Oct 17, 2010

இன்னொரு கேலிசித்திரம்-கல்யாண்ஜி

இன்னொரு கேலிசித்திரம்


காலம் என் கேலிச்சித்திரத்தை DSC_0033
வரைந்துவிட்டது
உயரத்தையும்
முன்பற்க்களின் இடைவெளியையும் 
நிச்சயம் கணக்கில் எடுக்கும்
என்று நினைத்திருந்தேன்
எடுக்கவில்லை
என் கூர்மையற்ற மூக்கைக்கூட
அது பொருட்படுத்தக் காணோம்
கனத்த கண்ணாடியின்றியும்
முகத்தின் சாயல்
பிடிப்பட்டிருந்தது
அதன் கோடுகளுக்குள்
என் உடல் மொழியனைத்தும் அடங்கியிருந்தன
என் சித்திரத்தை விட
என் கேலிச்சித்திரத்தை ரசிக்க முடிகிறது
எனினும்
என்னுடைய எந்த அடையாளத்தை
அது ஒளித்துவைதிருக்கிறது தன்னிடம்
என்ற புதிரை
என்னால் விடுவிக்க முடியவில்லை
அதற்குள் வரையப்பட்டுவிடுகிறது
அடுத்த நாளில்
இன்னொரு கேலிச் சித்திரம்…

*****
நன்றி: கல்யாண்ஜி கவிதைகள், ஆழி பதிப்பகம்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

5 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on October 17, 2010 at 6:42 AM said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள் ராம்
கல்யான்ஜிக்கும் நன்றிகள்

Jegadeesh Kumar on October 17, 2010 at 7:06 PM said...

பகிர்வுக்கு நன்றி

நாணல் on October 17, 2010 at 10:25 PM said...

பகிர்விற்கு நன்றி ராம் :)

தமிழ்ச் செல்வன்ஜீ on October 20, 2010 at 10:58 PM said...

என் சித்திரத்தை விட என் கேலி சித்திரம் நன்றாக இருக்கிறது என்ற வரிகளில் இந்த கவிதை முடிந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன்

Unknown on January 2, 2014 at 3:25 PM said...

azhiyasudargal.blogspot.in is the best thing that has happened to tamil language and literature for a long long time and the extraordinary immense and intense satisfaction it brings to the soul of reader of serious tamil literature is beyond description.
how u guys r able to get hold of such treasures and put all of them in one place i would never know
carry on the great work
ramakrishnan wadala mumbai

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்