Sep 28, 2008

தெரியவில்லை-ந. பிச்சமூர்த்தி

ந. பிச்சமூர்த்தி

2

மலையைப் பார்க்கிறேன்

சிலைக்காகும்

கோயிலுக்காகும்

பங்களாவின்

சுற்றுச் சுவர்க்காகும்

தாரோடும் வீதிக்கு

ஜெல்லிக் கல்லாகும்.

மலைச்சிகரம்

மனிதச் சாதனைக்காகும்.

எதெதோ தெரிந்தாலும்

மலையாகப் பார்க்கத் தெரியவில்லை.

மலரைப் பார்க்கிறேன்.

புலரும் காதலுக்குத்

தூண்டில் முள்ளாகும்

அத்தர்க்காகும்

படத்துக்காகும்

எதெதோ தெரிந்தாலும்

மலராகப் பார்க்கத் தெரியவில்லை.

என்னைப் பார்க்கிறேன்

கண் காணாச் சமூகத்தை

நிலை நிறுத்தும் கல்தூண்.

பரிணாமத்தின் பனிச்சிகரம்

சந்ததியின் சங்கிலியில்

காலம் காட்டும் கடைக்கரணை

எதெதோ தெரிந்தாலும்

நானாகப் பார்க்கத் தெரியவில்லை.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்