Dec 23, 2010

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை- ஷங்கர்ராமசுப்ரமணியன்

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை

தலைப்பிரட்டைகளை
மீன்களென்று எண்ணி
நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து அள்ளி 34838_105318686188593_100001313875575_44080_6688702_n
சட்டைப்பையில்
நிரப்பிச்செல்லும் சிறுவர்கள் நீங்கள்
அவை
உங்கள் விருப்பப்படியே 
உங்கள் தலைக்குள்ளும்
சில நாட்களுக்கு
அவரவர் வசதிக்கேற்ப
குப்பிகளிலும்
மீனென நீந்தும்.
மீன்களைப் பிடிப்பதற்கு தேவையான
தூண்டில்கள்
வலைகள்
காத்திருப்பின் இருள்
எதையுமே அறியாத சிறுவர்கள்
நீங்கள்.
தலைப்பிரட்டைகளை
சட்டைப்பைக்குள் நிரப்பி
எடுத்துச்செல்கிறீர்கள்.
உலகிற்கும்
காத்திருக்கும் உங்கள் அம்மாவிற்கும்
யாரும் எதிர்பார்த்திராத
அரிய உயிர்த்துடிப்புள்ள
பரிசை எடுத்துச்செல்வதில்
உங்கள் மனம் படபடக்கிறது
உங்கள் தோழி தேஜீவிடமும்
இந்தப் பரிசை
பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும்
நண்பர்களே
உங்களது இப்போதைய
சந்தோஷத்திற்கு
நான் ஒரு பெயர் இடப்போகிறேன்.
தலைப்பிரட்டை.

ஒரு இரையை
புதிரானதும், கரடுமுரடானதுமான இடங்களில்
எலி ஒன்று இழுத்துச் செல்வது போல்
கனவொன்று
நேற்றும் என்னை வழியெங்கும்
அழைத்துச் சென்றது.
என்னை பரிதவிக்க விட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
அந்தக் கனவு கொறித்தது
மீதியாய் என்னை மதில்களிலிருந்து
தூக்கி எறிந்தது.
அபாயத்தில் அலறுவதும் பீதிக்குள்ளாவதுமாய்
வழியெங்கும் கனவின்
கொடூரப் பற்களிடையே
நடுங்கியபடி இருந்தேன்.
கனவில் எங்களைக் கண்டாயா என்று
நீங்கள் கேட்கிறீர்கள்
சற்று இளைப்பாறிவிட்டு
உங்களுக்கு நியாயமாகவே பதிலுரைக்கிறேன்.
நீங்கள் இல்லாமலா ?


நித்தியவனம்

தெலைபேசியில் உள்ள எண்காட்டியில்
எண்கள் நடுங்குவதை
முதல் முறையாய் பார்க்கிறீர்களா.
உங்கள் அழைப்புமணியின் ரீங்காரம்
இதவரை செல்லாத நிலவுகளின்
சுவர்களுக்குள்
ஊடுருவுவதை உணர்கிறீர்களா.
நீங்கள் அழைக்கும் நபர்
சற்றுமுன் இறந்தவராய் இருக்கக்கூடும்.

இரவு காகமென அமர்ந்திருக்கிறது
உயிர்
ஒரு கொக்கின்
வெளிச்ச உடலுடன்
ஆஸ்பத்திரி காரிடாரில் நடந்து
வெளியேறியது.
கொக்கும் காகமும்
ஒரு நித்ய வனத்திற்குள்
ஜோடியாய் பறப்பதை
நீங்கள் பார்த்தீர்கள்
நான் பார்ததேன்.

நன்றி: சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை, சந்தியா பதிப்பகம்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்