Showing posts with label எஸ். வைத்தீஸ்வரன். Show all posts
Showing posts with label எஸ். வைத்தீஸ்வரன். Show all posts

May 22, 2012

பாத மலர் - எஸ். வைத்தீஸ்வரன்

பாத மலர்

மலரற்ற தார் ரோடில்
பாதங்கள் விழிக்கு மலர்.
கார் அலையும் தெருக்கடலில்
பாதங்கள் மிதக்கும் மலர்.vaideeswaran-01
வெயில் எரிக்கும்
வெறுந் தரையில்
வழி யெதிரில்
பாவாடை நிழலுக்குள்
பதுங்கி வரும் வெண் முயல்கள்.
மண்ணை மிதித்து
மனதைக் கலைத்தது,
முன்னே நகர்ந்து
மலரைப் பழித்தது
பாதங்கள்.

மனிதனுக்கு

மேக நிழல்
மிக மெல்லிய நைலான் துணியாய்
நிலத்தில் புரளும்,
பகல்.
தார் ரோடில்
தன் நிழலை நசுக்கி மிதித்து
வாழ்க்கையின் மூலச்சூட்டால்
கொதித்தோடும்
மனித வாகனங்கள் பல.
வயிற்றின் நிழலாய்
பசி பின்தொடர
வாழ்வின் நிழலாய்
தன்னலம் பதுங்க,
வறட்சியில் புரட்சி, கட்சி,
நகரெங்கும் நிழற்கடல்கள்,
அதன் மோதல்கள்.
கணத்திற்குக் கணம்
தான் காய்ந்து
பொது நிழல் பரப்பக்
கிளைகள் வளர்க்கும்
மரங்களும் உண்டு
இந்த மனிதனுக்கு.

 

நன்றி: அரியவை

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்