Oct 19, 2008

குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்-ஆத்மாநாம்

ஆத்மாநாம்

modern-art-07

ஹலோ என்ன சௌக்கியமா

இப்பொழுது புதிதாக என்ன விளையாட்டுக் கண்டுபிடித்துள்ளாய்

உன்னுடைய குஞிச்ட்ணீ எப்படி இருக்கிறது

பூச்செடிகளுக்கிடையே

புல்தலைகளின் மேல்

நெடிய பசும் மரங்களின் கீழ்

சுற்றிலும் வண்ணாத்திப்பூச்சி

மரச்சுவர்களுக்கிடையே

சிவப்பு வீட்டின் உள்ளேயிருந்து

ஷிநீணீனீஜீ எட்டிப் பார்க்கிறான்

வெளியே பழுப்புநாய் இருந்தான்

என்ன விஷயமென்று குஞிச்ட்ணீ வெளியே வந்தான்

தெரியாதா நம்முடைய கூட்டம் மரத்தடியில்

சீக்கிரம் வந்துவிடு என்றான்

பலவர்ண நாய்களுக்கிடையே தாவி நுழைந்தான்

கேட்டது ஒரு கேள்வி

எங்கள் தலைவனை கௌரவிக்க

நாமெல்லோரும் கூடியிருக்கிறோம்

அவர் கண்டுபிடித்ததென்ன

அடக்கத்துடன் ஷிநீணீனீஜீ சொன்னான்

பின்னால் சுமக்கும் பை

கூட்டம் கலைந்தது

அடுத்த கதையை நீ சொல்

அன்புடன் என்றும் உன்

No comments:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.