Jul 9, 2011

தக்ஷ்ணாமூர்த்தியான..-விக்ரமாதித்யன் நம்பி

 
 

தக்ஷ்ணாமூர்த்தியான...nambi26

மாமிசம் தின்னாமல்
சுருட்டுப் பிடிக்காமல்
பட்டை யடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடைவராதது பொறாமல்
பதினெட்டாம்படி விட்டிறங்கி
ஊர்ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டு தேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்
கடந்தகாலக் கைத்தநினைவுகள் வருத்தவும்
எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்

வீடு

வீடு பத்திரமான இடம்

“புலிப்பால் கொண்டு வரப்
போனான் ஐயப்பன்“

புத்தி வளர
பேச்சு குறைய
அந்தம் கண்டது மௌனம்

காய்ந்து வெடித்ததும்
அனாதையாக
காற்றில் அலைக்கழியும்
இலவம் பஞ்சு

ஊருக்கு வெளியே
தாமரைக் குளம்
தனியே
பூத்துக் கிடக்கும்
வெறிச்சோடி

*******

No comments:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.