Showing posts with label எம்.வி. வெங்கட்ராம். Show all posts
Showing posts with label எம்.வி. வெங்கட்ராம். Show all posts

Mar 15, 2017

மௌனியும் எம். வி.வி.யும் - எம்.வி வெங்கட்ராம்

என் இலக்கிய நண்பர்கள் (எம்.வி வெங்கட்ராம்) - நூலிலிருந்து


விளக்கேற்றி வெகுநேரமாயிற்று. மணி ஏழரை எட்டுக்குள் இருக்கும். வீட்டில் மின்சாரம் வராத காலம்; அகல் விளக்குகள், பவர்லைட், அரிக்கேன் லைட், சிம்னி விளக்குகளை ஏற்றி வெளிச்சத்தை வரவேற்போம்: ஆயினும் வெளிச்சம் வீட்டின் சில பகுதிகளுக்குப் போதாது.

வீட்டின் நடுப்பகுதியில் தரையில் உட்கார்ந்தபடி ஏதோ படித்துக் கொண்டு இருந்தேன். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நான் இரண்டாம் ஆண்டு மாணவன். எங்கள் காலத்தில், எஸ். எஸ். எல். சி.யில் தேறியதும் பட்டப்படிப்புக்கு நாலு ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகள் .... (Intermediate) , பட்டப்படிப்பு இரண்டு ஆண்டுகள். கல்லூரியில் சேர்ந்த ஆண்டிலேயே என் சிறுகதைகள் மணிக்கொடியில் வெளி வரத் தொடங்கின. அதனால், கல்லூரி
பாடப்புத்தகங் களைவிட அதிகமாய் அப்போதைய பத்திரிகைகள், ஆங்கிலச் சிறுகதைகள், நாவல்களைப் படிப்பது என் வழக்கம், 1937ஆம் வருடத்தில் நடந்ததைக் கூறுகிறேன்.

எங்கள் தெரு நண்பன் ஒருவன் என் படிப்பில் குறுக்கிட்டான். டேய் வெங்கட்ராம், உன்னைப் பார்க்க என் கணித ஆசிரியர் வருகிறார்...'
கணித ஆசிரியர் என்னை எதற்குப் பார்க்கவேண்டும்?' என்றபடி நான் தலை நிமிர்ந்தபோது, நண்ப னுக்குப் பின்னால் ஒர் இளைஞர் வருவதைக் கண் ேடன்

அவசரமாக எழுந்து, வாருங்கள் சார்!’ என்று கைகுவித்தேன்.
நீதானே வெங்கட்ராம்? நான் எதிர்பார்த்ததைவிட சின்ன பையனாக இருக்கிறாயே! என்னைத் தெரிய வில்லையா? நான் மெளனி...... o
அவ்வளவுதான்; அந்தப் பெயர் காதில் விழுந்ததும் என் கைகால்கள் நடுங்கத் தொடங்கின. -

உட்காருங்கள் சார்!’ என்று சொல்லவே குரல் தடுமாறியது. எங்கள் வீட்டில் நாற்காலி-மேஜை என்கிற ஆடம்பரம் கிடையாது. பட்டுசேலை வியாபாரம் என் தந்தையாருக்கு; தரையில் நீளமான கடைய பாய் விரித்திருக்கும்; யார் வந்தாலும் அதன்மேல்தான் அம்ர வேண்டும். மெளனி உட்கார்ந்ததும் என் நண்ப்ன் அவரிடம் விடைபெற்றுப் போய் விட்டான். அவருக்கு முன்னால் உட்காரத் தயங்கிய என்னை அவர் வற்புறுத்தி உட்கார வைத்தார்.
சமீபத்தில்தான் வயது கணக்குப் பார்த்தேன். அப்போது எனக்குப் பதினேழு வயது; அவருக்கு முப்பது. பதின்மூன்று வருட இடைவெளி எங்களுக்குள் எவ்வளவு பெரிய வேற்றுமையைக் கற்பித்து விட்டது! ஒல்லியாக, சிவப்பாய் பையன் எண்ணும்படியாகவே என் உடல் வளர்ச்சி இருந்தது; அதற்கு ஒரு கம்பீரம் கொடுப்பதற்காக நேவிகட்' என்று அந்தக் காலத்தில் பிரபலமான துளிர் மீசை வைத்திருந்தேன். என் தோற்றம் பற்றி நான் மிகுந்த அக்கறை காட்டுகிறவன்; கிராப்பை விதவிதமாக வாரிக் கொள்வேன். அல்லது யாராவது வாரி விடுவார்கள். பெரும்பாலும் அரைக்கை சட்டையே அணிவேன்; ரோல்டு கோல்டு பொத்தான்கள் தான் போடுவேன். சட்டையின் ஒரு காலரில் ரோல்டு கோல்டு பின் ஒன்று வழியும். என்னுடைய இந்த

கவனம் எல்லாம் என்னை ஒரு மாணவனாகக் காட்டிக் கொடுத்தது.
அவருடைய தோற்றம் எனக்கு நேர்மாறு. அதுபற்றி அவர் கவனம் கொண்டவராய்த் தோன்றவில்லை. அவரும் ஒல்லி-கறுத்த கிராப், இடது பக்கம் வகிடு எடுத்து சீவப் பெற்றாலும், அவர் தன் கையாலேயே ஒதுக்கி விட்டாற்போல் இருந்தது. நீண்ட மூக்கும், கரிய கண்களும், சதையில் செதுக்குண்ட கிரேக்கச் சிலை போல. வெள்ளை அரைக்கைச் சட்டை, அதற்குமேல் கதர் துண்டு போர்த்திருந்தார். அவருடைய உருவம் என் மனத்தில் பதிவு பெற, எங்கள் வீட்டில் போதுமான வெளிச்சம் இருந்தது. ..

மணிக்கொடியில் கதை எழுதியவர்கள் எல்லோரிடமும் எனக்கு ஆழ்ந்த பக்தி உண்டு, அரை நூற்றர்ண் டுக்கு முன்னால், பிச்சமூர்த்தியும், கு. ப. ரா.வும் எனக்கு மணிக்கொடியில் இடம் கண்டவர்கள். புதுமைப்பித்தன், மெளனி, ஆசிரியர் பி. எஸ். ராமையர், உதவி ஆசிரியர் இ. ராமச்சந்திரன், சிதம்பர சுப்பிரமணியன், சிட்டி ஆகியோரின் பெயர்களோடு என் பெயரும் சேர்ந்து வருவதை நான் பெரும்பேறாக மதித்தவன். மணிக்கொடி இதழ் ஒவ்வொன்றையும் பல தடவை படிப்பேன். இந்த இலக்கியப் படைப்பாளிகள் அனைவருமே வானத்திலிருந்து வந்த தேவப்பிறவிகளாக எனக்குத் தோன்றி னார்கள். இவர்களிலும் புதுமைப்பித்தன், மெளனி இருவரின் படைப்புகளைச் சிறப்பாகப் போற்றினேன்.

மெளனியின் முதல் கதை மணிக்கொடியில் வந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு என் முதல் கதை வந்தது. தொடர்ந்து அவருடைய சிறுகதைகளைப் போலவே என் கதைகளும் வெளிவந்தன. நானும் வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தேன். முதல் கதைக்குப் பிறகு, ந. பி. யிடமோ, கு. ப. ரா. இடமோ நான் என் கதை,எதனையும் காட்டியதில்லை. என் சங்கோச குணம் காரணமாக, அவர்களை கண்டாலே ஒதுங்கி விடுவேன். மெளனியும் கும்பகோணத்துக்காரர் என்பதையும், அவரும் ந. பி.யும், கு. ப. ரா.வும் அடிக்கடி சந்தித்துப் பேசுவார்கள் என்பதையும் அவர்களுடைய நண்பரான என் ஹிந்தி ஆசிரியர் சொல்லியிருந்தார். ஆனால் நானாகச் சென்று அவர்களுடன் பேச, எனக்குத்’ தைரியம் இல்லை. இன்று மெளனியே என்னைத் தேடி வந்திருக்கிறார்; நான் அவருக்கு முன்னால் உட்கார்ந்திருக் கிறேன் என்பதே எனக்கு அதிசயமாக இருந்தது.

! நின்றய எழுதுகிறாயா? '....

இல்லை சார். படிப்பு நேரத்துக்குப் பிறகு...எழுதுவேன். என்று பொய் சொன்னேன். உங்கள் காதல் சாலையை இருபது முப்பது தடவை படித்தேன்.....உங்களுடைய ஸ்டுடன் ட் எப்படி சார்?' என்று என் தெரு நண்பனைப் பற்றிக் கேட்டேன்.

ஒன்றும் இல்லாத இடத்தில் சாமான்களை வைப்பது. சுலபம்; ஆனால் தேவையில்லாத சாமான்களும் குப்பை கூளமும் நிறைந்த இடத்தில் சரியான சாமான்களை எப்படி வைப்பது? உன் சினேகிதன் நிறைய தெரிந்து வைத்திருக்கிறான்-தப்பு தப்பாக! முதலில் அதை எல்லாம் கூட்டித் தள்ளி சுத்தம் செய்ய வேண்டியிருக் கிறது. பிறகுதான் புதிதாய் சொல்லித்தர வேண்டி இருக் கிறது. ஆக, இரண்டு வேலை எனக்கு!

என் நண்பனைப் பற்றிய இந்த வருணனையைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது.

"சரியானது எதையும் அவன் மூளை ஏற்க மறுக்கிறது. அவனோடு இது வேறே கஷ்டம். மேத்ஸ் மட்டும் வரவில்லை என்று என்னை டியூடராக வைத்தார்கள்.

ஆனால் அவன் எந்த சப்ஜெக்டில் கெட்டிக்காரன் என்று அவனுக்கே தெரியவில்லை!"

என் நண்பன் பணக்கார வீட்டுப் பிள்ளை; அவனைப்பற்றி மெளனி ஜோக் அடிப்பதைக் கேட்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
'உங்களுக்கு எப்படி சார் இவன் பழக்கம்?" -*

'எனக்குப் பழக்கம் இல்லை. ஒரு சிநேகிதன் சிபாரிசு செய்தான்; ஒப்புக்கொண்டேன். எனக்கும் பொழுது போகுமே என்று நினைத்தேன். நிறைய படிக்கிற வழக்கம் இருக்கிறதா உனக்கு: அதென்ன புத்தகம்?" என்றபடி நான் படித்துக்கொண்டிருந்த த கிரேட் ரஷ்ஷியன் ஷார்ட் ஸ்டோரீஸ்' என்ற புத்தகத்தைக் கையில் எடுத்தார்; அதைப்பற்றி ஏதோ கூறினார்; எனக்குப் புரியவில்லை.

ஒரு பெரிய ஆச்சரியத்துக்கு எதிரில் அமர்ந்திருப்பது போன்ற பரவசத்தில் நான் சிக்கியிருந்தேன். எனக்கு அவருடைய கதைகளில் ஈடுபாடு இருந்தது. ஆனால், அக்கதைகளின் சிறப்பு என்ன என்று விண்டுநோக்கும் பக்குவம் எனக்கு இல்லை. மணிக்கொடி ஆசிரியர் பி. எஸ். ராமையா முதல் அத்தியாயம்' என்ற தலைப்பில் ஒவ்வொரு இதழிலும் எழுதியுள்ள ஆசிரியர்களைப் பற்றியும் கதைகளைப் பற்றியும் சிலபல வரிகள் எழுதுவது வழக்கம். மெளனியின் முதல் கதையைப் பெரிதும் வியந்து பாராட்டி எழுதினார். காதல்சாலை' என்ற கதையைப்போற்றி ராமையா ஒரு முழுப்பக்கமே எழுதியிருந்தார். அவற்றை எல்லாம் நான் கவனமாய்ப் படிப்பேன். என் கதைகள் வெளிவந்துகொண்டிருந்தா லும் சிறுகதையின் வடிவம் உள்ளடக்கம், உத்தி முதலியவை பற்றி அப்போதுதான் நான் சிறிதளவு தெரிந்துகொண்டிருந்தேன். ஆகையால், மெளனியின்


கருத்துகளைக் கேட்டுக்கொள்ளத்தான் என்னால் முடிந்தது.

மெளனி வாரத்தில் 3, 4 நாள் எங்கள் தெருவுக்கு வருவார்; டியூஷன் முடிந்த பிறகு வாரம் ஒருமுறையாவது என்னைப்பார்க்க வருவார். அவர் வருவதையும், பேசுவதையும் நான் மிகவும் விரும்பினேன்; வேண்டி னேன். ஆனால், அவருடைய கருத்துகள் என்னைத் திகைப்புறச் செய்தன.

வெறும் சென்டிமென்ட்ஸ் வைத்துக் கவிதை எழுதும் (பாரதியார் ஒரு கவிஞனா?” என்று அவர் பலமுறை சொன்னதை வியப்புடன் கேட்பேன். ஒரு சந்திப்பின்போது, நேற்று ராத்திரி பிச்சமூர்த்தி, ராஜகோபாலனோடு பேசிக்கொண்டிருந்தேன். இவன்கள் எல்லாம் என்ன கதைகள் எழுதுகிறான்கள். சரியான அப்ரோச்சே இல்லை' என்று பரிகாசம் செய்தார். அவருடைய பல சந்திப்புகளால், புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு. ப. ரா., சிதம்பர சுப்புரமணியன்,
சிட்டி, ராமையா முதலிய மணிக்கொடி எழுத்தாளர் யாரையும் அவர் எழுத்தாளராக ஏற்றதில்லை என்பது தெரிந்தது. நான் மிகவும் மதித்த இலக்கியப் படைப்பாளிகளை எல்லாம் அவர் பீடத்திலிருந்து கீழே தள்ளிவிடுவதை நான் வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஆர். எஸ். மணி என்பது மெளனியின் இயற்பெயர். மெளனி என்னும் புனைப்பெயரை அவருக்கு சூட்டியவர் ஆசிரியர் பி. எஸ். ராமையா. புனைப்பெயரைப் பொய்யாக்கி நிறையப்பேசுகிற சுபாவம் அவருக்கு. அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது; மெளனி பேசியதெல்லாம் எனக்கு நினைவு இல்லை. நினைவில் உள்ளவற்றை மட்டும் உண்மைக்கு மாறுபடாமல் இங்கே பதிவு செய்கிறேன்.


ஒருமுறை அவரைக் கேட்டேன். நீங்கள் எப்படி கதை எழுதுகிறீர்கள்?"
'மனத்தில் தோன்றுகிறவை, கற்பனையானவை, திடீரென்று எழும் கருத்துகள்-எல்லாம் நான் ஒரு நோட்டில் குறித்துவைக்கிறேன். எழுதும்போது அதில் சில எனக்கு உபயோகப்படும். வீட்டுக்கு வாயேன், காட்டுகிறேன்' என்றார்.

நான் கல்லூரிக்குப் போகும் வழியில்தான் அவர் வசித்த காமாட்சி ஜோசியர் தெரு இருக்கிறது. மறுநாள் மாலையே அவருடைய வீட்டுக்குப் போனேன். பெரிய, இரட்டை மாடி வீடு. வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், எதிரெதிரான இரண்டு நாற்காலிகளுக்கு இடையில் ஒரு சிறிய மேஜை அவர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், வா’ப்பா, காலேஜ் போகவில்லையா? என்றார்.
-- கடைசி பீரியட் லெக்சரர் வரவில்லை. வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார்கள். நீங்கள் வரச்சொன்னர் களே......

உள்ளே சென்று உடனே திரும்பியவர், மேஜை மீது ஒரு கனமான புத்தகத்தை வைத்தார்: கதைக்கான குறிப்புகளை இதில்தான் எழுதிவைக்கிறேன்.'

ஐந்தாறு கொயர் பருமனிருந்த அந்த நோட்டை அவரே தயாரித்துக் கொண்டிருக்க வேண்டும். நோட்டைப் புரட்டினேன். எந்த பக்கத்திலும் நேர்வரிசை யாக எழுதப்படவில்லை. குறுக்கும் நெடுக்குமாகப் பாதி நோட்டுக்கு மேல் கிறுக்கியிருந்தார். கஷ்டப்பட்டுத்தான் அவருடைய கையெழுத்தைப் படிக்க முடிந்தது. பல வரிகள் படித்தேன். எதுவும் இப்போது நினைவில்லை.

இது இரண்டாவது நோட்டு என்றார் மெளனி.


அவரைப்போலவே நானும் இப்படி குறிப்புகள் எழுதப்பழகவேண்டும் என்று மனத்தில் ஒரு தீர்மானம் செய்தேன்; ஆனால், அதை ஒருநாளும் நான் செயல் படுத்தவில்லை. எங்கள் வீட்டுக்கு அவர் வந்தாலும் சரி, அவர் வீட்டுக்கு நான் போனாலும் சரி, பேசியவர் அவர்: கேட்டுக்கொண்டவன் நான்.

sweet seventeen - (G)anfu 16Gaurop)3(51% thirsty thirty - (தாகம்ான் முப்பது)க்கும் இடையில் நிகழ்ந்த இந்தச் சந்திப்புகளால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? என் எழுத்துப்பித்தம் வலுத்தது. மெளனி என்னும் ಹಾಕಿ சிலை மேலும் அழகுற்றது என் மனத்தில். i
பதினோரு வருடங்களுக்குப் பிறகு நான் தேனி மாத இதழைத் தொடங்கினேன். மெளனியைக் கட்டாயம் எழுதவைக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு. அவர் கும்பகோணம் வீட்டை விற்றுவிட்டு சிதம்பரத்தில் அரிசி மில் வைத்திருந்தார். அவருக்கும், க. நா. சு. வுக்கும் கடிதம் எழுதியதோடு, எனக்குத் துணையாக உத்விய கரிச்சான்குஞ்சு"வையும் அவர்களை நேரில் கண்டு தேனீக்கு எழுதும்படி வற்புறுத்தினேன். இருவருமே தேனி ஆபீஸுக்கு-எங்கள் வீடுதான் ஆபீஸ்-அடிக்கடி வரலானார்கள்; ஸ்டைல்தான் வித்தியாசம் க. நா. சு. ஆடம்பரமாக வந்து இரண்டொரு நாள் தங்குவார். மெளனி திடீரென்று முற்பகலில் வருவார்; அவசரமாகத் திரும்ப வேண்டும் என்று திண்ணையிலேயே புறப்படத் தயார் நிலையில் உட்காருவார்; இரண்டு மூன்று மணி நேரம் பேசிவிட்டு அவசரமாய்த் கிளம்புவார். இரண்டொரு முறைதான் அவர் ஆபீசுக்குள்ளே வந்ததாய் ஞாபகம். மெளனியும், க. நா. சு. வும் ஏக காலத்தில் தேனி ஆபீசுக்கு வந்தார்களா என்பது எனக்கு நினைவில்லை.


மணிக்கொடி நின்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. கு. ப. ரா. கிராம ஊழியனுக்கு ஆசிரியராக இருந்தார்; ஆனால், அவர் மெளனி'யின் எழுத்துகளைத் தேடிப் போகவில்லை. கவிஞர் சாலிவாகனனின் (வி. ரா. ராஜகோபாலன்) ஆசிரியராக இருந்த கலாமோகினி' யில் கு. ப. ரா., நான், க. நா. சு., தி. ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, சிட்டி முதலியவர்கள் எழுதினார்கள். க. நா. ஏனோ மெளனியை எழுதத் துண்டவில்லை. 1 லிருந்து 1948 வரை மெளனி ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் புதுமைப் பித்தன் ஒரு ரேடியோ பேச்சுக்கு இடையில் மெளனியை சிறுகதையின் திருமூலர், சொல்லில் அடைபட மறுக்கும் கருத்துகளைச் சொல்லாக்கியவர்' என்று வரையறை இன்றிப் புகழ்ந்தார். புதுமைப்பித்தனின் இந்தப் போற்றி உரையைக்கூட க. நா. சு. வும் மற்றும் சிலரும் உடனே பற்றிக்கொள்ளவில்லை; பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர்கள் புதுமைப்பித்தனின் கருத்தைப் பின்பற்றி மெளனியைக் கண்டுகொண்டார்கள் என்று நான் கூறினால் தவறாகுமா? க. நா. சு. ஆசிரியராக இருந்த சந்திரோதயம், சூறாவளி-இதழ்களில் மெளனி எழுதவில்லை.

மெளனியின் சிறுகதைகள் தேனி'யை அலங்கரிக்க வேண்டும் என்பது என் விருப்பம்; அவருடைய இரண்டு சிறுகதைகள் தேனியில் வந்தபோதும் க. நா. சு. அவைபற்றி போற்றியோ துாற்றியோ எங்களிடம் அதிகமாகப் பேசியதில்லை. மணிக்கொடிக்குப் பிந்தைய பத்து ஆண்டுகளில் நான் ஓரளவு இலக்கியப் பயிற்சியும் வாழ்வியல் அறிவும் பெற்றுவிட்டேன். 17, 18 வயதுகளில் என்னிடம் இருந்த மாணவ மனோபாவம் முற்றிலும் அகன்றுவிட்டது. மணிக்கொடியில் எழுதியவர்களின் இலக்கியப் பங்களிப்பின் பெருமையை, கல்லூரிப் பருவத்தின் கலங்கல் இல்லாத தெளிவுடன் இப்போது உணரத் தொடங்கியிருந்தேன்.


தேனி முதல் இதழுக்கு மெளனியின் சிறுகதை வரவில்லை. இதழ் வெளியான சில நாட்களுக்குள் அவரே எங்கள் வீட்டுக்கு வந்தார். முதல் இதழ் பூராவையும் அவர் படித்ததாய்க் கூறினார். அந்த இதழில் எழுதிய எழுத்தாளர் ஒவ்வொருவரையும் மற்றோர் எழுத்தாளர் அறிமுகப்படுத்தி இருந்தார். இது ஒரு நல்ல அம்சம் என்று கரிச்சான்குஞ்சு, ஜானகிராமன், நான்கருதினோம்.

மெளனிக்கு இந்தப்பகுதி பிடிக்கவில்லை: ஒருவரை ஒருவர் முகஸ்துதி செய்துகொள்ளக்கூடாது' என்றார்:

'இது முகஸ்துதி இல்ல்ை, சக எழுத்தாளரிடம் நாம் காணும் குறைகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறோம். என்றதோடு அந்தப் பகுதிகளையும் காட்டினேன். அவர் திருப்தி அடையவில்லை.
அந்த இதழில் ராஜகுடும்பம்' என்கிற என் சிறுகதை வந்திருந்தது. தேனியை மிகவும் பாராட்டி வரவேற்ற ஹிந்து நாளேடு என் கதைகளையும் புகழ்ந்து சில வரிகள் எழுதி இருந்தது. -
'ஹிண்டுவில் தேனி விமரிசனம் படித்தேன், உன் கதையை மெச்சி இருக்கிறான். அந்தக் கதையில் அப்படிப் பேச என்ன இருக்கிறது? தப்புத் தப்பாக எழுதியிருக் கிறதே! என்று அவர் கூறியது எனக்குப் புரியவில்லை.

‘என்ன தப்பு சார்?' அக்கதைப் பற்றி எனக்கு ஒரு நிறைவு இருந்தது, அதில் என்ன தப்பு கண்டார் என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
'கதையில் ராஜாவும் வரவில்லை, ராணியும் வர வில்லை. ராஜ குடும்பம் என்று எப்படி பெயர் வைக்க லாம்?-அவர் கூறியதை நான் ஜோக் அடிக்கிறார்’ என்று எண்ணிச் சிரித்தேன்.


'இப்படி சம்பந்தம் இல்லாமல் பெயர் வைப்பது தப்பு'-என்று மறுபடியும் அழுத்திப் பேசின. பிறகுதான் அவர் உண்மையாகவே கண்டிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

கதைநாயகனுக்கு ராஜா என்று பெயர். அவன் தன் மனைவியை ராணி என்று பிரியமாக அழைக்கிறான். ஒரே குழந்தையை இளவரசு என்கிறார்கள், பாகத்தால் பிணைந்த இந்த அழகான குடும்பத்தை ராஜகுடும்பம் என்கிறேன்; அதிலே தப்பு என்ன?" -- ?----

‘ராஜா, ராணி வராத கதைக்கு ராஜகுடும்பம் என்று நீ பெயர்:இட்டது தப்புதான் என்று அவர் முடிவு கட்டி பேசினார்.

; : அதிே கதையில் என் கதாநாயகன் ஈரானி ஹோட்ட லுக்குச் சென்று பிரியாணி சாப்பிடுகிறான். . .

- அந்த வார்த்தையைக் கேட்டால்ே எனக்குக் குமட்டு கிறது. நீ எழுதியிருக்கக் கூடாது!"

-\ . அவருட்ைய தர்க்க நியாயத்தின் அடியொற்றி நான், அவன் , அசைவப்பயல் சார் என்ன என்னவோ சாப்பிட்டுத் தொலைக்கிறான், நான் என்ன செய்ய முடியும்!" என்றேன்.

நீ அந்த வார்த்தையை எழுதி இருக்க வேண்டாம்' என்றார் முடிவாக. - -
அவருடைய சைவ உணவுப் பற்று-என் கதையைப் புதுமையாக ஒரு விமரிசனத்துக்கு உள்படுத்தியது. சாதி, மதம், கட்சி பார்த்து விமரிசனம் செய்கிறார்கள் தமிழ் நாட்டில் சிலர், உணவுமுறையையும் பார்ப்பது புது முறை விமரிசனமாக இருக்குமே! .

தேனியில் நான் எழுதிய முதல் கதையைத் தூளாக்கி விடுவது என்னும் உறுதியோடு மெளனி அன்று வந்திருந் தாக் போலும்; அடுத்து, கதாசிரியனான என்னைப்பற்றி


தி. ஜானகிராமன் எழுதியிருந்ததை மெளனி கண்டிக்கத் தொடங்கினார். -
மகாபாரதத்தில் வெறும் எலும்புக்கூடுகள் என ஜீவனற்றுக் கிடந்த சில பெண் பாத்திரங்களை உயிரும் உணர்வும் உள்ள அழகிகளாக நான் உருவாக்கினேன் என்பதுபோல் தி. ஜா எழுதியிருந்தார். -
---
"மகாபாரதத்திலிருந்து எலும்புக்கூடுகள் தோண்டி எடுப்பதாவது சொல்லவே அருவருப்பாக இருக்கிறது:மெளனியின் இந்த விமரிசனத்தை நான் கட்சியர்டாமல் ஒப்புக்கொண்டேன். மாபெரும் இதிகாசத்தைப் படைத்த வியாச முனிவர் எலும்புக்கூடுகளையா தம் நூலில் போட்டிருப்பார்? அப்படி எழுதியதும், அதை நான் வெளியிட்டதும் அநாசாரம், அநாகரிகம் என்பதை மெளனி சுட்டிக்காட்டிய பிறகே நானும், தி. ஜா வும் உணர்ந்தோம். -
இந்த உரையாடல்கள் ஒருபுறம் இருக்க, தேனிக்கு கதை எழுதித் தருமாறு ஓயாமல் அதைக் கேட்டுக்கொண் டிருந்தேன். அந்த பெரும் கலைஞன்ைத் தேனி'யில் காணவேண்டும் என்று எனக்கு ஏக்கமாக இருந்தது.

மெளனியின் முதல் கதையை, கரிச்சான்குஞ்சு சிதம்பரத்துக்குச் சென்று வாங்கிவந்தார். மெளனி கரிச்சான்குஞ்சுவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கதையை எழுதிக் கொடுத்துள்ளார். அவர் எழுதியதைப் படித்துக்கூடப் பார்க்கவில்லை, திருத்திப் போட்டுக் கொள்ளச் சொன்னார்?' என்றபடி கைப்பிரதியை என்னிடம் கொடுத்தார் கரிச்சான்குஞ்சு. -
'நீங்கள் படித்தீர்களா?

நேரம் ஏது? கடிதங்களைச் சுருடடிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிவிட்டேன், அவருக்கும் அவசரம்'.

ஆவலும் மகிழ்ச்சியுமாகக் கதையைப் படிக்கத் தொடங்கினேன். முதலில் எழுத்துகள் புரியவில்லை. பிறகு, ஒரு வாக்கியமும் முடிவுபெறவில்லை, அடுத்த வாக்கியம் எங்கே ஆரம்பம் ஆகிறது என்றும் புரியவில்லை. இலக்கண அமைதியோ தெளிவோ கதையில் காணோம்-எனக்கு ஒரே மலைப்பாக இருந்தது.

கரிச்சான்குஞ்சுவும் படித்தார். நாலைந்து பக்கம் படித்ததும், இதென்ன, ஒன்றும் புரியவில்லை. அவரையே சரிசெய்து கொடுக்கச் சொல்லலாமே! என்றார்.

வேண்டாம், அவர் திருத்திக்கொடுப்பதற்குள் மாதம் போய்விடும், நான் எடிட் செய்கிறேன்.

கதையைத் திருத்தம் செய்ய எனக்குச் சில நாட்கள் ஆயின. மெளனியின் சிறுகதை வடிவம் அவருக்கு இயல்பாக வந்த ஒர் அற்புதம் போகிற போக்கில் காட்சிகளைத் தோற்றுவிப்பதும், பிம்பங்களை (images) உயிர்ப்பிப்பதும் அவருடைய எழுத்துகளின் வலிமை. இந்த அவருடைய பெருமைகளுக்குச் சற்றும் ஊனம் ஏற்படாமல் கதையைத் திருத்தம் செய்ய எனக்கு மிகக் கவனம் தேவைப்பட்டது. கால், அரை, முற்றுப்புள்ளி க்ளைக்கூட ஜாக்கிரதையாகப் பயன்படுத்தவேண்டி யிருந்தது.

மெளனியைச் சந்தியுங்கள் என்று ஹிண்டு, மித்திரன், தினமணி ஆகிய தினசரிகளில் எல்லாம் விளம்பரம் கொடுத்தேன். இதனால், கரிச்சான்குஞ்சு உள்படச் சில எழுத்தாளர்களுக்கு என்மேல் வருத்தம். கதை வெளியான பிறகு, அவர்களின் பொருமல் எனக்குக்கேட்டது. லா. ச. ராமாமிர்தம் கதையைப் பாராட்டு வதேபோல் பரிகாசம் செய்து ஒரு நீண்ட கடிதம் எழுதியது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. மெளனி தன் கதையை தேனி'யில் கண்டு எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அச்சான பிறகு, கதையைப் படித்தபோது: அக்கதையின் படைப்பாளி நானே என்பது போன்ற பெருமிதம் எனக்கு உண்டாயிற்று.

மெளனியின் தமிழ் பற்றி எனக்கு சிறிது கவலையாக இருந்தது. அவசர அவசரமாக எழுதியதால் மெளனியின் தமிழ் குழம்பி இருக்கலாம் என்று நானும் சமாதானம் சொல்லிக்கொண்டேன். அடுத்த கதைக்காக அவரை 'நச்சரிக்க'லானேன்.

மெளனின் முதல் கதையுடன், அவரை வாசகர்களுக்கு. அறிமுகம் செய்யும் பொறுப்பை க. நா. சு. வுக்கு கொடுத்தேன்; அவர் தன் பொறுப்பை நல்லவிதமாகவே நிறைவேற்றினார். க. நா. சு. வின் அறிமுகத்தோடுதான் மெளனி யின் முதல் கதை தேனியில் வந்தது. மெளனி பின் தமிழ் பற்றிப் பேசியபோது க. நா. சு. அதை பொருட்படுத்தவில்லை. -

இரண்டாவது கதை வந்து சேர்ந்தது. அதுவும் முதல் கதைபோலவே இருந்தது. நானே அதையும் ஒழுங்குபடுத்தி 'நினைவுச்சுவடி’ என்ற பெயரிட்டு தேனீயில் வெளியிட்டேன். முன்னைப்போலவே மெளனிக்கு மட்டும் தினசரிகளில் விளம்பரம் செய்தேன். -
இந்தத்தடவை கரிச்சான்குஞ்சுவோடு தி. ஜானகி ராமனும் சேர்ந்து கொண்டார். இருவரும் மெளனி'யின் ரசிகர்களே; ஆனால் அவருக்கு மட்டும் சிறப்பிடம் கொடுப்பதை இருவரும் விரும்பவில்லை.
மெளனியின் தமிழ் பற்றி எனக்குக் கவலையும் வியப்புமாக இருந்தது. மணிக்கொடியில் வெளியான

கதைகளின் கைப்பிரதிகளும் இப்படித்தான் இருந்தனவா? பி. எஸ். ராமையா எடிட்' செய்தாரா, வேறு யாராவது அவருக்கு உதவினார்களா? அல்லது மெளனியின் கைப்பிரதிகள் சரியான தமிழில் இருந்தனவா?

இந்த கேள்விகளுக்கு விடைகாணும் முன், மெளனி யின் மூன்றாவது கதை வருமுன், தேனியை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. - -

இலக்கிய விசாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வியாபாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். 1954-ஆம் ஆண்டு, ஜூலை, ஆகஸ்ட் மாதம் நானும். ஒரு வியாபாரி நண்பரும் சிதம்பரம் செல்ல நேர்ந்தது, ஏதோ ஒரு தெரு வழியாகப் போகும்போது, பின்னா லிருந்து யாரோ என் பெயர் கூறி என்னைக் கூப்பிட்டார் கள். திரும்பிப் பார்த்தேன்: மெளனி ஒரு வீட்டு வாசலில் நின்றார். மகிழ்ச்சியோடு அவரை நெருங்கினேன்: என்ன் சார், எப்படி இருக்கிறீர்கள்?’ என்றபடி.
'நீ எங்கே இங்கே?' என்றவரிடம், நான் சிதம்பரத் துக்கு வந்த வேலையைக் கூறினேன். அவர் எங்களை உள்ளே வருமாறு அழைத்தார். திண்ணையிலேயே உட்கார்ந்த அவருக்குப் பக்கத்தில் நாங்கள் அமர்ந்தோம். என்னோடு இருந்த நண்பர் வியாபாரி, இலக்கிய வாசனை அறியாதவர் உள்ளே வருமாறு அழைத்த மெளனி எங்களைத் திண்ணையில் நிறுத்தியதை நண்பர் ரசிக்கவில்லை; சீக்கிரம் போகணுமே!’ என்றார்.

மெளனியும் நானும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தோம்; பேச்சுக்கு இடையில் அவர், 'ஒரு கதை எழுதினேன். விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பினேன். திருப்பி அனுப்பி விட்டார்கள்', என்று வருத்தப்பட்டார்.


‘விகடனுக்கும் குமுதத்துக்கும் ஏன் சார் அனுப்பினர் கள்?' என்றேன் வியப்புடன்.

- "அவைதானே பிரபலமாக இருக்கின்றன! அவர்கள் அதிகப் பணம் தருவதாகச் சொன்னார்கள்.

'உங்களுக்கு எதுக்கு சார் பணம்: விகடன், குமுதம் எல்லாம் உங்கள் கதையைப் போடாது. சிவாஜி தீபாவளி மலரில் போடச் சொல்கிறேன். சிவாஜி சிறிய பத்திரிகை, பணம் கிடைக்காது. கதையை மரியாதையோடு வெளியிடு வார்கள், அதைப் பெருமையாகவும் நினைப்பார்கள்.

அவர் உள்ளே சென்று கைப்பிரதியைக் கொண்டு வந்தார். நீயே வைத்துக் கொள். தீபாவளி சமயம் சிவாஜிக்கு அனுப்பலாம்'
சார், வேண்டாம். காணாமல் போய் விட்டால், கஷ்டம். நீங்கள் தீபாவளி மலருக்கு அனுப்பல்ாம். கடிதம் வரும்'-நான் கதையைப் படிக்கவில்லை. நேர மில்லை, மதிய உணவு நேரம்; பசியால் என் நண்பருக்கு ஒரே கோபம். இடையிடையில், போவோமா? என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்.

ஒருவாறு மெளனியிடம் விடைபெற்றோம். வெளியில் வந்ததும் என் நண்பர் குமுறினார். பெரிய எழுத்தாளர், உங்களுக்கு ரொம்ப வேண்டியவர் என்றீர்கள். விட்டுக் குள்ளேகூட அழைத்துப் போகவில்லை. இவ்வளவு நேரம் பேசினீர்கள், ஒருவாய் தண்ணீர்கூட தரவில்லை.

தாகமாக இருந்தால் தண்ணிர் கேட்டிருக்கலாமே!என்று சிரித்தேன். கட்டாயம் கொடுத்திருப்பார்.

சிவாஜி தீபாவளி மலருக்கு மெளனியின் கதை கிடைக்கும் என்று ஆசிரியர் கவிஞர் திருலோக சீதாராம னுக்கு கடிதம் எழுதி விட்டேன்.
அடைமழை பெய்து கொண்டிருந்தது. ரயில், பஸ் போக்குவரத்துப் பாதைகள் காயப்பட்டுக் கிடந்தன. ஊருக்குள் தெருக்கள் சாக்கடைகள் போலக் காட்சி அளித்தன. வீட்டுக்கு வெளியே செல்லவும் அச்சமாக இருந்தது. தீபாவளி 15 நாள் தூரத்தில் இருந்தது.
நள்ளிரவு கடந்து விட்டது. கொட்டுமழையின் சந்தடியை மீறி, யாரோ பலமாய் கதவு தட்டும் சத்தம் கேட்டு என் தூக்கம் கலைந்தது. கதவு திறந்தேன். சிவாஜி ஆசிரியர் கவிஞர் திருலோக சீதாராம். பாதி நனைந்த கோலத்தில்!

எனக்கு ஆச்சரியமாக இல்லை. கவிஞருக்கும் எனக்கும் இருந்த நட்பு அப்படி நேரம் கெட்ட நேரத்தில் அவர் என்னைக் காண வருவது சகஜம். கவிஞருக்குப் பள்ளிப் படிப்பு அதிகமில்லை. மகாகவி பாரதியாரின் கவிதை களை அரசியல், இலக்கியக் கட்டங்களில் பாடிப்பாடியே கவியாக மாறியவர். பாரதியாரின் கவிதைகள் எல்லாம் அவருக்கு மனப்பாடம். அவருக்கு இயற்கையாக அமைந்த செளக்கியமான சாரீரம், உணர்ச்சிவசப்பட்டுப் பாடு வதைக் கேட்டவர்கள் இருப்பிடத்தை விட்டு அசைய மாட்டார்கள். தமிழ்நாட்டில் அவர் கலந்து கொள்ளாத பாரதிவிழா சுகப்படுவதில்லை. அவர் பாரதியாரின் ஞான வாரிசு என்றே பலரும் கருதினார்கள்.

அவருடைய வாழ்க்கை சித்தர்களின் வழி வளமை யிலும் ஜொலிப்பார், வறுமையிலும் ஜொலிப்பார். வெற்றி வீரர்களாய் உலகத்தால் ஏற்கப்பட்ட பெரிய மனிதர்கள் பலர் மனம் சோரும்போது அவரைத் தேடிச் செல்வார்கள்; அவர் பாடக்கேட்டு தைரியத்தை மீட்டுக் கொள்வார்கள். டெலிபோனில் அவரைப் பாடச் சொல்லிக் கெஞ்சுவார்கள் பலர். அவருடைய குரல் ஒலி குனிந்த தலையை நிமிரச் செய்யும்.


1944இலிருந்து எங்கள் நட்பு தொடங்கியது; பரஸ் பரம் வியக்கும் நட்பு. தமிழ்நாட்டில் அவர் எந்த ஊரில் சொற்பொழிவாற்றினாலும், உடனே திருச்சிக்கு திரும்ப மாட்டார். நேராக கும்பகோணத்துக்கு என்னைத் தேடி வருவார். தூத்துக்குடியிலோ, நாகையிலோ பேசியதை அப்படியே, அதே உணர்ச்சிப் பாவனையோடு எனக்கு முன்னால் பேசுவார்; நான் சபாஷ் சொன்னால்தான் அவர் அமைதி அடைவார்.

திடீரென்று நள்ளிரவில் கதவு தட்டுவார்; உள்ளே வரும்போதே, சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?" என்று கேட்பார். நீராகாரமும் நீர் வடுவும் நிச்சயம் இருக்கும். சிலசமயம் பட்சணமும் பழமும் கொடுப்போம். வயிறு நிம்மதியானதும்; குழந்தைகள் தூக்கத்தைக் கெடுக்க வேண்டாம். திண்ணைக்குப் போவோம்' என்ற படி வெற்றிலை டப்பாவுடன் திண்ணைக்குப் போவார்;எங்கள் இருவரிடமும் வெற்றிலை, சீவல் ஸ்டாக் நிறைய இருக்கும்.

திண்ணைக்குப் போனதும், கன்யாகுமரியில் பேசிய தைத் திரும்பப் பேசுவார்; பாரதியார் பாடல்களோடு சொந்தக் கவிதைகளையும் பாடுவார். நாலு அல்லது ஐந்து மணி ரயிலைப் பிடிக்க வேண்டும் என்று பையைத் தூக்கிக் கொண்டு கிளம்புவார்...... இது எங்கள் நட்பின் ஒரு பகுதி......

ஒரு மழையில் வந்த கவிஞர் திருலோகத்திடம், எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று கேட்டேன்.
'மதுரையிலிருந்து......
'மதுரையிலிருந்து கும்பகோணமா...... இந்த மழையில்...உட்காருங்கள்'.

உட்கார நேரம் இல்லை; மூன்றரை மணி ரயிலை, .பிடிக்க வேண்டும். புறப்படுங்கள்......" -


‘என்ன, ஏது என்று சொல்லாமல்...... -
நீங்களும் நானும் சிதம்பரம் போகிறோம். மெளனியிடமிருந்து கதை வாங்கிவர வேண்டும்'.

இந்தப் பிரளய மழையில் சிதம்பரத்துக்கா?

பிரளய கால மழையில் இரண்டு கவிஞர்கள் மெளனியின் கதை தேடிப் போனார்கள் என்று வரலாறு படைப்போமே!’ என்றார் கவிஞர், நின்றபடியே.

திருலோகம், முதலில் உட்காருங்கள். பிறகு வரலாறு படைப்போம். இந்தப் பேய் மழையில் கதை தேடி அலைய வேண்டாம். தாளைக்கு நான் மெளனிக்கு எழுது கிறேன், இரண்டே நாளில் கதை வந்து விடும். ---
மெளனியின் கதையோடுதான் இந்த ஆண்டு தீபாவளி மலர் வெளிவர வேண்டும்.

அது என் பொறுப்பு. எழுதிய கதை வீணாகி விடக் கூடாது என்று மெளனியும் நினைக்கிறார்

சிவாஜி ஆசிரியர் விடியலில் திருச்சிக்குப் புறப்பட் டார். கதை கேட்டு மெளனிக்கு எழுதினேன். நான் எதிர் பார்த்தபடி, மறு தபாலில் கதை வந்தது. வழக்கம்போல் அதைத் திருத்தி சாவில் பிறந்த சிருஷ்டி என்று பெயர் சூட்டி, சிவாஜிக்கு அனுப்பினேன். 1954ஆம் ஆண்டு சிவாஜி தீபாவளி மலரில் அக்கதை வெளிவந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிவாஜி ஆசிரியர் கேட்டுக்கொண் டதற்கு இணங்கி, மெளளியிடம் கதை கேட்டேன். அவரும் உடனே அனுப்பினார். இந்தக் கதையையும் திருத்தம் செய்து குடை நிழல்' என்று தலைப்பிட்டு சிவாஜிக்கு அனுப்பினேன். 1959 சிவாஜி தீபாவளி மலரில் இக்கதை இடம்பெற்றது.

1948 முதல் 1959 வரை நான் மெளனியின் நான்கு கதைகளை திருத்தம் செய்திருக்கிறேன். அவருடைய தமிழ்


எனக்குப் பிரமிப்பாகவே இருந்தது. மணிக்கொடியில் அவர் எழுதிய கதைகளின் தமிழும் இப்படித்தான் இருந்ததா? என்றொரு சந்தேகம் எனக்கு. பல ஆண்டு களுக்குப் பிறகு ஆசிரியர் பி. எஸ். ராமையாவிடம் பேச்சுக்கிடையில் இதுபற்றிக் கேட்டேன். ஒருமாதிரி யாகத்தான் இருக்கும். நாங்கள் திருத்தி வெளியிட்டோம்' என்று கூறினார். ஒரு பெரும் கலைஞனிடம் இப்படி ஒரு பலவீனம் இருந்ததை நினைக்க இப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அப்பால் ஒரு தடவை மெளனி எங்கள் வீட்டுக்கு வந்தார். இருவரும் பேசியபடி ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தோம். தம்மிடம் ஒரு கதைக்கான கரு இருப்பதாய்க் கூறிய மெளனி கதையைச் சொல்லத் தொடங்கினார். மிகவும் அழகாய்க் சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. -

(LGaు சொல்லாதீர்கள், கதையை நானே எழுதிவிடுவேன்போல் இருக்கிறது.

எழுது நானும் எழுதுகிறேன்' என்றார் அவர். மெளனி கொடுத்த கருவிலிருந்துதான் கருகாத மொட்டு’ என்னும் என் கதை பிறந்தது. அது கல்கி'யில் வெளி வந்தது. மெளனி அதே பீஜத்தைக் கொண்டு பிரக்ஞை வெளியில்' என்னும் கதையை எழுதினார்; அது 1960இல் சரஸ்வதியில் வந்தது. பிறகு, பல ஆண்டுகள் வரை நான் அவரைச் சந்திக்க வில்லை

1973ஆம் ஆண்டு, ஐந்து எழுத்தாளர்கள் என்னிடம் ஒரு நீண்ட பேட்டி எடுத்தார்கள். அது கண்ணதாசன் செப்டம்பர் இதழில் வெளிவந்தது. அந்த பேட்டியில் மெளனியின் சிறுகதைகள் பற்றின என் கருத்தைக்
கூறாமல், எழுத்தாளர் என்ற முறையில் அவரிடம் கண்ட பலவீனங்களை மட்டும் சொல்லிவைத்தேன்.

கண்ணதாசனின் பேட்டி வெளியாகும் முன்பே, மெளனியை இரண்டு மூன்று முறை சந்தித்திருந்தேன். சிதம்பரம், மணிவாசகர் பதிப்பகத்தார் என் நாவல்களை வெளியிடும் பொறுப்பை ஏற்றிருந்தார்கள்; அவர்கள் தான் மெளனியின் புதிய முகவரி கொடுத்தார்கள். தனியாகவும், நண்பர்கள் சிலரோடும் அவரை நான் சந்திப்பது வழக்கம்.

கண்ணதாசனின் பேட்டி அச்சான பிறகு, மெளனி பற்றி பேசியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. அவருக்கு வாழ்க்கையில் பல அல்லல்கள், சித்தத்தைக் குழப்பும் பல துயர நிகழ்ச்சிகள். நானும் பல துன்பங் களோடு வாழ்ந்தவன். அவருடைய மனத்தைப் புண்படுத்திவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. ஆயினும், எய்தான பிறகு அம்பை மீட்டுக் கொள்வது எப்படி?
பேட்டியைப் படித்த மெளனியின் ரசிகர்கள் சிலர் வாய்ப்பு கிடைத்தபோது என்னைத் தாக்கி எழுதி வந்தார்கள். நான் யாருக்கும் பதில் கூறவில்லை.

ஆனால், என் பேட்டி வெளியான பிறகு, சில நண்பர்களோடு அவரைச் சில தடவை சந்தித்தேன். பேட்டியைக் கண்டுகொண்டதாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை._நானும் அதுபற்றிப் பேசவில்லை. பிறகு, இந்த விஷயத்தை மறந்துபோனேன்.

ஒருமுறை ஏதோ வேலையாக, சென்னை சென்ே றன். ஒருநாள் மாலை, திருவல்லிக்கேணி ஃபெல்ஸ் ரோடில் நண்பர் அசோகமித்திரனைக் கண்டேன். இருவரும் பேசிக்கொண்டே அருகில் இருந்த முரளி கபோக்குப் போனோம். பேச்சுக்கு இடையில் அசோகமித்திரன், மெளனி உங்களுக்குப் பதில் சொன்னாரே, படித்திர் களா? என்று கேட்டார்.

மெளனி எனக்குப் பதிலா? எதுக்கு?- என்றேன் விளங்காமல்,
உங்களுடைய கண்ணதாசன் பேட்டிக்கு, கணையாழி யில் வந்தது. 3 மாதம் ஆயிற்றே.

'கணையாழியை என் நண்பர் வீட்டில் படிப்பது வழக்கம். மெளனியின் பதிலை நான் பார்க்கவில்லை. நீங்கள் எனக்கு காபி அனுப்பி இருக்கலாம். நான் அதைப்பார்க்க வேண்டுமே", என்றேன்.
அப்போது கணையாழியின் ஆசிரியர் அசோக மித்திரன். அவரோடு ஆபீஸுக்குப்போய், மெளனியின் பதிலைப் படித்தேன். எனக்கு கோபமூட்டும்படி பேட்டி யின் ஒரு பகுதி இருந்தது; எனக்கு கோபம் வரவில்லை; விசனமாக இருந்தது.

'நீங்கள் இதற்கு பதில் சொல்லப்போகிறீர்களா? என்று கேட்டார் அசோகமித்திரன்.

இல்லை. நான் கண்ணதாசன் பேட்டியில் சொன்னது எல்லாம் உண்மை. ஆனால், மெளனி துன்பப்பட்டவர். என்னால் அவருக்கு மேலும் துன்பம் வேண்டாம்.'
சரியான முடிவு' என்றார் அவர்.

மெளனியின் பேட்டி வெளிவந்த கணையாழி இதழை விலைக்கு கேட்டும் அசோகமித்திரன் கொடுக்க வில்லை. ஆபீஸ் காபி தவிர, விற்பனைக்கு பிரதிகள் இல்லை என்று கூறிவிட்டார். ஆகையால் அந்தப் பேட்டியை இரண்டாம் முறை நிதானமாகப் படிக்கவும் எனக்கு வாய்ப்பு இல்லை.

சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1991-டிசம்பர் மாதக் கணையாழியில் மெளனியின் பேட்டி மறு பதிப்பாக (re-print) மீண்டும் வந்துள்ளதைக் காண எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதை இப்போது அமைதியாகப் படிக்க முடிகிறது. பழைய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாய் காட்சிகள் ஆகின்றன. மெளனியும் மறைந்துவிட்டபின் அவர் மனத்தைப் புண்படுத்த நேருமோ என்கிற அச்சம் எனக்கு இல்லை. அவர் உயிரோடு இருந்தபோது, அவருக்குப் பதில் கூறுவதில்லை என்று நான் முடிவு செய்தது சரி; அது சரியான முடிவு

என்று நண்பர் அசோகமித்திரன் கருதினார். இப்போது
பதில் கூறுவது நியாயமாகும் என்று எண்ணுகிறேன்.
கணையாழி பேட்டியில் மெளனி கூறுகிறார்:
கண்ணதாசன் (செப்டம்பர்-73) எம். வி. வி. பேட்டி யில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தவைகளில் சில தவறுகள் நேர்ந்துள்ளன. தேனியில் வெளிவந்த என் இரண்டு சிறுகதைகள் எந்தச் சூழ்நிலையில் எழுதப் பட்டவை, தரப்பட்டவை என்பதைச் சொல்கிறேன்.

மனக்கோலம் (1948) கதையை என் வழக்கப்படி திருப்தியின்றி வெவ்வேறு scriptஆக பதினைந்து தடவைக்கு மேல் எழுதிக் கிழித்தும், கடைசியாக நான் பக்கம் பக்கமாக எழுதிப்போட, கரிச்சான்குஞ்சு அருகிலி ருந்து வாங்கிக் கொள்ள-மகளின் திருமணம் முடிந்த அன்று நள்ளிரவு ரயிலில் சிதம்பரம் திரும்பியாக வேண்டிய அவசரத்தில் - கரிச்சான்குஞ்சு கதையின் கடைசிப் பக்கத்தை இன்னொரு தடவை படித்து விட்டு வேறு எழுதக் கோரியபோது-அவ்வளவுதான், அதைத் திருப்பிப் பார்த்தால்-எல்லாமே எனக்குத் திருப்தி தராமல் கிழித்துப் போட்டுவிட்டு வேறு எழுதத் தோன்றி விடும்...நான் ஊருக்குக் கிளம்பியாக வேண்டும் என்று இளம்பி விட்டேன்.

எம். வி. வி. தன் பேட்டியில் முதல் கதையை நேரில் கொண்டு வந்து தந்தார். திருத்திப்போடு என்று சொல்லி விட்டுப் போனார் என்று கூறியிருப்பதற்காக இதனைக் கூறுகிறேன்......
முதல் தேனி கதையைக் கரிச்சான்குஞ்சு வாங்கி வந்தார் என்று மெளனி கூறுவது சரி; அவர் நேரில் கொண்டு வந்து கொடுத்தார் என்று நான் 'கண்ணதாசன் பேட்டியில் சொன்னது சரியல்ல. கரிச்சான்குஞ்சுவிடம் கேட்டு நான் சரிசெய்து கொண் டேன். ஆனால், முக்கியமான பிரச்சினை அது அல்லவே. மெளனியின் தமிழ் குறைப்பட்டது என்று நான் உரைத்த தற்கு அவர் பதில் கூறவில்லை. மகளின் திருமண வேலை களின் நிர்ப்பந்தத்தால் அவர் அவசரமாக எழுதிக் கொடுத்ததால், அவருடைய தமிழ் பிழைபட்டது என்று அவர் நமக்கு உணர்த்துவதாய் வைத்துக் கொள்வோம். தேனியில் அவர் எழுதிய இரண்டாவது கதை பற்றி அவர் கூறுவதைப் பார்ப்போம்.
மெளனி கூறுகிறார் :

'இரண்டாவது சிறுகதையை நான் தேனிக்குத் தந்த கதை இது: அப்போது க. நா. சு. பொறுப்பேற்று நடத்திய ‘சந்திரோதயம்' பத்திரிகையின் ஆண்டு மலர் கொண்டுவரப் போவதால் என் கதை வேண்டுமெனக் கேட்க நான் எழுதிக் கொடுத்த கதை நினைவுச்சுவடு' (1948)- சந்திரோதயத்தில் அப்போது உதவி ஆசிரியராக சி. சு. செல்லப்பாவும், ஓவியராக சாரதியும் இருந்தார் கள். சந்திரோதயம் மலர் வெளியீடு முன்பே நின்று விட்டது. அச்சமயத்தில் எம். வி. வி. தேனி பத்திரி கைக்கு என் கதை அவசியம் தேவை என்று கேட்க, நான் க. நா. சு. விடம் வெளியிடாமல் வைக்கப்பட்டிருக்கும் என் கதையைக் கேட்டு பெற்றுக் கொள்ளச் சொன்னேன். க. நா. சு. அந்தக் கதைத் தாள்களை கறையான் அரித்து விட்டதாகக் கூறியதால், மறுபடியும்
எம். வி. வி. என்னை வந்து துளைத்தார். நினைவுச்சுவடு கதையைத் திருப்தியின்றி மாற்றி மாற்றி எழுதிய கடைசி versionக்கு முந்திய பிரதி தற் செயலாக அகப்பட, அதை அவருக்குக் கொடுத்தேன். அதுவே தேனி'யில் வெளிவந்த எனது இரண்டாவது சிறு
-
கதை......
தேனீயில் வந்த இரண்டாவது கதையின் கதையை இவ்வாறு கூறுகிறார் மெளனி. ...... &#3Dl_@ versioně(5 முந்தியபிரதியை’ என்னிடம் கொடுத்ததாய் சொல்கிறார். ஆகையால், அது சரியான தமிழில் இருக்காது என்கிற தொனி அவர் கூற்றில் இருக்கிறது. அவர் எந்தப் பிரதி கொடுத்திருந்தாலும் சரி, அது எந்தவித இலக்கண அமைதியும் இல்லாதது என்றுதான் நான் கண்ணதாசன் பேட்டியில் குறிப்பிட்டேன்.

ஆக, தேனீயில் வெளிவந்த இரண்டு சிறுகதைகளின் தமிழ் பிழையானதே என்று மெளனி நேராக ஒப்புக் கொள்ள விட்டாலும் மறைமுகமாக ஏற்றுக் கொண்ட தாகவே நான் கருதுகிறேன். தன்னால் பிழையற்ற தமிழில் எழுத முடியும் என்று அவர் சொல்லவே இல்லை. மெளனி கணையாழி பேட்டியில் மேலும் கூறுகிறார்:
'நான் கதை எழுதுவது என்பதே நாள் கணக்கில் ஏற்படுகிற சிரமமான விஷயமாக இருக்க, கதை எழுதி வைத்திருந்து விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பி திரும்ப வந்து விட்டது' என்று நான் வருத்தப் பட்டதாக () எம். வி. வி. தன் பேட்டியில் கூறியிருப்பது உண்மை இல்லாத விஷயம்."

அவருடைய பேட்டியின் இந்தப் பகுதிதான் என் மனத்தைப் புண்படுத்தியது; அவர்மீது சிறிது கோபமும் உண்டாக்கியது._ஆனால், அவரிடம் எனக்குள்ள :மரியாதை காரணமாக நான் அவருக்கு அப்போது பதில் கூற விரும்பவில்லை.

அந்தப் பேட்டியின் தொடக்கத்திலேயே மெளனி "...ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு உயரிய கதை எழுதி அனுப்பி திரும்பப் பெற்றால் எந்த மனோபாவம் _ கொள்ள வேண்டும்- psychological mistake என்று சொல்லக் கூடிய- தரமற்ற பத்திரிகைகள் அவை என்று துாற்றுவது rational ஆகுமா? ஆனால், இவன் இந்த முடிவிற்கு இந்தக் காரணம் முன்னிட்டுக் கொள்வது logical? தற்போது அநேக குழுவினரையும்... ஒரு reaction விளைவாகத்தான் காண முடிகிறது என்று கூறியிருப்பதை வைத்தே நாம் உண்மையை ஊகிக்கலாம்.

தேனியில் வெளிவந்த தன் இரண்டு கதைகளின் கதையை ஒரளவு விஸ்தாரமாக எழுதிய மெளனி, சிவாஜியில் ஐந்தாண்டு இடைவெளியில் (1954லிலும் 1959லிலும்) வெளியான தன் இரண்டு கதைகளைப் பற்றி ஒரு வார்த்தைகூட கூறவில்லை. ஏன் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்: எம். வி. வி. க்கு அவர் கதைகளை அனுப்பியதையும் எம். வி. வி. அவற்றை திருத்தம் செய்து சிவாஜி வார ஏட்டில் பிரசுரமாக உதவி யதையும் பற்றி மெளனி பேச விரும்பவில்லை. மெளனி சிவாஜி ஆசிரியர் கவிஞர் திருலோக சீதாராமை அதுவரை சந்தித்ததே இல்லை! -

கண்ணதாசன் பேட்டியில் நான், மெளனியின் கதை யில் ஒருவாக்கியமும் இலக்கண சுத்தமாக இல்லை. அவருக்குக் கைவந்த கதை வடிவம் கெடாமல் அதைத் திருத்த எனக்குச் சில நாட்கள் ஆயின' என்று குறை கூறியிருந்தேன். கணையாழி பேட்டியினால் அவர் தனக்கு இலக்கண சுத்தமாக எழுதத் தெரியும் என்பதை நிலை நாட்டவில்லை. மாறாக, என் கருத்துக்கு வலுக்கொடுப்ப தாகவே அவருடைய பேட்டி அமைந்துள்ளது.

மெளனியின் பேட்டியில் என்னைப்பற்றி அவர் கூறியுள்ள மற்ற விவரங்களுக்கு நான் பதில் கூறத் தேவையில்லை.
1936இல் மெளனியின் சிறுகதைகள் வெளியான போது அவை என்னுள் வலிய கிளர்ச்சியை உண்டாக்கின. புதுமையான காதல் கதைகளாகவே அவை என்னைக் கவர்ந்தன-அப்போது நான் கல்லூரி மாணவன். ஆனால், புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு. ப. ரா. , ராமையா முதலியவர்கள் மெளனியின் கதைகளில் வடிவம், மொழி, நடை, உத்தி முதலியவற்றை ரசித்தே அவரைப் பாராட்டினர். மணிக்கொடியில்தான் அவருடைய பெரும்பாலான கதைகள் வந்துள்ளன. முழுமையாக உருவான ஒரு பொருளாகவே (finished product) நான் அப்போது அவருடைய கதைகளைக் கண்டேன். ஆனால், ஆசிரியர் ராமையாவும், துணை ஆசிரியர் கி. ரா. வும் மெளனியின் கைப்பிரதிகளைப் பார்த்திருப்பார்கள். அவர்கள் அவருடைய இலக்கண மற்ற தமிழைப் பற்றி ஒன்றும் சொல்லாதது ஏன்? ராமையாவுடன் நெருங்கி இருந்த புதுமைப்பித்தன் முதலியவர்களும் ஏதும் பேசாதது ஏன்? 'மெளனி'யின் தமிழ் ஒருமாதிரி இருக்கும்; திருத்திப்போடுவோம்', என்று ராமையா அலட்சியமாக என்னிடம் கூறினாலும், அவர் அதைப்பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. மணிக்கொடிக்கு வந்து மெளனியின் கதைகள் அதிகம் பிழைபடாததாக இருந்திருக்குமோ? என் பார்வைக்கு வந்த நாலு கைப்பிரதிகளும் ஏதோ மனக்குழப்பத்தில் எழுதப்பட்டிருக்குமோ? கணையாழிப் பேட்டியில்கூட அவர் தன்னால் பிழையற்ற தமிழ் எழுத முடியும் என்று ஓங்கிச் சொல்லவில்லையே!

இலக்கியப் படைப்பாளிகளுக்கு மொழிப்புலமையோ, இலக்கண் அறிவோ கட்டாயத் தேவை என்று நான் கூறவில்லை; பேச்சு வழக்குக் கொச்சை மொழியும் இலக்கியம் ஆகும்-படைப்பாளியின் கையில். நான் கண்ட மெளனியின் தமிழ் இந்த விதிகளுக்கும் அப்பாற்பட்டது. மற்றொருவரால் திருத்தப்பட்டா,தான் விளங்கும். வாசகர்களுக்கு கிடைப்பது தட்டிக் கொட்டி ஒழுங்கு செய்யப்பட்ட பொருள்தானே!
மெளனியை சிறுகதையின் திருமூலர்' என்று புதுமைப்பித்தன் ஏதோ வேகத்தில், குறிப்பிட்டுவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று அடக்கமானவர் திருமூலர். தமிழர்ல் எந்த ஆழத்துக்கும் செல்ல முடியும், எந்த உயரத்துக்கும் ஏற முடியும் என்பதைச் செய்துகாட்டியவர். தமிழ் மொழியை எவ்வளவு அழகாய்க் கையாள முடியும் என்பதை இன்றைய எழுத்தாளர்களுக்கும் உணர்த்தும் வழிகாட்டி. பிழையின்றி தமிழ் எழுத முடியாத ஒருவரைத் திருமூலரோடு ஒப்பிட்டுப் பேசுவது பொருத்த மற்றது. 'திருமூலரோடு என்னை ஒப்பிட்டு புதுமைப் பித்தன் ஏன் பேசினார் என்று அவரையே கேட்க வேண்டும் என்று மெளனியே கூறுகிறார்.

அதே புதுமைப்பித்தன் மற்றொரு சமயம், தமிழில் வந்துள்ள சிறுகதைகளில் பத்து நல்லவற்றைத் தேர்ந்து எடுக்கும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டால், என் சிறுகதைகளில் பத்தைப் பொறுக்கித் தருவதைத் தவிர வேறு வழி இல்லை'-என்று உரைத்ததாய் ச. பொதிய வெற்பன் எழுதிய புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு' கூறுகிறது. மெளனியை அவர் ஏன் மறந்தார்?

'கம்பனை ரசிக்கிறவர்கள் மெளனியையும் ரசித்துப் பாராட்ட வேண்டும்', என்று க. நா. சு. மொழிந்ததும் மிகமிகை. இதிகாசத்தை மகாகாவியமாகப் படைத்த மகாகவியைச் சில சிறுகதைகள் எழுதியவரோடு ஒப்பிட்டுப் பேசுவது அபத்தம். ஆர்வமிகுதியால் இவ்வாறு பேசுவது-சரியான விமரிசனக் கண்ணோட்ட் மும் ஆகாது.
மனம் சுதந்திரமாக இயங்கும் தன்மை வாய்ந்தது. கலைஞனின் மனம் தன் போக்கில் சஞ்சாரம் செய்யும்போது, எண்ணத்தின் எல்லையையும் கடந்து, பலவித கற்பனைகளையும், படிமங்களையும், பாவனைகளையும், உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் கைப்பற்றுகிறது. இந்த அனுபவத்தை அப்படியே எழுத்தோவியமாக்க வந்த மொழிக்கும் வல்லமை கிடையாது. தான் பெற்ற அனுபவத்தை வாசகரிடம் தாண்டிவிடும் ஒரு கருவியாக மொழி கலைஞனுக்குப் பயன்படுகிறது. வாக்குக்கு எட்டாத இறைவனை வாக்குப்படுத்தி வெற்றி கண்டவர் திருமூலர். இறைமையையும் அளக்கும் வலிமை வாய்ந்தது தமிழ்மொழி என்பதை அறிந்திருந்ததால் அவர் 'தமிழ் செய்யுமாறு: ஆண்டவன் தன்னை 'நன்றாகப் படைத்தான்' என்று அறிக்கையிடுகிறார். ஆனால், தமிழ் தெரியாத மெளனி தமிழ்மொழி கலை வெளியீட்டுக்கு இப்போதுள்ள நிலையில் செயல்பட முடியாது' என்றும், 'என் மூளை எழுதிப்பார்க்கும் சில அபூத impression களை express செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது’ என்றும் கூறி தன் பலவீனத்தைத் தமிழின் பலவீனமாய்க் காட்டுகிறார்.

தமிழ் பல துறைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்பது உண்மை; ஆனால், மெளனி சொல்லியுள்ள பொருளில் அல்ல.
இவை எல்லாம் என் கருத்துகள்; மற்ற சிலருக்கும் எனக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள். இவை ஒருபுறம் இருக்க, நான் இன்னும் மெளனியின் ரசிகன்; அவருடைய சிறு கதைகளை தன்னிறைவோடு படிக்கிற வாசகன், தமிழின் புதிய இலக்கியத்தில் அவருக்குச் சிறப்பான இடம் உண்டு என்றும் நம்புகிறேன். ஆனால், அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்று பண்டைப் புலவர் களின் பாணியில் அவரைப் போற்ற நான் விரும்பவில்லை. அவ்வாறு செய்வது, அவரோடும், அவருக்குப் பிறகும் எழுதியlஎழுதுகிற சிறந்த சிறுகதைப் படைப்பாளிகளுக்கு. அநியாயம் செய்வதாகும். .

சென்னையில் மெளனியின் கணையாழிப் பேட்டியை படித்த பிறகும் நான் தனியர்கவோ, அல்லது சில நண்பர் களுடனோ அவரை அவ்வப்போது சந்தித்துக் கொண்டு இருந்தேன். கண்ணதாசன் பேட்டியைப் படித்ததாய் அவர் காட்டிக் கொள்ளவில்லை. கணையாழி பேட்டியை பார்த்ததாய் நான் காட்டிக் கொள்ளவில்லை. எங்களுக்கு இடையில் வழக்கம்போல் செளஜூன்யமான நட்பு
நிலவியது.

ஒருமுறை தஞ்சை பிரகாஷ் உள்பட நாங்கள் ஐந்து பேர் மெளனியைச் சந்தித்தோம். வழக்கம்போல் அவர் எங்களை அன்பேடு வரவேற்றாலும், அவர் 'யாரையும் எதிர்பார்க்கவில்லை போலும்; அவருடைய முகத்தில் சோகம் பட்டையாக அப்பிவிட்டாற்போல் இருந்தது. அது என் வெறும் பிரமையாக இருக்கலாம். சுமார் நாற்பது ஆண்டுக் காலமாக நாங்கள் பழகுகிறோம். என்னை அவர் ரொம்ப சின்ன பையன் என்றார்; அவரை நான் இளைஞராய்க் கண்டேன். இப்போது நிலைமை மாறி விட்டது. என் தலைமுடி நரைத்துப் பின்னடைய, என் நெற்றி விசாலமாகி வந்தது; இன்னும் ஆங்காங்கு கருமுடி இருந்தது. அவருடைய தலைமுடி முற்றிலும் வெள்ளையானாலும் அடர்த்தியாக, கையால் ஒழுங்கு செய்யப்பட்டாற் போலிருந்தது. என் கண்கள் ஓரளவு பலவீனப்பட்டாலும், பார்வை மங்கவில்லை. அவருடைய கண்கள் பார்வையைக் குறைத்து விட்டன; எங்களைப் பார்க்கையில், வெறுமையைப் பார்ப்பவர் போலத் தோன்றியது. உதடுகளின் இருபுறமும் கோடுபோட்டாற் போல மடிப்பு விழுந்திருந்தது. எனக்கு ஒருவகைத் துன்பம் என்றால், அவருக்கு வேறுவகைத் துன்பம்; அது எங்களை முதுமைக்குத் தள்ளிக் கொண்டிருந்தது.

நேற்று ஜெயகாந்தன் வந்திருந்தார். அவருடைய கதை ஒன்று படித்தேன். இவர்கள் எல்லாம் என்ன எழுதுகிறார்களோ, என்ற மெளனி ஜெயகாந்தன்கதையின் முதல் இரண்டு வாக்கியங்களைக் கூறினார்: ‘the second sentence cancels the first sentence’.
அவருடைய இந்தக் கதை பிரபலமானது' என்றார் பிரகாஷ்.
இப்படி எழுதுவதால் பிரபலம் ஆகலாம் போல', என்ற மெளனி வீட்டுக்கு உள்பக்கம் பார்த்து யாருக்கோ குரல் கொடுத்தார்; எல்லோருக்கும் காபி கொண்டு வரும் படி கட்டளை இட்டார்.
"இங்கே வரும்போது சாப்பிட்டு வந்தோம், சார்' என்றேன்.
'அதனால் என்ன; என்றார் அவர். அதற்கு முன்னால் அவர் வீட்டில் காப்பி சாப்பிட்டிராத எனக்கு இந்தப் புதிய உபசாரம் சற்று வினோதமாக பட்டது.

சிறிது நேரத்தில் ஓர் இளைஞன் ஒரு டிரேயில் டபராடம்ப்ளர் காப்பியை ஜாக்கிரதையாகக் எடுத்து வந்தான். -
'எம். ஏ. லிடரேசர் பண்ணின பையன் இந்த வேலை செய்யறான்', என்றார் மெளனி. அவர் தொடர்ந்து ஒன்றும் கூறவில்லை. நானும் கேட்கவில்லை. எவ்வளவு நெருங்கிய நண்பர்களானாலும், அவர்களுடைய தனிப் பட்ட|குடும்ப அல்லல்கள் பற்றித் நானாக ஏதும் கேட்ப தில்லை. அவர்களே சொன்னால் கேட்டுக் கொள்வது என் பழக்கம். -
மேஜை மீது காப்பி டிரேயை வைத்த வாலிபனிடம், 'சாப்பிட்டானதும் எல்லாம் எடுத்துக் கொண்டு போக வேணும்', என்றார் மெளனி.
சாப்பிட்டானதும் டபார-டம்ப்ளர்களை டிரேயில் வைத்து எடுத்துப் போனான் இளைஞன்.


பிறகு கொஞ்சநேரம் ஏதோ பேசினோம். இடையில் மேஜை டிராயரைத் திறந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு எனக்கு அருகில் வந்தார் மெளனி. அது அமெரிக்காவிலிருந்து வந்த கடிதம்; அதன் தலைப்பு நுனி கள் இரண்டையும் விரல்களால் கெட்டியாகப் பிடித்தபடி கடிதத்தை என்னிடம் காட்டி, இதைப்படி என்றார் அவT.
'கடிதத்தை என்னிடம் கொடுங்கள், சார், படிக்க சுலபமாக இருக்கும்', என்றேன்.

அவர் கொடுக்கவில்லை. இப்படியே படி”, என்றார்.
'கடிதத்தைத் துக்கிக் கொண்டு ஓடிவிட மாட்டேன். இங்கே கொடுங்கள்...... என்று சிரித்தேன்.

அவர் கடிதத்தை தன் கையிலிருந்து விடுவிக்க விரும்ப வில்லை: சும்மா இப்படியே படி, வெங்கட்ராம்!”

- அமெரிக்காவிலிருந்து ஆல்பர்ட் ஃபிராங்களின்
எழுதிய கடிதம் அது. தமிழில் தேர்ச்சி பெற்ற அந்த அமெரிக்கர் மெளனியின் சிறு கதைகளின்பால் பெரு மோகம் கொண்டார். மெளனியின் இரண்டு சிறுகதை களை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். கருமேகங்களுக்கு இடையில் ஒரு மின்னல்’ என்று மெளனியை அமெரிக்க வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி னார்; இரண்டு கதைகளும் நியூயார்க்கர் என்னும் அமெரிக்கப் பத்திரிகையில் வெளியாயின. தன் உத்தி யோகத்துக்கு ஒரு வருடம் சம்பளம் இல்லாத லீவ் போட்டு விட்டு, மெளனியின் மற்ற சிறுகதைகள் அனைத்தையும் மொழி பெயர்க்கப் போவதாய் ஆல்பர்ட் ஃப்ராங்ளின் கூறியிருந்தார். இந்தத் தகவல்களை மெளனி யும், க. நா. சு.வும் என்னிடம் கூறியிருந்தார்கள்.

--- அந்த அமெரிக்கர் எழுதிய கடிதத்தைத்தான் என் கண்களுக்கு முன்னால் காட்டிப் படிக்கும்படி சொன்னார்மெளனி. அவருடைய ஒரு கதையை மீண்டும் படித்ததாக வும், அது இந்தியத் தத்துவத்தை நுட்பமாகவும், அழகாக வும் பிரதிபலிப்பதாயும் ஃப்ராங்களின் பாராட்டி எழுதி யிருந்தார். நானும் பிரகாஷாம் படித்தானதும்: கடிதத்தை ஜாக்கிரதையாக மேஜை டிராயரில் வைத்து விட்டு மெளனி உட்கார்ந்தார்.

வெங்கட்ராம், அந்தக் கதையில் ஃபிராங்க்ளின் சொல்லும் அர்த்தம் வருகிறதா?’ என்று கேட்டார்.

கேள்வியை எதிர்பாராத நான் பதில் கூறத் தயங்கினேன். அது மெளனியின் எந்தக் கதை என்று இப்போது நினைவில்லை. அப்போது கதை நினைவில் இருந்தது. அது எந்த இந்தியத் தத்துவத்தையும் பிரதிபலிப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. நான் பதில் சொல்வதற்குள், மெளனி, அந்த அர்த்தம் வருகிறதா? என்று பலமுறை கேட்டுவிட்டார், ஆவலுடன்.

எனக்கு அப்படி தோன்றவில்லை...' என்றேன் தயக்கத்துடன்,
'அப்படி அர்த்தம் ஆவதாய் ஃபிராங்க்ளின் சொல்கிறானே!"
அது உங்கள் எழுத்தின் சிறப்பு, சார், உங்கள் எழுத்தின் பெருமை. விதவிதமான அர்த்தம் கொள்ளும் படி இருப்பதுதான் உயர்ந்த இலக்கியத்துக்கு லட்சணம்; இல்லையா சார்?' என்றேன்.
அந்த சோகத்தின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு உதித்தது. அதைக்காண எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அப்பால், எத்தனை நாட்களோ, மாதங்களோ,வருடங்களோ எதுவும் எனக்கு நினைவாகவில்லை. சிதம்பரம் கோயிலின் மேற்கு வாசலில் உள்ள மணிவாசகர் பதிப்பகத்தில் ஒரு மாலை நேரம் உட்கார்ந்திருந்தேன். இருட்டுவதற்கு முன்பு ஊருக்குப் புறப்பட வேண்டும் என்று பரபரத்துக்கொண்டிருந்தேன்.
தற்செயலாக, என் கவனம் தெருப்பக்கம் சென்றது. மெளனி கோயிலின் மேற்கு வாயிலை நெருங்கிக் கொண்டிருந்தார். யாரோ ஒருவர் அவருடைய இடது கையைப் பற்றி வழிநடத்திக் கொண்டிருந்தார். மெளனியோடு பேசுவதா வேண்டாமா என்று ஒரு நொடி தயங்கினேன்.

சிதம்பரத்துக்கு நான் வருவதே, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ஒராண்டுக்கு ஒருமுறை என்றாகிவிட்டது. ஆகையால், அவரோடு சிறிதுபேசலாம் என்று எண்ணி அவரை நோக்கி விரைந்தேன்.
'சார், வெங்கட்ராம் வந்திருக்கிறேன் - என்று அவரை நெருங்கும்போதே குரல் கொடுத்தேன். அவர் நின்றார்.
என்னப்பா ஆளையே காணோம்?

'சிதம்பரத்துக்கு வருகிற வேலை அதிகமில்லை... நல்லபடி இருக்கிறீர்களா சார்!"இருக்கிறேன். கண் சரியாகத் தெரியவில்லை. துணை இல்லாமல் வெளியே புறப்பட முடியவில்லை...... y
அதே வெள்ளை முடி அலங்காரம். கருப்புக் கண்ணாடி அணிந்து, கைத்தடி வைத்திருந்தார் என்று ஞாபகம். மிகவும் இளைத்திருந்தார். பித்தான்கள் சரியாத போடப்படாத-அரைக்கைச்சட்டை, மேல் துண்டை இடுப்பில் கட்டியிருந்தார். நெற்றியில் திருநீற்றுப்பூச்சு. வயோதிகத்துக்கு உதாரணமான சிலையைச் செதுக்கப் பொருத்தமான உருவம்.
கோயில்-புதிய பழக்கமாக இருக்கிறதே?

விமோசனத்துக்கு வேறே வழி? பெரும்பாலும் தினம் வருகிறேன். உள்ளே வருகிறாயா?"

'இல்லை சார், ஊருக்குக் கிளம்புகிறேன்.

'மறுபடியும் எப்போது வருவாய்?

சொல்லமுடியாது. சிதம்பரம் வந்தால், உங்களைப் பார்க்கிறேன் சார்".
கட்டாயம் வா."

வருகிறேன்."

நான் பார்க்கையிலேயே, மெளனி ஆடலரசன் ஆலயத்துக்குள் நுழைந்தார்.

(ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் என்னும் அமெரிக்கர் மெளனியின் மற்ற சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை; வாசகர்கள் ஊக்கத்தோடு மெளனியின் இரண்டு கதைகளை வரவேற்காததால் நியூயார்க்கர்’ தொடர்ந்து வெளியிட மறுத்துவிடவே ஃபிராங்க்ளின் மொழிபெயர்ப்பைக் கைவிட்டார். இந்த தகவலை என்னிடம் கூறியவர் க. நா. சு. இந்த தகவல் சரியானதா என்று எனக்குத் தெரியாது).


நன்றி:rrn.rrk.rrn@gmail.com



Dec 4, 2013

என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் – எம்.வி.வி.

‘காதுகள்’ நாவலுக்கு – 1993ஆம் ஆண்டு – சாகித்ய அகாதெமி விருது பெற்றபோது எம்.வி. வெங்கட்ராம் நிகழ்த்திய ஏற்புரை. நன்றி : அகரம் பதிப்பகம்.

எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில்  சித்தரிக்கிறேன். பெண் விடுதலை பற்றி மட்டும் அல்ல, எனக்குத் தென்படுகிற வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவற்றையும் சுட்டிக் காட்டும் பல சிறுகதைகள், நாவல்கள், பல குறுநாவல்கள், ஓரங்க நாடகங்கள் எழுதியிருmvvengatramக்கிறேன்.

பதினாறு வயதில் எழுதத் துவங்கிய நான் இலக்கியப் படைப்பு மட்டும் அல்லாமல் மொ ழி பெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறுகள், பொது அறிவு நூல்கள் என சுமார் 200 தமிழ் நூல்கள் படைத்திருக்கிறேன். இன்றைய மனித வாழ்க்கை ஒரு போராட்டமாகக் காட்சி தருகிறது. போராட்டங்களுக்கு இடையில் புதைந்து கிடக்கும் அமைதியைத் தேடுவதாகிறது என் இலக்கியப் படைப்பு.

அகாதெமி விருது பெறும் ‘காதுகள்’ என்கிற என் நாவல் என் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்பு தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய?

இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம், ஓர் எழுத்தாளன். செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்தான். அவனுக்கு 36, 37 வயதாகும்போது திடீரென்று உள்ளிருந்தும், வெட்ட வெளியிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின; ஆபாசமாகவும், பயங்கரமாகவும் 24 மணி நேரமும் கத்திக்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து கற்பனை கூடச் செய்யமுடியாத கோரமான உருவங்களும் அவனைச் சூழ்ந்திருந்தன.

மகாலிங்கம் நிலை குலைந்தான். ஆனால், அவனுடைய புத்தியோ ‘நான்’ என்னும் உணர்வோ சிறிதும் பிசகவில்லை. தன்னுள்ளும் தன்னைச் சுற்றிலும் நிகழ்வதை ஒரு சாட்சியாக இருந்து கவனித்து வந்தான். அவன் ஒரு எளிய பக்தன்; திருமுருகன் என்னும் தெய்வத்தையே குருவாக வரித்துக்கொண்டவன். அருவருப்பு தரும் உருவங்கள் ஆபாசமான சொற்களை உமிழ்வதைச் சகிக்க முடியாமல் அவ்வப்போது தன் இஷ்ட தேவதையின் உருவப்படத்தின் முன்னிலையில் சென்று முறையிடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.

தாமச சக்தி தன்னைக் காளி என்று கூறிக்கொண்டது.  மகாலிங்கம் முருகனை வழிபடக்கூடாது என்றும் தன்னைத்தான் வழிபடவேண்டும் என்பது தாமசத்தின் மையக்கருத்து. இந்தக் கருத்தை மகாலிங்கம் ஏற்கவேண்டும் என்பதற்காகவே பல பயங்கரமான அருவருப்பு தருகிற பிரமைக் காட்சிகளை (Hallucination) அலை அலையாகத் தோற்றுவித்தபடி இருந்தது.

இந்த அனுபவம் தொடங்கியதைத் தொடர்ந்து அவனுடைய செல்வமும் செல்வாக்கும் mvv-bookசரிந்தன; வறுமையும் அவன் கால்களைக் கவ்விக்கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் இந்த அதிசுந்தரமான, அதிபயங்கரமான அனுபவம் நீடித்தது. அமானுஷியமான தமஸ்ஸ¤ம், அதிமானுஷ்யமான சத்துவமும் தன்னுடைய அகத்திலும் புறத்திலும் நடத்தும் போராட்டத்தை உதாசீனம் செய்துகொண்டு அவன் சில நாவல்களும், குறுநாவல்களும், பல சிறுகதைகளும் எழுதினான். ஏராளமான மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் அதிகமான வாழ்க்கை வரலாறுகள், பல பொதுஅறிவு நூல்களையும் எழுதிக் குவித்தான்.

தாமச சக்தியின் தாக்குதலில் ஆரம்பித்த ‘காதுகள்’ என்னும் நாவல் அதை வென்று ஒழிக்கவல்ல சத்துவ சக்தியின் தோற்றத்தோடு முடிவு பெறுகிறது. தேடல் தொடருகிறது.

ஆம். தேடல் தொடருகிறது. திரும்பிப் பார்த்தால் ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. யாரும் இல்லாத இடத்தில் இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தேனோ என்று சில சமயம் சந்தேகம் தோன்றுகிறது. இந்த என் வாழ்க்கையின் ரகசியம் (Sovereign Mystery)தான் என்ன?

இந்த என் வாழ்க்கை விளங்க மறுக்கும் ஒரு புதிராகவே (Phenomenon) தோன்றுகிறது. இதனை எனக்குத் தெளிவுபடுத்தும் தத்துவம் (Noumenon)தான் என்ன?

நான் என் ஆசானின் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன்.

***

தட்டச்சு : ஆபிதீன்,  பிரதி உதவி : சென்ஷி

***

Oct 16, 2012

கலக்கத்திலும் கனிவை கைமாற்றிவிட்டுப் போன கலைஞன்-ரவிசுப்ரமணியன்

வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படாத சோகம் போல, வேறு எதுவும் இருக்கமுடியாது நல்ல கலைஞர்களுக்கு. கலைக்காய் சமூகத்திற்காய் தன் வாழ்வின் பெரும்பகுதியை  கரைத்துக் கொள்கிற தேர்ந்த படைப்பாளிகளை உரிய காலத்தில் கௌரவிக்காது மௌனம் காத்து இறும்பூதெய்தும் பெருமை கொண்டது நம் செம்மொழிச் சமூகம். அதற்காக அவன் பதிலுக்கு மௌனம் காப்பதில்லை.
"கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்றும் அறிவுமிலார்..." என்பதை அவன் அறிந்தவனாகையால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சதா இழைஇழையாய் தன் படைப்பின் நெசவை அவன் தொடர்ந்தபடி இருக்கிறான். ஆடைகளைப் பயன்படுத்தும் நாம் நெய்தவனைப்பற்றி யோசித்ததே இல்லை. ஆனாலும் மிகச் சிலரின் காதுகளுக்கு தறியின் இடதும் வலதுமாய் ஒடி ஒடி நூல் இழைக்கும் நெளியின் ஒலி கேட்கிறது. அப்படித்தான் எனக்கும் தேனுகாவுக்கும் அது கேட்டது. அந்த சப்தம் தந்த உறுத்தலால் தான் தொண்ணூற்றி ஓராம் ஆண்டின் இறுதியில் கரிச்சான்குஞ்சு மற்றும் எம்.வி.வி ஆகியோரது புத்தகங்களே இப்போது அச்சில் இல்லாமல் இருக்கிறது அவற்றை நாம் கொண்டு வர ஏற்பாடு செய்ய  வேண்டுமென்றும் அவர்களுக்காக கருத்தரங்கள் நடந்த வேண்டுமென்றும் சந்திக்கும் போதெல்லாம் பேசி பேசி திட்டமிட்டுக் கொண்டே இருந்தோம்.  அப்போது தொண்ணூற்றி இரண்டில் திடீரென கரிச்சான்குஞ்சு இறந்து விட்டார். பதற்றமாக இருந்தது. ஏதோ செய்ய தவறிவிட்டோம் என்பது போலவான ஒரு மனச்சங்கடம். உடனே கரிச்சான்குஞ்சுவின் வெளிவராத “காலத்தின் குரல்” என்ற புத்தகத்தை நண்பர் “புதிய நம்பிக்கை” பொன் விஜயன் மூலமாக வெளிக்கொண்டு வந்தோம். அப்போது அதில் பொதியவெற்பனும் கடைசியில் சேர்ந்துகொண்டார். கருத்தரங்கம் நடத்த முடியாத நாங்கள் கரிச்சான்குஞ்சுக்கான இரங்கல் கூட்டத்தை நடத்தினோம். அப்போது அவர் படத்தை திறந்து வைத்து அப்புத்தகத்தையும் வெளியிட்டார் எம்.வி.வி.

கும்பகோணம் காந்திபூங்கா எதிரில் உள்ள ஜனரஞ்சனி ஹாலின் கீழ்புற சிறிய அரங்கில் அந்த கூட்டம் நடைபெற்றது. அந்த நாளின் மதியத்தில் எம்.வி.வியின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கையும் நடத்தினோம். அசோகமித்திரன், கோவை ஞானி, கோமல்சாமிநாதன் ம.ராஜேந்திரன், மாலன், ப்ரகாஷ், மார்க்ஸ் போன்ற எழுத்தாளர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எம்.வி.வி. அந்த கூட்டத்தில் பேசிய இறுதி உரையின் கடைசி வரிகள் ரொம்பவும் நெகிழ்வானது, "நான் கல்லாப்பெட்டியை மூடிவிட்டேன். விளக்கையும் அணைத்தாயிற்று. என் கடையை கட்டி பூட்டி விட்டேன். சூடமும் கொளுத்தியாகிவிட்டது. அதுவும் கொஞ்ச நேரத்தில் அணையும். இப்போது நான் என் குருநாதனின் (அதாவது முருகனின்) சொல்லுக்குக் காத்திருக்கிறேன்". அதாவது இரண்டாயிரம் ஆண்டு நிகழப்போகிற தன் மரணத்திற்கு கிட்டத்தட்ட அவர் தொண்ணூற்றி இரண்டிலேயே தயாரான ஒரு மனநிலையில் இருந்தார். அவரது இந்த வார்த்தைகள் இவரது புத்தகங்களையும் தாமதமில்லாது உடனே கொண்டு வந்து விட வேண்டுமென எங்களைத் தூண்டியது.
பொதிய வெற்பனிடம் அப்போது அது பற்றி பேச அவர் எம்.வி.வியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ”இனி புதிதாய்” - என்ற தலைப்பில் ஒரு புத்தமாக கொண்டு வந்தார்.
வெளியிடப்படாத அவரின் காதுகள் நாவலின் கையெழுத்து பிரதி சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகத்தில்  ஏழாண்டுகள் ஆக இருந்து கடைசியில் காணாமலே போய்விட்டது. எங்களுக்கும் எம்.வி.வி.க்கும் மிகச்சிறந்த நண்பராக இருந்த ஆசிரியர் கலியமூர்த்தியின் சலியாத தேடுதலால், அது மறுபடி கைக்கு கிடைத்தது. அதனை நான்
Mvv
Add caption
அன்னம் பதிப்பகம் மீராவிடம் கொண்டு போய்ச் சேர்த்தேன். அவரும் ஒரு ஆறுமாதகாலத்துக்குப் பின் அதைப் படித்துப் பார்த்து அதன் தரமும் மேன்மையும் உணர்ந்து அதனை வெளியிட்டார். அந்நாவலுக்கான பொருத்தமான ஜாக்ஸன் போலக்கின் ஒவியத்தை அட்டைப்படமாக வடிவமைத்து தந்தார் தேனுகா. எங்களுக்கு இதல்லாம் சந்தோஷமான காரியங்களாக இருந்தது.
சவுத் ஏஷியன் பதிப்பகம் வழியாக “என் இலக்கிய நண்பர்கள்” - என்ற எம்.வி.வியின் கட்டுரை தொகுதியை கொண்டுவந்தோம். அதன் முன்னுரையில் கூட எங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார் எம்.வி.வி. இன்றும் காலச்சுவடு வழியாக சரிச்சான்குஞ்சு எம்.வி.வி. புத்தகங்களை கொண்டு வர நானும் தேனுகாவும் முன் முயற்சி எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து கொண்டுமிருக்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் எம்.வி.வி என்பதற்கு அவரது ”பைத்தியக்காரப் பிள்ளையே” - சான்று என்று அசோக மித்திரானால் குறிப்பிடப்பட்ட எம்.வி.வி. வெளியில் வர இயலாத அவரது இறுதிகாலங்களில் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் சந்திக்க ஏங்கியவாறே இருந்தார். அதை உணர்ந்த நாங்கள் எந்த எழுத்தாளர் கும்பகோணத்துக்கு வந்தாலும் அவர்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தோம். அப்படித்தான் ஞானக்கூத்தன், எஸ்.வைதீஸ்வரன், பிரபஞ்சன், அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி, கோபிகிருஷ்ணன், வண்ணநிலவன், மீரா, திலகவதி, கோமல் சாமிநாதன் போன்ற பலரையும் நான் அவர் வீட்டுக்கு அழைத்து சென்றவாறு இருந்தேன். நானும் தேனுகாவும் சராசரியாய் வாரம் ஒரு முறை அவரை பார்ப்பவர்களாக இருந்தோம். அவரோடு பயணம் செய்யும் வாய்ப்புகளும் எங்களுக்கு அமைந்தது.
அவர் வீட்டை விட்டு வெளியே சைக்கிளில் சுற்றிய காலம் என்ற ஒன்று இருந்தது. அதற்குபின் எண்பதுகளின் துவக்கத்தில் கும்பகோணம் காந்தி பார்க்கின் திறந்த வெளியிலும் ஜனரஞ்சனி ஹாலின் சா துஷேஷய்யா நூலகத்திலும் நாங்கள் சிறுசிறு கூட்டங்களை நடத்தி அதில் எம்.வி.வியையும் கரிச்சான்குஞ்சுயையும் பேசவைப்போம். தங்கள் எழுத்துலக அனுபவங்களை அவர்கள் எங்களுக்கு கதை கதையாக சொல்வார்கள். இருவருமே வயசு வித்யாசமின்றி எல்லோரிடமும் இணக்கமாக பழகக்கூடியவர்கள். சில சமயம் அசட்டுத்தனமாக நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் நிதானமாக பதில் சொல்வார்கள். சமயத்தில் ” வக்காள ஒழிகளா..” என்பது போன்ற வார்த்தைகள் கரிச்சான்குஞ்சு வாயிலிருந்து சகஜமாக வரும். எம்.வி.வியிடமிருந்து அப்படி கேட்க முடியாது. கரிச்சான்குஞ்சுவிடமிருந்து பரவசமும் குழந்தைத்தனமும், குதூகலமும், சிரிப்பும் பார்ப்பவர்களை உடனே தொற்றிக் கொள்ளும். எம்.வி.வி. எப்போதும் நிதானமாக இருப்பார். எல்லாவற்றையும் கடந்த ஒரு ஞானியின் புன்னகையோடு சலனமின்றி இருப்பார் பல சமயம். கரிச்சான்குஞ்சு வாய்விட்டு எதிராளியின் மேலேகூட சமயத்தில் தட்டி  சிரிப்பார். எம்.வி.வியின் சிரிப்பு அடக்கமாக கட்டுக்குள் இருக்கும்.
வறுமையும் லௌகீக சிரமங்களும் மனஅழுத்தமும் இருக்கும் போதும் கூட எம்.வி.வி. ஒரு மெல்லிய புன்னகையோட இருந்திருக்கிறார். எந்த கஷ்டத்திலும் நண்பர்களிடம் அவர் கடன் வாங்கியதில்லை. நம் கஷ்டங்களுக்கு நாமே பொறுப்பு. அத வெளில சொல்லவும் கூடாது. அதுக்கு இன்னொருத்தரை குற்றவாளி ஆக்கவும் கூடாது. நாமதான் தாங்கணும், பல்கடிச்சு தாங்கணும் என்பார். அவர் அவரது இந்த வார்த்தைகளுக்கு தக்கவே அவர் வாழ்ந்தார்.
வீட்டிலிருந்தபடியே தினமும் கொஞ்சம் கைகால் நீட்டி உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். பூஜை அறையில் தினமும் சாமி கும்பிடும் வழக்கமும் இருந்தது. அதுபோலவே தினமும் முகச்சவரம் செய்து கொள்வதில் கவனமாக இருப்பார். புதிய புதிய சட்டைகளை அணிந்து கொள்வார். பவுடர் பூசிக்கொள்வார். முகம் எப்போதும் தேஜஸ்ஸாக இருக்கும். கணக்காக வாரிய தலைமுடி. திருநீறும் குங்குமமும் துலங்கும் நெற்றி. வெற்றிலை காவி ஏறிய பற்கள். பன்னீர் புகையிலை வாசம். தாம்பூலம் தளும்பும் இதழ்களின் கனிந்த சிரிப்பு. பார்த்தடவுடன் ஒரு மரியாதை தோன்றும் விதமாகவே அவர் எப்போதும் இருப்பார். பனியனோடு வீட்டில் அமர்ந்து இருக்கும் போதுகூட. ஒரு தத்துவ ஞானியின் பிரசன்னம்போல இருக்கும் அவரது இருப்பு.
“ திருக்கண்டேன் பொன்மேனிக்கண்டேன், திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று.....”
அவர் தோற்றம் இந்த பேயாழ்வாரின் இந்த பாசுரத்தை எனக்கு நினைவூட்டும் சில சமயம். அதீத வறுமையிலும் செம்மாந்து புன்னகைத்த எம்.வி.வி. அந்த எழுத்தின் மூலமே அதை அடைந்தார் என்பதுதான் துயரம்.
பெரும் பட்டுஜரிகை வியாபாரியான அவர் வியாபாரத்தையும் மறந்து எழுதத்துவங்குகிறார். தேனி என்ற  இலக்கிய பத்திரிக்கையை துவங்கி முதலீடு போட்டு, தானே ஆசிரியராக இருந்து நடத்துகிறார். உதவி ஆசிரியர் அவரது அத்யந்த நண்பன் கரிச்சான்குஞ்சு. பேப்பர்காரனுக்கு பிரஸ்காரனுக்கு பைண்டிங் பண்றவனுக்கு நாம் கடன் சொல்ல முடியுமா? பணம் இல்லன்னு சொல்ல முடியுமா? எழுத்தாளன் மட்டுமென்ன விதிவிலக்கு என்று, நாற்பதுகளில்  தேனியில் எழுதியவர்களுக்கு இருநூறு ரூபாய் சன்மானம் தந்துள்ளார். இவ்வளவு பணம் வருகிறதே என்று இரண்டு பெயரில் அதில் எழுதிய எழுத்தாளர்களும் உண்டு என்பது இதில் இன்னொரு சுவாரஸ்யம். அந்தகாலத்தில் கிட்டத்தட்ட அந்த ஒரு வருஷத்தில் முப்பதாயிரம் ரூபாய் இந்த பத்திரிக்கையால் நஷ்ட்டம் அடைந்துள்ளார் எம்.வி.வி. இந்த காலமதிப்பில் அது எத்தனைலட்சம் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அந்த பத்திரிக்கை நடத்தியதன் மூலம் அவர் பெற்ற அனுபவங்கள் ஒரு தனி நாவலுக்குரியது என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார். மௌனியின் கதை ஒருமுறை பிரசுரத்திற்கு வந்ததாகவும் அதில் ஏகப்பட்ட கிராமர் மிஸ்டேக். கமா, புல்ஸ்டாப் ஏதுமில்லை கிளாரிட்டி இல்லை. ஆனால், எல்லாவற்றையும் மீறி, நெளிநெளிகோடுகளால் ஆன, நுட்பமான வேலைப்பாடு கூடிய, Ravi subramaniyanமனச்சித்திரங்கள் அவை என்று சிலாகித்துச் சொல்வார். அந்த தேனி பத்திரிக்கைகாக பேப்பர்கூட வாங்கத்தெரியாமல் பேல் கணக்கில் ஆர்டர் கொடுக்க அது வீட்டில் வந்து இறங்கியுள்ளது. ஒரு நாள் அந்த பத்திரிக்கைக்காக பேப்பர் நறுக்க பேலை உருட்ட, அது வாசல் வரை ஓடி பரந்து விரிந்து கிடந்திருக்கிறது. அந்த நேரத்தில் இவரிடம் ஜரிகை வாங்க வந்த குஜராத் சேட், அந்த பேப்பரின் மேல் நடந்து இவரை வந்து அடைகிறார். இந்த பித்து உள்ள உன்னால் இனி வியாபாரம் சரியாக செய்ய முடியாது என்று, அன்றே அவருடனான எல்லா வியாபார உறவுகளையும் முறித்துக்கொள்கிறார். பின், மெல்ல ஷீணமடைந்து முடிவுக்கு வருகிறது அவரது வியாபாரம். அதன் பின்னான வறுமையும் மன அவசங்களும் அவரை வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வந்திருக்கிறது. இருபத்திஏழு வருஷங்கள் அவரது காதுகளில் நாரசமான விநோதமான ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அதனோடுதான் நான் வாழ்ந்தேன் கடைசியில் என் குருநாதன் முருகன் திருவருளால்தான் அந்த துயரங்களிலிருந்து மீண்டேன் என்று சொன்னார். காதுக்குள் யாரோ அமர்ந்திருப்பது போலவும் திட்டுவது போலவும் சிரிப்பது போலவும் அழைப்பது போலவுமான, அமானுஷ்ய குரல்கள் அவரை ஆட்டிப்படைத்திருக்கிறது. அந்த அனுபவத்தின் வழியே அவர் கண்டடைந்த நாவல்தான் சாகித்ய அகாடமி விருது பெற்ற காதுகள் நாவல்.
அந்த நாவலை பல எழுத்தாளர்களால்கூட சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. மருத்துவர்கள் இது ஒரு ஹாடிட்ரி ஹல்யூசினேஷன் சார்ந்த நாவல் என்று வகைப்படுத்தி அதுபற்றிய விஷயங்களைச் சொன்ன பிறகே அந்த நாவல் குறித்து பலருக்கும் புரிந்தது.
சிறுகதை நாவல் குறுநாவல் கட்டுரை மொழி பெயர்ப்பு குழந்தை இலக்கியம். நாடகம் என இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிக்குவித்த எம்.வி.வி. தனது வாழ்நாளில் சராசரியாக அவரே சொன்னபடி ஒரு நாளைக்கு முப்பது பக்கங்கள் எழுதியுள்ளார். இவ்வளவு எழுதிய எம்.வி.விக்கு அவரது கடைசி பத்து ஆண்டுகளில் ரைட்டர்ஸ்கிராம்ப் வந்து கையெழுத்துகூட போட இயலாமல் ஆனது.
என்ன ரவி எம்.வி.வி. கையெழுத்து இப்படி இருக்கு என்று கேட்ட மீராவுக்கு
நான் எழுதிய பதில் கடிதத்தில் இப்படி எழுதியிருந்தேன்.
எழுதி எழுதிச் சோர்ந்த விரல்கள்
இப்போது கையெழுத்திடவும் நடுங்குகிறது
இ.சி.ஜி. கிராப் போல. என்று
பட்டாடை நெய்யும் சௌராஷ்ட்டிரர்கள் சமூகத்தில் பிறந்த அவரது வாழ்வில் பட்டின் மினுமினுப்பு ஒரு போதும் இருந்ததில்லை. அவரது பால்ய காலத்தின் சில வருஷங்கள் தவிர. அந்த பால்யகாலத்திலும் அவருக்கு இன்னொரு அவஸ்தை நிகழ்ந்தது. தனது சொந்த அப்பா அம்மாவால் அவரது தாய்மாமனுக்கு சிறுவயதிலேயே தத்து கொடுக்கப்பட்டவர் எம்.வி.வி. மாமாவை அப்பா என்றும் அத்தையை அம்மா என்றும் அழைக்க நிர்பந்திக்கப்படுகிறார். அவரது அத்தை இவ்வளவு செலவு பண்ணி உன்னை தத்துஎடுத்தேனே அம்மா என்று கூப்பிட மாட்டேன் என்கிறாயே அம்மா என்று கூப்பிடு என்று சொல்லி தண்டிக்கிறார். வாய் அம்மா என்றாலும் மனம் ஒட்டாமல் தத்தளிக்கிறார் வெங்கட்ராம். அவரது மன அழுத்தத்தில் துவக்கப்புள்ளி இது என்று சொல்லலாம்.
இவ்வளவுக்கு மத்தியில் சுவாரஸ்யமான பல அடுக்குகளை கொண்டது அவரது வாழ்க்கை. அப்பா அம்மா வீட்டில் வறுமை. தத்துப்போன வீட்டில் கோடிஸ்வர வாழ்க்கை. பதிமூன்று வயதில் எழுத்ததுவங்கியது. பதினாறு வயதில் மணிக்கொடியில் சிட்டுக்குருவி என்ற கதை பிரசுரம். பி.ஏ. பொருளாதாரம் படிக்கும்போதே தி.ஜானகிராமன் இவரை குருபோல வியந்து பார்த்து நட்பாக்கி கொள்வது. இந்தி விஷாரத் படிப்பில் தேர்ச்சி. ஆங்கில இலக்கிய புலமை. இளம் வயது திருமணம். பட்டு ஜவுளி ஜரிகை வியாபாரம். நாற்பத்தெட்டில் தேனி பத்திரிக்கை துவங்கியது. பத்திரிக்கையில் நஷ்டம், அதனால் வியாபாரத்தில் நஷ்டம். அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடியாக சிலகாலம். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு நின்று தோற்றது ஒரு நேரம். பல பெண்களாலும் காதலிக்கப்பட்ட வசீகரனாக இருந்தது ஒரு காலம். இந்த அனுபவங்களும் கூட இல்லாவிட்டால் எழுத்தை தவிர என்னதான் மிஞ்சியிருக்கும் என் வாழ்வில் என்பார் எம்.வி.வி.
கரிச்சான்குஞ்சு கவனிக்கப்படாதது போலவான ஒரு விஷயம் எம்.வி.விக்கு முழுவதுமாக நேர்ந்து விடவில்லை. ”என்னய்யா இந்த ஊரை இப்படிக்கொண்டாடுதேய்யா அவரை” - என்று லா.ச.ரா. குறிப்பிடும்படி ஆனது அந்திமக்காலங்களில் அவர் மீது குவிந்த கவனம்.
அவர் சௌராஷ்ட்டிர மொழியில் எழுதி இன்னும் வெளிவராத புத்தகம் மீ காய் கரு.
தமிழில் அதன் அர்த்தம் நான் என்ன செய்யட்டும்.
கடைசியாக வந்த அவரது புத்தகம் எம்.வி.வியின் கணிசமான கதைகள் அடங்கிய சிறுகதை தொகுப்பு. அதை மிகுந்த பிரியத்தோடும் பொருளாதார சிரமத்தோடும் பாவைச்சந்திரன் வெளியிட்டார். அதில் பிழைகள் திருத்தும்வரை பார்வை சரியாக இருந்தது எம்.வி.விக்கு. அந்த புத்தகம் முழுமைப்பெற்று வரும் போது அதைப்பற்றி அவரது காதில் சத்தமாக கத்தி சொல்ல வேண்டியிருந்தது. அட்டைப்படத்தில் சிரித்தபடி இருக்கும் அவரது புகைப்படத்தை தன் கைகளால் மட்டுமே தடவிப்பார்த்துக் கொள்ள முடிந்தது அவருக்கு.
கேட்காத காதுகளோடும் பார்க்க முடியாத குளுக்கோமா விழிகளோடும் பிறழ்வான மனக்கொதிப்பில் மேலெழும்பும் குமிழிகளோடும் அவஸ்தை மிகுந்ததாக இருந்தது அவரது கடைசி வருட வாழ்க்கை.
இயன்ற வரையில் நினைவுதப்பாமல் இருந்த வரையில் எல்லா கஷ்டங்களையும் மீறி
கைமாறு கருதாமல் அவர் சதா நமக்காக ஏதோ நெய்து கொண்டே இருந்தார். தன் நடுங்கும் விரல்களால்.
நன்றி: ரவிசுப்ரமணியன் தளம்

Jul 17, 2011

‘மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்கு இசங்கள் கிடையாது – எம்.வி.வெங்கட் ராம்

சந்திப்பு : அப்பணசாமி, தேனுகா, கண்ணம்மா

‘மணிக்கொடி’ இலக்கியக் கொடியைச் சேர்ந்த எம்.வி. வெங்கட்ராம், எம்.வி.வி. என புதுமைப்பித்தன் முதல் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர் வரை அழைக்கப்படுபவர். அவரது ‘வேள்வித் தீ ‘, ‘அரும்பு’ , ‘நித்திய கன்னி’ முதல் சமீபத்திய ‘காதுகள்’ நாவல் வரை நாவல்களுக்காக தமிழ்  இலக்கிய உலகம் முழுமையாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும் இவரது சிறுகதைகள், கவிதைகள் உலகம் பற்றி தமிழ் உலகம் அவ்வளவாக அறியாதmvv1து. மிகச் சமீபத்தில் இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘எம்.வி.வெங்கட்ராம் கதைகள்’ என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது.

இன்று எண்பதுகளைக் கடந்து கொண்டிருக்கும் எம்.வி.வி. யைக் கும்பகோணத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். கண்பார்வை மிகவும் குறைந்துள்ளது. கேட்கும் திறனும் அரிதாக உள்ளது. அன்னியக் குரல்களை அடையாளம் காணுவது சிரமமாக  உள்ளது.  அதனையே பழகிய குரல் திரும்பவும், உரத்த குரலில் பேசும்போது, இரண்டு முறை திரும்பக் கேட்டு உணர்ந்து கொள்கிறார். இன்னொருவர் உதவியுடனேயே நடமாடுகிறார். இருந்தாலும், தினமும் சவரம் செய்து, இஸ்திரி செய்யப்பட்ட உடைகளை அணிந்து, நெற்றியில் விபூதி, குங்குமம் அழியாமல் ‘பளிச்’ என்று அதே எம்.வி. வி.யாகவே இருக்கிறார்.

கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் சுருக்கமாக பதிலளிக்கிறார். பல விஷயங்கள் நினைவில் இல்லை என்கிறார். முரண்பாடான விஷயங்களில் கருத்துச் சொல்ல மறுக்கிறார். இவ்வளவு காலத்துக்குப் பிறகும் யாருடைய மனதையும் புண்படுத்துவானேன் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது.

தொடர்ந்து பத்து நிமிடம் பேசினால் சிரமமாக இருக்கிறது. சில ஆண்டுகள் முன் சந்தித்தபோது, மணிக்கணக்காக அவர் பேசிக் கொண்டிருந்தது நினைவில் மோதுகிறது…….

நீங்கள் படைப்பிலக்கியத்திற்குள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்? அதைப் பற்றி சொல்லுங்களேன்?

”எங்கள் குடும்பத்தில் படித்தவர்கள் யாரும் கிடையாது. நான் ஒருவன்தான் படித்தேன். பி.ஏ. பொருளாதாரம் கல்லூரியில் படித்தேன். வரலாறு எனக்கு விருப்பப்பாடமாக இருந்ததால் வரலாற்றில் சற்று ஆர்வம் வந்தது உண்மை. கதைகள் படிக்கிற ஆர்வம் முதலில் இருந்தது. அப்பொழுது பத்திரிகைள் எல்லாம் ரொம்பக் குறைவு. ஆனந்தவிகடன், கலைமகள், வினோதன் என்று எல்லாப் பத்திரிகைகளையும் நான் நிறையப் படிப்பேன். துப்பறியும் நாவல்கள் எல்லாம் படிப்பேன். படித்துப் படித்து 13, 14 வயதிலேயே நானும் இதைப்போல் எழுத வேண்டும் என்று ஆர்வம் தோன்றிற்று. அப்பதான் எழுதிப் பார்த்தேன். எழுதியதை எல்லாம் தெரிந்த பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். அவர்கள் திருப்பி அனுப்புவார்கள். சமயத்தில் அனுப்ப மாட்டார்கள். இதுதான் நான் எழுத்தாளன் ஆன விதம்.”

உங்கள் முதல் சிறுகதை எந்தப் பத்திரிகையில் பிரசுரம் ஆயிற்று?

” என் முதல் கதை ‘மணிக்கொடி’ யில்தான் பிரசுரமாயிற்று. அக் கதைக்கு ‘சிட்டுக்குருவி’ எனப் பெயர் சூட்டியிருந்தேன்.”

எப்படி ‘மணிக்கொடி’ யில் பிரசுரம் ஆயிற்று ? மணிக்கொடி எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கும் அறிமுகம் உண்டா ?

”பழக்கம் எல்லாம் ஒன்றும் கிடையாது. ‘மணிக்கொடி’ என்று ஒரு பத்திரிகை வருவது கூட தெரியாது எனக்கு. அப்பொழுது நான் இந்தி படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய இந்தி வாத்தியார் வீட்டில்தான் ‘மணிக்கொடி’ பத்திரிகையை முதலில் பார்த்தேன். பார்த்த உடனேயே எனக்கு என்ன தோன்றிற்று என்றால், ‘என் எழுத்து ‘மணிக்கொடி’ போன்ற பத்திரிகையில்தான் வரும்’ என்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே ஒரு கதை எழுதி என் இந்தி வாத்தியாரிடம் கொடுத்தேன். தெய்வாதீனமா அப்ப கு.ப.ராவும், நா. பிச்சமூர்த்தியும் கும்பகோணத்தில் இருந்தார்கள். அவர்களிடம் கொடுத்து, ‘இதை ‘மணிக்கொடி’க்கு அனுப்ப முடியுமா என்று பாருங்கள்’ என்று கொடுத்தார். இரண்டு பேரும் அந்தக் கதையைப் படித்துப் பார்த்து விட்டு, ‘மிக உயர்ந்த கதை இல்லையென்றாலும் ‘மணிக்கொடி’யில் வருவதற்கான தகுதி இருக்கிறது’ என்று என் வாத்தியாரிடம் கூறினார்கள். பின்னர் அவர்களே ‘மணிக்கொடி’க்குக் கதையை அனுப்பி வைத்தார்கள். அந்த ஒரு கதையைத்தான் அவர்களிடம் காண்பித்தேனே தவிர, மற்ற கதைகளையெல்லாம் நானாகவே அனுப்ப ஆரம்பித்து விட்டேன் பின்னர் அந்தக் கதைகள் ‘மணிக்கொடி’யில் பிரசுரமாயிற்று.”

‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள், பி.எஸ். ராமையா, புதுமைப்பித்தன் இவர்களோடு எப்படி பழக்கம் ஏற்பட்டது?

”அப்ப எனக்கு 16, 17 வயதுதான் ஆகிறது. ரொம்ப சங்கோஜ புத்தி. கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி இவர்களையெல்லாம் ஒரு சில முறைதான் பார்த்திருக்கிறேன். அப்புறம் பார்த்ததே கிடையாது. இவர்களையாவது ஒருமுறை பார்த்திருக்கிறேன். புதுமைப்பித்தனைப் பார்த்ததேயில்லை. மற்ற எல்லோரையும் பார்த்திருக்கிறேன். லா.ச.ரா, மெளனி பற்றி எல்லாம் எழுதியுள்ளேன்”.

லா.ச.ரா உங்களுக்குப் பின்தான் எழுதினாரா?

”எனக்குப் பிறகுதான் எழுதினார். சென்னையில் நான் இருக்கும்போது என்னைப் பார்க்க அவர் வருவார். நானும் அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறேன்.”

‘மணிக்கொடி’யில் எத்தனை கதை எழுதியுள்ளீர்கள்?

”கிட்டத்தட்ட 18 கதைகள் எழுதியிருக்கிறேன்”.

சிறுகதை வரலாற்றைப் பற்றி நவீன எழுத்தாளர்கள் கூறும்போது ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, மெளனி, பி.எஸ். ராமையா பற்றி குறிப்பிடுகிறார்கள். ஏன் தங்களைக் குறிப்பிடுவதில்லை?

”அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் என் கதைகள் தொகுப்பாக வரவில்லை”.

ஆனால் ‘மணிக்கொடி’ எழுத்துகளை வாசிக்கும்போது உங்களையும் வாசித்திருப்பார்கள் அல்லவா ?

”அப்ப அதைப் பற்றிய பேச்சு இருந்தது. அதாவது ஒரு பதிப்பு வந்து 30 வருடங்களுக்கு பிறகே மறுபதிப்பு வருகிறது. ஒரு தலைமுறைக்கே, இப்படி ஒரு கதை இருப்பது மறந்து போகிறது. அதனால் இப்படி ஆயிற்று”.

‘தேனீ’ சிற்றிதழை எப்பொழுது ஆரம்பித்தீர்கள்? எப்படி நடத்தினீர்கள்? ஏன் ‘தேனீ’ நின்று போனது? கரிச்சான் குஞ்சு ‘குபேர தரிசனம்’ சிறுகதையில், நீங்கள் ரொம்ப வசதியாக அந்த காலகட்டத்தில் இருந்தீர்கள் என்று எழுதியுள்ளாரே ?

”அந்தக் காலத்தில் நான் கொஞ்சம் வசதியாகத்தான் இருந்தேன். நாலு பேர் ஒன்று சேர்ந்து நடத்திய பத்திரிகை அது. நாலு பேரின் வசதியையும் நான் ஒருத்தனே சந்திக்க வேண்டியிருந்தது. அதில் இரண்டு நண்பர்களால்தான் அப்பொழுது கொஞ்சம் உதவி செய்ய முடிந்தது.”

யார் யார் என்று கூற முடியுமா?

”பெயரெல்லாம் வேணுமா. அது ரொம்ப டீடெய்லா போய்டுமே. இரண்டு நண்பர்களால்தான் அப்பொழுது உதவ முடிந்தது. நான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியதாயிற்று. நிதி முதற் கொண்டு. அதனால் சில சொத்துகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று. அந்த சமயத்தில் நான் சற்று வசதியாகத்தான் இருந்தேன். சரிகைத் தொழில் செய்து கொண்டிருந்தேன். வியாபாரம் நன்றாக இருந்தது. அந்த வியாபாரத்தை நலியச் செய்து விட்டது இந்தத் ‘தேனீ’ பத்திரிகை. அதனால் வியாபாரத்தில் வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டியதாயிற்று.”

மௌனியின் கதைகளைத் ‘தேனீ’ பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறீர்கள் இல்லையா ?

”மெளனியின் கதைகள் இரண்டை மட்டும் ‘தேனீ’ யில் நான் வெளியிட்டுள்ளேன். அவர் தலைப்பு இல்லாமல்தான் கதைகளை அனுப்பி வைப்பார். படித்துப் பார்த்து நான்தான் தலைப்பு வைத்திருக்கிறேன்.”

‘எழுத்து’ பத்திரிகையில் கூட நீங்கள் சிலவற்றை எடிட் செய்திருக்கிறீர்கள் இல்லையா?

”ஆம். எடிட் செய்துள்ளேன். தமிழே சரியாக எழுத வராது அவருக்கு. அதையெல்லாம் எடிட் பண்ணி வெளியிட்டுள்ளேன். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அதைப் பற்றியெல்லாம் நான் நிறைய எழுதியிருக்கிறேனே.”

மெளனியின் கதைகளைத் திருத்தியிருக்கிறீர்கள். தலைப்பு எல்லாம் கூட வைத்திருக்கிறீர்கள்? மெளனி உங்கள் பார்வையில் சிறந்த எழுத்தாளரா?

”மெளனி இலக்கணமே இல்லாமல் எழுதுவார். மெளனியின் கதைகளை எல்லாம் நான் திருத்தியிருக்கிறேன். தலைப்பு கொடுத்திருக்கிறேன் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி அவர் ஒரு நல்ல கலைஞர்”.

மெளனியைப் புதுமைப்பித்தனே ‘சிறுகதையின் திருமூலர்’ எனப் பாராட்டி உள்ளார். எல்லாருமே மெளனியை அளவுக்கு மீறிப் புகழ்வதாகத் தோன்றுகிறது. அந்தப் பாராட்டுக்கெல்லாம் அவர் தகுதியுடையவர்தானா?

”மெளனி சிறந்த சிறுகதை எழுத்தாளர்தான். ஆனால், நான் அவருக்குத் தமிழ் தெரியாது என்பதை வெளிக் கொண்டு வந்த போது, அவருடைய பாராட்டுகளெல்லாம் விடுபட்டுப் போச்சு. சிறுகதையின் திருமூலர் என்ற பேச்சு கூட நின்னு போச்சு.”

ரஜினி பாமிதத்தின் படைப்புகளை எப்பொழுது மொழிபெயர்த்தீர்கள் ?

” வித்யாப்பியாசம் முடிந்த பிறகு (பி.ஏ. பொருளாதாரம்) வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். வேலைக்காக சென்னைக்கு வந்த பிறகுதான் மொழி பெயர்த்தேன்.”

படைப்பிலக்கியவாதியான நீங்கள் எப்படி ரஜினி பாமிதத்தின் வரலாற்று நூலான ‘இந்தியா டுடே’யை மொழி பெயர்க்க வேண்டும் என்று நினைத்தீர்கள்?

”நானாகச் செய்யவில்லை. India Historical Research என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. அவர்கள் என்னை அழைத்துச் செய்யச் சொன்னார்கள். ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ நிறுவனத்துக்காகவும் பல நூல்கள், கிட்டத்தட்ட 10 நூல்களை மொழி பெயர்த்துள்ளேன்.”

‘காதுகள்’ என்கிற உங்க நாவலை மாஜிக்கல் ரியலிசம் என்று சொல்கிறார்களே? அதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

”ஏதாவது ஒரு பெயர் வைக்கணும், என்ன உத்தி என்று சொல்வதற்காக. அதனால் மாஜிக்கல் ரியலிசம் என்று வைத்திருக்கிறார்கள்”.

நீங்கள் எழுதும்போதே மாஜிக்கல் ரியலிசம் என்ற உத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து எழுதினீர்களா அல்லது பிற்பாடு எழுத்தை வகைப்படுத்துவதற்காக மாஜிக்கல் ரியலிசம் என்ற வார்த்தையை விமர்சகர்கள் பயன்படுத்துகிறார்களா?

”அப்படியெல்லாம் ஒன்றும் எழுதவில்லை. அதைப் பற்றியெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததும் கிடையாது. ரியலிசம் என்ற பெயர்களெல்லாம் தெரியுமே தவிர, இதையெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததே கிடையாது.”

’காதுகள்’ நாவல் எனது சொந்த வாழ்க்கையைப் பற்றியது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்? நாவலில் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளை உங்கள் சுய வாழ்க்கையில் எதிர் கொண்டுள்ளீர்களா? எவ்வாறு எதிர்க்கொண்டீர்கள். ஏன் எழுத வேண்டும் என்று நினைத்தீர்கள்?

”பிரச்சினைகள் இருந்தது. அதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். பிரச்சினையை எதிர்கொண்டபோது இருந்த தீவிரம், சற்று குறைந்தபோது நாவலாக எழுத வேண்டும் என்று தோன்றிற்று .அதனால் நாவலாக எழுதினேன்”.

நாவலில் பிரச்சினையைத் தத்துவார்த்தமாக அணுகி உள்ளீர்கள்? ஆனால் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினை மனம் சம்பந்தப்பட்டது.  அதை எவ்வாறு தத்துவார்த்தமாக நாவலில் மாற்றினீர்கள் ?

” நானே பின்னர் நார்மலாகிவிட்டேன். நடந்தவை எல்லாம் நன்றாக ஞாபகத்தில் இருந்தது. அதனால் அதை சுலபமாக எழுத்தாக மாற்ற முடிந்தது”.

பிரச்சினையின் அதீத எல்லைக்குள் சென்று மீண்டவர் நீங்கள். அந்தப் பிரச்சினை உங்களுக்கு எவ்வளவு காலம் நீடித்தது? எப்பொழுது முதல் தொடங்கிற்று? பால்ய காலம் முதலா?

”ரொம்ப வருஷம் இருந்தது. கிட்டத்தட்ட 20 வருஷங்கள் அதிகமாகவோ, குறைவாகவோ தொடர்ந்தபடி இருந்தது.”

அப் பிரச்சினை இருந்த காலத்தில் உங்களுக்கு எவ்விதமான மன உணர்வுகள் இருந்தன?

” நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேனே அதைப் பற்றி”.

’காதுகள்’ நாவலில் தத்துவார்த்தமாக அகம், பிரம்மம் என்று எழுதியுள்ளீர்களே?

” தத்துவார்த்தமாகத்தானே நடந்தது.”

அதாவது உங்கள் நிஜவாழ்வில் நடந்த ஓர் விஷயம் எப்படி தத்துவார்த்தமாக உருமாற்றம் அடைந்தது?

”நினைப்பே எனக்கு முதலில் அப்படித்தான் வித்தியாசமாகத்தான் இருந்தது. தத்துவார்த்தமாக நடந்தது எப்படி என்று நான் சொல்ல முடியும்? அது ஆரம்பிச்சது அப்படித்தான். கெட்ட சக்திகள் என்னைத் தாக்கியது. நல்ல சக்திகள் என்னைக் காப்பாற்றியது என்று அதை நான் எழுதல்ல, இன்னும் ஆழமாக ஆராய்ந்து எழுதல்ல. ஏனென்றால் நான் அப்படி எழுதினால் நாவல் ஒரு முடிவுக்கு வந்துவிடும். அப்படி வரக்கூடாது என்பதற்காக நான் அந்த கெட்ட சக்திகள் பற்றி மட்டுமே எழுதினேன். நல்ல சக்தி என்னைக் காப்பாற்றியது பற்றி நான் எழுதவில்லை. அதனால்தான் அந்த நாவல் தத்துவார்த்தமாக முடிந்தது. அந்த நாவலில் ஓர் இடத்தில் மட்டுமே நல்ல சக்தி என்னை இயக்குகிறது என்பதைக் காண்பிப்பதற்காக முருகன் கோயிலில் சென்று முறையிடுவதைப் போல சில வரிகள் எழுதியுள்ளேன். அந்த மாதிரி நான் வேறு எந்த இடத்திலும் எழுதவில்லை.”

இரண்டு சக்திகளும் அதாவது அந்த நல்ல சக்தியும், கெட்ட சக்தியும் உங்களுக்கு உள்ளேயே இருந்தது என்று சொல்ல வருகிறீர்களா?

”இரண்டும் நடந்தது. அது பரிசுத்தமான விஷயம். அதைத்தான் ‘காதுகள்’ நாவலில் நான் சொல்லி இருக்கிறேனே”.

‘காதுகள்’ நாவலில் ஒரு தனி மனிதனின் துயரமான வாழ்க்கை பற்றி சொல்லுகிறீர்கள். ஆனால் அதைப் படிக்கும்போது அது நகைச்சுவையும் அதே நேரம் அதிர்ச்சியும் கலந்த ஒரு உணர்வைத் தருகிறதே. எப்படி? எவ்வாறு அந்த மொழியைக் கண்டடைந்தீர்கள்? அந்த நாவலில் ஒரு அழுத்தமான தன்மை உள்ளதே அது எப்படி?

”சில பேர் என்னிடமும் நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள் என்று கூறியிருக்கிறார்கள்” .

பல பேர் ஹாஸ்ய நாவல் என்று சொல்லியிருக்கிறார்கள். பல பேர் பாதிக்கு மேல் படிக்க முடியாமல் பயந்துபோய்க் கொடுத்திருக்கிறார்கள். படித்தவர்கள் பல பேர் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று கேட்டிருக்கிறார்கள். எழுதும் போதே நாவல் கொஞ்சம் ஹாஸ்யமாக இருக்க வேண்டுமென்று நினைத்தீர்களா, ஒரு அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு எழுதப்பட்டதா?

”ஒரு திட்டம் இல்லாமல் எப்படி எழுத முடியும்.”

சிலர் படித்து முடித்த பிறகு ஹாஸ்யமாக இருப்பதாகவும், சிலர் பயமாக இருக்கிறது என்றும் உணர்ந்துள்ளனர். இது வாசகர்கள் தாங்களாகவே அடைந்த உணர்ச்சியா அல்லது அவர்கள் இந்த உணர்ச்சியை உணர வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டீர்களா?

”இல்லை, இல்லை. இது திட்டமிடப்பட்டதில்லை. வாசகர்கள் தாங்களாகவே அடைந்த உணர்ச்சிதான்.”

‘காதுகள்’ நாவல் தொலைக்காட்சித் தொடராக வருகிறதே பார்த்தீர்களா?

”இல்லை. என்னால் தற்போது பார்க்க முடியவில்லை. கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அவ்வளவாகக் காது கேட்காது, இருந்தாலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.”

கேட்ட அளவில் உங்களுக்கு என்ன தோணுகிறது?

”ஓரளவு செய்திருக்கிறார்கள். ஒண்ணும் சொல்வதற்கு இல்லை”.

பொதுவாக யதார்த்தக் கதைகள் தமிழில் பெரும்பான்மையானவர்களின் கவனிப்பைப் பெறுவதில்லையே!

”தற்பொழுது கவனிக்கிறார்களே. இப்போது Bulk edition – வந்தவுடனே கவனிக்கிறார்கள் அல்லவா. அதைப் போல் பிற்பாடு பேசுவார்கள்.”

உங்கள் எழுத்து, ஆர். சண்முக சுந்தரத்தின் எழுத்துகளெல்லாம் காலம் கடந்து இப்பொழுதுதான் கவனிக்கப்படுகிறதே? ஏன்?

”நான் முன்பே குறிப்பிட்டது போல் புத்தகம் கிடைக்கவில்லை, தொகுப்பாக வரவில்லை என்பதுதான் காரணம்.”

உங்கள் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளதே ஏன்?

”It was so planned. ஒரு நாவல் மாதிரி மற்றொன்று இருக்கக் கூடாது என்று திட்டமிட்டே எழுதினேன். ‘நித்திய கன்னி’ போல் ‘வேள்வித் தீ’ இருக்காது. ‘வேள்வித்தீ’ போல் ‘அரும்பு’ இருக்காது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.”

உங்கள் ‘நித்யகன்னி’ நாவல் பரவலாகப் பேசப்பட்டதைப் போல், ‘வேள்வித் தீ’யோ, ‘அரும்போ’ பேசப்பட்டதில்லையே ஏன்? உங்கள் படைப்புகளில் உங்களுக்குப் பிடித்தது எது?

”எல்லாமே எனக்குப் பிடித்த படைப்புகள்தான். எல்லாவற்றையுமே நன்றாகச் செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘அரும்பு’ நாவல் பேசப்பட வேண்டிய அளவுக்குப் பேசப்படவில்லை. அதற்குக் காரணம் நாவலின் பிரதி கிடைப்பதில்லை. கடந்த 2 ஆண்டுகளாக சுத்தமாகக் கிடைக்கவில்லை. இப்படி ஆண்டுக்கணக்கில் கிடைக்காமல் இருப்பதன் மூலம் அதைப் பற்றி மதீப்பீடு செய்வதற்கு வழி இல்லாமல் போகிறது. 700 பக்கங்கள் கொண்ட நாவலாக இருப்பதால் மறு பதிப்பும் கூட போடாமல் இருக்கிறார்களா?”

நீங்கள் எழுதிய ‘வேள்வித்தீ’ , ‘அரும்பு’ நாவல்கள் பற்றி, தற்போதைய மனநிலையில் சரியாகச் செய்திருப்பதாக நினைக்கிறீர்களா? சற்றுத் திருத்தி வேறு மாதிரி எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

”வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் எல்லாம் சரியாகச் செய்திருக்கிறேன் என்றுதான் நம்புகிறேன்.”

போஸ்ட் மாடர்னிசம், ஸ்ட்ரக்சுரலிசம், மாஜிகல் ரியலிசம் – இப்படிப்பட்ட இலக்கிய இசங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

”எழுதும்போது இந்த விஷயங்களை எல்லாம் நினைத்துக் கொண்டு எழுதுவதில்லை. மணிக்கொடி எழுத்தாளர்கள் எல்லோருமே இந்த இசங்கள் பற்றிய சிந்தையோடு எழுதவில்லை. பின்னால் வந்தவர்கள்தான் இந்த இசங்களை நினைத்துக்கொண்டு எழுதுகிறார்கள். நாங்கள் இதையெல்லாம் நினைத்துக் கொண்டு எழுதவில்லை.”

ஆனால் நீங்கள் எழுதிய காலத்திலேயே இந்த இசங்கள் எல்லாம் இருந்திருக்கிறதே? குறிப்பாக நேச்சுரலிசம், ரியலிசம், எல்லாம் இருந்திருக்கிறதே?

”இந்த இசங்களை எல்லாம் யோசித்துக்கொண்டு தமிழ்நாட்டில் அவ்வளவு டீப்பாக யாரும் எழுதவில்லை.”

புதுமைப்பித்தனின் எழுத்தில் ·பிராய்டிசத்தின் பாதிப்புத் தெரிவதாக எல்லோரும் சொல்கிறார்களே?

”அவர் இசங்கள் பற்றியெல்லாம் ஒன்றும் எழுதவே இல்லை”.

ஜேம்ஸ் ஜாய்ஸ் உத்திகளெல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. அந்த உத்திகளை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீர்கள்? அப்படியென்றால் அப்பொழுதே அந்த இசங்கள் எல்லாம் இருந்திருக்கிறது அல்லவா?

”இருந்திருக்கிறது. ஆனால் அதைப் பெரிய அளவில் பயன்படுத்தி எழுதவில்லை.”

சி.சு. செல்லப்பா நிறைய இசங்கள் பற்றி பேசியிருக்கிறாரே? ஆனால் நீங்கள் இந்த நினைப்போடு படைப்பில் ஈடுபடவில்லை என்று கூறுகிறீர்களா?

”நான் மாத்திரம் அல்ல ; சி.சு.செல்லப்பாவே அப்படி எழுதவில்லை.”

ஆனால் புதுமைப்பித்தனின் முன்னுரையாகட்டும், மெளனி கதைகளின் முன்னுரையாகட்டும் மேற்கத்திய எழுத்தாளர்களின் பாதிப்பில்தான் எழுதப்பட்டது என்று அவர்களே குறிப்பிட்டுள்ளார்களே? உங்கள் நாவலை மாஜிகல் ரியலிசம் நாவல் என்று சொல்கிறார்கள்? ஆனால் நீங்கள் அதை ஒரேயடியாக சுய வரலாறு என்று கூறுகிறீர்களே? எல்லோரும் மார்க்யூஸின் நாவலுக்குப் பிறகு, தமிழில் வந்துள்ள மாஜிகல் ரியலிச நாவல் ‘காதுகள்’ தான் என்கிறார்களே?

”நாங்கள் யாரும் இந்த இசங்களின் நினைப்போடு எழுதவில்லை. யாராவது அதற்கு மதிப்புரை எழுதும்போதுதான், இது மாஜிகல் ரியலிசம், இது சர்-ரியலிசம் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.”

”இசங்கள் பற்றிய பிரக்ஞை உங்கள் காலத்தில் இல்லை என்று கூறுகிறீர்கள். அது எந்த காலத்தில் ஆரம்பித்தது ? தற்பொழுது இசங்கள்தான் இருக்கிறது, நாவல்கள் இல்லை. நாவல் கூட முக்கியம் இல்லை அதனுடைய விமர்சனம்தான் முக்கியமாகி வருகிறது! இசங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதைப் பற்றி ஆழமாகப் பேசுகிறார்கள். உங்கள் காலத்தில் எப்படி?

”இசங்கள் எல்லாம் எங்கள் காலத்தில் கிடையாது”.

சி.சு. செல்லப்பா படைப்புகளை விட, விமர்சனம் சார்ந்த புத்தகங்களையே விரும்பிப் படிப்பார், எழுதுவார் என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களே, அப்படி என்றால் அப்பொழுதே அந்தப் பிரக்ஞை இருந்திருக்கிறது அல்லவா?

”யாராவது ஒருவர் இந்த இசங்களைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் அவர்களே இதைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அந்த மாதிரிதான் இருந்தது. இதை வைத்து எழுதுவது மிகக் குறைவாகத்தான் இருந்தது. நீங்கள் சொல்வது எனக்குப் புதிதாகத் தான் இருக்கிறது.”

உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்? பிடித்த படைப்புகள் எவை?

”தி. ஜானகிராமன், ந. பிச்சமூர்த்தியின் படைப்புகள் எல்லாம் எனக்கு பிடிக்கும். அசோகமித்திரன், ஜெயகாந்தன் படைப்புகள் எல்லாம் பிடிக்கும். ஆனால் ஜெயகாந்தனுடைய நூல்கள் எல்லாவற்றையும் படித்ததில்லை. மேற்கில் கா·ப்கா, தாஸ்தயெவ்ஸ்கி, ஆல்பர்காம்யூ ரொம்பப் பிடிக்கும். கிளாசிகல் நாவல்கள் எல்லாம் பிடிக்கும். டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனா ரொம்பப் பிடிக்கும். சாமர்செட் மாம் எழுத்துகள் பிடிக்கும் என்றாலும், அதிகமாகப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.”

‘மணிக்கொடி’ காலம் மாதிரி இல்லாமல் இப்போது கதைகள் எல்லாம் வியாபாரப் பொருளாக மாறி வருகிறதே, அதைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?

”அது வேற. வியாபார எழுத்துகளைத்தான் நீங்கள் அதிகம் பார்க்கிறீங்க. ஏனென்றால் அதிகமாகத் தெரிவது அதுதான். ஆனால் உண்மையில் சின்னச் சின்னப் பத்திரிகைகள் வருகிறது பாருங்கள். அதில்தான் உண்மையான இலக்கியம் இருக்கிறது. அவையெல்லாம் நிறைய வந்து கொண்டுதான் இருக்கிறது.”

சிறு பத்திரிக்கை நடத்தி நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள்? தற்போதும் நிறைய சிறு பத்திரிகைகளை இளைஞர்கள் கொண்டு வருகிறார்கள்? இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன ?

”சரியோ, தப்போ இளைஞர்கள் முன் வருவதும், தியாக மனப்பான்மையோட செய்வதும், நல்ல கதைகள், நாவல்கள் வெளிவருவதும் சந்தோஷமான விஷயம்தான்.”

சிறு பத்திரிகைகளில்தான் நல்ல படைப்புகள் வருகிறதா?

”நல்ல படைப்புகள் சிறு பத்திரிகையில் தான் இதுவரை வந்துள்ளது. வர முடிந்திருக்கிறது”.

1960, 70 களுக்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்கள் எவ்வாறு எழுதுகிறார்கள்? அவர்களைப் பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?

”கடந்த 7, 8 வருஷமா எனக்கு சரியாக் கண் தெரியல. ஆனால் அதற்கு முன் உள்ளவர்களைப் படிக்கும் போது நன்றாகத்தான் எழுதுகிறார்கள். மோசம் என்று சொல்ல முடியாது. புதிய எழுத்துகளெல்லாம் வரத்தானே செய்யும்”.

நீங்கள் சென்னையில் இருந்தீர்களே, உங்கள் சென்னை வாழ்க்கை எப்படி இருந்தது?

” ‘தேனீ’ நடத்துவதற்கு முன்னால் ஒருமுறை சென்னை சென்றிருந்தேன். ஆனால் இரண்டாவது முறை ‘தேனீ’ நடத்தி, நஷ்டப்பட்ட பின்தான் சென்றேன். சில காலம் வசதியாகத்தான் இருந்தேன். வீட்டிற்கும் வசதி செய்து கொடுத்தேன்.”

நீங்கள் எப்போதும் உங்கள் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துகிறீர்களே எப்படி? ஆடை அணிந்து கொள்வதிலும், மற்றவர் முன் வெளிப்படும் போதும் நீங்கள் உங்களை அதிகம் கவனித்துக் கொள்கிறீர்களே?

”இது சிறுவயது முதலே என் சுபாவமாக இருந்து வருகிறது. முழுக்கைச் சட்டை, அரைக்கைச்சட்டை போடுவது ; எட்டு முழ வேஷ்டி, துண்டு போட்டுக் கொள்வது இது சென்னையில் இருக்கும்போது விடுபட்டுப் போய்விட்டது.”

இதைப் போல் மற்றவர்களிடமும் எதிர் பார்க்கிறீர்களா?

”ஆம். அருகில் இருப்பவர் ‘நீட்’ டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக வெள்ளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

வெற்றிலை போடுகிறீர்களே ரொம்பப் பிடிக்குமா? சென்னைக்குச் செல்லும்போது எப்படி?

”கும்பகோணம் வெத்திலை போடாமல் இருக்க முடிவதில்லை. சென்னைக்குச் சென்றாலும் எப்படியாவது வெத்திலை வாங்கிப் போட்டுவிடுவேன். சென்னையில் கிடைக்கும். இப்பவும் கிடைக்கிறது.”

***

நன்றி : ஆறாம்திணை (2001), ஆப்தீன்

Oct 4, 2010

பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

விழிப்பு வந்ததும் ராஜம் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். தூக்கக் கலக்கம் இல்லாவிட்டாலும் எதையோ எதிர் பார்த்தவன் போல் கொஞ்ச நேரம் காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தபடி பக்கத்து வீட்டுச் சேவல் ‘கொக்.... கொக் கொக்கோகோ’ என்று கூவியதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது.
‘நான் கண் திறக்க வேண்டும் என்று இந்தச் சேவல் காத்திருக்கும் போல இருக்கு! இப்போ மணி MVV என்ன தெரியுமா? சரியாக நாலரை!’ என்று தனக்குள் சொல்லிச் சிரித்தவாறு, இடுப்பு வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு எழுந்தான்.
காலையில் அம்மா முகத்தில் விழித்து விடக் கூடாது என்று அவனுக்குக் கவலை. இருட்டில் கால்களால் துழாவியபடி இரண்டு தங்கைகளையும் தாண்டினான். அப்பால்தான் அம்மா படுத்திருந்தாள். கீழே குனியாமல் சுவிட்சைப் போட்டான். வெளிச்சம் வந்ததும் உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டான். ஆணியில் தொங்கிய கண்ணாடியை எடுத்து முகத்தைப் பார்த்துக் கொண்டான். பிறகுதான் மனசு சமாதானப்பட்டது. அது என்னவோ, அம்மா முகத்தைப் பார்த்தபடி எழுந்தால் அன்றைய பொழுது முழுவதும் சண்டையும் சச்சரவுமாகப் போகிறது!
கடிகாரத்தில் மணி பார்த்தான். நாலு முப்பத்திரண்டு...!
பக்கத்து வீட்டில் கொல்லைப் பக்கம் ஒரு சின்ன கோழிப் பண்ணை வைத்திருக்கிறார்கள். சேவல் இல்லாமல் கோழிகள் ஏழெட்டு மாதம் முட்டை இடும் அதிசயம் அங்கே நடக்கிறது. சும்மா அழகுக்காக அடுத்த வீட்டுக்காரர் ஒரு சேவல் வளர்க்கிறார். ஜாதி சேவல்; ஒன்றரை அடி உயரம். வெள்ளை வெளேரென்று டினோபால் சலவை செய்த உருப்படி போல் இருக்கும். அதுதான் நாலரை மணிக்குச் சொல்லி வைத்தாற்போல் கூவுகிறது.
‘என்னைக்காவது ஒரு நாள் நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? சுவரேறி குதிச்சு சேவல் கழுத்தைத் திருகி, குழம்பு வச்சி தின்னுடப் போறேன். அதெப்படி கரெக்டா நாலரை மணிக்குக் கூப்பாடு போடுது! காலை நேரத்திலே ஐயோய்யோ என்று கத்தறாப் போலே சகிக்க முடியல்லே!’
அவன் கவனம் தறி மேடை மீது சென்றது. இரண்டை முழம் நெய்தால் சேலை அறுக்கலாம். கடைசிச் சேலை. இன்றைக்குச் சாயங்காலம் அறுத்துவிட வேண்டும். முடியுமா? முதலாளி கூப்பிட்டு ஏதாவாது வேலை சொல்லாமல் இருக்க வேண்டும். அம்மா சண்டை வளர்க்காமல் இருக்க வேண்டும். முதலாளி கூப்பிட்டால் சால்ஜாப்பு சொல்லலாம்? ஆனால் இந்த அம்மாவை எப்படி ஒதுக்குவது?
குனிந்து தைரியமாக அம்மாவைப் பார்த்தான். தூக்கத்திலே கூட உர்றென்று... பார்க்கச் சகிக்கவில்லை. பெற்றவளை அப்படிச் சொல்வது பாவல் இல்லையா? ஒன்றா? இரண்டா? ஆண் பிள்ளையிலே ஐந்து, பெண் பிள்ளையிலே ஐந்து, பத்தும் பிழைத்துக் கிடக்கின்றன, சேதாரம் இல்லாமல். அப்பா நெசவு வேலையில் கெட்டிக்காரர். குடித்துவிட்டு வந்து அம்மாவைத் தலைகால் பாராமல் உதைப்பார்; உதைத்து விட்டுத் தொலைவாரா? அம்மா காலில் விழாத குறையாக இரவு முழுவதும் அழுது கொண்டிருப்பார்.
ராஜம், வீட்டுக்கு மூத்த பிள்ளை. அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுப் போட்டுப் பத்துக் குழந்தைகள் பிறந்த கதை அவனுக்குத் தெரியும்.
‘இவ்வளவு சண்டை போட்டிருக்காவிட்டால், இத்தனை குழந்தைகள் வந்திருக்காது. பெண்டாட்டியை ஏன் அடிக்கணும், பிறகு அது மோவாயைப் பிடித்து ஏன் கெஞ்சணும்? அதான் எனக்குப் புரியல்லே’.
அப்பாவால்தான் அம்மா கெட்டுப் போயிருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவள் அப்பாவை எதிர்த்துப் பேசுவதில்லை. அடிதாங்க முடியாமல் எதிர்த்து வாயாடத் தொடங்கினாள். உடம்பிலே தெம்பு குறைந்ததும் பதிலுக்கு அடிக்கவும், கடிக்கவும் ஆரம்பித்தாள்.
அம்மாவுக்கு சோழிப்பல். உதடுகளைக் காவல் காப்பது போல் வெளியே நிற்கும். அப்படி குடி போதையில் அவளை அடிக்கும்போது, கையோ, காலோ, வாயோ, வயிறோ, பல்லில் சிக்கிய இடத்தைக் கடித்துக் குதறி விடுவாள்.
அவளிடம் கடிபடாமல் தப்புவதற்காக அப்பா தறிமேடையைச் சுற்றிச் சுற்றி ஓடிய காட்சியை நினைத்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“நீ நாயாப் பிறக்க வேண்டியவ...”
“அதுக்காவத்தான் உன்னைக் கட்டிக்கிட்டுச் சீரளியறேன்...”
அம்மா சாதாரணமாய் அப்பாவுக்கு ‘நீங்க’ என்று மரியாதை தருவது வழக்கம்; ஆனால் சண்டையின் உச்ச கட்டத்தில் இந்த மரியாதை பறந்து போகும்.
”உனக்கு வாய் நீளமாப் போச்சு. பல்லைத் தட்டி கையிலே கொடுத்தாத்தான்...”
“எங்கே பல்லைத் தட்டு, பார்க்கலாம்! ஆம்பிளையானா என்கிட்டே வா, பார்க்கலாம்!” என்று அம்மா சவால் விட்டு, தட்டுவதற்காகப் பற்களைப் பிரமாதமாய்க் காட்டுவாள்.
ஆனால், அப்பா அவளுடைய பற்களை நெருங்கத் துணிந்ததில்லை. தெளிந்த போதையை மீட்டுக் கொள்வதற்காக மறுபடியும் கள்ளுக்கடைக்கு ஓடி விடுவார்.
அம்மாவின் கடிக்கு பயந்துதானோ என்னவோ, அவள் பத்தாவதாக ஒரு பெண் குழந்தை பெற்றதும் அப்பா செத்துப் போனார். அவர் செத்ததே வேடிக்கைதான்.
அம்மாவின் பிரசவங்கள் எல்லாம் வீட்டில்தான் நடப்பது வழக்கம். துணைக்கு அத்தை ஒருத்தி வருவாள். குழந்தை பிறந்ததைத் தாம்பாளத்தில் தட்டி அத்தைதான் அறிவிப்பாள்.
“என்ன குளந்தே?” என்று கேட்டார் அப்பா.
“கணக்கு சரியாப் போய்ச்சு. ஆண் பிள்ளையிலே அஞ்சு இருக்கா? பெண் பிள்ளையும் அஞ்சு ஆயிடுச்சு”.
“பொண்ணு பிறந்திருக்குன்னா சொல்றே?”
“அதான் சொல்றேன்.”
“அஞ்சு பெண்களைக் கட்டிக் கொடுக்கிறதுக்குள்ளே நான் காவேரிக் கரைக்குப் போயிடுவேன். போயும் போயும் பெண்ணா பெத்தா?”
“நீங்க ஒண்ணும் கலியாணம் பண்ணிக் கிழிக்க வேணாம். அவங்க அவங்க தலை எழுத்துப்படி நடக்கும். நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம்” என்றாள் அம்மா, அறையில் இருந்தபடி.
”நான் எப்படி கவலைப்படாமே இருக்க முடியும்? நீ பொம்பிளே; வீட்டிலே உட்கார்ந்து பேசுவே. தெருவில் நாலு பேருக்கு முன்னாடி போறவன் நான் இல்லே? குதிராட்டம் பெண்ணுங்க கல்யாணத்துக்கு நிக்குதுன்னு என்னையில்லே கேப்பாங்க?”
“குளந்தே இப்பத்தான் பிறந்திருக்கு. அதுக்குள்ளே கலியாணத்தெப் பத்தி என்ன கவலை?”
“முன்னாடியே நாலு பெத்து வச்சிறிக்கியே. எல்லாத்துக்கும் கலியாணம் கார்த்தி செய்யறதுன்னா சின்ன வேலெயா? போயும் போயும் பெண்ணா பெத்தே?”
மனைவி, பெண் பெற்ற கவலையை மறப்பதற்காக அவர் காலையிலிருந்தே குடிக்கத் தொடங்கினார். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை அறை வாசலில் தலை காட்டுவார்; ‘போயும் போயும் பெண்ணா பெத்தே?” என்று பெருமூச்சு விடுவார்; வெளியே சென்று குடித்து விட்டு வருவார். நாள் பூராவும் இந்தக் கேள்வியும் குடியுமாகக் கழிந்தது.
இரவு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. வீடு நாறும்படி வாயில் எடுத்தார். பிறகு ரத்தமாய்க் கக்கி விட்டு மயங்கிப் படுத்தவர், பெண்களுக்கு மணம் செய்து வைக்கிற சிரமத்தைத் தட்டிக் கழித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.
அப்புறம், எல்லாம் அம்மா பொறுப்பு.
அம்மா பொறுப்பு என்றால் அவள் பிரமாதமாய் என்ன சாதித்து விட்டாள்? குழந்தைகளை வாட்டி வதக்கி வேலை வாங்கி வயிற்றை நிரப்பிக் கொள்கிறாள். வயிற்றில் கொட்டிக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறொன்றும் தெரியாது.
சந்தடி கேட்டு அம்மா விழித்துக் கொள்ளப் போகிறாளே என்று ராஜம் ஜாக்கிரதையாகவே பல் விளக்கினான். பல் விளக்கும்போது அவனுக்கு ஒரு பழைய ஞாபகம் சிரிப்பு மூட்டியது.
சிறுவனாக இருந்தபோது அம்மா பல் துலக்குவதைப் பார்ப்பது அவனுக்கு வேடிக்கை. ஒரு பிடி சாம்பலை அள்ளித் தண்ணீரில் நனைத்துப் பற்களைத் தேய்ப்பாள்; ஒவ்வொரு பல்லாக தேய்ப்பதற்கு நீண்ட நேரமாகும். சிறுவனான அவன் அவளருகில் போய் “ஒவ் அம்மா ஃபோக் சவஸ்தக் தாத் கூர் கெல்லர்த்தெகா?” (ஏன் அம்மா, அப்பாவைக் கடிக்கப் பல்லைக் கூராக்கிக்கிறியா?) என்று கேட்பான்.
“அரே தொகோ ஒண்டே பாடே ஃபந்தா! காய் திமிர்ஸா!” (அடே ஒனக்கு ஒரு பாடை கட்ட! என்ன திமிர் பாரு!) என்று எச்சில் கையால் அம்மா அவனை அடிக்க வருவாள்.
அவளிடம் சிக்காமல் அவன் தெருப்பக்கம் ஓடி விடுவான்.
மனத்தில் சிரித்தபடி பல் துலக்கி முடித்தான். பஞ்சாமி ஹோட்டலுக்குப் போய் ஒரு காபி சாப்பிட்டு வந்து பிறகு தங்கையை எழுப்பிக் கொண்டு தறிக்குப் போகலாம் என்று அவன் எண்ணம்.
முகத்தைத் துடைத்துக்கொண்டு கிழக்குத் திசையைப் பார்த்து, உதயமாகாத சூரியனைக் கும்பிட்டான். தறி மேடைக்குப் பக்கத்திலிருந்த மாடத்தில் கண்ணாடி இருந்தது.  முகம் பார்த்து, தலை மயிரை வாரினான். சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் புறப்படத் தயாரானான்.
அம்மா சன்னமாய்க் குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள், பெண் பிள்ளைகள் குறட்டை விடலாமா? சொன்னால் கேட்பாளா? அவன் சொல்லி அவள் கேட்கிற பழக்கம் கிடையாது. அவன் சொன்னதற்காக அவள் பலமாய்க் குறட்டை விடுவாள். ‘நான் ஹோட்டல்லேயிருந்து வர்ற வரை குரட்டை விட்டார்.
”ரேய் ராஜம் கோட் ஜாரிஸ்தே?” (டே ராஜம், எங்கே போறே?) என்று அம்மாவின் குரல் கடப்பாரையாய் அவன் தலையில் இடித்தது.
ஹூம். நடக்கக்கூடாது என்று எதிர்ப்பார்த்தது நடந்து விட்டது. அவன் பேசவில்லை.
”கிளப்புக்குத்தானேடா? கிளாஸ்லே சாம்பார் வாங்கிட்டு வா.”
“கிளப்லே சாம்பார் தர மாட்டான்.”
“ஏன் தர மாட்டான்? ஒரு தோசை வாங்கிக்கோ.”
“பார்சல் வாங்கினாலும், பஞ்சாமி கிளப்லே தனியா சாம்பார் தர மாட்டான்.”
“எல்லாம் தருவான், கேளு.”
“தர மாட்டான். போர்டு போட்டிருக்கான்.”
“தோசை வாங்கினா சாம்பார் ஏன் தர மாட்டான்? எனக்கு ஒரு தோசை வாங்கிட்டு வர உனக்கு இடமில்லை. இருபது பைசா செலவாயிடும்னு பயப்படுறே. உன் வாய்க்கு மாத்திரம் ருசியா, சாம்பார் கொட்டிக்கிட்டு ஸ்பெசல் தோசை தின்னுட்டு வருவே.”
”காலை நேரத்துலே நா ஒரு காபி சாப்பிட்டு தறிக்குப் போகலாம்னு பார்த்தேன். நீ இப்படி வம்பு வளர்த்தா...”
“பெத்தவ தோசையும் சாம்பாரும் கேட்டா வம்பாவா தெரியுது?”
”வீடு பூரா தூங்குது. ஏன் இப்படி உயிர் போகிறாப் போல கத்தறே? பஞ்சாமி கிளப்பிலே, தனியா டம்ளர்லே சாம்பார் தர மாட்டான்னு சொன்னா....”
“அங்கே போக வேணாம். வேறெ கிளப்புக்குப் போ. சாம்பாரோடதான் நீ வீட்டிலே நுழையணும்.”
ராஜத்தின் நாவில் பஞ்சாமி ஹோட்டல் காபி மணத்தது. கும்பகோணத்தில் பசும் பால் காபிக்காப் பிரபலமான ஹோட்டல் அது.
அம்மா சாம்பாரைத் துறக்கத் தயாராக இல்லை.
“சரி, நான் கிளப்புக்குப் போகல்லே; காபியும் சாப்பிடல்லே. குள்ளி, ஓவ் (அடீ) குள்ளி, எகுந்திரு, தறிக்குப் போகலாம்.”
“நீ காபி சாப்பிடாவிட்டா சும்மா இரு. எனக்குத் தோசையும் சாம்பாரும் கொண்டா.”
“என்கிட்டே காசு இல்லே; காசு கொடு, வாங்கிட்டு வர்றேன்.”
இவ்வளவு நேரம் பாயில் படுத்தபடி பேசிக் கொண்டிருந்தவள் துணுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.
”என்ன சொன்னே? சொல்லுடா, என்ன சொன்னே?”
“அதிசயமா என்ன சொல்லி விட்டேன்? காசு குடுத்தா தோசையும் சாம்பாரும் வாங்கிட்டு வர்றேன்னேன்.”
“பெத்தவளுக்கு ஒரு தோசை வாங்கிக் கொடுக்க வக்கில்லாமப் போச்சா? இன்னம் தாலி கட்டின பாடில்லே. பெண்டாட்டியா வரப்போறவளுக்கு வாங்கித் தர நோட்டு நோட்டா கிடைக்குது; இல்லியாடா?”
“இந்தாம்மா, சும்மா வாயை அவிழ்த்து விடாதே. நாலு குடித்தனத்துக்காரங்க தூங்கறாங்க. உன் குரலைக் கேட்டு முழிச்சுக்கப் போறாங்க. நான் யாருக்கும் ஒண்ணும் வாங்கித் தரல்லே.”
“பூனை கண்ணை மூடிக்கிட்டா ஊரே அஸ்தமிச்சதா நினைச்சுக்குமாம். நீ எதிர் வீட்டுப் பொண்ணுக்காக என்னென்ன செலவு செய்றேன்னு எனக்குத் தெரியாதா?”
“வாயை மூடு. ஊர்ப் பொண்ணுங்களைப் பத்தி இப்பிடி பேசினா...”
“இல்லாதது என்னடா பேசிட்டேன்? தெருவிலே போறப்போ நீ அதைப் பார்த்துச் சிரிக்கிறதும், அது உன்னைப் பார்த்து இளிக்கிறதும், ஊரே சிரிப்பா சிரிக்குது. நான் ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ; நீ அதைக் கட்டிக்கணும்னு ஆசைப்படறே, அது நடக்காது. நான் உயிரோட இருக்கிறவரை அவ இந்த வீட்டு மருமகளா வந்துட முடியாது.”
ராஜம், அம்மா முகத்தை வெறித்துப் பார்த்தான். அவளிடமிருந்து தப்புவதற்காக அப்பா தறி மேடையைச் சுற்றி ஓடியது ஞாபகம் வந்தது.
“என்ன செஞ்சிடுவே? கடிச்சிடுவியோ?” என்று கேட்டான் ஆத்திரமாக.
“அடே பேதியிலே போறவனே, என்னை நாய் என்றா சொல்றே?” என்று எகிறிக் குதித்தாள் அம்மா. “உன்னைச் சொல்லிக் குத்தமில்லே, அந்த எதிர்வீட்டுக் கழுதை உனக்கு சொக்குப்பொடி போட்டிருக்கா. அது உன்னை இப்பிடி ஆட்டி வைக்குது. டேய் பெத்தவளை நாய்ன்னு சொல்ற நாக்கிலே புழு விழும்டா, புழு விழும்.”
அடுத்த வீட்டுச் சேவல் ஐயய்யோ என்று கத்தியது. ராஜத்துக்கு ஒரே எரிச்சலாக வந்தது. சாம்பார் சண்டையைச் சாக்காக வைத்துக் கொண்டு அம்மா பங்கஜத்தையும் அல்லவா திட்டுகிறாள்? திட்டி ஊரையே கூட்டி விடுவாள் போல் இருக்கிறது. பங்கஜத்தின் பெற்றோர் அதைக் கேட்டால் என்ன நினைப்பார்கள்? பங்கஜம் கேட்டால் என்ன பாடுபடுவாள்?
“காளி, வாயை மூடு. பொழுது விடியறத்துக்குள்ளே இப்படி கூச்சல் போட்டா நல்லா இருக்கா? உனக்கு என்ன வேணும்? தோசை சாம்பார்தானே? டம்ளர் எடு.”
அம்மா அசையவில்லை.
”சாம்பாரும் தோசையும் அந்தக் கழுதை தலையிலே கொட்டு. என்னை நாய்ன்னு சொல்றியா? உனக்குப் பாடை கட்ட! வாயெ மூடிக்கிட்டுப் ’போனாப் போவுது, போனாப் போவுது’ன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன். என் தலைய்லே மிளகா அரைக்கிறியா? பரம்பரை புத்தி போகுமாடா? அப்பன் குடிகாரன், குடிகாரன் பிள்ளை எப்படி இருப்பான்?”
“சரி, போதும், நிறுத்து. நாய்ன்னு நான் சொல்லல்லே. டம்ளரை எடு. சாம்பார் வாங்கிட்டு வர்றேன்.”
அவன் சொன்னதை அவள் கேட்டதாகத் தெரியவில்லை. வாயிலிருந்த ஆபாசங்களை எல்லாம் துப்பிவிட்டுத்தான் நிறுத்துவாள் போலிருந்தது.
ராஜத்துக்கும் அளவு கடந்த கோபம். இவள் லண்டி; நிறுத்தமாட்டாள்; வாயில் ‘பளார், பளார்’ என்று நாலு அறை விட்டால்தான் இவள் வாயை மூடலாம். அறை விட்டிருப்பான்; அவளுடைய கூப்பாட்டுக்கு அஞ்சித்தான் அடக்கிக்கொண்டான்.
“என்னடா முறைக்கிறே? இதெல்லாம் என்கிட்டே வச்சிகாதே. பொம்பிளைதானே, அடிச்சா உதைச்சா யார் கேக்கப் போறாங்கன்னு நினைக்கிறாயா? பெத்தவலைத் தொட்டு அடி பார்க்கலாம், உன்னை என்ன செய்யறேன் பாரு. உடம்பிலே தெம்பு இல்லைன்னா நினைக்கிறே? நான் காளி குப்பம்மாவுக்குச் சொந்தக்காரிடா. என்னைத் தொட்டுடு. உன் வயித்தெ கிழிச்சு குடலை மாலையா போட்டுக்கிட்டு எதிர் வீட்டுக்காரி முன்னாலே போய் நிப்பேன்!”
காளி குப்பம்மாள். கணவணின் வயிற்றை அரிவாள் மணையினால் கிழித்துக் குடலைக் கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு, தெருத் தெருவாய் கையில் அரிவாள்மணையுடன் சுற்றி விட்டுப் போலீசில் சரணடைந்ததாய்க் கும்பகோணம் சௌராஷ்டிரர்கள் கதையாகச் சொல்வதை ராஜமும் கேள்விப்பட்டிருந்தான். அம்மா, காளி குப்பம்மாவுக்கு சொந்தம் என்று இன்றுதான் உறவு கொண்டாடுகிறாள். அவ்வளவு தைரியம் இவளுக்கு வராது. ஏமாளிகளான பிள்ளைகளை மிரட்டுவாள்.
அவளுக்கு முன்னால் நின்று பேச்சுக் கொடுக்க முடியாது என்று ராஜத்துக்குப் புரிந்தது. அவனே ஓர் எவர்சில்வர் டம்ளரை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டான்.
அவன் பேசாமல் கிளம்பிய பிறகு அம்மா விடவில்லை; “எனக்காக நீ ஒண்ணும் வாங்கிட்டு வராதே. வாங்கிட்டு வந்தா சாக்கடையிலே கொட்டுவேன்.”
அவன் பதில் பேசாமல் புறப்பட்டான். ஒரு விநாடி தயங்கி நின்றான். அம்மாவை பிடித்து இழுத்து, தலை முடியை உலுக்கு கன்னங்களில் மாறி மாறி அறைந்து, முகத்திலும் முதுகிலும் குத்தி, ‘விட்டுட்றா, விட்டுட்றா, இனிமே நான் உன் வழிக்கு வரல்லே; நீ பங்கஜத்தைக் கட்டிண்டு சுகமாயிரு. என்னை விட்டுடு’ என்று கதறக் கதற உதைத்துச் சக்கையாக மூலையில் எறிந்து விடலாமா என்ற ஒரு கேள்வி காட்சியாகக் கண்களுக்கு முன்னால் வந்தபோது அவன் மனசுக்கு சௌகரியமாயிருந்தது. ‘அப்பா அடிப்பாரே, அந்த மாதிரி, அப்பாவைக் கடிக்கப் பாய்வாளே, அப்படிக் கடிக்க வருவாளோ? வரட்டுமே; என்னிடம் பலிக்காது; பல்லைத் தட்டிக் கையில் தருவேன்’ என்று மனத்துக்குள் கறுவிக் கொண்டான்.
ஒரு விநாடிக்கு மேல் இந்த மனசுகம் நீடிக்கவில்லை, அம்மா தாடகை; பல்லைவிட அவள் சொல்லுக்குக் கூர் அதிகம். அவன் கை ஓங்கும்போதே, அவள், ‘கொலை கொலை’ என்று சத்தம்போட ஆரம்பிப்பாள். ஐந்து குடிகள் இருக்கிற வீடு, இருபது பேராவது இருப்பார்கள்; எல்லாரும் எழுந்து ஓடிவந்து விடுவார்கள். அவனைத்தான் கண்டிப்பார்கள்.
அம்மாவை ஜெயிக்க முடியாது.
அவன் பேசாமல் நடந்தான். பௌர்ணமி போய் ஆறேழு நாள் இருக்கும். அரைச் சந்திரனின் வெளிச்சம் தாழ்வாரத்தில் வெள்ளையடித்தாற்போல் கிடந்தது. மாசி மாதம்; பின்பனிக்காலம் என்று பெயர்; இரவு முழுவதும் நன்றாய்க் குளிருகிறது. புறாக் கூடு போல் அறை அறையாகப் பிரிந்துள்ள அந்த வீட்டில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள்; விழித்துக் கொண்டிருந்தால் பேச்சு சத்தம் கேட்குமே? தறி சத்தம் கேட்குமே? மூன்றாவது குடியான சீதம்மா மட்டும் வெளியே படுத்திருப்பாள். அவள் மீது நிலா வெளிச்சம் விழுந்தது. போர்வை காலடியில் துவண்டு கிடக்க, அவள் உடலை அஷ்டகோணலாக ஒடுக்கிக் கொண்டு படுத்திருப்பதைப் பார்த்தாலே அவளும் தூங்குகிறாள் என்று தெரிகிறது.
வீட்டில் யாரும் விழித்துக் கொள்ளவில்லை, அம்மாவின் காட்டுக் கத்தலைக் கேட்கவில்லை என்ற திருப்தியுடன் ராஜம் முன்கட்டை அடைந்தபோது, “என்ன ராஜம், ஹோட்டலுக்குப் புறப்பட்டியா?” என்று ஒரு குரல் தமிழில் கேட்டது.
சாரங்கன்; விழித்திருப்பான் போல் இருக்கிறது. அம்மாவும் ராஜமும் சண்டைப் போட்டதைக் கேட்டிருப்பானோ? கேட்டால் கேட்கட்டுமே! அவன் மட்டும் ஒசத்தியா? தினம் பெண்டாட்டியோடு சண்டை; மைத்துனன் மத்தியஸ்தம். சௌராஷ்டிரனாய்ப் பிறந்தவன் சௌராஷ்டிர மொழியில் பேசினால் என்ன? தமிழில்தான் பேசுவான்.
“ஹாய், ஹாய், ஏஃகெடிக் வெளோ கோட் ஜான்?” (ஆமா, ஆமா, இந்த நேரத்திலே வேறெ எங்கே போவாங்க?) என்று சௌராஷ்டிர பாஷையிலேயே பதில் சொன்னான் ராஜம்.
“கள்ளுக்கடைக்குப் போறியோன்னு பார்த்தேன்” என்று தமிழில் சிரித்தான் சாரங்கன்.
“அங்கு ஃபோதா தெளிஞ் செனிகா?” (இன்னும் போதை தெளியல்லியா?)
“அதெப்படி தெளியும்? பக்கத்திலேயே பானையில் வச்சிருக்கேனே? அது போகட்டும் எனக்கு ஒரு டம்ள்ர் சாம்பார் வாங்கிட்டு வா, ரெண்டு இட்லியும் பார்சல் கட்டிக்கோ” என்ற சாரங்கன் ஓர் அலுமினிய டம்ளரை நீட்டினான்.
மறுக்க வேண்டாம் என்று ராஜத்தின் எண்ணம். ஆனால் சாரங்கன் விஷமக்காரன். ஹோட்டலிலிருந்து திரும்பும் போது தாழிட்டு விடுவான். தொண்டைக் கிழியக் கத்தினாலும் கதவைத் திறக்க மாட்டான். ராஜத்தின் குரல் கேட்டு அம்மா கதவைத் திறப்பதற்குள் - அம்மா திறப்பாளா? கண் விழித்ததுமே காளி வேஷம் கட்டிக் கொண்டு விடுவாளே!
“ஹோட்டலுக்கு வாயேன்” என்றவாறே ராஜம் டம்ளரை வாங்கிக்கொண்டான்.
”வெறும் கதவைப் போட்டுவிட்டு நாம் போயிட்டா, திருட்டுப் பய எவனாவது உள்ளே நுழைஞ்சி, பாவு அறுத்துகிட்டுப் போனா என்ன செய்றது? நான் காவலுக்கு இருக்கேன்; நீ இட்லி கொண்டு வந்து கொடு” என்று சாரங்கன் சமத்காரமாய்ச் சிரித்தான்.
மனசுக்குள் திட்டுவதைத் தவிர ராஜத்தினால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. இரண்டு டம்ளர்களையும் ஏந்தியவனாய்த் தெருவில் இறங்கினான்.
ஆகாயத்தில் நட்சத்திரங்களும் அரைச் சந்திரனும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. ராஜத்தைக் கண்டதும் தெரு நாய் ஒன்று எழுந்தது. அவனுக்குப் பின்னால் ஓடி வந்தது. அவன் அதற்கு ஒரு வாய் சோறு போட்டதில்லை. என்ன காரணமோ அதிகாலையில் அவன் ஹோட்டலுக்குப் போகும் போதும் திரும்பும் போதும் காவலாய்க் கூடவே ஓடி வரும். தெருவில் எலிகளும் பெருச்சாளிகளும் காலடிச் சத்தம் கேட்டுச் சிதறி ஓடின. பன்றிகளும் கழுதைகளும் தீனி தேடிக் கொண்டிருந்தன. சில பெண்கள் தெருவில் வீட்டு வாசலில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். நாய் அவனுக்குப் பின்னால் ஓடியது.
ராத்திரி அவனுக்கு ஒரு சொப்பனம். பழைய சொப்பனம். அவனுக்கு வினாத் தெரிந்த நாள் முதல் ஆயிரம் தடவைக்கு மேல் இந்தச் சொப்பனம் வந்திருக்கும். அவன் ஏதோ ஒரு தெருவோடு போகிறான்; ‘வவ் வவ்’ என்று குரைத்தவாறு ஒரு வெறி நாய் அவனைத் துரத்துகிறது; அவன் மூச்சுத் திணற ஓடுகிறான். அது அவன் மேல் பாய்ந்து வலக்கால் கெண்டைச் சதையைக் கடித்துப் பிடித்துக்கொள்கிறது. ‘ஐயோ’ என்று முனகிக் கொண்டோ, கத்திக்கொண்டோ அவன் விழித்துக் கொள்வான். கனவுதானென்று உறுதி செய்துக்கொள்ளச் சற்று நேரமாகும்.
ராத்திரியும் அதே கனவு; அதே வெறி நாய் அவனுடைய கால் சதையைக் கடித்தது. வெறி நாய் கடித்தால் மனிதனுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்கிறார்கள். கனவில் நாய் கடித்தாலும் பைத்தியம் பிடிக்குமா?
அவன் தெருமுனை திரும்பி விட்டான். நாலு திசைகளிலும் கண்ணோட்டம் விட்டான். மனித நடமாட்டமே இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டான். தெரு நாய்தான் கூட இருந்தது. அவன் நின்றதும் அதுவும் நின்ரது. கனவில் வந்த வெறிநாய் இந்த நாய் போல் சாது அல்ல; எவ்வளவு பயங்கரமாய் அது குரைத்தது! அவன் அப்படிக் குரைத்தால் அம்மா பயப்படுவாளா, மாட்டாளா? அவன் தெருநாயைப் பார்த்து கீச்சுக் குரலில் ‘வவ் வவ்’ என்று குரைத்தான். மனிதன் நாய் மாதிரி குரைப்பதைக் கேட்டிராத தெரு நாய் பயந்துவிட்டது போலும்; அது திரும்பிப் பத்து பன்னிரண்டு அடி தூரம் ஓடி, மறுபடியும் நின்று அவனை ஏறிட்டுப் பார்த்தது. நான் குரைத்தால் அம்மாவை ஓட ஓட விரட்டலாம் என்று சிரித்துக்கொண்ட ராஜம் ஹோட்டலை நோக்கி நடந்தான்.
நாய் அவனைப் பின்பற்றியது.
விநாயகர் கோயிலுக்கு அருகில்தான் ஹோட்டல். அந்த அதிகாலை நேரத்திலும் அங்கே ஒரே கூட்டம். பழையது சாப்பிட்டுவிட்டு நெசவாளர்கள் தறிக்குப் போகிற காலம் மலை ஏறி விட்டது. இப்போது காபியோ டீயோ இருக்கிற வட்டாரம் அல்லவா? ஹோட்டலில் எந்த சாமானும் ‘நிறையக்’ கிடைக்கும். கூஜா நிறையக் காபி கேட்டால் எப்படி தரமாகக் இருக்கும்? இரண்டு இட்லி பார்சல் கட்டிக் கொண்டு ஒரு டம்ளர் சாம்பார் கேட்டால் இட்லி எப்படி சுகப்படும்? ஹோட்டல்காரரை எப்படிக் குறை சொல்ல  முடியும்?
“ஏது ராஜம், இந்தப் பக்கம் புதுசா? நீ பஞ்சாமி ஹோட்டல் குத்தகை இல்லை?” என்று அக்கறையாக விசாரித்தான் சப்ளையர் சீமா.
”அட சீமாவா? நீ எப்போ இங்கே வந்தே? பஞ்சாமி ஹோட்டலை விட்டு எத்தனை நாளாச்சு?”
“ஒரு வாரம் ஆச்சு...”
சீமா, புரோகிதம் ராமசாமி அய்யங்காரின் மகன். அவனுக்குப் புரோகிதம் பிடிக்கவில்லை; படிப்பும் வரவில்லை. சினிமா ஸ்டாராக வேண்டும் என்ற கனவுடன் ஹோட்டல் சப்ளையராக வாழ்க்கை தொடங்கினான். இரண்டு மாதம் சேர்ந்தாற்போல் அவனை ஒரு ஹோட்டலில் காண முடியாது; ஹோட்டலை மட்டும் அல்ல, ஊரும் மாற்றிக் கொண்டிருப்பான், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, மதராஸ் என்று. அவனிடம் ஒரு நல்ல குணம்; ஹோட்டல் வாடிக்கையாளர்கலை மிகவும் நயமாய் விசாரித்து சப்ளை செய்வான். அவர்கள் ஒன்று கேட்டால் இரண்டாய்த் தருவான். பில்லையும் குறைத்துப் போடுவான். அப்புறம் அவர்களை ஒரு வாரம் பத்து நாளைக்கொரு முறை தனியாகச் சந்தித்து சினிமாவுக்குச் சில்லறை வாங்கிக் கொள்வான். இதனால் இரு தரப்புக்கும் ஆதாயம்; இதனால் எந்த ஹோட்டல் முதலாளியும் கெட்டுப் போனதாய்த் தெரியவில்லை.
“சீமா, அங்கே என்ன அரட்டை அடிக்கிறே?” என்று பெட்டியடியில் இருந்தவாறு குரல் கொடுத்தார் ஹோட்டல்காரர்.
“சூடா ஒரு காபி...”
“இட்டிலி சூடா இருக்கு. கொத்சு ஏ ஒன். கொண்டு வர்றேன்” என்று சீமா விரைந்தான்.
இரண்டு இட்லி, ஒரு நெய் ரவா, டிக்ரி காபியோடு எழுந்தான் ராஜம். அம்மாவுக்கும் சாரங்கனுக்கும் பார்சல் கட்டிக் கொண்டான். சீமாவின் தயவால் இரண்டு டம்ளர்கள் வழிய கொத்சும், பில்லில் இருபத்தைந்து பைசாவும் ஆதாயம்.
“இதுக்குத்தாண்டா ராஜா உன் கையிலே டம்ளர் கொடுத்தேன்!” என்று சாரங்கன் பாராட்டினான்.
அம்மாவைச் சமாதானப்படுத்திவிட வேண்டும் என்று ராஜத்துக்கு ஆசை.
“அம்மா கொத்சு கொண்டு வந்திருக்கேன். ரொம்ப ஜோராயிருக்கு. நம்ம சீமாதான் டம்ளர் வழியத் தந்தான்....” என்றவாறு அவளிடம் நீட்டினான். அவள் வாங்கிக் கொள்ளவில்லை.
“கொண்டு வந்துட்டியா? எதிர் வீட்டுக்காரிக்குக் கொடு, போ!”
ராஜம் அவள் முகத்தைப் பார்த்தான். அந்த முகம் போயிருந்த போக்கு அவனுக்குப் பிடிக்கவில்லை; இந்தப் பீடையை யாரால் திருப்தி செய்ய முடியும்? அவனைத் திட்டட்டும்; இரண்டு அடி வேண்டுமானாலும் அடிக்கட்டும். எதிர் வீட்டுக்காரி பங்கஜத்தை ஏசுகிறாளே, என்ன நியாயம்? இவளிடம் யார் நியாயம் பேச முடியும்?
இவள் தொலைய வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி. இவளாகத் தொலைய மாட்டாள். நான் இவளைத் தொலைத்து தலை முழுக வேண்டும்.
“சாம்பார் கேட்டியேன்னு கொண்டு வந்தேன். வேண்டாம்ன்னா உன் இஷ்டம்... குள்ளி, பல் தேய்ச்சியா? தறிக்குப் போகலாமா?”
குள்ளிக்கு ஒன்பது வயசு இருக்கும்; கடைக்குட்டி. அண்ணன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள். ராஜம் மாடத்திலிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஐந்தரை.
அம்மா சளைக்கவில்லை. “நீ வாங்கிட்டு வந்ததை நான் ஏண்டா தொடறேன்? உன் பெண்டாட்டிகிட்டே கொண்டு போய்க் கொடு...”
“ஊர்ப் பொண்ணுங்களைப் பத்தி இப்படிப் பேசினா.. நல்லா இருக்காது!”
“நல்லா இல்லாவிட்டால் என்ன ஆயிடும்? ரெண்டு இட்டிலி வாங்கிட்டு வாடான்னா எத்தனை பேச்சு பேசுறே? நாய் என்கிறே; குரங்கு என்கிறே. பெத்தவளுக்கு வாங்கித் தரணும்னா காசு கிடைக்கலே. வரப் போறவளுக்கு ஜரிகைச் சேலை, தாம்புக் கயிறு சங்கிலி, பவுன் தாலி எல்லாம் செஞ்சு பெட்டியிலே பூட்டி வச்சியிருக்கியே. எனக்குத் தெரியாதுன்னா நினைச்சே? அதுக்கெல்லாம் எங்கேருந்து பணம் வருது?”
ராஜத்துக்கு வயிற்றில் மாட்டுக் கொம்பால் குத்துவது போலிருந்தது. “ஏண்டீ, திருட்டுத்தனமா என் பெட்டியைத் திறந்தா பார்த்தே? என்னைக் கேட்காமே என் பெட்டியை எப்படித் திறந்தே?” என்று கத்தினான்.
“என் வீட்லே இருக்கிற பெட்டியை நான் திறக்கிறதுக்கு உன்னை எதுக்கடா கேட்கணும்? நாக்கை அடக்கிப் பேசு. யாரைத் திருடி என்கிறே? இன்னொரு தடவை சொல்லு. அந்த நாக்கை இழுத்து வெட்டிடுவேன்.”
தன்னுடைய பெரிய ரகசியம் வெளிப்பட்டுவிட்டதால் ராஜத்துக்கு மருள் வந்தாற் போலிருந்தது. அவன் பங்கஜத்துக்காக - வரப்போகும் மனைவிக்காக - ஜரிகை புட்டா சேலை - அவன் கைப்பட நெய்தது; முதலாளியிடம் அடக்க விலைக்கு வாங்கி வைத்திருந்தான். பெரிய தாலியும் சிறிய தாலியும் தட்டி வைத்தான். ஒரு சங்கிலியும் தயார் செய்தான். யாருக்கும் தெரியாமல் பெட்டியில் வைத்துப் பூட்டி வைத்திருந்தான். கலியாணம் என்று ஆரம்பித்த பிறகு எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் தேட முடியுமா? சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்தான். அவன் இல்லாத நேரத்தில் அம்மா கள்ளச் சாவியில் பெட்டியைத் திறந்து பார்த்திருக்கிறாள். என்ன துணிச்சல்!
“ஏண்டி, என் பெட்டியைத் திறந்தே?” என்று அவன் அம்மாவின் இரண்டு கைகளையும் பிடித்தான். ஆத்திரத்தோடு ஓர் இருட்டு வயிற்றிலிருந்து பாய்ந்தாற்போல ஒரு சோர்வு.
“சீ, கையை விடுடா நாயே!” என்று கைகளை  உதறி விடுவித்துக் கொண்டாள் அவள். ”தாலி கட்டின பாடில்லே; அதுக்குள்ளே இந்த ஆட்டம் போட்றியா? நான் சொல்றதை முடி போட்டு வச்சுக்கோ. அந்த மேனாமினுக்கியைக் கட்டிக்கணும்னு ஆசைப்படறே, அது நடக்காது. அவ இந்த வீட்டிலே கால் வச்சா கொலை விழும்; ஆமா, கொலைதான் விழும்!”
ராஜத்தின் வாயை அம்மாவின் சொற்கள் மூடி விட்டன போலும். அவன் திணறியவன் போல் பேசினான்; “நான் யாரையும் கட்டிக்கலே. குள்ளி, என்ன வேடிக்கை பார்க்கிறே? தறி மேடை ஏறு.”
அவன் அவளுக்குப் பின்னாலேயே மேடை ஏறினான். நாடாவைக் கண்களில் ஒத்தி, சாமி கும்பிட்டபின் வேலையைத் தொடங்கினான். தங்கை கரை கோத்துக் கொடுத்து துணை செய்ய அவன் நெய்யத் தொடங்கினான். நாடா இப்படியும் அப்படியுமாக ஓடி வெறும் இழைகளாக இருந்த பட்டைச் சேலையாக்க ஆரம்பித்தது. ராஜம் கால் மாற்றிக் கட்டையை மிதிக்கும்போது ஓயிங் என்றொரு சத்தம்; அதைத் தொடர்ந்து அவன் பலகை அடிக்கும் சத்தம். குள்ளி பேசவில்லை. அம்மா ஓய்ந்துவிட்டாளா? அவள் ஓய்வாளா? ஒன்று அவன் சாக வேண்டும். அல்லதுஅவள் சாக வேண்டும். அதுவரை ஓய மாட்டாள்.
பெற்றவள் ஒருத்தி இப்படியும் இருப்பாளா? அம்மாவைத் திட்டுவதும் அடிப்பதும் பாவமாம். அவள் மட்டும் ஊர் உலகத்தில் இல்லாத விதத்தில் நடக்கலாமா? பன்றிக் குட்டி போல் போட்டதைத் தவிர இவள் வேறு என்ன செய்து விட்டாள்?
அப்பாவுக்குப் பேராசை. என்றைக்காவது ஒரு நாள் பணக்காரனாகலாம் என்று கனவு கண்டார். உழைத்துச் சிறுகச் சிறுக முன்னேற முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டப் பரீட்சை செய்கிறார்கள், அல்லவா? அப்பா குழந்தைகளை அதிர்ஷ்டப்பரீட்சையாகப் பெற்றார். ‘இந்தக் குழந்தையின் ஜாதகம் சுகப்படவில்லை. அடுத்த குழந்தை நல்ல நேரத்தில் பிறக்கும் பார்!’ என்று அடுத்த குழந்தைக்குத் தயார் ஆவார். எதாவது ஒரு குழந்தைக்கு யோக ஜாதகமாய் அமைந்து, அதன் மூலம்தான் பணக்காரன் ஆகிவிடலாம் என்று அவர் எண்ணம்.
அம்மா அப்படி நினைக்கவில்லை. தான் பெற்றுப் போட்ட புண்ணியத்துக்குப் பதிலாக ஒவ்வொரு குழந்தையும் பாடுபட்டுத் தனக்குச் சோறு போட வேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆண் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, பெண் குழந்தைகளுக்கும் அந்த கதிதான்.
ஐந்தாவது வயதில் அவன் கையில் நாடா தந்தார்கள். இன்றுவரை - அவனுக்கு இப்போது இருபத்தைந்து வயது - நாடா அவனை விடவில்லை. ஒவ்வொரு தம்பி தங்கையின் கதி இதுதான். மூன்று தங்கைகள் கல்யாணம் செய்து கொண்டு அம்மாவிடமிருந்து தப்பி விட்டார்கள். கடைசி இரு தங்கைகளும் - குள்ளிக்கு ஒன்பது வயது, ராஜாமணிக்குப் பதின்மூன்று வயசு. - நெசவு வேலை செய்கிறார்கள். நாலு தம்பிகளும் தனியாக இருக்கிறார்கள். அம்மாவிடம் பணம் கொடுத்துவிட்டு இரண்டு வேளை சாப்பிட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு அம்மாவால் அதிகத் தொல்லை இல்லை.
சகதியில் சிக்கிக் கொண்டவன் அவன் தான். அவனும் தனியே போயிருப்பான். தோதாகத் தறி மேடை உள்ள இடம் வாடகைக்குக் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் தறி மேடைக்கு மட்டும் இரண்டு ரூபாய் வாடகை; இப்போது ஏழு ரூபாய் கேட்கிறார்கள்; அதற்கும் மேடை கிடைப்பதில்லை. மூன்று தங்கைகளில் கல்யாணத்துக்குப் பட்ட கடனை அடைக்க வேண்டும்; இரண்டு தங்கைகள் திருமணத்துக்கும் ஜாக்கிரதை செய்து கொள்ள வேண்டும். தம்பிகளுக்கு அந்தப் பொறுப்புகளோ கவலையோ இல்லை. அவன் அப்படி இருக்க முடியுமா? அம்மாவோடு இருந்தால் சிக்கனமாக இருக்கலாம் என்றுதான் அவளோடு தங்கினான்.
இப்படிப் பொறுப்புக் கட்டிக் கொண்டு ஆசைப்பட்டதனால்தான் அம்மாவிடம் வசமாய்ச் சிக்கிக் கொண்டான். அவன் என்ன செய்தாலும், அம்மா எதிர்க்கட்சி. பங்கஜத்துக்கு என்ன குறைச்சல்? பெற்றவர்கள் இருக்கிறார்கள்! நாலு அண்ணன் தம்பிகளுக்கு நடுவில் ஒரே பெண்; தறி வேலை தெரியும்; வீட்டு வேலைகளும் தெரியும். சினிமா ஸ்டார் போல இல்லாவிட்டாலும் கச்சிதமாக இருப்பாள். அவளைப் பெற்றவர்கள் அவனுக்குப் பெண் தர முன்வந்தார்கள். அவனுடைய முதலாளியிடம் பேச்சு கொடுத்தார்கள். முதலாளி ஜாதகப் பொருத்தம் பார்த்தார். ‘கொடுக்கல் வாங்கல்’ எல்லாம் அவர்தான் பேசி முடித்தார்.
இவ்வளவு ஆன பிறகு ‘எனக்கு இந்தப் பொண்ணு பிடிக்கல்லே, அவளைக் கட்டிக்கக் கூடாது’ என்கிறாளே, இது அக்கிரமம் இல்லையா? ஆரம்பத்தில் அவளிடம் கேட்கவில்லை என்ற குறை; அவளிடம் பேசியிருந்தால் தனியாக ஐம்பது, நூறு கேட்டு வாங்க்யிருப்பாள். அது கிடைக்கவில்லை என்று ஆத்திரம். அதற்காகப் பங்கஜத்தைப் பற்றி கேவலமாய்ப் பேசுகிறாளே, இவள் உருப்படுவாளா? பங்கஜம் எதிர் வீடுதான்; ஆனால் அவன் அவளைத் தலை தூக்கியாவது பார்த்ததுண்டா? அல்லது அவள் இவன் இருக்கும் திசைப்பக்கமாவது திரும்பி இருப்பாளா? அந்த உத்தமியைக் கரிக்கிறாளே இந்தச் சண்டாளி, இவள் வாயில் புழு நெளியுமா, நெளியாதா? அப்பாவைக் கை தூக்கி அடித்த இந்த ராட்சசிக்குப் பங்கஜம் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது?
எண்ணங்களோடு போட்டியிட்டுக்கொண்டு நாடா பறந்தது. இந்தக் குழப்பத்திலும் ஓர் இழைகூட அறவில்லை; அண்ணனுடைய மன வேகத்தைப் புரிந்து கொண்டு குள்ளியும் நாடா கோத்துக் கொடுத்தாள்.
முதலாளி அவன் பக்கம்; அவருக்கு அவன் மேல் ஓர் அபிமானம். ஒரு நம்பிக்கை. எதற்கெடுத்தாலும் அவனைக் கூப்பிடுவார். அவருடைய உதவி இருந்ததால்தான் அவன் மூன்று தங்கைகளின் திருமணக் கடனைத் தீர்க்க முடிந்தது. தன் கல்யாணத்துக்காகவும் சேலை, செயின், தாலி எல்லாம் தயார் செய்ய முடிந்தது.
அம்மாவுக்கு தெரியக்கூடாது என்றுதான் அவன் அவற்றைப் பெட்டியில் பூட்டி வைத்தான். அந்தப் பெட்டியைக் கள்ளத்தனமாய்த் திறந்து பார்த்திருக்கிறாளே, என்ன நெஞ்சழுத்தம் இருக்கும்?
அவனுக்குப் படபடவென்று கோபம் மூண்டது. அதே நேரத்தில் அம்மாவின் குரல், “குள்ளி, ஓவ் குள்ளி, ஏட் ஆவ்!” (குள்ளி, அடி குள்ளி. இங்கே வா!) என்று கூப்பிட்டது.
சிறுமியான குள்ளிக்கு இருதலைக் கொள்ளியாக இருந்தது. அவளுக்கு அம்மாவும் வேண்டும். அண்ணாவும் வேண்டும்.
“அண்ணா, அம்மா கூப்பிட்றா” என்று நாடாவை நிறுத்தினாள்.
“வேலை நேரத்தில் ஏன் கூப்படறா?”
“காய்கீ” (என்னவோ)
“இரு புட்டா முடிச்சுட்டுப் போகலாம்”
அதற்குள் அம்மாவின் குரல் மறுபடியும் வீறிட்டது. :ஓவ் ஃபொ வர்தே காணும் பொஃடர்னி? அவிஸ் கீந் ஹீ?” (அடி கூப்பிடறது காதிலே விழல்லே? வர்றியா இல்லையா?)
அதற்கு மேல் சோதனை செய்யக் குள்ளி தயாராக இல்லை. நாடாவை அப்படியே போட்டுவிட்டு, எழுந்து தறி மேடையிலிருந்து கீழே குதித்து அம்மாவிடம் ஓடினாள்.
சினம் பீறிட்டுக் கொண்டு வந்தது ராஜத்துக்கு. ஆனால் சினத்தில் தலையில் ஓர் ஓய்ச்சல் இருந்தது. சுருட்டிக் கொண்டு படுத்துத் தூங்கிவிட வேண்டும், எழுந்திருக்கவே கூடாது என்று தோன்றியது. சண்டை போடுவதற்கான தெம்பே இல்லை. உடல் நரம்புகள் மக்கிவிட்டார் போல் இருந்தது. சாம்பார்ச் சண்டை கல்யாணச் சண்டையாக முடிந்தது. எங்கே முடிந்தது? இன்னும் கிளை விட்டுக் கொண்டிருக்கிறதே!
அவன் மௌனமாய்த் தலை குனிந்து இழைகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான்.
சமையலறை பத்தடி தூரத்தில்தான் இருந்தது. அம்மா குள்ளீயை அதட்டுவது தெளிவாய்க் கேட்டது.
“ஏண்டை, நான் கூப்பிட்டது காதிலே விழல்லே? ஏண்டி இத்தனை நேரம்?”
”சத்தத்திலே கேக்கல்லே.”
“நீ இனிமே இந்தத் தறிக்குப் போக வேண்டாம். புதுத் தெரு சென்னப்பன் நூறு ரூபா பணம் தர்றேன்னான். பழையது கொட்டிக்கிட்டு அங்கே போ.”
குள்ளியாலே அந்த அநியாயத்தைப் பொறுக்க முடியவில்லை. “அண்ணன் தறியிலே இன்னும் ஒண்ணே முக்கால் முழம் இருக்கு. முதலாளி அவசரமா சேலை வேணும்னு...”
”அதெல்லாம் உன்னை யார் கேட்டா? பேசாம பழையது கொட்டிக்கிட்டுத் தொலை!” என்னும் போது குள்ளியின் தலையில் நறுக்கென்று ஒரு குட்டு விழுந்தது.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜம் தறி மேடையை விட்டுக் கீழே இறங்கினான்.
“ஏண்டி, என்ன சொல்றே?”
“புதுத் தெரு சென்னப்பன் குள்ளிக்கு நூறு ரூபா முன் பணம் தர்றேன்னான். அவளை அங்கே போகச் சொன்னேன்.”
கரை கோத்துக் கொடுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு இப்போது நல்ல கிராக்கி. ஐம்பதும் நூறும் முன்பணம் தந்து நெசவாளர்கள் அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியும்.
“அவளை அங்கே அனுப்பிவிட்டா நான் என்ன செய்யறது?”
”நீ வேறே ஆளைப் பார்த்துக்கோ. குள்ளிதான் வேணும்னா நூறு ரூபா முன் பணம் கொடு.”
ராஜத்துக்கு அவளுடைய தந்திரம் புரிந்தது. களவாணித்தனமாய்ப் பெட்டியைத் திறந்து பார்த்தாளா? பெட்டியில் தாலி, சேலை செயினோடு நூறு ரூபா பணம் இருப்பதைக் கண்டு விட்டாள். அந்தப் பணத்தைப் பறிக்கத்தான் இந்தக் குறுக்குவழியில் போகிறாள்.
“மூணு பேருக்கும் நான் உழைச்சுப் போடறேன். குள்ளி வெளியிலே வேலை செய்வாளா?”
“நீ உழைச்சி எங்களுக்குப் போட வேணாம். முன்பணம் நூறு ரூபா கொடுத்தாத்தான் குள்ளி உன்னோடு வேலை செய்வாள். ராஜாமணிக்கு வயசாச்சு. அவ கல்யாணத்துக்கு நான் தயார் செய்யணும். அவளுக்கு ஒரு தோடு வாங்கப் போறேன்.”
அவன் கல்யாணத்துக்குத் தயார் செய்து  கொள்கிறான் அல்லவா? ஏட்டிக்குப் போட்டியாக ராஜாமணியின் கல்யாணத்துக்குத் தயார் செய்கிறாளாம்! ராஜாமணிக்குப் பதின்மூன்று வயசு; கல்யாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? அப்படியே நல்ல இடத்தில் கேட்டாலும் அவனுக்கல்லவா அந்தப் பொறுப்பு!
மூன்று தங்கைகளைக் கட்டிக் கொடுத்துவிட்டுக் கடன் காரனாய்க் கஷ்டப்படுகிறவன் அவன் அல்லவா? இவள் என்ன செய்தாள்? ராஜாமணிக்குத் தோடு வாங்கவா பணம் கேட்கிறாள்? அவனிடமுள்ள பணத்தைக் கறக்க வேண்டும்; அவனுக்கு மணமாகாமல் இடைஞ்சல் செய்ய வேண்டும்; அவன் வேலை செய்ய முடியாதபடி தொல்லை தர வேண்டும். இதுதான் அவள் எண்ணம்.
பெற்றவளுக்கு இவ்வளவு கெட்ட மனசு இருக்குமா? ராட்சசி, ராட்சசி!
அப்பா இருந்தவரை எலிக்குஞ்சு போல இருந்தவள், அப்பா போனவுடனே பெருச்சாளி போல் ஆகிவிட்டாள். பிள்ளைகளும் பெண்களும் சம்பாதித்துப் போடப் போட இவளுக்குச் சதை கூடிக் கொண்டே போகிறது. ஏன் கூடாது? தறிவேலை செய்து கொடுக்கக் கூட இவளுக்கு உடம்பு வளைவதில்லை; கூலி வாங்கிக்கொண்டு அவனிடமே பாதி வேலை வாங்கிவிடுகிறாள். நாள் முழுவதும் கொறிக்கிற கொழுப்புதான் இவளை இப்படியெல்லாம் பேச வைக்கிறது, செய்ய வைக்கிறது. இந்தத் திமிரை ஒடுக்க வேண்டும். அப்பா செத்தபோது ஊருக்காக ஒப்பாரி வைத்தாள். இவள் உடம்பு கரைய ஒப்பாரி வைத்துக் கதறிக் கதறி அழ வேண்டும்.
அவனுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களில் சினமே இல்லை. “ராஜாமணி கல்யாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? நான் செய்ய மாட்டேனா?”
“செய்யறவங்க ரொம்ப பேரைப் பார்த்தாச்சு. கல்யாணத்துக்கு முந்தியே தலை கீழா நடக்கிறே. கல்யாணம் ஆனப்புறம் யார் புத்தி எப்படி இருக்குமோ, யார் கண்டா?”
“பெட்டியிலே இருக்கிற பணத்தைப் பார்த்துட்டே. அதைப் பறிமுதல் செய்யறவரை உன் மனசு ஆறாது, இல்லியா?”
“நான் உன்னை யாசகம் கேட்கல்லே! என் மவ வேலை செஞ்சி கழிக்கப் போறா!”
“நான் தர மாட்டேன்.”
“நான் கட்டாயப்படுத்தல்லியே! குள்ளி புதுத்தெருவுக்குப் போவா..”
“நீயே எடுத்துக்கோ, இந்தா!” என அவன் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த பெட்டிச் சாவியை அவளிடம் எறிந்தான். சட்டையை மாட்டிக் கொண்டான். கண்ணாடியில் முகம் பார்த்துப் பவுடர் போட்டுக் கொண்டான். கிராப்பை ஒழுங்கு செய்து கொண்டான். அவனுடைய வாயிலிருந்து வெளிவந்த சொற்கள் செத்து அழுகி வெளிவருவதாகவும், நாறுவதாகவும் அவனுக்குத் தோன்றியது.
“பெட்டியிலே நூறு ரூபா இருக்கு. எடுத்துக்கோ, சேலை கட்டிக்கோ, செயின் போட்டுக்கோ, போ... போ...”
அவளிடம் பேசுவதற்குத் தன்னிடம் சொற்களே இல்லை, எல்லாம் தீர்ந்து விட்டன என்று அவனுக்குப் புரிந்தது. அவன் பதில் பேசாமல் கீழே குனிந்தவாறு நடந்தவன் தயங்கி நின்றான்.
“காய்ஃதா?” (என்ன அண்ணா) - என்றவாறு அவள் ஓடி வந்தாள்.
”ராஜாமணிக்கிட்டே நான் அஞ்சுரூபா கடன் வாங்கினேன். அவ சாப்பிட வார்றப்போ ஒரு ரூபா சேர்த்து அவகிட்ட கொடுத்துடு.”
”ஏழு ரூபா எதுக்கு அண்ணா?”
உனக்கு ஒரு ரூபா, பிரியப்பட்டதை வாங்கித் தின்னு. அம்மாகிட்ட காட்டாதே.”
‘ஒரு ரூபா எதுக்கு அண்ணா?”
“வச்சுக்கோ, வச்சுக்கோ”
சொல்லிக் கொண்டே அவன் நடந்தான். தலையில் கொதியாய்க் கொதித்தது. நெஞ்சில் எரியாய் எரிந்தது. பரபரவென்று வீட்டை விட்டு வெளியே வந்தான். கிழக்கே நடந்தான்.
மாதப்பா சந்தைத் தாண்டி கீழ்க் கடலங்குடித் தெருவை அடைந்தான். உடம்பில் சொல்லி முடியாத ஓய்ச்சல், யாரோ கழுத்தை நெட்டித் தள்ளிக் கொண்டு போவது போல் இருந்தது. எல்லா இரைச்சல்களும் அடங்கி ஒரே ஓர் இரைச்சல் கேட்டது. நாய் குரைக்கும் சத்தம். நாய் குரைத்தபடி அவனைக் கடிக்க வருகிறது. அவன் பயந்து கொண்டு ஓடுகிறான். சீ, கனவில் வந்த நாய் உண்மையில் துரத்துமா? கடிக்க வருமா? இதென்ன பைத்தியக்காரத்தனம்?
அவன் நடந்து கொண்டிருந்தான்.
மகாமகக் குளத்தை நெருங்கியதும் அவன் நின்றான். இந்தக் குளத்தில் விழுந்து செத்தால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்கிறார்கள். போன மாதம் கூட அவன் தெருவில் இருந்த கிழவி இதில் விழுந்தாள்; பல பேர் விழுகிறார்கள். அவனும் விழுந்தால் என்ன? தண்ணீரிலே விழுந்த பிணம் என்பார்கள். அவன் அதைப் பார்த்திருக்கிறான். அவன் குளத்தில் விழுந்து செத்து, புசுபுசுவென்று பலூன் போல மிதந்தால், அம்மா அடையாளம் கண்டு கொள்வாளா? பயப்படுவாளா? அழுவாளா?
ஆனால், அவனுக்கு நீந்தத் தெரியும். குளத்தில் விழுந்தால் லேசில் உயிரை விட முடியாது. அவனுக்குத்தான் கஷ்டம்.
அவன் தொடர்ந்து நடந்தான். மரணத்துக்கு அஞ்சி ஓடுகிறவன் போல வேர்க்க விறுவிறுக்க நடந்தான். வெறி நாய் மறுபடியும் துரத்துகிறது. நிஜ நாய் அல்ல. கனவு நாய் தான். ஆனாலும் அது கடிக்க வருகிறது. அது போதாதா? பக்கத்து வீட்டுச் சேவல் ஐயோய்யோ என்று கத்துகிறது.
அவன் விழித்தபடி ரயில்வே ஸ்டேஷனை அடைந்தான். மணி ஒன்பது நாற்பது. ஒன்பது ஐம்பதுக்கு ஒரு ரயில் வருகிறது. ரைட்!
அவன் தண்டவாளத்தோடு நடந்து கொண்டே இருந்தான். இரண்டு பர்லாங்கு நடந்திருப்பானா? எதிரில்  ரயில் வருவது தெரிந்தது. ‘அப்பாடா’ என்று ஓர் உற்சாகம் உண்டாயிற்று. ரயிலுக்கு எதிரில் ஓடினால், டிரைவர் ரயிலை நிறுத்திவிடுவான் என்று அப்போதும் அவனுக்கு ஜாக்கிரதை இருந்தது. ஆகையால் அவன் ஒதுங்கியே நின்றான்.
அரசலாற்றை நெருங்கியதும் ரயில் ‘வர்ர்ர்ர்ர்ர்றேன்!’ என்று ஊதியது. அவன் சிரித்தான். அது பாலத்தைத் தடதடவென்று கடப்பதற்குள், அவனுக்கு அவசரம். நூறுமுறை விழுந்துவிட்டான். மனதிற்குள்.
எஞ்சின் அவனைத் தாண்டியது. டிரைவர் அவனைப் பார்த்துச் சிரித்துக் கையை ஆட்டினார். நெருப்புச் சூடு அவனைக் கர்றென்று கிள்ளியது. நாய் குரைத்தது. சேவல் கூவியது. அம்மா கத்தினாள். ராஜம் ஓட்டப் பந்தயத்துக்கு நிற்பவன் போல வலது காலை முன்னெடுத்து வைத்தான்.
”தூ ரொஃடி!” (நீ அழுது அழுது சாகணும்!) என்று பலமாய்க் கத்திக் கொண்டே இரண்டு பெட்டிகளுக்கிடையில் பாய்ந்தான்.
ஆஸ்பத்திரியிலிருந்து சடலத்தை இரவு பத்து மணிக்குத்தான் கொடுத்தார்கள். பிரேதத்தை வீட்டுக்குள் கொண்டு போகக் கூடாது என்பதற்காகத் திண்ணையிலேயே ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்கள். ரயில் டிரைவர் சந்தேகப்பட்டுப் பிரேக் போட்டதால் உயிர் போகும் அளவுக்குத் தலையின் பின்பக்கம் அடிபட்டதைத் தவிர ராஜத்துக்குப் பெரிய நஷ்டம் ஏதும் இல்லை. ஆஸ்பத்திரிக்காரர்களும் நறுவிசாக வேலை செய்திருந்தார்கள். ஆக, ராஜத்தின் உடம்பு பார்ப்பதற்குப் பயங்கரமாக இல்லை. கழுத்தில் ரோஜா மாலையுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் உட்கார்ந்திருந்தது.
அம்மா அழாமல் இருக்க முடியுமா? கதறிக் கதறி அழுதாள். இந்த தெருவாசிகள் மட்டும் அல்ல, பல தெருக்களிலிருந்து மக்கள் கூட்டமாக வந்து பார்த்துக் கலங்கினார்கள்.
எதிர் வீட்டில்தான் பங்கஜம் இருந்தாள். அவளுடைய பெற்றோர் எதிர் வீட்டுக்குப் போய்விட்டதால் அவள் தன் சகோதரர்களோடு இருந்தாள்.
“ஹய்யா, தூஜீதோ?” (ஏண்டி, நீ போய்ப் பார்க்கவில்லையா?) என்று அண்ணன் கேட்டான்.
“பார்க்காமே என்ன? பைத்தியக்காரப் பிள்ளை! கலியாணம் ஆனப்பறம் இந்த வேலை செய்யாமல் இருந்தானே!” என்ற பங்கஜம்  போர்வையால் தலையையும் சேர்த்து மூடிக் கொண்டாள்.
குளிர் மட்டும் அல்ல; கும்பகோணத்தில் கொசுத் தொல்லையும் அதிகம்.
****
தட்டச்சு : சென்ஷி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்