Jul 16, 2009

வ.வே.சு ஐயர்

vavesu-iyer

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்கிற வ.வே.சு. ஐயர் திருச்சி நகருக்கு அருகில் வரகனேரி என்னும் ஊரில் 1881-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி பிறந்தார். 1897-ல் வ.வே.சு. ஐயருக்கும் பாக்கியலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது. 1907-ல் பாரிஸ்டர் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். 1910-ல் திரும்பி கடல் மார்க்கமாக புதுச்சேரி வந்தார். புதுச்சேரியில் பாரதியார், அரவிந்தர் ஆகியோருடன் ஐயருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. தமிழில்  சிறுகதைகளை அதன் வடிவப் பிரக்ஞையுடன் கையாண்ட முதல் எழுத்தாளர் ஐயர்தான். 1915-ஆம் ஆண்டு ஐந்து சிறுகதைகளைக் கொண்ட மங்கையர்க்கரசியின் காதல்' வ.வே.சு. ஐயரின் கம்ப நிலையம் வெளியீடாக வெளிவந்தது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1921-ல் கம்பராமாயணம் குறித்து ஆங்கிலத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். 1925-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி பாபநாசம் கல்யாணி தீர்த்தம் அருவியில் தவறி விழுந்த மகள் சுபத்ராவை காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்த வ.வே.சு. ஐயர் அருவியிலேயே காலமானார். குளத்தங்கரை அரசமரம்' கதை முதலில்  வ.வே.சு. ஐயரின் மனைவி ஸூ. பாக்கியல்டசுமி அம்மாள் பெயரில் விவேகபோதினி என்னும் மாத இதழில் பிரசுரமானது.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்