேட்டு. கம்பெனிலயும் சம்பளமில்லாத லீவுதான் குடுத்துருக்கான். வூடும் நடக்கோணும். பாத்துக்குடு சேட்டு. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;நம்பள் என்னாம்மா செய்றான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவதினுட்டுல்ல வந்துருக்கோம். பாத்துக் குடு சேட்டு. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;நம்பள் நானூறு தரேன் சொல்றான். உதர் கடையிலே அதும் தரானில்லே இதுகு. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;இல்ல சேட்டு பாத்துக் குட்தீன்னா உம் புள்ளகுட்டியில்லாம் நல்லாருக்கும் சேட்டு. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;நிம்பள் ஒன்னு செய்ங்கோமா. கம்பல் அடகு வெக்றான். மூக்தி விக்றான். நம்பள் டோட்டல் ஐநூறு தரான். நிம்பள் இஸ்டம் செய்றான். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பையன் வந்தான். ரசீது போடச் சொல்லி, அவர்களை ஒரு வழியாக அனுப்பி வைத்தார். விளக்கு வைக்கிற நேரமாகிவிட்டது. நெகிழ்ந்திருந்த கச்சத்தை சரிபண்ணிக் கொண்டு இரவு உணவிற்காக மாடிக்குப் போனார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;கொஞ்சம் ஓய்வெடுத்த பின் கடைக்கு வந்தார். நன்றாக இருட்டி விளக்குகள் போடப்பட்டிருந்தன. அவை இருளை அதிகப்படுத்திக் காட்டின. மகனை அனுப்பிவிட்டுத் திண்டில் சாய்ந்தார். சாய்ந்தபடிக்கே குள்ள மேஜையின் கீழ் டிராயரைத் திறந்தார். ஒரு அழகான ரோஜா மலர் இருந்தது. பரபரப்பாய் மேல் டிராயரை இழுத்தார். சில்லறைக் கிண்ணங்களும் அவற்றினடியில் நோட்டுகளும் இருந்தன. மேஜைக்கடியில் கையைச் செலுத்தி அபத்தமாய் துழாவினார். பதைப்புடன் அங்கிருந்த இரும்புப் பெட்டியைத் திறந்தார். லாண்டரிக் கடைப் பையன் நூறு ரூபாய் தாளை நீட்டி சில்லறை கேட்டான். இரும்புப் பெட்டியை மூடிக் கொண்டு ’நை நை ஜாவ்’ என்று எரிந்து விழுந்தார். அவன் போனபின் திறந்து பார்த்தார். இருக்கிற பொருட்கள் பத்திரமாய் இருந்தன. அதைப் பூட்டிவிட்டு கீழ்டிராயரைத் திறந்தார். துல்லியமாக அந்த ரோஜாமலர் வீற்றிருந்தது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;தரையில் கையூன்றி எழுந்து கடைவாசலுக்குப் போனார். மாடியைப் பார்த்து மகனுக்குக் குரல் கொடுத்தார். வந்தவனிடம் விஷயத்தைக் கூறினார். சாவியை அவரே எடுத்துப் போய்விட்டதாகவும், ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவரை தொந்தரவு செய்ய வேண்டாமென்று, கைப்பணத்திலேயே தான் வியாபாரம் செய்ததாகவும் மகன் கூறினான். திரும்பவும் குனிந்து திறந்து பார்த்தார். இன்னும் நூறாயிரம் முறை மூடித் திறந்தாலும் நான் நான்தான் என்றது ரோஜாமலர். பையனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, இடுப்பு பெல்ட்டை இறுக்கியபடி தெருவில் இறங்கினார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;சாதாரணமாக தெருவில் அதிகம் நடமாடுபவரல்ல அவர். அப்படியே நடக்க நேர்கையில், பஞ்சகச்சத்தைக் கெண்டைக் காலுக்கு உயர்த்திக் கொண்டு நிதானமாகவும், மாட்டு மனிதச் சாணங்களை மிதித்து விடாமல் ஜாக்கிரதையாகவும் நடப்பார். அதையெல்லாம் கவனிக்கிற நிலையில் அப்போது இல்லை. அவருடைய மனவுலகில் ஒரு சிறுமி. அவள் கையில் ஒரு தங்க மலர். அதை ஆவலுடன் கையில் எடுக்கிறார். மறுகணம் அது வெறும் மலராகி கையைத் தீயாய்ச் சுடுகிறது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;தெருக்கள் விளக்கின்றி இருண்டிருந்தன. ஜன்னல்கள் அற்ப ஒளியைக் கசியவிட்டுக் கொண்டிருந்தன. அவற்றில் உட்கார்ந்து பல்வேறு ஸ்தாயிகளில் பாடம் படித்துக் கொண்டிருந்த சிறுசுகள் மீதே அவர் பார்வை பட்டு நகர்ந்தபடி இருந்தது. கண்களை இடுக்கிய வண்ணம் தெருக்களைச் சுற்றி வந்தார். புகையும் வயிற்றைக் குமட்டும் நாற்றமும் வரத் தொடங்கியது. கூவம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இந்த இடங்களில் இருக்க நியாயமில்லை என்று ஒரு தெருவில் திரும்பினார். அதுபோய் ஒரு வீட்டில் முட்டிக் கொண்டது. வந்த வழியே திரும்பி வேறு தெரு பார்க்க நடந்தார். பார்வையில் படும் சிறு பெண்களெல்லாம் அசப்பில் மலர் கொண்டு வந்த சிறுமியைப் போலவே தோன்றினார். கடைக்குத் திரும்ப இருந்தவர் எதற்கும் கோயிலை எட்டிப் பார்த்துவிடலாம் என்று குளத்திற்காய் திரும்பினார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;கோபுரத்து மெர்குரி விளக்கு, இருண்ட வானத்தின் பின்னணியில் ஒற்றைக்கல் மூக்குத்தியென சுடர் விட்டது. நீரற்ற குளம் அமைதி கொண்டிருந்தது. மைய மண்டபத்தில் ஒற்றை நெருப்புப் புள்ளி மங்கி ஒளிர்ந்து ஆளிருப்பதைக் காட்டியது. படிக்கட்டு அனுமார் கோயில் விளக்கு, அணைந்தால் தேவலாம் என்று முணுக்முணுக்கென எரிந்தவண்ணம் இருந்தது. ஏற்கெனவே சில சமயம் இந்தப் பக்கம் நடந்திருந்தாலும், கடக்கவியலா நீளம் கொண்டிருப்பதான பிரமிப்பை அளித்தது குளத்தங்கரை. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;பிரதான வாயிலுக்கெதிரில் யானை நின்றிருந்தது. அதைச் சுற்றி ஒரே மொட்டைப் பட்டாளம். யானையிடம் என்ன இருக்கிறதென்று எல்லோரும் விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். போதாதென்று வெளியூரிலிருந்து வேறு கூட்டம். அவருக்கு எரிச்சலாக வந்தது. கும்பலைச் சுற்றிக் கொண்டு உள்ளே சென்றார். ஒவ்வொரு சந்நிதியாய் நகர்ந்தார். பெரும்பாலும் குழந்தைகளே இல்லை. ஏகமாக அலைந்தததில் கால்கள் விண்ணென்று தெரித்தன. பிரசாதக் கடையருகிலிருந்த படிக்கட்டில் போய் உட்கார்ந்தார். ஒரு மொட்டைக் குடும்பம் கசக்மொசக்கென்று தின்றுகொண்டிருந்தது. தரையெங்கும் இலைகளும் சோற்றுப்பருக்கைகளும் இறைந்து கிடந்தன. சந்நிதிகளை விடவும் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாயிருந்தது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;என்ன சேட்டுவாள் அபூர்வமா இந்தப்பக்கம். என்ன விசேஷம். மைசூர் பாக், தேங்குழல் இருக்கு. என்ன சாப்பட்ரேள் - வியர்வையை சுண்டிவிட்டு, அசுரகதியில் பொட்டலம் கட்டியபடி பேச்சுக் கொடுத்தார் மடப்பள்ளிக்காரர். சுரத்தின்றி ஏதோ சில வார்த்தை பேசிவிட்டுக் கிளம்பினார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவருக்குப் படபடப்பாக வந்தது. என்ன அநியாயம். பெரிய பகல் கொள்ளையாக அல்லவா இருக்கிறது. இதைப் போலிசில் போய் புகார் பண்ண முடியுமா? இல்லை யாரிடமாவது சொல்லி அழத்தான் முடியுமா? எவன் நம்புவான். நிஜமாகத்தான். கனவில்லை. கதையில்லை. ஒரு சின்னப் பெண். ஸ்கூல் போகிற பெண். பாவாடை சட்டை ரெட்டை ஜடை. என்னை ஏமாற்றி விட்டது. கொடுக்கும்போது தங்கம்தான். சந்தேகமேயில்லை. நன்றாக உரசிப் பார்த்துதான் வாங்கினேன். வேறு யாரும் எடுத்து ஏமாற்றியிருக்கலாம் என்கிற பேச்சுக்கும் இடமில்லை. சாவி என்னிடம்தான் இருந்தது. கண்கட்டி வித்தையோ, என்ன மாயமோ. அந்தச் சிறுமியே நிஜமோ பொய்யோ. ஆனால் ஆயிரம் ரூபாய் இருப்பில் குறைவது உண்மை. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அந்தச் சிறுமியின் பிராயத்திலேயே மதராஸ் வந்தாயிற்று. தாத்தாவின் அருகிலிருந்து பார்த்துப் பார்த்துக் கற்றுக்கொண்ட தொழில். வேடிக்கை போல் விளையாட்டைப் போல் கரைந்து கற்றுக் கொண்ட தொழில். ஆரம்ப நாட்களில்கூட இப்படியொன்று நிகழ்ந்ததில்லை. தாத்தா ரொம்ப உற்சாகப்படுத்துவார். பேரனின் சூட்டிகையில் ஏகப் பெருமை. அப்பாதான் சிறிய தவறுக்கும் பயங்கரமாகக் கத்துவார். பெட்டியை பூட்டிய பின்னும், சாவி அதிலேயே தொங்கிக் கொண்டிருந்தால் போயிற்று. நிறைய தடவை விரல் முட்டுகளில் கடைச் சாவியாலேயே அடித்திருக்கிறார். அப்பா அடிக்கடி சொல்லுவார். முகத்தைப் பார்த்ததும் சொல்ல வேண்டும். அவன்தான் தேர்ந்த வியாபாரி. இது எப்படி. திரும்ப வந்து மீட்குமா? இல்லை, இப்போதிருந்தே இது நம்முடையது தானா என்று முடிவு செய்யத் தெரிய வேண்டும். குடிகாரன் சூதாடி போன்றவர் வைக்கிற பொருள் திரும்ப அவன் கைக்குப் போகப் போவதில்லை. அப்படியான ஆட்களிடம் அடிபிடி பேரம் பேசக்கூடாது. இவ்வளவு தான் என்று கறாராக ரெண்டு முறை சொன்னாலே போதும். அவனுக்கு வேண்டியது பணம்; அதுவும் உடனே. அவர்களை சீக்கிரம் முடித்து அனுப்ப வேண்டும். தாமதப்படுத்தினால் வேறு கடை பார்க்கப் போய்விடுவான். இப்படி இப்படியாக தாத்தாவின் ஞானம் அப்பாவின் அறிவு மற்றும் தாமே சுயமாகக் கண்டுகொண்டு அமல்படுத்திவரும் சூட்சுமங்கள் என்று எதற்கும் ஓர் அர்த்தமின்றிப் போய்விட்டது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;அவருக்குக் குளிர்வது போல் இருந்தது. ஒற்றைத் தெருவிளக்கில் பனியிறங்குவது துல்லியமாகத் தெரிந்தது. தேரடியில் பெரும்பாலான கடைகளை அடைத்துக் கொண்டிருந்தனர். மீதப்பட்ட பழங்கள், அழுகல் எனத் தரம் பிரித்து ஜவ்வுத்தாள்களால் தள்ளுவண்டிகளை மூடிக் கொண்டிருந்தனர். மணி பத்துக்கும் மேல் ஆகிவிட்டிருக்கும் போல் தோன்றியது. அநேகமாக அந்தப் பகுதி முழுக்க அலைந்தாயிற்று. இனிப் பயனில்லை. அசதியும் சோர்வும் அந்தரத்திலிருந்து தோன்றியவை போல அவர் மீது திடீரெனக் கவிந்தன. சிரமமாக இருந்தாலும் சற்று வேகமெடுத்து நடந்தார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;XXX&lt;/p&gt;  &lt;p align="left"&gt;வேலைக்காரச் சிறுவன் காபி டபராவை எடுததுக் கொண்டு போனான். எண்ணக்கோர்வை அறுபட வெளியில் பார்த்தார். வெயில் சூடேறத் தொடங்குவதை வீசிய காற்றின் வெம்மையிலிருந்து உணர முடிந்தது. எது எப்படியானாலும் கடை திறந்தாக வேண்டும். நாளை வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை. ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. சோர்வாயிருந்தாலும் அன்றைய தினத்தைத் தொடங்க ஆயத்தமானார். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;கடையைத் திறந்து வைத்திருந்தான் மகன். அவனுடைய பொறுப்புணர்ச்சியை உள்ளூர பாராட்டிக் கொண்டார். எனினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், காலை ஆகாரம் உண்டானா எனக் கேட்டு அவனை அனுப்பி வைத்தார். திண்டில் சாய்ந்தபடியே இடுப்புச் சாவியை எடுத்தவர் ஒருகணம் நிதானித்தார். சுயரூபத்தை அடைந்திருக்கலாகாதா என்கிற நப்பாசை அவரைப் பீடித்தது. கழுத்தை ஒடித்து திரும்பி அண்ணாந்து தலைக்கு மேல் நிர்வாணமாய் நின்று கொண்டிருந்த மகாவீரரைப் பார்த்து மனதிற்குள் பிரார்த்தித்தபடி கீழ் டிராயரைத் திறந்தார். அப்போதுதான் கொய்யப்பட்டது போல் ரோஜா மலர் நிர்மலமாய் காட்சியளித்தது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;இரவு தூக்கமின்மையால் கண்கள் எரிந்தன. உடல் வெம்மையடைந்து தலை கனத்தது. மகன் சீக்கிரம் வந்தால் தேவலாமென்று இருந்தது. படுத்துக் கொள்ள வேண்டும்போல் அசதி அவர் உடலையும் மனதையும் வியாபித்தது. அவருடைய கடைசிப் பேரன் கைகளால் படிகளைப் பிடித்து ஏறி கடைக்குள் வந்தான். வேறு சமயமாயிருந்தால் குழந்தையைத் தூக்கி மார்பிலணைத்துக் கொஞ்சியிருப்பார். யோசனையில் அவனையே வெறித்தபடி இருந்தார். குழந்தை குள்ள மேசையில் கையூன்றி ஏறினான். மூடப்படாதிருந்த கீழ் டிராயரில் மலரைப் பார்த்ததும் குதூகலமாய் மழலையில் கூவிக் கொண்டு அதையெடுக்கக் கையை நீட்டினான். எரிச்சலுடன் அவன் கையைத் தட்டிவிட்டு மேலே போகும்படி விரட்டினார். தாங்கவியலாத ஆற்றாமையுடன் மலரை எடுத்துத் தெருவில் வீசினார். அது சாக்கடையோரத்தில் போய் விழுந்தது. &lt;/p&gt;  &lt;p align="left"&gt;கனத்த பேரேட்டைத் தூக்கி வைத்துக் கொண்டு வேலையில் மூழ்கினார் அவர். &lt;/p&gt;  &lt;p align="left"&gt;*******&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;மீட்சி - செப்டம்பர் 1984&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;&lt;strong&gt;&lt;a href="https://www.nhm.in/shop/100-00-0000-158-3.html" target="_blank"&gt;&lt;img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="vimalathi" border="0" alt="vimalathi" src="http://lh4.ggpht.com/-gcESnX0znwk/TtCvenIlDdI/AAAAAAAAIH8/YDtBLmLALFM/vimalathi%25255B4%25255D.jpg?imgmax=800" width="187" height="291" /&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="left"&gt;&lt;strong&gt;விமலாதித்த மாமல்லன் கதைகள் (&lt;strong&gt;உயிர்மை பதிப்பகம்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;வெளியீடு)&amp;#160; இணையத்தில் வாங்க இங்கே செல்லவும்:&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; &lt;/strong&gt;&lt;a href="http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=328" target="_blank"&gt;உயிர்மை பதிப்பகம்&lt;/a&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;strong&gt; ,&amp;#160;&amp;#160; &lt;/strong&gt;&lt;a href="https://www.nhm.in/shop/100-00-0000-158-3.html" target="_blank"&gt;கிழக்கு&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-1537499365613103683?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/1537499365613103683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/11/blog-post_27.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/1537499365613103683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/1537499365613103683'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/11/blog-post_27.html' title='சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-wNds8yHkVD0/TtCvd6AObEI/AAAAAAAAIH0/EMWznrkcGUA/s72-c/vimala2.jpg_thumb%25255B6%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-851474523567560138</id><published>2011-11-23T09:34:00.001+05:30</published><updated>2011-11-23T09:34:53.536+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுமைப்பித்தன்'/><title type='text'>தியாகமூர்த்தி - புதுமைப்பித்தன்</title><content type='html'>&lt;div align="left"&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; செங்காணி என்ற திவ்வியப் பிரதேசத்தைப் பற்றி, நீங்கள் எந்தப் பூகோள சாஸ்திரத்தையோ, படங்களையோ, காருண்ய கவர்ண்மெண்டார் மனமுவந்து அருளிய நன்மைகளில் ஒன்றாகிய கெஜட்டுகளையோ திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் எனது வார்த்தையையும் அந்தப் பெயர் தெரியாத புலவர் இசைத்த, &lt;a href="http://lh4.ggpht.com/-fcwquTcP2nA/Tsxw4NUnFjI/AAAAAAAAIHg/CJ3zmri-QNo/s1600-h/pu.pi%25255B2%25255D.gif"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="pu.pi" border="0" alt="pu.pi" align="right" src="http://lh3.ggpht.com/-Rz3pViClBRA/Tsxw4yYroBI/AAAAAAAAIHo/U2VC9cQMst0/pu.pi_thumb.gif?imgmax=800" width="170" height="204" /&gt;&lt;/a&gt;    &lt;br /&gt;    &lt;br /&gt;&lt;/div&gt;  &lt;div class="f4" align="left"&gt;&lt;strong&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; தருவைக்கு மேற்கே செங்காணி வெள்ளம்      &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; தானே வந்தால் இங்கு விடுவானே தோணி&amp;#160; &lt;br /&gt;&lt;/strong&gt;     &lt;br /&gt;என்ற மேற்கோள் வரிகளையும் நம்புவதாக இருந்தால்தானே மேலே சொல்ல முடியும்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; தானே எப்பொழுதாவது வெள்ளம் வந்தால் தோணி விடக்கூடிய அந்த ஆற்றிற்கு ஒரு தாம்போதி, மேற்கே இருக்கும் செங்காணியையும் கிழக்குக் கரையில் இருக்கும் தருவைத் திருப்பதியையும் பிணித்து நின்றது.     &lt;br /&gt;    &lt;br /&gt;தாம்போதியைக் கடந்ததும் சாலையின் பக்கத்தில் ஒரு புளியமரம். அதன் பக்கத்தில் இருந்த இரும்புப் பட்டடை வீடு என்ற முறையில் சின்னாபின்னமாக நின்ற ஒரு குடிசையில் இருபது வருஷங்களுக்கு முன் ராமசாமிப் பத்தரின் திருஅவதாரம் இனிது நடந்தேறியது.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; தகப்பனாரைப் போல் ஓட்டைக் கட்டை வண்டிக்குப் பட்டை போடுவது, பஞ்சத்தில் அடிபட்ட மாடுகளுக்கு லாடம் அடிப்பது, பொழுது போக்காக ஆணிகளைச் செய்து குவிப்பது என்ற கொல்ல சமூகத்தின் வைதிக நடவடிக்கைகளுக்கும், காலம் இருக்கிற தர்பாரில், தனது அபூர்வமான புத்தி விசாலத்திற்கும் ஒத்துவராது என்று கண்ட ராமசாமிப் பத்தர், தலைமுறை தலைமுறையாகத் தம் தகப்பனார் வரையில் வந்த செங்காணி மான்மியத்தை முடித்துக் கொண்டு திருநெல்வேலிக்குச் சென்று குடியேறினார்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; முதலில் 'ஸைக்கிள்' 'கடிகாரம்' ரிப்பேரில் ஆரம்பித்து, வரவர 'மோட்டார் கண்டக்டர்', 'டிரைவர்', பிறகு 'மெக்கானிக்' என்ற பருவங்களைக் கடந்து, தமக்குத்தாமே சொந்தமாக வைத்துக் கொண்ட மோட்டார் என்ஜினீயர் என்ற பட்டத்துடன் 'ஒர்க் ஷாப்' என்ற பெயருடைய ஒரு கொல்லப் பட்டடையை ஸ்தாபித்தார்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; இந்தப் பத்து வருஷங்களில் பத்தரைக் கையில் பிடிக்க முடியாது. கையில் பணம் ஓட்டமிருந்தால் யாரும் அப்படித்தான். ஏறாத தாசி வீடு இல்லை; உடலில் வாங்காத வியாதி இல்லை.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; இந்தக் காலத்தில்தான் பையன் கெட்டுப் போய்விடுவான் என்று எண்ணி அவருடைய உறவினர்கள் கல்யாணமும் செய்து வைத்தார்கள். அந்த அம்மாணி மூன்று வருஷத்தில் இரண்டு பெண் குழந்தைகளைப் பத்தருக்கு ஒரு பொறுப்பாக வைத்துவிட்டுக் காலமானாள்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; உறவினர்கள், ராமசாமிப் பத்தரின் குடும்ப வாழ்க்கையில் கவலைப்பட ஆரம்பிக்கு முன்னமே 'ஒர்க் ஷாப்' அவர்கள் தடுத்து விடலாம் என நம்பியிருந்த அந்த நிலைமைக்கு வந்துவிட்டது. எங்கே பார்த்தாலும் கடன். வேலைக்காரர் தொல்லை. வேலையும் அவர் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாததனால் மற்ற கம்பெனிகளைத் தேடிவிட்டன.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; இந்த மாதிரி நிலைமை விரைவில் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையிலேயே ஒரு பத்து வருஷம் கழிந்தது.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; மனிதன் ஒரு நிலைமை வரையில்தான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும். தலைக்கு மேல் வெள்ளம் சென்றால்?     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; ஒரு சுப தினத்தில் 'ஒர்க் ஷாப்' கதவடைக்கப்பட்டது. அடைத்ததனால் அவருடயை நிலைமை மேலோங்கி விடவில்லை. 'செட்டி இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்' என்ற கதைதான்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; கொஞ்சநாள், தம் வயசு வந்த பெண்களின் கதியை நோக்கிக் கண்ணீர் விட்டுக்கொண்டு, ஊரைச்சுற்றி வந்தார். கடன் தொல்லை, பெண்களின் பொறுப்பு, எல்லாம் சேர்ந்து அவரை நாற்பது வயசிலேயே ஊக்கங்குன்றிய கிழவனாக்கிவிட்டன. உடல் வன்மையாவது இருக்கிறதா? பழைய சல்லாப காலங்களில் சேகரித்த 'முதல்' வீணாகப் போகவில்லை. மருந்து என்ற சிறிய தடையுத்தரவிற்குப் பயந்து இத்தனை நாட்கள் பதுங்கியிருந்த வியாதிகள் மீண்டும் உறவாட ஆரம்பித்தன.&amp;#160; &lt;br /&gt;    &lt;br /&gt;******&lt;/div&gt;  &lt;div class="f4" align="left"&gt;&amp;#160;&lt;/div&gt;  &lt;div class="f4" align="left"&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; 'இண்டோ -யூரோப்பியன் மோட்டார் மெக்கானிகல் ஒர்க்ஸ்' முதலாளியான ராமானுஜலு நாயுடு அவருக்கு ஒரு பிட்டர் வேலை கொடுத்தபொழுது, 'அன்ன தாதா' என்று அவரை மனமாரப் புகழாமல் இருக்க முடியுமா? நீரும் நானும் இந்த மாதிரி இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வேலையில்லாமல் திண்டாடியிருந்தால் அம்மாதிரித்தான் புகழ்வோம்.    &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; மாசம் 20 ரூபாய் சம்பளம். காலை 6 முதல் இரவு எப்பொழுது பட்டடை அடைக்கப்படுகிறதோ அவ்வளவு நேரமும் வேலை.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; இம்மாதிரி ஒரு வருஷம் கொஞ்ச நாட்கள் சற்றுக் கவலையற்ற தரித்திரம். பொருளாதார மந்தம் என்று நீட்டி முழக்கிச் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அடித்து விளாசுகிறார்களே, அதுவும் வந்தது. அதைப்பற்றிய தத்துவங்கள், காரணங்கள் எல்லாம் உமக்கும் எனக்கும் பத்தி பத்தியாக நுணுக்கமாக எழுதத் தெரியும்; பேசவும் தெரியும். ராமானுஜலு நாயுடுவுக்குத் தெரிந்ததுபோல் நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.     &lt;br /&gt;    &lt;br /&gt;ராமானுஜலு நாயுடு நல்ல குணமுள்ளவர்தாம். சில சமயங்களில் ஐந்து பத்து முன்பின் யோசியாமல் கொடுத்து உதவுகிறவர்தாம். ஆனால் பணம் சேர்ப்பதற்குத்தான் அவர் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தாரே ஒழிய, தொழிலாளிகளுக்குத் தர்மம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வரவில்லை.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; அவருடைய சிக்கனக் கத்தி விழுந்தது. பத்துப் பேர் வெளியே போக வேண்டியிருந்தது. அதில் ராமசாமிப் பத்தரும் ஒருவர். கெஞ்சினார்கள்; கூத்தாடினார்கள். பத்து ரூபாய் - பாதி சம்பளம் - கொடுத்தால் கூடப் போதும் என்றார்கள். ராமானுஜலு நாயுடு சத்திரம் கட்ட வரவில்லையே!     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; நல்ல பசுமாடு இருக்கிறது. வேளைக்கு இரண்டு படி பால் கறக்கிறது. அதற்குப் பருத்தி விதை, தீனி என்ன? ராஜயோகந்தான். கண்ணும் கருத்துமாகத்தான் கவனிக்கிறோம். மாடு கிழடாகி, வறண்டு போய்விட்டால் வைத்துக் கொண்டு கும்பிடவா செய்கிறோம்? தோலின் விலைக்காவது தள்ளிவிடவில்லையா? அதில் ராமானுஜலு நாயுடு செய்ததில் என்ன குற்றம்? அது அப்படித்தான். அது நியாயந்தான். இப்பொழுது அதைத் தப்பு என்று சொல்லுகிறவன் முட்டாள், பைத்தியக்காரன்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&lt;/div&gt;  &lt;div class="f5" align="left"&gt;*****&lt;/div&gt;  &lt;p align="left"&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; ராமசாமிப் பத்தருக்குச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வரும்போது எதுவும் தோன்றவில்லை. நாலு நாள் சம்பளம் எத்தனை நாட்களுக்குப் போதும்? பிறகு என்ன செய்வது? வேறு எந்தக் கம்பெனியில் எடுப்பார்கள்? எடுத்தாலும் இந்தக் கதிதானே! உலகமே ஓர் இதயமற்ற திருக்கூட்டம் என்று பட்டது. நெற்றிக்கண் இருந்தால் எல்லாரையும் எரித்துச் சாம்பலாக்கியிருப்பார். இல்லாததனால் நேராகச் சாராயக் கடைக்குப் போனார்.    &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; இனி என்ன செய்வது?     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; இனி என்னதான் செய்வது? எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுக் காவியைக் கட்டிக் கொண்டு பிச்சை எடுக்க வேண்டியதுதான். சீ! பிச்சையா! அதைப் போல கோழைத்தனம் உண்டா? நம்மைத் திருடுகிற இந்தப் பயல்களைக் கொள்ளையடித்தால் எந்தத் தர்மசாஸ்திரம் ஓட்டையாகப் போகிறது?     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; 'இரவு பத்துப் பதினொரு மணிக்கு ராமானுஜலு நாயுடு தனியாகத் தான் கணக்குப் பார்த்துக் கொண்டு இருப்பார். ஒரு கை பார்த்தால் தான் என்ன?'     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; வீட்டிற்கு வந்து மிஞ்சி இருக்கிற சில்லறையைப் பெண்களிடம் கொடுத்தார். கொடுத்தது, சாப்பிட்டது எல்லாம் மெஷின் மாதிரி. மனசு அதில் லயித்துவிட்டது.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; &amp;quot;என்ன அப்பா, இப்படி இருக்கே?&amp;quot; என்றதற்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை.&amp;#160; &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; திடீரென்று இருவரையும் கட்டிச் சேர்த்து முகத்தில் மாறி மாறி முத்தமிட்டார். ஹிந்து சமுதாயத்தில் வயது வந்த பெண்களை முத்தமிடத் தந்தைக்கு உரிமையே இல்லை. இருவரும் திடுக்கிட்டார்கள். குடித்துவிட்டாரோ என்ற சந்தேகம். பயந்து நடுங்கினார்கள்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; &amp;quot;நமக்கு நல்ல காலம் வந்துவிட்டது. நாயுடு எனக்கு ஐம்பது ரூபாயில் பட்டணத்தில் வேலை பார்த்துக் கொடுத்தார். வழிச்செலவிற்குப் பணம் ராத்திரி தருகிறேன் வா என்றிருக்கிறார்&amp;quot; என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தமது தீர்மானத்தை நிறைவேற்றப் புறப்பட்டார்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; எதிர்பார்த்தபடி நாயுடு தனியாகத்தான் இருந்தார்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; &amp;quot;வா ராமசாமி, நான் என்ன செய்யட்டும், நீதான் சொல். நீ இங்கே வருவதில் பிரயோஜனமில்லை&amp;quot; என்றார் நாயுடு.     &lt;br /&gt;    &lt;br /&gt;எனக்கு நீங்கள் கொடுத்தது பத்தாது&amp;quot; என்றார் ராமசாமி. குரல் வித்தியாசமாக இருந்தது.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; குடித்துவிட்டு வந்திருக்கிறானோ என்று நாயுடு சந்தேகித்து, &amp;quot;நீ நாளைக்கு வா&amp;quot; என்றார்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; &amp;quot;நாளைக்கா! பார் உன்னை என்ன செய்கிறேன். என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டாயே, திருட்டு ராஸ்கல்&amp;quot; என்று அவர்மேல் பாய்ந்து மேஜையின் மேல் இருந்த நோட்டுக்களில் கையை வைத்தார்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; நாயுடு மட்டும் தனியாக இருந்தது உண்மைதான். அதற்காக உலகமே நடமாட்டமற்றுப் போய்விடுமா? ராமசாமி வெகு லேசாகப் பிடிபட்டார்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; நாயுடுவிற்கு அசாத்தியக் கோபம். &amp;quot;உண்ட வீட்டில் கெண்டி தூக்கிய பயலை விடுகிறேனா பார்&amp;quot; என்றார்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; விவரிப்பானேன்?     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; பலவந்தத் திருட்டுக் கேஸாகியது. ஆறுமாசக் கடுங்காவல்.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு. எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டுத் தொழிலாளியின் குடும்பத்திற்கு இந்தமாதிரி உதவி செய்ய முடியும்? நியாயமான உலகமல்லவா?     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; பெண்களின் நிலைமையைப் பற்றி எழுதக் கூசுகிறது.     &lt;br /&gt;    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; ஜன்மாந்திர விதி என்ற ஒரு மகத்தான காரணத்தைக் கண்டுபிடித்த ஹிந்து சமுதாயத்தில் இது இயற்கைதானே?     &lt;br /&gt;    &lt;br /&gt;********&lt;/p&gt;  &lt;div class="f4" align="left"&gt;&lt;strong&gt;காந்தி, 5-9-1934&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-851474523567560138?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/851474523567560138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/11/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/851474523567560138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/851474523567560138'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/11/blog-post_23.html' title='தியாகமூர்த்தி - புதுமைப்பித்தன்'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/-Rz3pViClBRA/Tsxw4yYroBI/AAAAAAAAIHo/U2VC9cQMst0/s72-c/pu.pi_thumb.gif?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-7030424370217091295</id><published>2011-11-22T09:23:00.001+05:30</published><updated>2011-11-22T09:42:21.222+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>வெளியில் ஒருவன்-சுகுமாரன்</title><content type='html'>&lt;p&gt;&lt;strong&gt;&lt;font size="3"&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;font size="3"&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;font size="3"&gt;வெளியில் ஒருவன்&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;பரிவில்லாதது வீடு    &lt;br /&gt;வெளிக் காற்றில் ஏராளம் விஷம் &lt;a href="http://lh5.ggpht.com/-yvzxz3PYI7M/Tssc0q3_hjI/AAAAAAAAIHQ/zAsLUrPq4XA/s1600-h/sukumaran%25255B10%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="sukumaran" border="0" alt="sukumaran" align="right" src="http://lh5.ggpht.com/-CXSDNSDUyyE/Tssc1eTskqI/AAAAAAAAIHY/T4oDvhKVpZo/sukumaran_thumb%25255B6%25255D.jpg?imgmax=800" width="241" height="225" /&gt;&lt;/a&gt;    &lt;br /&gt;சோகை பிடித்த தாவரங்கள்     &lt;br /&gt;நீர்நிலைகளில் சாகும் பறவைகள் மிருகங்கள்&amp;#160; .     &lt;br /&gt;பிச்சைக்காரியின் ஒடுங்கிய குவளையில்     &lt;br /&gt;சரித்திரம் கெக்கலிக்கும்.     &lt;br /&gt;தேசக் கொடிகளின் மடிப்பவிழ்ந்து     &lt;br /&gt;எங்கும் பொய்கள் கவியும்.     &lt;br /&gt;ஒன்று அல்லது மற்றொன்று -     &lt;br /&gt;விலங்குகளை இழுத்து நகரும் மனிதர்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;திசைகளில் அலைந்து திரும்பிய பறவை சொல்லிற்று    &lt;br /&gt;மனிதர்கள் எரிக்கப் படுவதை     &lt;br /&gt;பெண்கள் சிதைக்கப் படுவதை     &lt;br /&gt;குழந்தைகளும் சங்கீதக் கருவிகளும் பிய்த்தெறியப் படுவதை     &lt;br /&gt;பூக்களும் கவிதைகளும் மிதிக்கப் படுவதை     &lt;br /&gt;‘மூலதனத்தின்’ பக்கங்கள் ஈரமற்றுப் போனதை     &lt;br /&gt;கடவுளின் மகுடத்தைப் பேய்கள் பறித்துக் கொண்டதை     &lt;br /&gt;சகோதரர்களுக்குக் கோரைப் பற்கள் முளைத்ததை.&lt;/p&gt;  &lt;p&gt;பாதுகாப்பற்றது வெளி    &lt;br /&gt;தற்கொலைக்கும் துப்பாக்கி முனைக்கும் நடுவில்     &lt;br /&gt;நமது வாழ்க்கை.&amp;#160; &lt;br /&gt;இரண்டு குரோத பற்சக்கரங்களுக்கு இடையில்     &lt;br /&gt;நமது காலம்.     &lt;br /&gt;நாம் எதிர்பார்த்திருக்கிறோம்     &lt;br /&gt;அணுகுண்டு வெடிப்பின் கடைசி நொடிக்காய்.     &lt;br /&gt;எனினும்     &lt;br /&gt;வயலின் ஸ்வரங்களாய்ப் பொழியும் மழை     &lt;br /&gt;தாமிரச் சூரியன்     &lt;br /&gt;பறவைகள் பச்சிலைக் காற்று குதூகல முகங்கள்     &lt;br /&gt;அக்குளில் சிறகு பொருத்தும் இசை - இவற்றுக்காய்க்     &lt;br /&gt;காத்திருக்கிறது நம்பிக்கை     &lt;br /&gt;பனிப்பாறைகளைப் பிளந்து மூச்சுவிடும் செடிபோல.&lt;/p&gt;  &lt;h5&gt;&lt;font size="3"&gt;கையில் அள்ளிய நீர்&lt;/font&gt;&lt;/h5&gt;  &lt;p&gt;அள்ளி   &lt;br /&gt;கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்    &lt;br /&gt;நதிக்கு அந்நியமாச்சு    &lt;br /&gt;இது நிச்சலனம்    &lt;br /&gt;ஆகாயம் அலைபுரளும் அதில்    &lt;br /&gt;கை நீரைக் கவிழ்த்தேன்    &lt;br /&gt;போகும் நதியில் எது என் நீர்?&lt;/p&gt;  &lt;p&gt;******&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8291760685245823600-7030424370217091295?l=azhiyasudargal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://azhiyasudargal.blogspot.com/feeds/7030424370217091295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/11/blog-post_22.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/7030424370217091295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8291760685245823600/posts/default/7030424370217091295'/><link rel='alternate' type='text/html' href='http://azhiyasudargal.blogspot.com/2011/11/blog-post_22.html' title='வெளியில் ஒருவன்-சுகுமாரன்'/><author><name>"அழியாச் சுடர்கள்" ராம்</name><uri>http://www.blogger.com/profile/13238732584481082992</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_zmZAoGSCETs/StBiuo1nSeI/AAAAAAAAESQ/TzPQcjOJ--U/S220/K-M-ADIMOOLAM-ART.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/-CXSDNSDUyyE/Tssc1eTskqI/AAAAAAAAIHY/T4oDvhKVpZo/s72-c/sukumaran_thumb%25255B6%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-4096195035908842878</id><published>2011-11-15T09:43:00.001+05:30</published><updated>2011-11-15T09:45:50.847+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திலீப் குமார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><title type='text'>மூங்கில் குருத்து - திலீப்குமார்</title><content type='html'>&lt;p align="left"&gt;கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல் கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ் கடையிலும் அப்படித்தான்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;வாராவாரம் வியாழக்கிழமை தட்டி-பாஸ் தயவில் ’குலேபகாவலி’, ‘குலமகள் ராதை’ போன்ற ஒப்பற்ற ‘திரைக்காவியங்களை’ இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டுக் கனவுக்கன்னிகளின் திரட்சிகளை மனத்திற்குள் ஆலிங்கனம் செய்து, லுங்கியைக் கறைபடியச் செய்து கெட்டுப்போய்&lt;a href="http://lh6.ggpht.com/-qAmYlgVsqwk/TsHm22nVGII/AAAAAAAAIGY/nSfEYp52ukU/s1600-h/dilipkumar54.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="dilipkumar5" border="0" alt="dilipkumar5" align="right" src="http://lh4.ggpht.com/-lJkcDu96Ah4/TsHm39PjFFI/AAAAAAAAIGg/-qgfUVd3jAw/dilipkumar5_thumb2.jpg?imgmax=800" width="223" height="338" /&gt;&lt;/a&gt;க் கொண்டிருந்த அநேகம் கடைப் பையன்களைப் போலத்தான் நானும். அண்ணன் சென்னைக்கு ஓடித்தொலைத்தாயிற்று. அக்காவை நீலகிரியில் ஒரு எஸ்டேட் மானேஜருக்குத் தாரை வார்த்தாகிவிட்டது. அக்காவின் அழகு அவளுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கூட்டிக் கொடுத்தது. தம்பிக்கு ஐம்பது ரூபாயில் ஒரு ரெடிமேட் ஃபாக்டரியில் வேலை. எனக்குத் திரு கிருஷ்ணாஜிராவ் கடையில்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;தறிநெய்கிற தேவாங்கச் செட்டிமார்கள் அதிகமாகப் புழங்குகிற தியாகராஜ புதுவீதியில் இட்லி விற்கும் ஒரு விதவைச் செட்டிச்சியின் வீடு. கட்டடவியலுக்குக் களங்கம் கற்பிக்கிற ஒரு வினோதமான கர்ப்பக்ரஹம் அது. இருளைக் கிழித்து உள்ளே நுழைந்தால், இருபத்தி நாலு வயதில் அப்பாவை இழந்த அம்மா வெள்ளையணிந்து கோட்டுருவமாய்ச் சமைந்து காணப்படுவாள். ஆஜானுபாகுவாயிருந்த அப்பா மூல வியாதி முற்றி ஆசனவாயிலிருந்து ரத்தம் கசியக்கசியக் கதறிய அந்தக் கடைசிக் கதறல் என் நாலு வயது மனத்தில் வடுவாய்ப் பதிந்துவிட்டது. அந்த நாட்களில் அம்மாவின் அழுகுரல் கூரையிலிருந்து அடிபட்டுச் சரியும் காகத்தின் மழுங்கின கரைதலைப் போல் இருக்கும். இன்றும் அக இரைச்சலற்ற அமைதியான இரவுகளில் அந்தக் குரல் எப்போதாவது உயிர்த்தெழும்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;திரு கிருஷ்ணராஜி ராவ் மராத்தியர். குள்ளம், குண்டு நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார். நிறையக் குடிப்பார் என்றாலும் தொழிலில் படுகில்லாடி. இதன் விளைவாகவே வெள்ளைக்கார கலெக்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிகவும் நெருக்கமானவராக ஒரு காலத்தில் திகழ்ந்தார். மல்யுத்த வீரன் கிங்காங்குக்கு “சூட்” தைத்து அதன் கச்சிதத்தில் அந்த மாவீரன் மயங்கி, உற்சாகத்தில் திரு ராவை, குழந்தையைத் தூக்குவதுபோல் தலைக்கு மேல் உயர்த்திக் கொஞ்சி விட்டுப் போனதும், பெருந்தலைவர் காமராஜர்க்குக் கதர்ச்சட்டை தைத்துக் கொடுத்ததும் இவரது நீண்ட தொழில் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள்.&lt;/p&gt;  &lt;p align="left"&gt;அந்த நாட்களில் இவர் சம்பாதித்த பணம் ஏராளம்! சினிமா எடுத்துத் தோற்றுப்போனது போக மிச்சத்தைப் போத்தனூரின் ஆங்கிலோ - இந்தியப் பரத்தைகளிடம் கரைத்துவிட்டார். இப்போ
