May 19, 2010

ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் - சமயவேல்

இந்த இரவு

நான் அருந்திக் கொண்டிருப்பது
எனக்குப் பிடித்த ரம் இல்லை
வெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும்
இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது
நாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள்
நம்மைக் கடந்தன
எவ்வளவோ நாம் பார்த்துவிட்டோம்
நாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை
நடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்தsamyavel5
நம் மெளனங்களின் இடைவெளிகளில்
இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது
பக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி
சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில்
பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம்
எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம்
எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறோம்
ஆப்பிள் ரஸத்தின் இரத்தம் போன்றதோர் நிறம்
கோமியம் போன்றதோர் அதன் வாசம்
எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை
ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில்
எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம்
நமது சிகரட்கள் நம்மை சுவாசிக்கும் நறுமணத்தில்
இந்த இரவு நிறைந்து தளும்பிக் கொண்டே இருக்கிறது.
(நண்பர் இராஜமார்த்தாண்டனுக்கு)


ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல்


ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல்
கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று
நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம்
ஓங்கிய அரிவாளின் கீழே
தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட
மரணம் பற்றிய பிரக்ஞையற்று
குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை;
உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள்
பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள்
எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள்
விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள்
என்று வதைபடும் மனிதர்களை விட
எத்தகு மேன்மையான வாழ்வுடன்
நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம்
என்பதை நினைத்துப் பாருங்கள்
எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள்
கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது
ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று
ஒருவரை யொருவர் கொல்வது பற்றி
உங்களால் மே என்று கூட கத்த முடியாது
எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும்
உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும்
நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட
உங்களால் வரைய முடியாது.
2
இருமைகள் என்பது எதார்த்தம் எனில்
அதில் ஒரு கை அள்ளி
என் கண்களைக் கழுவுவேன்
இரவு பகலோ, இறப்போ பிறப்போ
இருமைகள் றெக்கைகளாக
ஒரு பறவைக் கூட்டமாய்
பழுப்பு வானில் பறந்து திரிவேன்
மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி
அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன்
இதுவும் அதுவும் கவ்வி முயங்கும்
இடமோ பொழுதோ வெளியோ
சிந்தும் இன்மையின் இனிமையை
பருகி மகிழ்வேன்
ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான்
எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற
ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது
அதன் வெண்மணற் பரப்பில்
கோபுரங்களும் மலைகளும் கடல்களும்
நகரங்களும் ஆகாயமும் கூட
சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும்
புதைந்து கிடக்கின்றன
என் புல் வெளியில் மரணம்
ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில்
நான் ஒரு நாகலிங்க மரமாவேன்
என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள்
பூக்களாய் தொங்கும்
எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான்.

இப்பொழுதெல்லாம்

அலுவலகத்தை விட மருத்துவ்மனை பிடித்திருக்கிறது
வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில்
விரும்பித் தங்குகிறேன்.
இசை அரங்குகளை விட
சப்தங்கள் உயிர்ப்புடன் எழும்
பேருந்து நிலையங்களில் வெகு நேரம்
பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன்
சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும்
குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன்
கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து
வாசகர் கடிதம் எழுதுகிறேன்
பூங்காக்களை விட
பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள்
அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன்
வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட
மாய விண்வெளியே
நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம்.


************

நன்றி: அகாலம்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

3 கருத்துகள்:

Guru.Radhakrishnan on May 19, 2010 at 4:15 PM said...

arumaiyana pathivu. enoo theriyavillai ungalin padappukal sorvaiththan tharukirathu.e3n endru theriyavillai purithalil thavaraa allathu vilangavuillaiya endu solla iyalavillai mannikkavum

Guru.Radhakrishnan on May 19, 2010 at 4:15 PM said...

arumaiyana pathivu. enoo theriyavillai ungalin padappukal sorvaiththan tharukirathu.e3n endru theriyavillai purithalil thavaraa allathu vilangavuillaiya endu solla iyalavillai mannikkavum

Guru.Radhakrishnan on May 19, 2010 at 4:15 PM said...

arumaiyana pathivu. enoo theriyavillai ungalin padappukal sorvaiththan tharukirathu.e3n endru theriyavillai purithalil thavaraa allathu vilangavuillaiya endu solla iyalavillai mannikkavum

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்